|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 December, 2011

முகச் சுருக்கத்தைப் போக்க...


நேரங்கெட்ட நேரத்தில் வேலை, விடியலில் தூங்கி மாலையில் கண்விழிக்கும் கலாச்சாரம் என நகரத்தில் பெரும்பாலோர் வாழ்க்கை நரக வாழ்க்கையாகி வருகிறது. பீஸா, பர்க்கர், என பாஸ்ட்புட் அயிட்டங்களை உண்ணுவதால் உடலுக்கு தேவையான சரிவிகித சத்துக்கள் கிடைக்காமல் இளமையிலேயே முதுமையான தோற்றத்தை அடைகின்றனர் இளம் தலைமுறையினர். சிறு வயதிலேயே முகம் முழுவதும் சுருங்கிப்போய் காட்சியளித்தால் யாருக்குத்தான் கவலை ஏற்படாது? உங்கள் கவலையை போக்கி முகச்சுருக்கத்தை மாற்ற உணவியல் வல்லுநர்கள் தரும் ஆலோசனைகளை கேளுங்கள்

அஷ்ட கோணல் யோகா சாதாரணமாக வீட்டில் அமர்ந்திருக்கும் போது கண்களை உருட்டி நன்றாக நாலாபக்கமும் சுழற்றவேண்டும். இதனால் கண்களை சுற்றியுள்ள சுருக்கம் போகும். பின்னர் வாய்க்குள் நன்றாக காற்றை உறிஞ்சி கன்னத்தை உப்ப வைத்து பின்னர் மெதுவாக விட கன்னத்தில் உள்ள சுருக்கம் நீங்கிவிடும். அடிக்கடி முகத்தை அஷ்ட கோணலாக்கி பின்னர் நேராக்கினால் முகஅழகு அதிகமாகும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதற்கு பேஷியல் யோகா என்று பெயர் வைத்திருக்கும் யோகா நிபுணர்கள் முகச்சுருக்கத்தைப் போக்க இந்த யோகாவை பரிந்துரைக்கின்றனர். அமெரிக்காவில் ஏற்கனவே பிரபலமாகி சக்கை போடு போட்ட இந்த யோகா பயிற்சிகள் இப்போது தான் ஏனைய நாடுகளுக்கு படிப்படியாக பரவ ஆரம்பித்துள்ளன.

சத்தான உணவு சுருக்கம் போக்கும் வைட்டமின் சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை அதிகம் உண்ணுங்கள் ஏனெனில் இது முகச்சுருக்கத்தைப் போக்கும். கறிவேப்பிலையிலுள்ள வைட்டமின் ஏ இளமையான சருமத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவும். அடிக்கடி துவையல் செய்து சாப்பிட முகச்சுருக்கம் அண்டாது.துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

சருமம் பளபளப்பு வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையடைவதோடு முகச் சுருக்கம் மறையும். வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பொன் நிறமாகும். 

முகத்திற்கு எண்ணெய் மசாஜ் நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள் முகம் புத்துணர்ச்சியடையும். இதே முறையை ஆலிவ் எண்ணெய் அல்லது சுத்தமான தேங்காய் எண்ணெயை பயன்படுத்தியும் செய்யலாம் முகத்தில் இளமை பூரிக்கும்.

சிறுவர்களை கட்டாயப்படுத்தி தீவிரவாத பயிற்சி...


பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள மதராஸாவின் ரகசிய அறையில் சங்கிலியால் கட்டப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானின் கராச்சி நகரி்ன் சொராப் காத் பகுதியில் உள்ள ஒரு மதரஸாவின் ரகசிய அறையில் 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்தனர். தீவிரவாதிகள் சிறுவர்களை கட்டாயப்படுத்தி தீவிரவாத பயிற்சி அளித்து வந்துள்ளனர். தாங்கள் சொல்வதை செய்ய மறுக்கும் சிறுவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த மதரஸாவிற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ரகசிய அறையில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட சிறுவர்களை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கைபர் பக்துன்க்வா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸ் அதிகாரி கடாப் தெரிவித்தார்.

ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பின்பற்றும் மதரஸாக்கள் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். நாட்டில் 20,000க்கும் அதிகமான மதரஸாக்கள் குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வி கற்றுத் தருகின்றன. அவை அனைத்தையும் அரசாங்கத்தில் பதிவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். வடமேற்கு கைபர் பக்டுங்வா மாகாணத்தில் உள்ள பல மதரஸாக்கள் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவ்வாறு குற்றம்சாட்டப்பட்ட பல மதரஸாக்களில் அரசு சோதனை நடத்தியது. பெஷாவர் அருகே உள்ள மவுலானா சமி உல் ஹக் மதரஸாவில் தான் தாலிபான் தலைவர் முல்லா உமர் பயிற்சி பெற்றதாக நம்பப்படுகிறது.

எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றாதீர்கள்-தமிழக, கேரள அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..


முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக தமிழக, கேரள அரசுகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இரு மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்தனர். எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்ற வேண்டாம் என்று நீதிபதிகள் மாநில அரசுகளை அறிவுறுத்தினர். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்து செய்தித் தாள்களிலும் ஒரு பக்க விளம்பரம் கொடுத்திருந்தார். 

முல்லைப் பெரியாறு அணையைச் சுற்றியுள்ள இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தண்ணீரில் மூழ்கிவிடும். அதனால் அவர்கள் அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க நினைக்கிறார்கள். ஒரு சிலரின் சுயநலத்திற்காக கேரள மக்கள் பலியாகிவிடக்கூடாது என்பது போன்ற கருத்துகள் அந்த விளம்பரத்தில் இருந்தது.

