|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 June, 2011

ராஜபட்சவுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்...

ஜூன் 19:இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சவை ஆஜராகும்படி அமெரிக்க நீதிமன்றமொன்று சம்மன் அனுப்பியுள்ளது.

"சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான அமெரிக்கப் பாதுகாப்புச் சட்டத்தின்' கீழ் இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்று கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இந்த சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளவர்கள் இலங்கை அதிபரிடம் 3 கோடி டாலர் (ரூ. 134 கோடி) நஷ்டஈடு கோரியுள்ளதாகத் தெரிகிறது.
ஹேக் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கை அதிபருக்கான, சம்மன் இலங்கை நீதியமைச்சகத்தின் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற சட்டவிரோதச் செயல்களால் இறந்த 3 மாணவர்களின் பெற்றோர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். மேலும் இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் போது பதுங்கு குழியில் பதுங்கியிருந்த தங்களது உறவினர்கள் எறிகணைத் தாக்குதலில் பலியானதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்க மறுப்பு
இதனிடையே இந்த சம்மனை ஏற்கமுடியாது என்றும் அமெரிக்க நீதிமன்றம் முன் தான் ஆஜராக முடியாதென்றும் ராஜபட்ச அறிவித்துள்ளார். அதிபர் என்ற முறையில் தனக்கு விலக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தனது நிலையை தெரிவித்து ராஜபட்ச, கொலம்பிய மாவட்ட நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக இலங்கை நீதித்துறை செயலாளர் சுஹதா கமலத் தெரிவித்தார்.

வெங்காயம்...

கல் நெஞ்சக்காரர்களின் கண்களையும் குளமாக்கும் தன்மை கொண்டது வெங்காயம். யூனியோ என்ற இலத்தின் வார்த்தையில் இருந்து தோன்றியது ஆனியன். இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். உரிக்க உரிக்க உரியும் வெங்காயம், கடைசியில் ஒன்றும் இல்லாத வெறுமையை உணர்த்தும் தத்துவார்த்தமான காயாகும். வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. மேலும் சிறந்த பால் உணர்வுத் தூண்டுவியாகவும் இது செயல்படுகிறது.

நமது அன்றாட சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் வெங்காயம் பல்லாயிரம் ஆண்டுகளாக உலகம் முழுவதும் காய்கறியாக பயிரிப்படுகிறது. சிறிய வெங்காயம் மற்றும் பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் இரண்டுமே ஒரே குண நலன்களை கொண்டுள்ளன. தாவரத்தின் பசுமை இலைகள், செதில் இலைகளால் ஆன குமிழ், தண்டு ஆகிய அனைத்துமே மருத்துவ பயன் உள்ளவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் வெங்காயத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய், கந்தகம் கலந்துள்ளது. அல்லிசின் (நுண்ணுயிர் எதிர்ப்புத்தன்மை கொண்டது) அல்லீன் ஆகியவை உள்ளன. இவை காற்றில் பரவி வெங்காயத்தை உரிக்கும் பொழுதும் நறுக்கும் பொழுதும் கண்களில் நீரை வரவழைக்கின்றன. மேலும், ஃபிளேவனாய்டுகள், பினோலிக் அமிலம் மற்றும் ஸ்டிரால்கள் போன்றவை காணப்படுகின்றன.

இதயநோய் வராமல் தடுக்கும் வெங்காயத்தில் பல வித மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. இது கிருமிகளுக்கு எதிரானது. இதயநோய்களான ஆன்ஜினா ஆர்டிரியோ ஸ்கிளிரோசிஸ் ( சுத்த ரத்தக்குழாய் இருக்குதல்) மற்றும் மாரடைப்பு ஆகியவற்றினை தவிர்க்க உதவுகிறது. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும். சளி, இருமலை போக்குகிறது. மூட்டுவலிக்கு எதிரானது. ரத்த ஓட்டத்திற்கும் சிறந்தது.

பால் உணர்வை தூண்டும் பல நூறு ஆண்டுகளாகவே வெங்காயம் பால் உணர்வு தூண்டுவியாக கருதப்படுகிறது. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும். வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

காதுவலிக்கு வெங்காயச் சாற்றினை லேசாக சூடு செய்து விடும்போது வலி கட்டுப்படுகிறது. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

பித்தம் குறையும் நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். மாதவிடாய் பிரச்சினை உள்ளவர்கள் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் சீராகிறது. இது தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

பல்வலி குணமடையும் வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். பல் சொத்தைப்படுதல் மற்றும் வாயில் ஏற்படும் நோய்களுக்கும் மருந்தாகிறது. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

விஷக் கடிக்கு மருந்து பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்ன வேண்டும். இதனால் விஷம் இறங்கும். தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு மருத்துவரிடம் சென்று கிகிச்சை பெறலாம்.

