|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 September, 2011

Kate Upton - Body Paint


Julie Henderson Bodypainting



அடிக்கடி மறதியா?

நினைவுத்திறன் என்பது மனிதர்களுக்கு அவசியமானது. ஞாபகசக்தி குறைந்தால் எண்ணற்ற இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். மனிதர்களின் நினைவுத்திறனுக்கும் ஆரோக்கியத்திற்கும் அசுவகந்தி என்னும் மூலிகைத்தாவரம் முக்கிய பங்கு வகிப்பதாக ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மிதவெப்ப மண்டல வறண்ட இடங்களில் அசுவகந்தா காணப்படுகிறது. மருத்துவப் பயன்கருதி இது தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்: அசுவகந்தி மிக முக்கியமான மருந்து தாவரமாகும். இதன் உறுப்புகளில் இருந்து புரதங்கள், அமினோ அமிலங்கள், ஆல்கலாய்டுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. வித்தாபெரின், வித்தானோன், வித்தனோலைடு, சோம்னிடோல், வித்தாசோமினி பெரின், நிகோடைன், டிரோபைன் போன்றவை காணப்படுகின்றன.

நுரையீரல் நோய்க்கு மருந்து: இதன் இலைகள், வேர், கனி மற்றும் விதைகள் மருத்துவப் பயன் கொண்டவை. இலைகள் கசப்பானவை, வயிற்றுப்பூச்சிகளுக்கு எதிரானவை. காய்ச்சல் போக்குவி, வேர் மற்றும் இலைகள் இணைந்து நுரையீரல் நோய்களுக்கு மருந்தாகின்றன. கசக்கிய இலைகளும் அரைத்த வேரும் மேல்பூச்சாக சொறி, வலியுடைய வீக்கங்கள், மற்றும் புண்கள் மீது பூசப்படுகிறது.

நினைவாற்றலை அதிகரிக்கும் வேர்: அசுவகந்தாவின் வேர் வலுவேற்றுவியாக செயல்படுகிறது. இது இருமல், விக்கல், மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்த வல்லது. ஞாபக சக்தியினை ஊக்குவித்து மறதியை போக்கும். மூப்பு பலவீனத்தை போக்கும். இதன் கசாயத்தில் பால் அல்லது நெய் சேர்த்து கொதிக்க வைத்த தயாரிப்பு ஊட்டத்தினை அதிகரிக்கும். முதுகுவலி மற்றும் மூட்டுவலிகளுக்கு மருந்தாகிறது.

வேரின் மருந்து உடல் உறுப்புகளின் செயலியல் மாற்றங்களைச் சரிப்படுத்துகிறது. இவை பால் உணர்வு ஊக்குவி, தாய்ப்பால் சுரப்பு ஊக்குவி, மூளை செயல்பாட்டினைத் தூண்டுகிறது. நரம்பு மண்டலத்தினை வலுப்படுத்தும், விந்து எண்ணிக்கையினை அதிகரிக்கும். வேரின் பொடி சம அளவு நெய் மற்றும் தேனுடன் உட்கொண்டால் மலட்டுத்தன்மை அல்லது விந்து பலவீனத்தை நீக்கும்.

ஆரோக்கிய தெர்மா மீட்டர் !

மனித வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்று பாலுணர்வு. இயற்கையாக தோன்றும் இந்த உணர்வை ஆரோக்கியமானதாக மாற்றுவதில்தான் இருக்கிறது மனிதர்களின் வெற்றி. தம்பதியர்களிடையே ஆரோக்கியமான உறவு மேம்பட இந்த பாலுணர்ச்சியே முக்கிய காரணியாக இருக்கிறது. இதனை சிறப்பாக வெளிப்படுத்த நமது சமையலறையே முக்கிய சாதனமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர் வல்லுநர்கள்.

ஒருவரின் ஆரோக்கியம், மகிழ்ச்சி, இளமையை தக்க வைப்பதில் தாம்பத்யத்தின் பங்கு முக்கியமானது என்று தெரிவித்துள்ளார் ஹார்மோன் மற்றும் இளமையியல் சிறப்பு வல்லுநர் சிசில்லா டிரிகியர். லண்டனின் மருத்துவமனை வைத்துள்ள அவர் 25 ஆண்டுகளாக தனது மருத்துவமனைக்கு வந்த தம்பதியர்களை ஆய்வு செய்து இந்த உண்மையை கண்டறிந்ததாக குறிப்பிட்டுள்ளார். தினசரி தாம்பத்ய உறவில் ஈடுபடும் தம்பதியர் இளமையாகவும், ஆரோக்கியமாகவும், உடல் வனப்புடனும், மகிழ்ச்சியாகவும் இருப்பது தெரியவந்ததாக டெய்லி மெயில் இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

ஆரோக்கிய தெர்மா மீட்டர்: பாலுணர்ச்சியும், அது தொடர்பான ஆர்வமுமே நமது உடல் நலத்தை அளக்கும் தெர்மா மீட்டர் என்று டிரிகியர் குறிப்பிட்டுள்ளார்.

பாலுணர்ச்சியை தூண்டுவது என்பது அவர்கள் உட்கொள்ளும் உணவு முறையை சார்ந்ததாக இருந்துள்ளது. சத்தான உணவு உடல் நலத்திற்குத் தேவையான ஹார்மோன்களை சிறப்பாக செயல்பட வைப்பது தெரியவந்துள்ளது. அதன் மூலம் பாலுணர்ச்சியை தூண்டுவதற்கான ஹார்மோன்களின் சுரப்பு அதிகரித்தது கண்டறியப்பட்டதாக மருத்துவர் கூறியுள்ளார். இதன் மூலமே தினசரி தாம்பத்ய உறவில் ஈடுபட முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தினசரி உறவு என்பது உடற்பயிற்சி செய்வதைப்போல அவசியமானது என்று கூறும் மருத்துவர், இதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு இழந்த இளமையை மீட்டெடுக்க முடியும் என்கிறார். அதற்கான முக்கியமான மூன்று வழிமுறைகளை அவர் தெரிவித்துள்ளார்.