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கையில் ஜெயலலிதா இவ்வாறு விளம்பரம் கொடுத்ததற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே.ஜெயின் கண்டனம் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை அரசியலாக்கக் கூடாது என்று அவர் மேலும் தெரிவித்தார். அதேபோல கேரள அரசுக்கும் இநத்ப் பிரச்சினையை அரசியல் ரீதியாக பயன்படுத்தி பெரிதாக்கக் கூடாது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை பெரிதாகிக் கொண்டிருக்கையில் இரு மாநில அரசுகளும் எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்ற வேண்டாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் அணை குறித்து கேரள அரசு தேவையில்லாத வதந்திகளைப் பரப்பி மக்களை பீதியடையச் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற தமிழக அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாகக் குறைக்கக் கோரும் கேரள அரசின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச திரைப்பட விழா நடத்த முதல்வர் ரூ.25 லட்சம்.


சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்த, தமிழக அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகம், 2003ம் ஆண்டு முதல் எட்டு ஆண்டுகளாக, "சென்னை சர்வதேச திரைப்பட விழா' என்ற பெயரில் டிசம்பர் மாதம் விழா நடத்தி வருகிறது. இந்த ஆண்டும், ஒன்பதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 14 முதல் 22ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விழாவில், 140 திரைப்படங்கள், ஒன்பது நாட்களில், ஐந்து தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளன. இந்த ஆண்டு நடக்கும் ஒன்பதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் செலவுகளுக்காக, தமிழக அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் ஜெயலலிதா, இந்திய திரைப்பட திறனாய்வுக் கழக இயக்குனர் தங்கராஜிடம் வழங்கினார். அப்போது, திரைப்பட நடிகர் சரத்குமார், நடிகை சுகாசினி, நடிகை லிசி ஆகியோர் உடனிருந்தனர். திரைப்பட விழாவை தலைமை வகித்து நடத்தித் தருமாறு, முதல்வரிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அம்மாவை மீட்டுத் தரக் கோரி கலெக்டர் ஆபீஸ் வந்த குழந்தை


காதல் கணவனையும், மூன்று வயது குழந்தையையும் பிரிந்து தலைமறைவானார் மனைவி; மீட்டுத்தருமாறு குழந்தையுடன் வந்து, கலெக்டரிடம் மனு கொடுத்தார், கணவன். அன்னூர் அருகே, ஓரைச்சல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதாசலம். இவரது மனைவி மகேஸ்வரி. வெவ்வெறு ஜாதியை சேர்ந்த இருவரும், 2007ம் ஆண்டு காதல் திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு, மூன்று வயதில் யுவன் சாதிக் என்ற மகன் இருக்கிறான். மகேஸ்வரி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து வந்தார். கடந்த நவ., 5ம் தேதி கல்லூரிக்கு படிக்க சென்ற மகேஸ்வரி, வீடு திரும்பவில்லை; தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அவருக்கு பெற்றோர் வேறு திருமணம் நடத்த முயற்சி செய்து வருவதாக மருதாசலம் கூறுகிறார். "கடந்த ஒரு மாதமாக தாயைப் பிரிந்த நிலையில், குழந்தை எந்நேரமும் அழுது கொண்டே இருக்கிறான். குழந்தையை காப்பாற்ற, வேலைக்கு செல்லக் கூட முடியாத நிலையில் உள்ளேன். மனைவியை மீட்டுத் தர வேண்டும்' என, மருதாசலம் குழந்தையுடன் வந்து, நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

மக்கள் குறைதீர்ப்பு முகாமில் அவர் அளித்த மனு: நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன். மனைவி உயர் ஜாதியை சார்ந்தவர். இதனால், எங்கள் திருமணத்தை மனைவியின் பெற்றோர் விரும்பவில்லை. அவரை, "நிலத்துக்கு கையெழுத்து போட வேண்டும்' எனக் கூறி, அழைத்து சென்றுவிட்டனர். அவர் படிக்கும் கல்லூரிக்கு சென்றபோது, கல்லூரி நிர்வாகமும் என்னை பார்க்க அனுமதிக்கவில்லை. மனைவியை மீட்டுத் தருமாறு, நவ.,14ல் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். போலீசார் கூறியும், அவர் வரவில்லை. அவரது பெற்றோர் என்னை மிரட்டுகின்றனர். என் மனைவிக்கு வேறு திருமணம் செய்து வைக்க, திட்டமிட்டுள்ளனர். எனக்கும், குழந்தைக்கும் தற்கொலையைத் தவிர வேறு வழி இல்லை. குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மனைவியை மீட்டுத் தர வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

இனிமேல் விருப்பப்பாடத்தில் சமாளிக்க முடியாது...