கண்நோய் குணமடையும் வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும். வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும். நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம். தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும். வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

தமிழ் இணையமாநாட்டில் முனைவர் மு.இளங்கோவன் வழங்கிய ஆய்வுரை:

அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் இணையமாநாட்டில் முனைவர் மு.இளங்கோவன் வழங்கிய ஆய்வுரை:

தமிழ்மொழி செம்மொழியாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களின் சொத்தாக இம்மொழி உள்ளது. தமிழ்மொழியைக் கற்கவும், தமிழ் இலக்கியங்களை - இலக்கணங்களைக் கற்கவும் அரசு, பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், தனிநபர்களின் பங்களிப்பால் இணையத்தில் செய்திகள் பலவகையில் உள்ளிடப்பட்டுள்ளன. இவை இன்னும் சில தளங்களில் மேம்படுத்தப்படவேண்டிய நிலையில் உள்ளன.

தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழம்.நெட் தளங்களிலும், பிற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் தளங்களிலும் தமிழ் எழுத்துகளை அறியவும், படிக்கவும், எழுத்துகளைக் கூட்டிச் சொற்களைப் படிக்கவும் , சொல்வளம் பெருக்கவும் வசதிகள் உள்ளன. தமிழ் வழியில் தமிழ் படிக்கவும், ஆங்கில வழியில் தமிழ் படிக்கவும் வசதிகள் உள்ளன.

பல்கலைக்கழகங்களைப் போன்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமன்றித் தனி மாந்தர்களும் தமிழ்க்கல்வியைக் கணினி, இணையத்தில் கற்க இத்துறையில் பங்களிப்பை வழங்கியுள்ளனர். சிலரின் முயற்சி இணையத்தில் இருப்பதால் உலக அளவில் பலராலும் பயன்படுத்த முடிகின்றது. சிலரின் முயற்சி குறுவட்டுகளில் மட்டும் இருப்பதால் உலக அளவில் அவர்களின் துணையில்லாமல் பயன்படுத்த முடியவில்லை. எனவே குறுவட்டில் தமிழ்க்கல்வியைத் தயாரித்து வைத்துள்ளவர்கள் இணையத்தில் ஏற்ற வேண்டும்.

தமிழ்க்கல்வி குறித்த பாடங்களை உலக அளவில் அமைக்கும்பொழுது பிறநாட்டுச்சூழல் உணர்ந்து வடிவமைக்க வேண்டியுள்ளது. தமிழகத்துக் குழந்தைகளுக்கு உருவாக்கும்பொழுது தமிழகத்துச் சூழலை உணர்ந்து வடிவமைக்க வேண்டும். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் வடிவமைக்கப்படும் பாடங்கள் அந்தந்த நாட்டுச் சூழலை உணர்ந்து வடிவமைக்க வேண்டும். ஆனால் அண்மைக்காலம் வரை தமிழகத்தைச் சார்ந்து, பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இணையத்தில் தமிழ்க் கல்விக்குப் பயன்படும் செய்திகள் பாடல்களாகவும், கதைகூறும் பகுதிகளாகவும் யு டீயூப் தளங்களில் பல உள்ளன. இணையத்தில் உள்ள தமிழ்க்கல்வி சார்ந்த செய்திகள் தொடக்க நிலை, அடிப்படை நிலைகளைக் கொண்டு மட்டும் உள்ளது. இவற்றின் தன்மைகளை இக்கட்டுரை அறிமுகம் செய்கின்றது.

மேலும் உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி, பல்கலைக்கழகம், ஆய்வுசார்ந்த பாடத்திட்டங்கள், பேச்சுரைகள், காட்சி விளக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாகத் தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், காப்பியங்கள், பக்திப் பனுவல்கள், நன்னூல், இக்கால இலக்கியம் முதலான பாடங்கள் அறிஞர்களின் பேச்சுகளாகவும் (ஒலி-ஒளி), காட்சியுரைகளாகவும்(Power Point) உருவாக்கப்பட வேண்டும். இதனை எவ்வாறு உருவாக்குவது, பராமரிப்பது, இதன் பயன்பாடு, பற்றிய செய்திகளைத் தாங்கி இக்கட்டுரை அமைகின்றது.