மூளைக்கு உற்சாகம்: எந்த செயலுமே முதலில் தொடங்குவது மூளையில் இருந்துதான். மனித உறுப்புக்களில் மிகப்பெரிய பாலுணர்ச்சியை தூண்டக்கூடிய ஆர்கன் மூளைதான் என்பதை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அங்கு உற்பத்தி செய்யப்படும் ஹார்மோனும், ரசாயனமாற்றமும்தான் பாலுணர்வின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்கிறது. அதன் மூலம்தான் உறவின் போது வெளிப்படும் காதல், அளவுகடந்த கற்பனா சக்தியுடன் துணையை கவர மேற்கொள்ளும் சாகசம், அதனால் பெண்கள் அடையும் உச்சநிலை ஆகியவை ஏற்படுகின்றன. இவை எல்லாம் நாம் உண்ணும் உணவில்தான் இருப்பதாக தெரிவிக்கின்றார் மருத்துவர்.

எனவே முதலில் உண்ணும் உணவுமுறையில் அக்கறை கொள்ளவேண்டும். இதன் மூலம் சக்தியானது நரம்புகள் வழியே மூளையை அடைகிறது. சிறப்பாக செயல்பட முடியும் நம்பிக்கை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான உறவில் ஈடுபட மூளையானது தூண்டுகிறது.

ஹார்மோன்களின் ஒத்துழைப்பு: பாலுணர்ச்சியை தூண்டுவதில் ஹார்மோன்களின் பங்கு அவசியமானது. அவைதான் ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கையை சீராக வைக்க உதவுகிறது. இதில் மூன்று ஹார்மோன்களின் பங்கு முக்கியமானது. ஈஸ்ட்ரோஜென். டெஸ்ட்டிரோஜென், ஆகிய ஹார்மோன்கள் சிறப்பாக செயல்படுவதை சரிவிகிதமாக வைப்பதில் மீன், இறைச்சி, ஆகியவற்றில் உள்ள நல்ல கொழுப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை ஹார்மோன்களை தூண்டி அவற்றை சீரான முறையில் சுரக்கச்செய்கின்றன. புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் அவசியம் என்று தெரிவிக்கிறார் டிரிகியர்.

சக்தியின் ரகசியம்: ஆரோக்கியமான உறவு உடலின் சக்தியையும், உற்சாகத்தையும் அதிகரிக்கும். அதற்கு ஆரோக்கியமான அவசியமான உணவுகள் உதவுகின்றன என்கின்றனர் வல்லுநர்கள். இதன் மூலம் மனித வளர்ச்சியை அதிகரிக்கும் ஹார்மோன் (Human Growth Hormone (HGH).) சுரப்பு சீராவதோடு பாலுணர்ச்சியை தூண்டும் ஹார்மோன்கள் சுரப்பினை அதிகரிக்கச்செய்கிறது. தொடர்ச்சியான ஆரோக்கிமான உறவுக்கு புரதச்சத்து நிறைந்த கோழி இறைச்சி, மீன், பன்றி இறைச்சி ஆகியவை உதவுகின்றன என்று கூறுகின்றார் மருத்துவர்.

நில அபகரிப்பு: வேலம்மாள் கல்வி நிறுவன அதிபர் முத்துராமலிங்கம் தலைமறைவு!

மதுரை அருகே வேலம்மாள் வில்லேஜ் அமைக்க நிலத்தை மிரட்டி வாங்கிய வழக்கில் வேலம்மாள் கல்வி நிறுவன அதிபர் முத்துராமலிங்கம் தலைமறைவாகியுள்ளார். வேலம்மாள் பள்ளிகள், கல்லூரிகள் சென்னை மற்றும் மதுரையில் உள்ளன. முதலில் சென்னையில் ஒரு குடிசையில் ஆரம்பிக்கப்பட்ட வேலம்மாள் பள்ளி இன்று பலமாடி கட்டிடங்களாக காட்சியளிக்கின்றன. இது தவிர கல்லூரிகளும் உள்ளன.

தமிழகத்தில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்த கல்வி நிறுவனங்களின் நிறுவன அதிபர் முத்துராமலிங்கம். அவர் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்து இன்று பெரிய பணக்காரராக உள்ளார். இந்நிலையில் மதுரை அருகே வேலம்மாள் வில்லேஜ் அமைக்க நிலத்தை மிரட்டி வாங்கியதாக முத்துராமலிங்கம், அவரது பொறியாளர் விஜய் ஆனந்த், பி.ஆர்.ஓ. திருப்பதி வெங்கடேஷ் ஆகியோர் மீது சமையாள் என்ற பெண் மதுரை போலீசில் புகார் கொடுத்தார்.

அவரது புகாரின்பேரில் போலீசார் விஜய் ஆனந்த், திருப்பதி வெங்கடேஷ், மேலாளர் ஆகியோரை கைது செய்தனர். ஆனால் முத்துராமலிங்கம் தலைமறைவாகிவிட்டார்.