விருப்பப் பாடத்தை கேடயமாக வைத்து, சிவில்சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் தேறிவிட முடியாது. கடினமான திறனறி தேர்வுமுறையை முதல்நிலைத் தேர்வில் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும். இந்தாண்டு முதல்(2011), சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி, ஏற்கனவே மாணவர் சமூகம் அறிந்த ஒன்றுதான். கடந்த 2010ம் ஆண்டுவரை, ஒருவர், பொதுப்பாடத்திலும், விருப்பப் பாடத்திலும் தேர்ச்சிப்பெற வேண்டும். புதிய விதிமுறையின்படி, முதல்நிலைத் தேர்வானது(Preliminary exam), 2 தாள்களைக் கொண்டதாக இருக்கிறது மற்றும் ஒவ்வொரு தாளுக்கும் 2 மணிநேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு தாள்களிலும் அதிகபட்ச மதிப்பெண்கள் 200.
புதிய முறையின்படி, பொதுப்பாடத்தின் முதல் தாளானது, பழைய பாடத்திட்டத்தின், பொதுப்பாடப் பிரிவைப் போன்றே இருக்கும். அதேசமயம், General mental ability என்ற பிரிவு மட்டும் நீக்கப்பட்டு, இரண்டாம் தாளில் சேர்க்கப்பட்டுள்ளது. உண்மையான மாறுதல் என்பது இரண்டாம் தாளில் உள்ளது. இந்த தாளானது, ஒருவரின் விளக்கமளிக்கும் திறனை சோதித்தல், புரிந்துகொள்ளும் திறன், தர்க்கரீதியிலான பகுப்பாய்வு, பொது மன ஆற்றல், அடிப்படை கணித அறிவு, முடிவெடுக்கும் திறன் மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் திறன் போன்றவைகளை சோதிக்கும்.
முதல் தாளானது பொதுப்பாடத்திற்கானது என்று அறியப்படும் அதேவேளையில், இரண்டாம் தாளானது, சிவில் சர்வீஸ் திறனறி தேர்வு(Civil service aptitude test - CSAT) என்று அறியப்படுகிறது. அதேசமயம், தேர்வானது ஆப்ஜெக்டிவ் கேள்விகள் அடிப்படையிலேயே நடைபெறும். பழைய பாடத்திட்டத்தின்படி, பொதுப்பாடத்திட்டம் மற்றும் விருப்பப் பாடத்தை எழுதும் மாணவர்கள், விருப்பப்பாடம் என்பதை, தாங்கள் கல்லூரியில் படித்ததையே தேர்ந்தெடுக்கின்றனர். இதன்மூலம், சிலர், மொத்தம் கேட்கப்படும் 120 கேள்விகளில், 100 கேள்விகளுக்கும் மேலாக சரியான பதிலை அளிக்கின்றனர்.
பொதுப்பாடத் தாள் என்பது, குறிப்பிட்ட பாடம் தவிர்த்து, அனைத்து வகையான மாணவர்களின் பொதுத்திறனை சோதிப்பதாகும். ஆனால், விருப்பப் பாடத்தில் சோபிக்கும் பலர், இந்த பொதுப்பாடத்தில் மிகவும் குறைவான மதிப்பெண்களையே பெறுகின்றனர். பழைய பாடத்திட்டத்தின்படி, பொதுப்பாடத்திற்கான மொத்த மதிப்பெண்கள் 150 என்றும், விருப்பப் பாடத்திற்கான மொத்த மதிப்பெண்கள் 300 என்றும் வகுக்கப்பட்டிருந்தன. எனவே, விருப்பப் பாடத்தில் ஒருவர் ஒரு கேள்விக்கு சரியான விடையளிக்கும்பட்சத்தில், அவர் 2.5 மதிப்பெண்களைப் பெறுவார். அதேசமயத்தில், பொதுப்பாடத்தில் 1 கேள்விக்கு(மொத்தம் 150 கேள்விகள்) 1 மதிப்பெண் மட்டுமே வழங்கப்படும். இதனால் ஒருவர் பொதுப்பாடத்தில் சோபிக்காமலேயே, தனது விருப்பப்பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள் மூலம் தேர்வில் வெற்றிபெற்று விடலாம் என்ற நிலை இருந்தது.
எனவே, இந்த ஒரு சார்பான நிலையைப் போக்கி, அனைவருமே, பொதுப்படையான மற்றும் தேவையான திறமைகளை நிரூபிக்கும் பொருட்டு, விருப்பப் பாடம் முதல்நிலைப் பிரிவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. சமூக அறிவியல் படித்தோருக்கு இதுஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன்மூலம் ஒருவர் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டுமெனில், மிகவும் விரிவான நிலையில் படித்தாக வேண்டும். தான் கல்லூரியில் படித்ததை வைத்து, சமாளித்துவிட முடியாது. இந்த தேர்வு மாற்றத்தின் நோக்கம், ஒரு சிவில் சர்வீஸ் பணிக்கு வருபவர், ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணராக இருப்பதைவிட, பரவலான நிலையில் திறமையானவராக இருக்க வேண்டும் என்பதே.
எனவே, முதல்நிலைத் தேர்வுக்கு படிப்பவர் ஒரு சிறப்பு நிபுணர் என்ற நிலையில் படிக்க வேண்டும். ஏனெனில், இந்தப் பகுதியில் கேட்கப்படும் கேள்விகள், சாதாரண நிலையில் பதிலளிப்பதாக இருக்காது. எனவே, இந்த முதல்நிலையில் தேர்ச்சிபெற, ஒருவர் மிகவும் சிறப்பான மூலத்தரவுகளைத் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டியிருக்கும்.அடுத்த ஆண்டிற்கான சிவில்சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான விபரங்கள்
* 2012ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு 04.02.2012 அன்று வெளியிடப்படும்.
பூர்த்திசெய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கடைசி தேதி 05.03.2012(திங்கட்கிழமை).
* தேர்வு நடைபெறும் நாள் 20.05.2012(ஞாயிற்றுக்கிழமை).
* இந்தத் தேர்வின் காலஅளவு ஒருநாள் மட்டுமே.

இதே நாள்...


  • மோல்ட்டா குடியரசு தினம்(1974)
  •  பாய்ஜீ என்ற சீன ஆற்றின் டால்ஃபின் அரிய இனமாக அறிவிக்கப்பட்டது(2006)
  •  போலந்தில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது(1981)
  •  தமிழக எழுத்தாளர் நா.பார்த்தசாரதி இறந்த தினம்(1987)

குறைவான மதிப்பெண் வங்கிக் கடன் கிடைக்காது...

மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் வழங்க உத்தரவிட இயலாது'' என, மாணவரின் மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. மதுரையை சேர்ந்த காசிநாதன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நான், நத்தம் என்.பி.ஆர்., கல்லூரியில், எம்.பி.ஏ., சேர்ந்தேன். ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் கல்விக் கடன் கேட்டு, கனரா வங்கியில் விண்ணப்பித்தேன். நான், பி.பி.ஏ., படித்தபோது, 48.04 சதவீதம் மதிபெண் பெற்றதால், வங்கிக் கடன் வழங்க இயலாது எனவும், 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால் தான், கடன் வழங்க இயலும் எனவும் கூறி, விண்ணப்பத்தை வங்கி நிராகரித்தது.நான், எம்.பி.ஏ., முதலாண்டில், 77 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளேன். எனவே, எனக்கு வங்கிக் கடன் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார். இம்மனு, நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. "வங்கி விதிமுறைப்படி, 60 சதவீதம் மதிப்பெண் பெறாததால், கடன் வழங்க உத்தரவிட இயலாது' எனக் கூறி, மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இனி ட்ரைமஸ்டர் தேர்வு முறை தமிழக அரசு...