பென்சில்வேனியாவில் பேராசிரியர் ஷிப்மேன், முனைவர் வாசு ஆகியோரின் முயற்சியில் இணையம் வழியாகத் தமிழ்கற்றல், பயிற்றுவித்தலுக்குரிய பாடப்பகுதிகளை உருவாக்கி இணையத்தில் வைத்துள்ளனர். (http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/). இதில் இடம்பெற்றுள்ள பாடப்பகுதிகள் பிறமொழிச்சூழலில் தமிழ் கற்போருக்கு உதவும் வகையில் உள்ளன.

நெடுங்கணக்கு அறிமுகப் பகுதியில் தமிழ் உயிர் எழுத்துகளையும், உயிர்மெய் எழுத்துகளையும் கிரந்த எழுத்துகளையும் எழுதவும் ஒலிக்கவுமான பயிற்சிகள் உள்ளன. தமிழ் எழுத்துகளும் அதனை ஒலிக்க உதவும் ஆங்கில எழுத்துகளும் இருப்பதால் ஆங்கிலம் அறிந்தார் தமிழ் கற்க இந்தப் பகுதி பயன்படும். இந்தத் தளத்தைப் பயன்படுத்த எழுத்துருக்கள் தரவிறக்கம், ஒலிப்புக்கருவி மென்பொருள் தரவிறக்கம் செய்ய வேண்டும். தமிழ் எழுத்துகளை (உயிர், மெய்) நினைவுப்படுத்திக்கொள்ள அமைக்கப்பட்டுள்ள படக்காட்சிகள் தமிழ் எழுத்துகளை அறிவோருக்கு நன்கு பயன்படும். மெய்யெழுத்தும் உயிர் எழுத்தும் இணைந்து எவ்வாறு உயிர்மெய் எழுத்து உருவாகின்றது என்ற வகையில் படக்காட்சி வழியாக நன்கு விளக்கப்பட்டுள்ளது.

எ.கா. க்+ அ = க ; ச்+அ = ச; ண்+ஓ = ணோ

ஒரு எழுத்துக்கு விளக்கம் கொடுத்து அதுபோல் பிற எழுத்துகளும் எவ்வாறு மாறும் என்பதைப் பயிற்சியில் அறிய வாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டுள்ளது.

மரம்+ஐ= மரத்தை என்று சாரியை உருவாகும் விதமும் காட்டப்பட்டுள்ளது.
வீடு+இல்= வீட்டில் என்று மாறுவதும் காட்டப்பட்டுள்ளது.

பேராசிரியர் ஷிப்மென் அவர்களின் விளக்கம் தொடுப்புகளின் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. பேச்சுத் தமிழுக்குரிய அடிப்படைக் கருவிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. வகுப்பறை, வீடு, பொது இடங்களில் பயன்படுத்தப்படும் உரையாடலில் இடம்பெறும் சொற்களை அறிமுகப்படுத்தும் பயிற்சிகளும் ஒலிப்பு வசதிகளுடன் உள்ளன. இவற்றில் வினா-விடை முறை காணப்படுகின்றது. தமிழ் எழுத்துருக்கள் தரவிறக்கி இதனைப் படிக்க வேண்டியுள்ளது. ஆங்கிலம்-தமிழ் ஒலிப்பு வசதிகள் இருப்பதால் பிறமொழியினர் தமிழைக் கற்க இந்தத் தளம் பேருதவியாக இருக்கும்.

வினா விடை வடிவம், ஆம் இல்லை வடிவம் எனப் பல வடிவங்களில் சொற்களையும் தொடர்களையும் அறிமுகப்படுத்தி ஆங்கிலத்தின் துணையுடன் தமிழ் கற்பிக்க இந்தத் தளம் பலவகையான நுட்பங்களைக் கொண்டு விளங்குகின்றது.

விடுபட்ட சொற்களைப் பொருத்துதல், பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்துத் தொடர்களை உருவாக்குதல் என்ற வகையில் இடம்பெற்றுள்ள பயிற்சிகளும் நிகழ்காலம், எதிர்காலம், இறந்தகாலம் காட்டும் பயிற்சிகளும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாய்மொழியாக வழங்கப்பட்டுவரும் நாட்டுப்புறக்கதைகளை அறிமுகப் படுத்துதல் தமிழ் மரபு அறிவிக்கும் செயலாக உள்ளது. தமிழர் பண்பாடு உணர்த்தும் கலைகள், பழக்கவழக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை தமிழர் மரபு அறியவிழைவார்க்குப் பேருதவியாக இருக்கும்.