ரஜினி கையால் அடி வாங்க வேண்டும்! - அஜீத்

தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியார் ரஜினி... ஒரு படத்திலாவது ரஜினிக்கு வில்லனாகி அவர் கையால் அடிவாங்க ஆசை! - அஜீத்

ஒரு படத்திலாவது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாகி, அவர் கையால் அடிவாங்க வேண்டும். அன்றுதான் என் சினிமா பயணம் பூர்த்தியடையும், என்று நடிகர் அஜீத் தெரிவித்துள்ளார். ரஜினியின் மிகப்பெரிய ரசிகர், ரஜினியை கடவுளாகவே போற்றுபவர் நடிகர் அஜீத். ரஜினியைப் போலவே சினிமாவில் தனக்கென தனித்த கொள்கைகளை வைத்திருப்பவர்.

அவரது இந்த அணுகுமுறை புதிதாக ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளது, குறிப்பாக ரஜினி ரசிகர்களை. ரஜினிக்கு அடுத்து அஜீத்தை அவர்கள் அதிகம் விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அஜீத் அளித்துள்ள பேட்டி, அவர் எந்த அளவு ரஜினியை நேசிக்கிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

உங்கள் அடுத்த ஆசை என்ன அஜீத்திடம் கேட்டதற்கு அவர் இப்படிக் கூறியுள்ளார்: எனக்கு நம்பர் ஒன், நம்பர் டூவில் ஈடுபாடில்லை. அந்த எண்ணங்களும் இப்போது மனதில் இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் ரஜினி சாரைப் பார்க்கிறேன். அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் கவலை இல்லை. நான் ஏகலைவன் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்.

சூப்பர் ஸ்டாரை நான் தூரத்திலிருந்து பார்த்து ரசித்தபடி படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன். ரஜினி சார் நடிக்க வேண்டும். அவர் படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும். அவர் கையால் நான் அடி வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு நடக்கிறதோ, அன்று என் சினிமா பயணம் ஒரு முழுமையடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என் லட்சியம். மங்காத்தாவின் மாபெரும் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்!"

நிர்வாகத் திறமையில் நரேந்திர மோடி 'கிங்': அமெரிக்க!

இந்தியாவில் ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும், ஒரு அரசு நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும், ஆளுமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு குஜராத் மாநிலம் மிகச் சிறந்த உதாரணமாக திகழ்கிறது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தியாவிலேயே மிகச் சிறந்த நிர்வாகியாக திகழ்கிறார். அவரைப் பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் பாடம் கற்றுக் கொள்ளலாம் என்று அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுக் குழு ஒன்று மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆய்வுக் குழு இந்தியா தொடர்பான பல்வேறு அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் மோடியை வெகுவாகப் புகழ்ந்து ஒரு முழு நீள அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்; இந்தியாவில் சிறந்த நிர்வாகம், ஆட்சி புரிதல், வளர்ச்சி ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த உதாரணமாக குஜராத் மாநிலமும், அதன் முதல்வர் நரேந்திர மோடியும் திகழ்கின்றனர். மோடியின் ஆட்சியின் கீழ் குஜராத் மாநிலம் பிரமிக்கத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு குஜராத்தின் பங்கு மிகப் பெரிதாகவும், முக்கியமானதாகவும் மாறியுள்ளது.

பிரதமர் பதவிக்கான பாஜகவின் முக்கிய வேட்பாளர்களில் மிக முக்கியமானவராக மோடி உருவெடுத்துள்ளார். இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மிகச் சிறந்த நிர்வாகியாக அவர் உருவெடுத்துள்ளதால் அந்தப் போட்டிக்கு தானாகவே அவரது பெயரும் வந்து நின்று விட்டது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தையும் விட குஜராத்தில் மிகப் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் மோடி. அதேசமயம், 2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான மிகப் பெரிய வன்முறை மற்றும் தாக்குதல் சம்பவம் இன்னும் மோடி மீதான பெருங்கறையாக நிற்கிறது.

அதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், குஜராத்தில் மிகச் சிறந்த நிர்வாகத்தை நடத்தி வருகிறார் மோடி. சிறப்பான பொருளாதார வளர்ச்சி, மக்களுக்குத் தேவையான திட்டங்களை விரைவாக செயல்படுத்துதல், தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த அதிகாரமட்டத்தில் உள்ள தடங்கல்களை நீக்குவது, ஊழலற்ற நிர்வாகம், விவேகத்துடன் கூடிய வேகம் என அனைத்திலும் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார் மோடி.

மோடியின் சிறந்த ஆட்சி முறை, இந்தியாவின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. சமீப ஆண்டுகளில் குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதத்தையும் தாண்டியிருப்பது வியப்பாக உள்ளது. அடிப்படைக் கட்டமைப்பு, மின்சாரம், சாலை வசதிகள் ஆகியவற்றுக்கு மோடி அரசு மிகுந்த முன்னுரிமை கொடுக்கிறது.

உலக அளவில் முன்னணியில் உள்ள பல்வேறு மோட்டார் தொழில் ஜாம்பவான்களை குஜராத் தன் பக்கம் ஈர்த்துள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், 5 சதவீதத்தை கொண்டுள்ள குஜராத், இந்தியாவின் ஏற்றுமதியில், ஐந்தில் ஒரு பங்கை தன் வசம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்துக்கு அடுத்து குறிப்பிடத்தக்க நிர்வாகத்துடன் கூடிய மாநிலமாக பீகார் விளங்குகிறது. இங்கு முதல்வர் நிதீஷ் குமார் சிறப்பான நிர்வாகத்தை நடத்தி வருகிறார். இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலம் என்றநிலையிலிருந்து அந்த மாநிலத்தை மீட்டு கொண்டு வர அவர் கடுமையாக பாடுபட்டு வருகிறார். அதற்கு நல்ல பலன்களும் கிடைக்க ஆரம்பித்துள்ளன.