அடுத்த கல்வியாண்டு முதல் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு ட்ரைமஸ்வர் தேர்வு முறை அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 12 மாதங்களில் சொல்லித்தரும் பாடங்களை 3 தேர்வுகளாக பிரித்து நடத்தப்பட உள்ளது. முதல் 4 நான்கு மாதங்களில் 1 தேர்வும், 2வது 4 மாதங்களில் 2வது தேர்வும், மற்றும் இறுதி 4 மாதங்களில் 3வது தேர்வும் நடைபெற உள்ளது. இம்மூன்று தேர்வுகளின் மதிப்பெண்களை மொத்தமாக கணக்கிட்டு முடிவில் தேர்ச்சி விகிதம் அறிவிக்கப்படும். இதன்மூலம், மாணவர்களின் படிக்கும் சுமை குறையும் என்று அரசு தெரிவித்துள்ளது. 9 மற்றும் 10 ம்வகுப்புகளுக்கு 2013-2014ம் ஆண்டு கல்வியாண்டில் இத்தேர்வ முறை அமல்படுத்தப்பட உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம்...


முல்லைப் பெரியாறு பிரச்னை எதைச் சாதிக்கிறதோ இல்லையோ, மாநிலக் கட்சிகளுக்கு இணையான குறுகிய கண்ணோட்டத்துக்கு, தேசியக் கட்சிகளும் விதிவிலக்கில்லை என்பதைக் காட்டிவிட்டது.கர்நாடகாவில் உள்ள கன்னட சலுவலி என்ற கட்சியைத் தெரிந்திருக்காவிட்டாலும், அக்கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜை அனைவருக்கும் தெரிந்திருக்கும். காவிரி பிரச்னை தலையெடுக்கும் போதெல்லாம், இரு மாநில அரசுகளுக்கும் பெரும் தலைவலி தரும் வேலைகளைச் செய்வதில் வித்தகர். மாநிலக் கட்சிகள், தங்கள் மாநில நலனுக்காகவும், கட்சியின் வளர்ச்சிக்காகவும், இத்தகைய செயல்களில் இறங்குவது, தவறான விஷயம் என்றாலும், புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால், தேசியம் பேசியே வளர்ந்த காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட, அதே குறுகிய வட்டத்துக்குள் இயங்கி வருவது, அதிர்ச்சி தரும் விஷயம். முல்லைப் பெரியாறு பிரச்னையில், மூன்று கட்சிகளுமே ஓட்டு வங்கியைக் குறிவைத்து செயல்படுகின்றன.

கையேந்தி உள்ள காங்கிரஸ் : கேரளாவில், தற்போதைய ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்ற அளவில் தான், அதன் சட்டசபை பலம். மொத்தம், 141 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட, கேரளா சட்டசபையில், வெறும் 39 எம்.எல்.ஏ.,க்களைத் தான் பெற்றிருக்கிறது அக்கட்சி. எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட், 45 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்டிருக்கிறது. கூட்டணிக் கட்சிகளின் தயவில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் வண்டி.

எனவே, அற்ப அரசியல் செய்து பிழைக்க வேண்டிய நிலை. போதாக் குறைக்கு, பிரவம் இடைத்தேர்தல் வேறு, பிடறியைப் பிடித்து நெருக்குகிறது. இப்போதைய, முதல்வர் உம்மன் சாண்டியின் முந்தைய ஆட்சிக் காலத்தில் தான், 2006ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கேலி செய்யும் விதமான சட்டம், கேரளா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. நாட்டை ஒன்றிணைக்கும் முக்கிய உயிர் நாடியான, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையே மதிக்கவில்லையா என, அவர் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அவரது ராஜ தந்திரத்தைப் பார்த்து மெச்சிக் கொண்டிருக்கிறது. "நம்மால் தான் முடியவில்லை; சாண்டியாவது வெளுத்துக் கட்டுகிறாரே' என, அக்கட்சியின் மேலிடம் ஆறுதல் கொள்கிறது போலும்.

அச்சு படுத்தும் பாடு... : கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மதானி கைது செய்யப்பட்டிருந்தபோது, அவரை மனிதாபிமான அடிப்படையில் ஜாமினில் விடுவிக்க வேண்டும் என, கேரளாவில் இருந்து கிளம்பி, சென்னை வந்து, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நேரில் வேண்டுகோள் விடுத்தவர், அம்மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன். மயிரிழையில் ஆட்சியைப் பறிகொடுத்த கோபத்தில், என்ன செய்கிறோம் என அவருக்கே தெரியாத அளவு கொந்தளித்துக் கொண்டிருக்கிறார். புதிய அணையை மார்க்சிஸ்ட் கட்சி, தங்கள் சொந்தச் செலவிலேயே கட்டும் என, வீரமுழக்கம் இடுகிறார். 375 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, தங்கள் கட்சியின் பினாரயி விஜயனிடம் நன்கொடையாக வாங்கித் தருவார் போல. மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருப்பதால், அக்கட்சியின் அகில இந்தியத் தலைமையும், ஏதோ, இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடப்பது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. திரிபுராவைத் தவிர வேறு எங்குமே ஆட்சியில் இல்லாததால், கேரளாவில் இருக்கும் ஆதரவைத் தக்கவைக்க, எவ்வளவு கீழிறங்கவும் அவர்களின் தலைமை தயாராகிவிட்டது.