ஒருங்குகுறி எழுத்துகளைப் பயன்படுத்தும்பொழுதும், தொழில்நுட்பம் எளிமைப்படுத்தித் தரும்பொழுதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் விரும்பப்படும் தளமாக இது விளங்கும்.

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தளம் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தளத்தில் தமிழ் கற்பதற்குரிய பலவகை வசதிகள் உள்ளன. தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் உள்ள வசதிகள் யாவும் தமிழ்ச்சூழலில் தமிழ் கற்பாருக்கு உதவும் பொருள்களாக உள்ளன. தமிழை அறிமுக நிலையிலிருந்து பட்டக்கல்வி வரை இந்தத் தளம் சிறப்பாக அறிமுகப்படுத்தியுள்ளது. மழலைக்கல்வி, பாடங்கள், பாடநூல்கள், இணையவகுப்பறை, நூலகம், அகராதி, கலைசொற்கள், சுவடிக்காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம் எனும் தலைப்புகளில் உள்ள செய்திகள் யாவும் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் அறிய விழைவார்க்கு அறிமுகப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

மழலைக்கல்வி என்ற பகுதியில் பாடல்கள், கதைகள், உரையாடல், வழக்குச்சொற்கள், நிகழ்ச்சிகள், எண்கள், எழுத்துகள் என்னும் தலைப்புகளில் அமைந்து தொடர்புடைய செய்திகள் பொருத்தமுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பாடல்கள் என்ற பகுப்பில் கோழி, காக்கை, கிளி, பசு, முத்தம் தா, நாய் என்று சிறுவர்களுக்குக் கதைப்பாட்டு வழியாகத் தமிழ் அறிமுகம் செய்யப்படுகின்றது. இந்தப் பாடல்கள் இசையமைப்புடனும், படக்காட்சியுடனும் தரவிறக்குவதில் எந்தச் சிக்கலும் இல்லாததால் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படும்.

பாடல்களும் பயிற்சிகளும் எனும் பகுதியில் பாடல்களைக் குழந்தைகள் கற்பதற்குரிய வசதிகள் உள்ளன. பயிற்சி பெறுவதற்குரிய கட்டளைகள் எளிமையாக உள்ளதால் குழந்தைகள் தாமே கற்க இயலும். பயிற்சி பெறுவதற்குரிய பகுதியில் நிலா, கைவீசம்மா, காகம், என் பொம்மை, எங்கள்வீட்டுப்பூனை, பம்பரம் எனும் தலைப்பில் மாணவர்களுக்குப் புரியும்படியான பாடல்கள் உள்ளன.

கதைகள் என்னும் தலைப்பில் குப்பனும் சுப்பனும்(கோடரிக்கதை), கொக்கும் நண்டும், புத்தியின் உத்தியால் பிழைத்த குரங்கு, தாகம் தணிந்த காகம் எனும் தலைப்பில் கதைகள் உள்ளன. இந்தக் கதைகள் முன்பே தமிழகத்துக் குழந்தைகளுக்கு அறிமுகமான கதைகள் அல்லது பின்புலங்களைக் கொண்டவை என்பதால் எளிமையாகப் புரியும். இந்தக் கதைகளை எடுத்துரைக்கும் முறையில் அமைத்துள்ளதால் பிறர் உதவியின்றிக் குழந்தைகள் தாமே கதைகளைப் புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு. காட்சி, ஒலி வழி அமைந்துள்ளதால் எளிமையாகப் புரிந்துகொள்வர்.

உரையாடல் உரையாடல் பகுதியில் ஏழு உரையாடல் பகுதி உள்ளது. குழந்தைகளுக்கு நற்பண்புகளை ஊட்டும் செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. இவை யாவும் படக்காட்சியுடன் விளக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கு நற்பண்புகளை ஊட்டும் இந்தப் பயிற்சியின் வழியாகச் சொற்கள் நன்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

வழக்குச்சொற்கள் பறவைகளின் ஒலிகள், காய்கள், வீடுகள், விலங்குகளின் ஒலிகள், பழங்கள், கிழமைகள், உறவுப் பெயர்கள், நிறங்கள், சுவைகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஆறுவகைப் பறவைகளின் ஒலிகள் இங்குக் காட்டப்பட்டுள்ளன. காய்களின் பெயர்கள் ஒலித்துக்காட்டப்படுவதால் சொற்களை எளிமையாகக் குழந்தைகள் அறிவார்கள். நிகழ்ச்சிகள் என்ற பகுதியில் நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் குறித்த காலம் அறிவிக்கும் பயிற்சிகள் உள்ளன.