இவரும் மோடியைப் போலவே சிறந்த நல்லாட்சியைத் தந்து வருகிறார். ஜாதிய அரசியலையும் தாண்டி இவரது செயல்பாடுகள் மிகச் சிறப்பாக உள்ளன. சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வந்தது இவரது முக்கியச் சாதனைகளில் ஒன்றாகும். கல்வி, அடிப்படைக் கட்டமைப்பு ஆகியவற்றுக்கும் நிதீஷ் குமார் முக்கியத்துவம் கொடுக்கிறார். சாதாரண மக்கள் பலன் அடையும் வகையிலான திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். மோடியைப் போலவே சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவராக நிதீஷ் குமார் உள்ளார்.

மோடி பாஜகவைச் சேர்ந்தவராக உள்ள நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை நடத்தி வருபவர் நிதீஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி மற்றும் நிதீஷ் குமாருக்குக் கிடைத்துள்ள வெற்றியைப் பார்த்து வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ளார் உ.பி.முதல்வர் மாயாவதி. அவர்களைப் போலவே தானும் செயல்பட அவர் முயற்சிக்க ஆரம்பித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடியை தேசிய அரங்குக்கு கொண்டு வந்து காங்கிரஸுக்கு பெரும் சிரமத்தைக் கொடுக்க பாஜக முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ள நிலையில் அமெரிக்க நாடாளுமன்றக் குழு மோடியை வெகுவாகப் புகழ்ந்து அறிக்கை அளித்துள்ளது பாஜகவுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும் என்று கருதப்படுகிறது.

இதே நாள்...


  • சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம்
  •  எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது(1960)
  •  ரஷ்யா அதிகாரபூர்வ குடியரசானது(1917)
  •  தட்டச்சுப் பொறியின் நாடா கண்டுபிடிக்கப்பட்டது(1886)
  •  சோவியத் ஒன்றியம் அணுஆயுத சோதனையை மேற்கொண்டது(1954)
  • உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் ஏன்?


    நாம் நமது அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றது. கைகளின் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடம் உண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் உதவும். இறையுருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம் (அயம் மெஹஸ்தோ பகவான்...). திருமணத்தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதாவது, கை பிடித்தல்... கன்னிகையின் கை பிடித்து வரனிடம் அளிக்க வேண்டும். அரசர்களையும் துறவிகளையும் கைத்தாங்கி பெருமைப்படுத்துவார்கள். மந்திர ஜபங்களில் கரன்யாசத்துக்குக் கைகள் வேண்டும். முதுமையில் ஊன்றுகோலைப் பயன்படுத்த கை வேண்டும்.
    கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்லும். ஹஸ்தரேகா சாஸ்திரம் கையை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற, காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும். அத்துடன்


    கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி
    கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்



    என்ற ஸ்லோகத்தைக் கூற வேண்டும். கையைத் தலையணையாக வைத்து உறங்கும் நமக்கு, விழித்ததும் அதைப் பார்ப்பது எளிது. நல்ல நடைமுறைகளைப் பின்பற்றினால் நன்மைகள் பல உண்டு

    தயாரிப்பாளர் சங்கம்-கேபிள் "டிவி" ஒப்பந்தத்தில் ரூ.1.80 கோடி முறைகேடு!

    மிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், கேபிள் "டிவி நிறுவனம் இடையிலான ஒப்பந்தத்தில், 1 கோடியே, 80 லட்ச ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக சங்க பொறுப்பு தலைவர் சந்திரசேகர் உள்ளிட்ட, 60 தயாரிப்பாளர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொறுப்பு தலைவர் சந்திரசேகர், கலைப்புலி தாணு, தேனப்பன், சாலை சகாதேவன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள், கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் முறைகேடு செய்து, 1 கோடியே, 80 லட்ச ரூபாய் ஊழல் செய்திருப்பதாக புகாரில் கூறியிருந்தனர்.

    இதன் பிறகு நிருபர்கள் சந்திப்பில் சந்திரசேகர் கூறியதாவது:கடந்த மே 13ம் தேதி தமிழக தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமநாராயணன், செயலர் சிவசக்தி பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர். கடந்த 11ம் தேதி பிலிம் சேம்பர் தியேட்டரில் சிறப்புக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில், 230 தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டை பலர் கூறினர். குற்றச்சாட்டுகளை எழுத்து பூர்வமாக வழங்குமாறு கேட்டுக் கொண்டேன்.அதன் அடிப்படையில் சங்கத்தில் கடந்த காலங்களில் நடந்த முறைகேட்டை, 60 தயாரிப்பாளர்கள், எழுத்து பூர்வமாக எழுதி போலீஸ் கமிஷனரிடம் கொடுத்துள்ளோம்.கடந்த, 2007ல் தயாரிப்பாளர் சங்கத்துக்கும், திரைப்படங்களின் காட்சிகள், பாடல், நகைச்சுவை காட்சிகளை ஒளிபரப்ப கேபிள் "டிவி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் போட்டனர். ஜே.கே. மீடியா மற்றும் விண் மீடியா என இரண்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் ஒருவருக்கு ஒப்பந்தம் நிலுவையில் இருந்த போதே, உள்ளூர் தனியார் தொலைக்காட்சி சேனல் உரிமையாளர் நலச்சங்கம் என்ற புது நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டனர். இதில் ஏற்கனவே ஒப்பந்தம் பெற்ற ஜே.கே. மீடியா மற்றும் விண் மீடியா நிறுவன நிர்வாகிகளே, இந்த புது நிறுவனத்துக்கும் நிர்வாகிகள் என்பது தான் வேடிக்கை. இவ்வாறாக ஒப்பந்தத்தை நான்கு முறை மாற்றி மாற்றி போட்டுள்ளனர். ஒப்பந்தங்களில் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் தலைவர் ராமநாராயணன், செயலர் சிவசக்தி பாண்டியன், சீனிவாசன். பொருளாளர் அழகன் தமிழ்மணி உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