பா.ஜ., இப்படி இவர்களின் இரட்டை வேடம் போதாது என, இரு மாநிலங்களிலுமே வலுவாக இல்லாத, பா.ஜ.,வும் தன் பங்குக்கு, மாநில வெறியைத் தூண்டிவிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. கேரளாவில் உள்ள அக்கட்சியினர், மற்ற கட்சியினரை விட முன்னணியில் நிற்கும் நோக்கில், ஆளாளுக்கு கடப்பாறை, மண்வெட்டியை எடுத்து, முல்லைப் பெரியாறு அணைக்கு கால்வாய் வெட்ட கிளம்பிவிட்டனர். எதிர்பார்த்தபடியே, அனைத்து பத்திரிகைகளிலும், அது தான் தலைப்புச் செய்தி. இக்கட்சிகளின் சுயலாபச் செயல்பாட்டால், தமிழகத்தில் உள்ள அக்கட்சிகளின் தலைவர்கள் தான் பாவம், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்தனர். குறுகிய நோக்கங்களை நிறைவேற்றுவதன் மூலம், குறுகிய கால லாபங்களை மட்டுமே அடைய முடியும். நீண்டகாலப் பலன் கிடைக்காது என்பதை, அவர்கள் உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை.

ஐந்து நோய்களுக்கு இனி ஒரே தடுப்பூசி...


ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஐந்து நோய்களிலிருந்து காத்து சிசு மரணங்களை தடுக்கும் பெண்டா வேலண்ட் தடுப்பூசி வி.எச்.என்., மூலம் அளிக்கப்படுமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.குழந்தைகளை ஐந்து நோய்களிலிருந்து காப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். சுகாதார இணை இயக்குனர் உதயகுமார், துணை இயக்குனர்கள் மீரா(விழுப்புரம்), கீதா (கள்ளக்குறிச்சி) முன்னிலை வகித்தனர்.கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் மணிமேகலை பேசியதாவது: இது வரை முத்தடுப்பு ஊசி, மஞ்சள் காமாலை ஊசி இவை தனித்தனியாக குழந்தைகளுக்கு போடப் பட்டது. தற்போது இந்த தடுப்பூசியுடன் நிமோனியோ மற்றும் மூளைக்காய்ச்சல் தடுப்பூசி சேர்த்து "பெண்டா வேலண்ட்' தடுப்பூசி ஒரே முறை போடப்படவுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் 5 வகை நோய்கள் தடுக்கப்படுகிறது.

இந்த தடுப்பூசி போடும் முகாம் விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 17ம் தேதி துவங்கப்படவுள்ளது. டிசம்பர் 21ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மாவட்டம் முழுவதும் 557 கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் தகுதியுடைய ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும். தொண்டை அடைப்பான், கக்குவான், இருமல், ரனஜன்னி, மஞ்சள் காமலை, நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களை தடுக்கும் வகையில் இந்த ஊசி அளிக்கப்படுகிறது. ஒரே ஊசியாக மூன்று முறை போடப்பட வேண்டும். குழந்தை பிறந்த 6வது வாரம், 10வது வாரம் மற்றும் 14வது வாரம் தடுப்பூசி போடப்பட வேண்டும். இதனால் ஆண்டுதோறும் 60 ஆயிரம் குழந்தைகள் மாவட்டத்தில் பயன்பெறும். இந்த தடுப்பூசி போடப்படுவதால் சிசு மரணங்கள் குறையும். ஒரு வயதிற்குள் உள்ள குழந்தைக்கு மட்டுமே இந்த தடுப்பூசி போடப்பட வேண்டும். இதில் பக்க விளைவுகள் எதுவும் கிடையாது. தடுப்பூசி போடவரும் கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கு, தாய்மார்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அணைகள் பராமரிப்பை ராணுவத்திடம் ஒப்படைக்க கலாம் வேண்டும்.


 இந்தியாவில் உள்ள அனைத்து அணைகள் மற்றும் புதிதாக அமைக்கப்படும் அணைகள் ஆகியவற்றின் கட்டுப்பாடுகளையும், பராமரிப்பையும் ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரதமருக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடிதம் எழுதியுள்ளார். மேலும் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு பதிலாக, அணையை பலப்படுத்தும் வகையில், தற்போதுள்ள அணையில் 162 அடி உயரத்துக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம் எ‌ன்று ‌பிரதம‌ர் ‌ம‌ன்மோக‌‌ன் ‌சி‌‌ங்கு‌க்கு கலாம் யோசனை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். இது தொட‌ர்பாக பிரதமரு‌க்கு அவ‌ர் எழுதியு‌ள்ள கடித‌த்‌தி‌ல், கேரளாவுக்கு அதிக மின்சாரம், தமிழகத்துக்கு அதிக தண்ணீர், இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான அணை பாதுகாப்பு, இந்த மைய கருத்தைக் கொண்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு பதிலாக, அணையை பலப்படுத்தும் வகையில், தற்போதுள்ள அணையில் 162 அடி உயரத்துக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம். நாட்டில் உள்ள அனைத்து அணைகள், புதிதாக அமையும் அணைகள் இவற்றின் கட்டுப்பாடுகளையும், பராமரிப்பையும் ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம், நதிகள் இணைப்பு போன்ற நடவடிக்கைகளின்போது, எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை. முல்லைப் பெரியாறு பிரச்னையால் இரு மாநில உறவும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. இரு மாநில மக்களும் அமைதி காத்து, தேசிய ஒருமைப்பாட்டை நிலை நாட்ட வேண்டும் எ‌ன்று கலாம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பொன்சேகா விடுதலைக்காக இணையதளம் மூலமாக நடவடிக்கை.

இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக அமெரிக்க வெள்ளைமாளிகையின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலமாக கையெழுத்து இடும் நடவடிக்கை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொன்சேகாவின் விடுதலைக்காக அவரது மூத்த மகளான அப்ஸரா இந்நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். இந்த இணையத்தள மனுவில் 25 ஆயிரம் கையெழுத்து பெறப்பட்டால் பொன்சேகாவின் விடுதலை குறித்து அமெரிக்க அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்காக இதுவரை 15 ஆயிரத்து 613 கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன. இந்த மாதம் 23 ஆம் தேதிக்குள் 25ஆயிரம் கையெழுத்துக்கள் பெறப்பட்டால் அவரது விடுதலைக் குறித்து ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில்லரை வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீடை எதிர்ப்பதற்கு பதிலாக கொரியர்களின் வழியில் உலகத்தரம்வாய்ந்த பொருட்களை உருவாக்கி...


