|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 March, 2013

Naduvula Konjam Pakkatha Kaanom Movie


பார்த்ததில் பிடித்தது!

 உங்க டூத்பேஸ்ட் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!
" உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு
சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி
யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்...

அப்புறம்
" உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? " -னு
அனுஷ்கா கேட்டாங்க... அதனால அதையும்
வாங்கினேன்..

( ஹி., ஹி., அனுஷ்கா பீல் பண்ணினா
எனக்கு மனசு தாங்காதுல்ல... )

சரி மேட்டர்க்கு வருவோம்...

கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு
அது இருக்கா..? இது இருக்கான்னு
கேட்டாங்களே தவிர... அதுல நிக்கோடின்
இருக்குன்னு யாருமே சொல்லலை...

என்னாது நிக்கோடினா..?!!

( அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்க
கூட விட மாட்டீங்களா..?!!! )

DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research )
நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின்
இருக்குன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க..

( நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும் )
Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி
24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல
7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது
கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..

ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின்
இருக்காம்.. ஆனா Colgate Herbal-ல
அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல
பல்லு விளக்கினா... அது 9 சிகரெட்
குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!
இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே
வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு
எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம
பத்திரிக்கை , டி.வி சேனல்களோட
சேவையை எப்படிதான் பாராட்றது..?
" என்னங்க இது அநியாயமா இருக்கு..?
நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு
தானே கேக்க வர்றீங்க..?
ம்ம்... என்னங்க பண்றது..?
காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே
சாராயம் விக்கிற நாடுங்க இது..
இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..!

ஐ.நா.வின் குறிக்கோள் தோல்வியடையும்.


 வரும் 2011-2020ம் ஆண்டுக்குள் 14 கோடிக்கும் அதிகமான சிறுமிகள் குழந்தை திருமணத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் என்று ஐ.நா. மக்கள்தொகை நிதியம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள குழந்தை திருமண பழக்கம் தொடர்ந்தால் ஆண்டுக்கு 14.2 மில்லியன் சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் நடக்கும் அல்லது தினமும் 39,000 சிறுமிகளுக்கு திருமணம் நடக்கும். இது தவிர வரும் 2011-20ம் ஆண்டுக்குள் 14 கோடி சிறுமிகளுக்கு 18 வயதுக்குக்குள் திருமணம் நடக்கும். மேலும் 5 கோடி சிறுமிகளுக்கு 15 வயதுக்குக்குள் திருமணம் நடக்கும். வளர்ந்து வரும் நாடுகளில் இளைஞர் சமுதாயத்தின் எண்ணிக்கை பெருகிவருவதால் குழந்தை திருமண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து ஐ.நா. மக்கள்தொகை நிதியத்தின் தலைவர் பாபாடுண்டே ஒசோடிமெஹின் கூறுகையில், குழந்தை திருமணம் என்பது மனித உரிமை மீறலாகும். சிறுமியாக இருக்கையில் திருமணம் செய்து கொடுத்தால் அவரின் திறமைகள் வெளிப்படாமலேயே போகும். இளம் வயதில் திருமணமாகும் சிறுமிகள் கணவரால் கொடுமைக்கு ஆளாக்கப்படுவது அதிகம் உள்ளது என்றார். 