    இந்த ஒப்பந்தம் மூலம், 2007 முதல், 2010 வரை சங்கத்துக்கு வரவேண்டிய தொகை, 1 கோடியே, 80 லட்ச ரூபாய். மேலே குறிப்பிட்ட தொகை எங்கு யாரிடம் உள்ளது என்பது தெரியவில்லை. முன்னாள் நிர்வாகிகளிடம் கேட்டால் எங்களுக்கு தெரியாது என்கின்றனர். கேபிள் "டிவி நிர்வாகிகளிடம் கேட்டால், நாங்கள் கொடுத்து விட்டோம் என்கின்றனர்.முறைகேடு உண்மையாக இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இத்தொகை கிடைத்தால், ஏழை, எளிய தயாரிப்பாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். கேபிள் "டிவி அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது. இதுவரை போட்டுள்ள ஒப்பந்தம், இம்மாதத்துடன் முடிகிறது. எனவே, ஒப்பந்தம் முடிந்த பின், சினிமா காட்சிகளையோ, பாடல்களையோ அனுமதியின்றி ஒளிபரப்பக் கூடாது.இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.

    வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் - சிம்பு !

    மங்காத்தா படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் டைரக்டர் வெங்கட் பிரபு, அடுத்தும் அஜித்தை வைத்து ஒரு படம் பண்ணப்போகிறார். கூடவே இந்த படத்தில் அஜித்துடன் சிம்புவும் நடிக்க போகிறாராம். தொடர்ந்து தோல்வி படங்களாக இருந்த வந்த அஜித்திற்கு, தனது 50வது படமான மங்காத்தா அவருக்கு ஒரு பெரிய மாஸ் ஹிட் என்றே சொல்லலாம். அஜித்தின் இந்த வெற்றியால் அவரது மார்க்கெட் பழையபடி உயரத்தொடங்கியுள்ளது. மேலும் பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அஜித்தை வைத்து இயக்க போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அஜித்தின் இப்போதைய சாய்ஸ் விஷ்ணுவர்தன், வெங்கட்பிரபு, விஜய் ஆகி‌ய மூவரும் தான்.

    இந்நிலையில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டு இருப்பதாகவும், இந்தபடத்தை வெங்கட்பிரபுவே இயக்கபோவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அதுஎன்னவென்றால், தான் ஒரு அஜித் ரசிகன் என்று வெளிப்படையாகவே கூறிவரும் சிம்புவும், இந்தபடத்தில் அஜித்துடன் சேர்ந்து நடிக்க இருக்கிறாராம். மு‌ம்பை கார்ப்பொரேட் நிறுவனத்துடன் இணைந்து ஏ.எம்.ரத்னம் இந்தபடத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளாராம். விரைவில் இதுபற்றிய உறுதியான அறிவிப்பு வெளியாகும்

    எம்.ஜி.ஆர்., சிறப்பு தபால்தலை பிரான்ஸ் நாட்டில் வெளியீடு!

    பிரான்ஸ் நாட்டில் உள்ள, எம்.ஜி.ஆர்., பேரவை என்ற அமைப்பு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம், மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்காக விழா எடுக்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்து, முக்கிய பிரமுகர்களை சிறப்பு விருந்தினர்களாக வரவழைத்து, பல்வேறு அம்சங்களுடன் இலக்கியச் சொற்பொழிவு, இசை, நாட்டியம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் உண்டு. ஆண்டுதோறும் எம்.ஜி.ஆர்., சிறப்பு தபால் தலையும் வெளியிடுகின்றனர். வரும் செப்., 17 அன்று, பாரிஸ் நகரில் நடைபெறும் எம்.ஜி.ஆர்., விழாவில், நடிகர் மயில்சாமி, இதயக்கனி ஆசிரியர் எஸ்.விஜயன் ஆகியோர் பங்கேற்கின்றனர். விஜயனின், எம்.ஜி.ஆர்., புகைப்பட கண்காட்சியும் இடம் பெறுகிறது. இந்திய தூதரக அதிகாரிகள் காயத்ரி கி÷ஷார்குமார், எம்.எஸ்.கன்யால், பிரான்ஸ் தமிழ்ச் சங்கத் தலைவர் பா.தசரதன், பாரீஸ் நகர செயின்ட் தெனிஸ் மேயர் திதியே பயார்டு மற்றும் பிரான்சுவா கிளாத், புளோரன்ஸ் ஹேய், ஜாக்குலின் பவுலா ஆகிய துணை மேயர்களும் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.
    விழாவுக்கான ஏற்பாடுகளை பிரான்ஸ் எம்.ஜி.ஆர்., பேரவையின் நிறுவனரும், தலைவருமான முருகு பத்மநாபன் கவனிக்கிறார். மலேசியாவைத் தொடர்ந்து, பிரான்ஸ் தலைநகர் பாரீசிலும் எம்.ஜி.ஆர்., சிலை நிறுவ, எம்.ஜி.ஆர்., பேரவை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

    இந்திய ஹாக்கி அணிக்கு ரூ 25 லட்சம் பரிசு பஞ்சாப் துணை முதல்வர்!

    சீனாவின் ஆர்டோஸ் நகரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் அறிவித்துள்ளார்.

    முன்னதாக அவர்களுக்கு தலா ரூ 25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என ஹாக்கி அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. அதை அவர்கள் ஏற்க மறுத்தனர்.
    இந்த நிலையில் இந்திய அணிக்கு ரூ 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என சுக்பீர் சி்ங் அறிவித்துள்ளார். வீரர்களுக்கு போதிய தொகையை பரிசாக அளிக்காததற்கு மத்திய அரசு ஹாக்கி அணி வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் கூறினார்.