தேசத்தின் நரம்பு மண்டலமாக சில்லரை வர்த்தகம் உள்ளது. பல தேசங்கள் தங்களது மோசமான நிலையில் இருந்து சில்லரை வர்த்தகத்தினால் மீண்டுள்ளன. இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லரை வர்த்தகம் என்பது இரண்டு சதவிகிதம்தான் உள்ளது. பெரும்பகுதி வாய்ப்புகள் இன்னும் பயன்படுத்தப்படாத துறை அது. அமெரிக்காவின் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லரை வர்த்தக சந்தை 80 சதவிகிதம் ஆகும். தாய்லாந்தில் 40. சீனாவில் 20 சதவிகிதம். இப்படி இருக்கும் நிலையில் ஏன் இப்போது அந்நிய முதலீட்டு எதிராக எதிர்ப்பு எழுந்துள்ளது? இந்த எதிர்ப்பு மிகவும் தாமதமானதும்கூட. எல்லா துறைகளிலும் அந்நிய முதலீட்டை அனுமதித்துவிட்டு சில்லரை வர்த்தகத்தில் மட்டும் அனுமதிக்காமல் ஏன் இருக்கவேண்டும்? முன்னாள் வந்த எல்லா அரசுகளும் அனைத்து துறைகளிலும் இந்திய நிறுவனங்களை போட்டித்திறன் வாய்ந்ததாக உருவாக்குவதற்கு முன்பாகவே அந்நிய முதலீடை அனுமதித்துவிட்டன. இதன்மூலம் இந்திய திறனையே நாம் அமைப்புரீதியாக சீரழித்துவிட்டோம். சில்லரை வர்த்தகத்தில் மட்டும் அந்நிய முதலீடு நுழைவதற்கு இப்போது நாம் கூச்சல் போடுகிறோம். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்பது அவசியமானது. அதனால் பயனே இல்லை என்று சொல்லமுடியாது.

சரியானபடி இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும். விவசாயிகள் பலன்பெறுவார்கள். உற்பத்தியாளர்கள் பலன்பெறுவதோடு, பெரிய அளவில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அரசு வருவாயும் அதிகரிக்கும். பொருட்களை சேமித்து வைப்பதிலும் விநியோகிப்பதிலும் உள்ள பிரச்னைகளும் சீராகும். இப்படி ஒருங்கிணைக்கப்பட்ட சில்லரை வர்த்தக சந்தை மூலம் 2020ல் 260 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும். ஒரு ஆண்டுக்கு 35 முதல் 45 பில்லியன் டாலர் வருவாயும், நேரடியாக மூன்று முதல் நான்கு பில்லியன் பேர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். மறைமுகமாக 4 முதல் 6 பில்லியன் பேர் வேலைவாய்ப்பை பெறுவார்கள். சிறு நடுத்தர வர்த்தகர்களும் பயன்பெறுவார்கள். உற்பத்தி தர மேம்பாடு, உற்பத்தி திறன் நிச்சயமான விநியோகம், உடனடியாக வசூல் மற்றும் நல்ல தரம் கிடைக்கும். இத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லரை வர்த்தகமும் மேம்படும். ஏற்கெனவே கடந்த மூன்று ஆண்டுகளில் இதன் வளர்ச்சி 24 சதவிகிதமாக உள்ளது. சில்லரை வர்த்தக துறை விவசாயிகளின் வருவாயையும் அதிகரித்து, அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தும். இன்று விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை உள்ளது.

முக்கியமான கேள்வி ஒன்று அந்நிய முதலீடு தொடர்பாக எழுப்பப்படுகிறது. வால்மார்ட் போன்ற பெரிய விற்பனை நிலையங்களில் இந்திய பிராண்டுகளுக்கு என்ன இடம் இருக்கும் என்பது அது. மக்கள் விரும்பக்கூடிய தரமான பொருட்களை இந்திய உற்பத்தியாளர்கள் உருவாக்கினால் அந்த பொருட்கள் நிச்சயம் இடம்பிடிக்கும் என்பதே பதில். அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் கடைகளில் இருக்கும் 60 சதவிகிதம் பொருட்கள் சீனாவில் உற்பத்தியானவை என்பது குறிப்பிடத்தக்கது. மகாத்மா காந்திக்கு பிறகு யாரும் தேசிய பெருமிதம் என்பதை இந்தியர்களுக்கு உருவாக்க தவறிவிட்டனர். அவர்கள் இந்தியாவின் கஜானாவை காலி செய்வதிலேயே குறியாக இருந்தனர். ஜப்பானிலோ உள்நாட்டு பணிமனைகளில் பொருட்கள் செய்யப்படுவதைதான் ஊக்குவிக்கின்றனர். இதுதான் மற்ற கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பொருந்தும். அமெரிக்க நிறுவனங்களான ஜிஎம் மற்றும் கிரிஸ்லர் நிறுவனங்களை கடனில் இருந்து அமெரிக்கா ஏன் மீட்டது என்றால், அவைகள் அமெரிக்கத்துவத்தை பிரதிபலிப்பவை.