15 முதல் 19 வயது வரை உள்ள சிறுமிகள் கர்ப்பம் மற்றும் பிரசவத்தின்போது ஏற்படும் பிரச்சனைகளால் தான் அதிகம் இறக்கின்றனர். அதுவே சரியான வயதில் திருமணம் செய்து சிறிது காலம் கழித்து குழந்தை பெறும் பெண்கள் ஆரோக்கியமாக உள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு அதிகாரி பிலாவியா பஸ்ட்ரியோ தெரிவித்தார். குழந்தை திருமண பிரச்சனையை உடனே கவனிக்காவிட்டால் வரும் 2015ம் ஆண்டுக்குள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைப்பது மற்றும் பிரசவ மரணத்தை வெகுவாகக் குறைக்கும் ஐ.நா.வின் குறிக்கோள்கள் தோல்வியடையும். தெற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் தான் அதிக அளவில் குழந்தை திருமணம் நடக்கிறது. உலக அளவில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடக்கும் 10 நாடுகளின் விவரங்கள்: நைஜர் - 75 சதவீதம், சாட் மற்றும் மத்திய ஆப்பிரிக்கா - 68 சதவீதம், வங்கதேசம் - 66 சதவீதம், கினியா - 63 சதவீதம், மொசாம்பிக் - 56 சதவீதம், மாலி - 55 சதவீதம், புர்கினா பாசோ மற்றும் தெற்கு சூடான் - 52 சதவீதம், மாளவி - 50 சதவீதம். இந்தியாவில் குழந்தை திருமணம் 47 சதவீதம் நடைபெறுகிறது. 

இது உலக பாலிடிக்ஸ்!


இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளது பற்றி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட அமெரிக்காவின் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. 'இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறும் கடமையையும் மேம்படுத்துதல்" எனும் தலைப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

தொடரும் மனித உரிமை மீறல்கள் மேலும் இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. காணாமல் போதல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள், கருத்து சுதந்திரம் பறிப்பு, மனித உரிமை ஆர்வலர்களுக்கு மிரட்டல்கள், நீதித்துறைக்கு அச்சுறுத்தல் உள்ளிட்டவை நீடிப்பது குறித்து இத்தீர்மானம் கவலை தெரிவிக்கிறது. அதிகாரப் பகிர்வு இல்லை ஏன்? இதேபோல் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட துமக்களின் எதிர்பார்ப்புகளை இலங்கை அரசு நிறைவு செய்யவில்லை என்பதும் கவலைக்குரியது. அதே நேரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தொழில்நுட்பக் குழுவின் இலங்கை பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையுடனான இலங்கை அரசின் ஒத்துழைப்பையும் பேச்சுவார்த்தையையும் பாராட்டுகிறோம். சர்வதேச விசாரணை இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவுதல், குறிப்பாக சுயேட்சையான மற்றும் நம்பகத்தன்மையுடனான சர்வதேச விசாரணை போன்றவற்றை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையை வரவேற்கிறோம். 

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் ஆதரவும் எதிர்ப்பும் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நேற்று முன்தினம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து விவாதத்துக்காக நேற்று ஜெனீவா நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 5.10 மணிவரையில் நடைபெற்றது. இதில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ரஷ்யா, பாகிஸ்தான், சீனா, கியூபா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்த்துள்ளனர். இந்த தீர்மனத்தில் உள்ள சொற்களை மாற்ற வேண்டும் என்பது இந்நாடுகளின் கோரிக்கை. இதே கருத்தை சியராலியோன், அங்கோலா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர். ஆனால் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்காவின் தீர்மானத்தில் இன்னமும் கடுமையான நிபந்தனைகள் இடம்பெற வேண்டும்.. மேலும் வலுவானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர். கியூபா வழக்கமாக மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் நாடு தான். ஆனால், இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வருகிறது என்ற ஒரே காரணத்துக்காக அதை கியூபா எதிர்ப்பது, மாபெரும் துரோகமாகும். சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையின் நட்பு நாடுகள் என்ற வகையில் இந்தத் தீர்மானத்தை அவர்கள் எதிர்ப்பது எதிர்பார்த்தது தான். ரஷ்யாவைப் பொறுத்தவரை அமெரிக்க எதிர்ப்பும் மற்றும் இந்தியாவுக்கு நெருக்கடி வரக்கூடாது என்ற கவலையும் தான் தீர்மானத்தை எதிர்ப்பதற்கான முக்கிய காரணமாகும். இது உலக பாலிடிக்ஸ்! 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...