    மத்திய அரசு தலா ரூ 1.5 லட்சம் பரிசு: இதற்கிடையே, வீரர்களின் உணர்வைப் புரிந்து, இந்திய ஹாக்கி அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ 1.5 லட்சம் பரிசாக அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இது குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மாக்கான் கூறுகையில், "இந்திய ஹாக்கி வீரர்களுக்கு ரூ 25000 பரிசை அறிவித்தது மத்திய அரசல்ல. எனவே தவறு ஹாக்கி இந்தியா அமைப்புடையதுதான். மத்திய அரசு ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ 1.5 லட்சம் பரிசளிக்கிறது," என்றார்.

    பூமியை போன்ற, புதிய கிரகம்!


    ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் கிரகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதிநவீன டெலஸ் கோப் மூலம் விண் வெளியில் ஆய்வு நடத்திய போது பூமியை போன்று மற்றொரு புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்தனர். இது பூமியை விட 3.6 மடங்கு பெரியது. இதை சுற்றி விண்மீன் (நட்சத்திரங்கள்) கூட்டம் உள்ளது.
     
    அதற்கு எச்.டி.85512 பி என பெயரிட்டுள்ளனர்.  இந்த கிரகம் பூமியில் இருந்து 36 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இதன் வலது புறம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. எனவே, இங்கு உயிர்கள் வாழ முடியும் என கருதப்படுகிறது. மேலும் இந்த புதிய கிரகத்தின் வெளிப்புற தோற்றம் பாறை போன்று காட்சி அளிக்கிறது.
     
    மேகக் கூட்டங்களும் காணப்படுகிறது. ஆகவே இங்கு உயிர் வாழ முடியும் என கருதப்பட்டாலும் கூட தீவிர ஆய்வுக்கு பிறகே இறுதியான முடிவுக்கு வரமுடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 

    அமெரிக்காவிலும் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர்!


    அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.   உலகின் வல்லரசு நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவிலும் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். அங்கு கடந்த 1983-ம் ஆண்டு முதல் இந்த நிலை இருந்து வருகிறது. அமெரிக்காவில் ஒரு நபரின் ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்துக்கு கீழ் இருப்பவர்கள் வறுமையில் வாடுபவர்களாக கருதப்படுகின்றனர்.
     
    இந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளாக அங்கு பசி பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   கடந்த ஆண்டு அமெரிக்கா முழுவதும் இது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 4 கோடியே 62 லட்சம் பேர் பட்டினியால் வாடுவதாக தெரியவந்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். அது அமெரிக்க மக்கள் தொகையில் 6-ல் ஒருபங்கு ஆகும்.
     
    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாகாணங்களில் மிஸ்சிசிப்பி முதலிடம் வகிக்கிறது. அங்கு 22.07 சதவீதம் பேர் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதைத் தொடர்ந்து லூசியானா, கொலம்பியா, ஜார்ஜியா, நியூமெக்சிகோ, அரிஷோனா போன்றவையும் அடங்கும்.

    மனித உரிமை கவுன்சிலில் இலங்கை போர் குற்ற அறிக்கை: பொது செயலாளர் பான்-கி-மூன் அனுப்பினார்


    இலங்கையில் விடுதலைபுலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் நடந்த இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். எனவே, இலங்கை ராணுவம் போர்க்குற்றம் புரிந்ததாக கடந்த ஏப்ரல் மாதம் ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டது.
     
    இதை இலங்கை அரசு மறுத்து வந்தது. போர்க்குற்ற அறிக்கையை எதிர்த்து அங்கு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையே ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளுக்கு அந்த அறிக்கை மீது எடுக்கப்பட உள்ள நடவடிக்கைக்கான தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
     
    இந்த நிலையில், இலங்கை மீதான போர்க்குற்ற அறிக்கையை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு பொது செய லாளர் பான்-கி-மூன் நேற்று அனுப்பி வைத்தார். இந்த கவுன்சில் 3 பேர் உறுப்பினர்களை கொண்டது. நவி பிள்ளை இதன் தலைவராக உள்ளார். இலங்கை மீதான போர்க்குற்ற அறிக்கை தீர்மானம் மீது இந்தியா, இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. போர்க்குற்ற அறிக்கையை தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
     
    அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் முடிவை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை மீதான போர்க்குற்றம் தீர்மானத்துக்கு மூன்றில் ஒரு பங்கு நாடுகள் ஆதரவு அளித்தால் கவுன்சிலில் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படும். ஆனால், தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற தீர்மானத்துக்கு நட்பு நாடான சீனா ஆதரிக்காது என்ற நம்பிக்கையில் இலங்கை உள்ளது.

    2014 பிரதமர் தேர்தலில் ராகுல் காந்தி-நரேந்திர மோடி இடையே போட்டி- அமெரிக்கா!


    அமெரிக்க பாரளுமன்ற ஆய்வுக்குழு வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில் குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடியின் நிர்வாகத்திறமையினையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும்,தொழில்துறையின் வளர்ச்சிக்கும் முதலீடுகளை ஈர்ப்பதிலும் சிறந்த அரசு நிர்வாகம் நடத்துகிறார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
     
    2014-ல் பாரதீய ஜனதா மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் எனவும் 2014 தேர்தலில் பிரதமர் வேட்பாளர்களாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இடையே நேரடி போட்டி இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.

    `பழங்களின் ராஜா'


    தமிழர்களின் முக்கனிகளுள் முதலாவதான மாம்பழத்திற்கு `பழங்களின் ராஜா' என்ற பெயரும் உண்டு. இனிப்பு சுவை அதிகம் கொண்ட மாம்பழத்தில் காணப்படும் `ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ்', இருதய நோய், விரைவில் முதுமை அடைவது மற்றும் புற்று நோய் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக வைத்துக்கொள்கிறது.
     