தேசிய பெருமிதம் என்பதற்கு உதாரணமாக தென்கொரியாவைதான் நாம் உடனடியாக குறிப்பிட வேண்டியிருக்கிறது. உலகிலேயே அதிகம் பாராட்டும் நாடும் இதுதான். சீனாவை விட, ஜப்பானைவிட தேசிய பெருமிதத்தில் அது உயர்ந்த நிலையில் இருக்கிறது. இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஒரு துளி போல அந்த தேசம் இருக்கிறது. ஆனால் அனைத்து துறைகளிலும் தேசிய பெருமிதத்துடன் தங்கள் அடையாளத்தை பதித்துள்ளனர் அவர்கள். தென்கொரியாவில் உள்ள பள்ளிகளில் உள்ளூர் பிராண்ட் பொருட்களை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் அன அறிவுறுத்தப்படுகிறது. இப்பொருட்கள் மீதான விமர்சனம் தேசத்தின் மீதான விமர்சனமாக அணுகப்படுகிறது. உலக அளவில் நோக்கியோ மற்றும் பிளாக்பெரி ஆகிய பிராண்டுகள் புகழ்பெற்றிருந்தாலும், தென்கொரியாவில் அவர்களது பிராண்டான சாம்சங்கே 48 சதவிகிதம் சந்தை பகிர்வுடன் முதலிடம் வகிக்கிறது. கூகுள் 20 சதவிகிதமே அங்கு வகிக்கிறது. தென்கொரியாவில் உள்ளூர் தேடுதல் எந்திரங்களான நாவர் மற்றும் டௌவும் ஆகியவைதான் 90 சதவிகிதம் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆட்டோமொபைல் தொழிலை பொறுத்தவரையில் கியா அல்லது ஹுண்டாய் போன்றவையே முதலிடம் வகிக்கின்றன. சியோலின் சாலைகளில் அமெரிக்க, ஜப்பானிய கார்களை பார்ப்பதே அரிது. அத்துடன் தென்கொரியாவில் செய்யப்பட்ட கார்கள் பார்ப்பதற்கு பிரமாதமானவை, செயல்படுவதில் திறன்மிக்கவை. அரசின் கொள்கைகளும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் ஆதரவாகவும் உள்ளன. அருமையான தொழில் போட்டி சூழலையும் உருவாக்கியுள்ளன.

தேசிய பெருமிதத்தை தாண்டி வால்மார்ட் கொரியாவில் ஏன் தோற்றதென்றால், கொரியர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்கின்றனர். அதற்கு பிறகு அவர்கள் அனுபவிக்கும் வாழ்க்கை தரமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். மலிவான பொருட்களை வாங்க கூடாது என்று எண்ணுகிறார்கள். இருப்பினும் சர்வதேச அளவில் புகழ்பெற்றிருக்கும் பிராண்டுகள் கொரியாவில் எந்த முத்திரையையும் பதிக்கமுடியவில்லை. ஏனெனில் கொரிய நிறுவனங்கள் தர அளவில் மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளன. இந்தியாவின் சிறிய மாநிலத்தின் அளவே இருக்கும் கொரியா உள்நாட்டிலும் உலக அளவிலும், உலகின் சிறந்த பிராண்ட் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதாய் உள்ளது. கடந்த மாதத்தில்தான் ஸ்மார்ட் போன் விற்பனையில் சாம்சாங் உச்சத்தை அடைந்து ஆப்பிளை பின்தள்ளியது. கொரிய நிறுவனங்கள் உலகதரம்வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்கு காரணம் அந்த நாட்டின் மக்களிடையே இருக்கும் அபரிமிதமான தேசிய பெருமிதம்தான். அத்துடன் அவர்களது கடின உழைப்பும் உதவுகிறது. ஆனால் அந்த வாய்ப்பை இந்தியர்களான நாம் இழந்துவிட்டோம். சிறிய நாடான கொரியாவால் இந்த வெற்றியை பெறமுடியும்போது, 10 மடங்கு பெரிய இந்தியாவால் ஏன் பெறமுடியவில்லை? சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நாட்டு முதலீட்டை விவாதிப்பதற்கு முன்னால் கொரியர்களை போல தேசிய பெருமிதத்தை ஏற்படுத்தி தரமான இந்திய பொருட்களையே வாங்கும் மனநிலைக்கு வருவோம். உலகின் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்கள் இருக்கிறார்கள். ஆனால் உலகின் உயர்ந்த பிராண்டுகளில் நமக்கு எந்த இடமும் இல்லை. இது வெட்ககரமானது.இப்போது ஒன்றும் தாமதம் ஆகவில்லை. நமது பாரம்பரிய உற்பத்தியாளர்களை ஊக்குவித்து மேம்படுத்துவோம். அவர்களை ஆதரிப்போம். நமது பொருட்களை தரமாக உருவாக்கி தேசிய பெருமிதத்துடன் வால்மார்ட்டுகளை இங்கே தோற்கடிக்கலாம். வெறுமனே கோஷங்கள் போட்டு நாட்டை ஏமாற்றுவதற்காக காத்திருப்பது நம்மை எங்கும் கொண்டு செல்லாது. மக்கள் இதையெல்லாம் அதிகமாக பார்த்துவிட்டனர். கடின உழைப்பும், நேர்மையும் கொண்டு இந்திய பொருட்களை உலக தரத்துக்கு தயாரித்து, தேசபக்தியின் இன்னொரு பக்கத்தை திருப்புவோம். அவற்றை வாங்குவதின் மூலம் இந்தியனை பெருமை கொள்ள செய்வோம். அதை நீங்கள் செய்யமுடியாவிட்டால் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வருவதை பற்றி புகார் செய்யாமல் இருங்கள்.  


முதல் அமைச்சர் பதவிக்கு திருநங்கை... UP party names transgender as CM candidate...