    அதோடு மாம்பழத்தில் இரும்புச் சத்து மிக அதிகம் காணப்படுகிறது. அதனால் ரத்த சோகை உள்ளவர்கள் இதை சாப்பிடுவது நல்லது. அதேநேரம், இந்த பழத்தை அதிக அளவில் சாப்பிடக்கூடாது. பல மருத்துவ குணங்களும் மாம்பழத்திற்கு உண்டு.
     
    சருமம் வறட்சியாக காணப்பட்டாலோ அல்லது செதில் செதிலாக உதிர்ந்து காணப்பட்டாலோ மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். 

    தொண்டை அலர்ஜியை தடுக்க!


    பொதுவாக தொண்டை நோய்களைப் பற்றி ஆராயும் போது அதிகம் பேரை பாதிப்பவை  தொண்டையில் சதை வளருதல், தொண்டை வலி, சரியாக உணவு உண்ண இயலாமை, குரல் மாற்றம், தொண்டையில் புற்று நோய், வாய்ப்புண், பான்பராக்கினால் வரும் வியாதிகள், இவை தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். தொண்டையில் சதை மிகச் சாதாரணமாக குழந்தைகளுக்கு காணப்படுகிறது.
     
    இதற்கு டான்சில்ஸ் என்று பெயர். குழந்தைகளின் 12 வயது வரை இந்த சதை காணப்படுகிறது. அதற்கு பிறகு சில சமயங்களில் தொல்லை கொடுக்கிறது. ஆனால் 12 வயதிற்கு உட்பட்டிருப்பவர்களுக்கு இந்த சதை எப்போதும் தொல்லை கொடுக்கிறது. குளிர்ந்த பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் உட்கொண்ட பிறகு தொண்டை கட்டுகிறது. இதனால் உணவு உட்கொள்ள தடை ஏற்படுகிறது. ஜுரம், கை, கால் வலி வருகிறது.
     
    தக்க மருந்துகளை உட்கொண்டால் உடனே சரியாகி விடுகிறது. சில சமயங்களில் இந்த வியாதி குழந்தைகளுக்கு அடிக்கடி வருகிறது. இதற்கு நாள் பட்ட தொண்டை சதை அழற்சி என்று பெயர். இதனால் குழந்தைகளுக்கு உணவு உட்கொள்ள சிரமம், உணவு உட்கொள்ள விருப்பம் இல்லாமை மற்றும் உணவு உட்கொள்ளும் பொழுது வலி ஆகியவை ஏற்படுகின்றன.
     
    இவ்வாறு அடிக்கடி தொந்தரவு செய்யும் பொழுதே நாம் இந்த சதையை அறுவை சிகிச்சை செய்து அகற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார் காது, மூக்கு தொண்டைஅறுவை சிகிச்சை  நிபுணர் டாக்டர் ரவிராமலிங்கம். டான்சி லைட்டிஸ்க்கு ஏன் அறுவை சிகிச்சை அவசியமாகிறது? அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதலின் முக்கியத்துவம் என்னவென்றால் பிற்காலத்தில் அக்குழந்தைக்கு வாதக் காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளை தவிர்க்கலாம்.
     
    இந்தியாவில் குழந்தைகளுக்கு காணப்படும் இதய நோய் மிக முக்கியமானவை தொண்டையில் வாழும் கிருமிகளால் வருபவையே. அதனால் தொண்டை நோயை உடனுக்குடன் சரி செய்து கொள்வது அவசியம். இதற்கு காது, மூக்கு, தொண்டை மருத்துவரின் உதவியை நாடவேண்டும். வேறு மறுத்துவர்களால் தக்க சிகிச்சை அளிப்பது சாத்தியமல்ல.
     
    தொண்டையில் ஏற்படும் அழற்சியை மாத்திரைகளால் சரிவர தீர்வு காணமுடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதே நல்லது. அறுவை சிகிச்சை செய்து கொண்டால் குழந்தையின் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது என்று சில மருத்துவர்கள் தவறான கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். இது விஞ்ஞான பூர்வமாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
     
    இன்னும் சொல்லப் போனால் இந்தியாவை விட மேற்கத்திய நாடுகளில் இந்த கேள்வி எழும். 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனைச் செய்யலாம்.  3 வயது குழந்தைக்கும் செய்யலாம். இதனை எதற்கு சொல்கிறோன் என்றால் குழந்தையின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் சதை வளர்ச்சி இருந்தால் அதனை எடுத்து விடுவது நல்லதாகும்.
     
    தொற்று நோய் பரவுவதைத் தடுக்க: மிதமான சூடுள்ள சோப் நீரில் அல்லது அல்ஹோல் சேர்ந்த ஹானட் நப் கொண்டு கைகளை கழுவவும், குடிக்கும் டம்ளர் அல்லது உணவு உண்ணும் பாத்திரங்களை உங்கள் நண்பர்களுடன் அல்லது சகமாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உணவு உண்ணும் பாத்திரங்கள் மற்றும் குடிக்கும் கிளாசுளை சூடான சோப் நீரில் கழுவ வேண்டும். இருமும் போது உங்கள் வாயையும், மூக்கையும் மூடிக்கொள்ளுங்கள்.
     
    சுத்தமான குடி நீர்: குடி தண்ணீர் மூலம் ஏற்படும் தொண்டை அலர்ஜி நோயை எளிதான முறையில் தடுக்கும் வழி முறைகள்:- வீட்டில் தினசரி குடிக்கும் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். கேன் வாட்டர்களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றது என தெரிய வருவதால் அந்த நீரையும் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். வெயிலில் அலைபவராக இருந்தால் வீட்டில் இருந்தே தண்ணீரை தினசரி எடுத்துச் செல்வது நல்லது. அதே போன்று உறவினர் வீடுகளுக்கு செல்லும் போது அங்கேயேயும் காய்ச்சிய குடிநீரையே வாங்கி பருக வேண்டும்.
     
    கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், மோர் போன்றவைகள் தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பிறகே வாங்கி குடிக்க வேண்டும். சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், தர்பூசணி போன்ற பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெயிலுக்கு இதமான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.
     
    அறிகுறிகள்: தொண்டையில் சீழ் பிடித்த கட்டி, தொண்டை  நோயின் ஒரு அறிகுறி இது,  (தொண்டைத் திசுக்களின் உட்பகுதியில் கீழ் சேகரிக்கப்பட்டிருந்தல்) உருவாவதாகும். தொண்டையில் சீழ் பிடித்த கட்டிக்கான அறிகுறிகள் பெரும்பாலும் கடும் காய்ச்சல், அடைத்த குரல், வாயைத் திறப்பதில் சிரமம், உமிழ்நீர் அதிகமாகச் சுரத்தல், வாய்நீர் வடிதல், மற்றும் சில வேளைகளில் கழுத்து வீக்கம் என்பனவாகும்.
     
    இந்த அறிகுறிகள் தோன்றினால் மருத்துவரிடம் சென்று காட்டுவது நல்லது. தொண்டை நோய்களில் வேறு சிக்கல்களும் உண்டா கலாம், அப்படிப்பட்ட ஒரு சிக்கல் வாதக் காய்ச்சலாகும். இது தோல், மூட்டுகள், இதயம் மற்றும் மூளை என்பனவற்றை உட்படுத்தும் வாதக் காய்ச்சலாகும். வேறு சிக்கல்கள், மூட்டு வீக்கம் மற்றும் சிறு நீரக வீக்கம் என்பன வற்றை உள்ளடக்கும்.
     
    தடுக்க வழிமுறைகள்: காய்ச்சலை கண்காணியுங்கள் மற்றும் ஆண்டிபை யோடிக்ஸ் மருந்து முழுவதையும் உபயோகியுங்கள். ஆண்டிபை யோடிக்ஸ் மருந்து கொடுத்த ஆரம்பித்த 3 நாட்களுக்குள் வழக்கமாக, காய்ச்சல், மற்றும் தொண்டை வலி குறைய ஆரம்பிக்கும். நோய் திரும்பவும் வராதிருக்கவும், ஆண்டிபையோடிக் எதிர்ப்பு சக்தியை இழக்காமலிருக்கவும், நோயின் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவும் ஆண்டிபையோடிக் மருந்துகள் முழுவதையும் உபயோகிப்பது முக்கியம்.
     
    காய்ச்சல் மற்றும் வலிக்காக உங்கள் பிள்ளைக்கு அசெட்டமினோபைன் (டைலெனோல், டெம்ப்ரா, அல்லது வேறு பிராண்டுகள்) அல்லது ஐபியூபுரோபென் (அட்வில், மோட்ரின், அல்லது வேறு பிராண்டுகள்) கொடுக்கப்படலாம். உங்கள் குழந்தை அசெடில் சாலிசிலிக் அசிட் அல்லது அஸ்பிரின் கொடுக்க வேண்டாம். மென்மையான உணவுகள் மற்றும் ஒரு நீராகார உணவு கொடுங்கள் தொண்டை வீக்க நோயுள்ளவர்களுக்கு உணவு உண்பது மற்றும் பானங்கள் குடிப்பது வேதனையைக் கொடுக்கலாம்.
     
    உங்கள் பிள்ளை மேலும் சவுகரியமாக உணர்வதற்காக, பின்வருவனவற்றை முயற்சி செய்து பார்க்கவும். உங்கள் குழந்தை விழுங்குவதற்கு கஷ்டப்பட்டால், விழுங்குவதற்கு இலகுவான சூப், போன்ற மென்மையான உணவுகளை கொடுக்கவும். அதிகளவு நீராகாரங்கள் கொடுக்கவும், உறிஞ்சும் குழாயினால் உறிஞ்சிக் குடிப்பது அல்லது உறிஞ்சிக் குடிக்கும் கோப்பையில் குடிப்பது உதவி செய்யக் கூடும்.
     
    1 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொண்டையை இதமாக்குவதற்கும் மற்றும் இருமலை குறைப்பதற்கும் பாஸ்சுரைஸ்ட் செய்யப்பட்ட தேன் 1 முதல் 2 தேக்கரண்டி (5 முதல் 10 மில்லி) கொடுத்து முயற்சி செய்து பார்க்கவும். வளர்ந்த பிள்ளைகள் சூடான உப்பு நீரால் வாயைக் கொப்பளிக்கலாம். ஐஸ் கட்டிகள் மற்றும் தொண்டைக்கு இதமளிக்கும் இனிப்பு வகைகள் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொஞ்சம் நிவாரணமளிக்கலாம்.
     
    சிறு பிள்ளைகளுக்கு அவற்றைக் கொடுக்க வேண்டாம், ஏனென்றால் அவை அவர்களின் தொண்டையில் சிக்கக் கூடும் ஆபத்துள்ளது. உங்களுக்கு தொண்டை வீக்க நோய் இருப்பதாக சந்தேகித்தால் டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள். நோய் திரும்ப வருவதையும் சிக்கல்களையும் தவிர்ப்பதற்கு ஆண்டிபையோடிக்ஸ் மருந்து முழுவதையும் உபயோகிப்பது மிகவும் முக்கியம்.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...