In a first, a political party has decided to field 50 candidates from the community of transgenders in the upcoming assembly elections in the state. Not only this, the little-known Rashtriya Viklang Party (RVP) has projected a eunuch as the chief ministerial candidate. 
“The party has decided to field at least 50 eunuchs from different constituencies and five names have already been announced,” party’s national general secretary and UP incharge Virendra Kumar said. He said that national president of Kinnar Morcha Shobha Bua has been named candidate for Dhaulana assembly seat in Ghaziabad. “Shobha Bua will also be chief ministerial candidate of the party,” he added. Kumar said the first eunuch MLA of the country Shabnam Mausi, who won election from Suhagpur seat in Madhya Pradesh in 2000, would be party candidate from Kanpur Cantt seat.
நாட்டிலேயே முதன் முறையாக திருநங்கை ஒருவர் மாநில சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி பதவிக்கு போட்டியிட உள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில், ராஷ்ட்ரீய விக்லாங்க் கட்சி என்ற கட்சியின் சார்பில் அவர் களத்தில் குதிக்கிறார். இந்த கட்சி சார்பில் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிடுவதற்கு சுமார் 50 திருநங்கைகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. காசியாபாத் சட்டசபை தொகுதியில் கட்சி தலைவர் கின்னார் மோர்ச்சா ஷோபா புவா போட்டியிடுகிறார். அவர்தான் அந்த கட்சியின் முதல் மந்திரி வேட்பாளர் ஆவார். கடந்த 2000 வது ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் சுகாபூர் தொகுதியில் போட்டியிட்ட திருநங்கை ஷப்னம் மவுசி வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவர் இந்த தடவை ராஷ்ட்ரீய விக்லாங்க் கட்சியின் சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் தொகுதியில் வேட்பாளராக...


நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 4,00,000,00 பேர் வேலை கேட்டு பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு

நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த செப்டம்பர் வரை 4 கோடிக்கு மேலானோர் வேலை கேட்டு பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் 12.12.2011 அன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே இதைத் தெரிவித்தார். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் ஆகிய இரு பகுதிகளிலும் சேர்த்து இத்தனை பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். நாட்டில் எந்த அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் உள்ளது என்பதையே இது காட்டுகிறது. "தேசிய வேலைவாய்ப்பு கொள்கை' வரைவை மத்திய வேலைவாய்ப்பு அமைச்சகம் வடிவமைத்துள்ளது. அமைப்புசார் துறையில் வேலைவாய்ப்பைப் பெருக்குவதும், அமைப்புசாரா துறையில் வேலையின் தரத்தை உயர்த்துவதுமே இதன் முக்கிய நோக்கமாகும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே

ஒழிந்துபோன சத்திரம் சாவடி மீண்டும் கொண்டுவர சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு இரவு நேர தங்கும் விடுதிகளை அமைக்கும்படி, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. "வீடு வசதியில்லாமல், சாலையோரங்களில் படுத்து உறங்குபவர்களுக்கு இரவு நேர விடுதிகளை கட்டி தர அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா "வீடு மற்றும் தங்கும் வசதியில்லாத காரணத்தால், சாலையோரங்களில் தங்கியுள்ள மக்கள் பலர், கடும் குளிரில் இறக்கின்றனர். திறந்தவெளியில் அவர்கள் படுத்து உறங்குவதை தடுத்து, இரவு நேர தங்கும் விடுதிகளை மாநில அரசுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். இதுகுறித்து மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கை அறிக்கையை, மாநில தலைமை செயலர்கள், அடுத்த மாதம் 3ம் தேதி கோர்ட்டில் சமர்பிக்க வேண்டும்' எனக்கூறி, இது தொடர்பான விசாரணையை அடுத்த மாதம் 9ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

சமூக சேவகர் நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு...


சென்னையைச் சேர்ந்த சமூக சேவகர் நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:   தமிழகத்தில் 6,200 முதல் 6,800 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதன் மூலம் அரசுக்கு ஆண்டு தோறும் வருமானம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே சமயத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. டாஸ்மாக் மூலம் 2005 ல் ரூ. 7,335 கோடி அரசுக்கு வருமானம் கிடைத்தது. அந்த ஆண்டில் மதுவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,760 பேர். 2010 ம் ஆண்டு டாஸ்மாக் மது விற்பனை வருமானம் ரூ. 16 ஆயிரம் கோடி. அதே ஆண்டில் குடிபோதையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 409 பேர்.  இப்போது 800 புதிய டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு அனுமதி அளித்தால் குடிபோதையில் உயிரிழப்போரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டக்கூடும்.
 
அரசின் இந்த நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 21 க்கு எதிரானது. எனவே அரசு புதிதாக 800 டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க தடை விதிக்க வேண்டும். இம்மனு இன்று தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் நாராயணன் ஆஜராகி, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கேட்டு ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளேன். அது நிலுவையில் உள்ளது. புதிய மதுக்கடைகளை திறக்க அனுமதித்தால் குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை மேலும் உயரும். இதனால் புதிய மதுக்கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.   பின்னர் நீதிபதிகள் இதுபற்றி 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி மத்திய அரசு, தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

எங்கே செல்லும் இந்த பாதை? கள்ளக்காதலன் பாலமுருகனுடன் சென்று...!!!


சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே புத்திரகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாண்டியன் (32). அவருக்கு, மனைவி வெண்ணிலா (27), மகள்கள் பிரியா (11), கலைவாணி (9), தர்ஷினி (3) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். புத்திரகவுண்டன்பாளையம் வாரச்சந்தை அருகில் உள்ள நீரோடையில், ரத்தக் காயங்களுடன், பாண்டியன் இறந்து கிடந்தார். தகவலறிந்த ஏத்தாப்பூர் இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார், பாண்டியனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.விசாரணையில், பாண்டியனின் மனைவி வெண்ணிலாவுக்கும், உறவினர் பாலா (எ) பாலமுருகனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் தனிமையில் இருப்பதை நேரில் பார்த்த பாண்டியன், மனைவியை தட்டிக் கேட்டுள்ளார். அதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய மனைவி திட்டமிட்டுள்ளார். பின், கள்ளக்காதலன் பாலமுருகனுடன் சென்று, பாண்டியன் மீது கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்து, ஓடையில் வீசியது தெரியவந்தது.ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, வெண்ணிலா, கள்ளக் காதலன் பாலமுருகன் (30) இருவரையும் கைது செய்தனர். பின், ஆத்தூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...