எண்கள் என்ற தலைப்பில் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பாடம் - பாடல் - பயிற்சி என்னும் பகுப்பில் செய்திகள் உள்ளன. இதில் உள்ள பயிற்சிகள் பகுதியில் எண்களின் ஒலியைக் கேட்டுப் பொருத்தமான படத்தைச்சுட்டும் பகுதி அமைந்துள்ளது. குறிப்பாக ஒன்று என்னும் ஒலியைக் கேட்டு, ஒரு பொம்மை உள்ள படத்தைச் சுட்டியால் சுட்ட வேண்டும். பொருத்தமானவற்றைச் சுட்டினால் சரியான விடை எனவும் பொருத்தம் இல்லை என்றால் தவறான விடை என்றும் குறிப்புகள் ஒலிக்கும்.
பாடல் என்ற பகுப்பில் ஒன்று முதலான எண்கள் பாடல்வடிவிலும் காட்சி வடிவிலும் விளக்கப்பட்டுள்ளன.

எழுத்து என்னும் பகுப்பில் பாடம் - பயிற்சி - பாடல்கள் என்ற தலைப்பில் செய்திகள் உள்ளன. உயிர் எழுத்துகள், மெய்யெழுத்துகள், ஒரெழுத்துச் சொற்கள், ஈரெழுத்துச் சொற்கள், மூன்று எழுத்துச் சொற்கள், நான்கு எழுத்துச் சொற்கள், ஐந்து எழுத்துச் சொற்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் எளிமையிலிருந்து கடுமைக்குச் செல்வது என்ற அடிப்படையில் பாடங்கள் கதையும் பாட்டுமாகத் தொடங்கி நிறைவில் எழுத்து, சொல் அறிமுகமாக வளர்ந்துள்ளது.

தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் மழலைக்கல்வி- சான்றிதழ்க்கல்வி, மேற்சான்றிதழ்க் கல்வி, இளநிலைக் கல்வி(B.A) உள்ளிட்ட பாடப்பகுதிகளின் பாடங்களும் உள்ளிடப்பட்டுள்ளன. இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள பாடங்கள் மாணவர்களின் கல்விநிலையை மனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பினும் அவர்களின் உள்ள நிலையை மனத்தில் கொண்டு உருவாக்கப்படவில்லை.

இணைய வகுப்பறை விரிவுரைகள் என்னும் பகுப்பில் சான்றிதழ்க்கல்விக்கான பாடங்கள் அடிப்படைநிலை, இடைநிலை, மேல்நிலை என்று வகுக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன. பேராசிரியர்கள் நன்னன், சித்தலிங்கையா ஆகியோர் இதற்குரிய பாடங்களை அறிமுகம் செய்கின்றனர். ஆங்கில வழியிலும் தமிழ்ப்பாடப்பகுதிகள் சித்தலிங்கையா அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சைவ சமயம் சார்ந்த பகுதிகள் அறிமுகம் செய்யப்படுவது போல் தமிழின் சங்க நூல்கள், இலக்கணங்கள், இலக்கியங்கள் தமிழகத்து அறிஞர்களால் பாடமாக நடத்தப்பட்டுத் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பாடப்பகுதிகளில் வைக்கப்பட வேண்டும். ஒரு பாடத்தைப் பல அறிஞர்கள் நடத்தி அந்தப் பகுதிகள் பயன்பாட்டுக்கு இருந்தால் தேவையானவர்களின் விரிவுரைகளை மாணவர்கள் தேர்ந்தெடுத்துப் பயில முடியும். சான்றாகத் தொல்காப்பியப் பாடத்தை முனைவர் கு.சுந்தரமூர்த்தி, சங்க இலக்கியங்களை முனைவர் தமிழண்ணல், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, காப்பியங்களை முனைவர் சோ.ந.கந்தசாமி, சிலப்பதிகாரத்தை முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பன் போன்ற அறிஞர்களின் பேச்சுப்பதிவுகளாகத் தொகுத்துப் பாதுகாக்க வேண்டும்.

பொள்ளாச்சி நசனின் முயற்சி பொள்ளாச்சி நசனின் தமிழம்.நெட் தளத்தில் தமிழ் கற்கும் வசதி அமைந்துள்ளது. இத்தளத்தில் தமிழை ஆங்கிலம் வழியாகப் பயிற்றுவிக்கும் வகையில் செய்திகள் உள்ளன. மற்ற தளங்கள் நெடுங்கணக்கு அடிப்படையில் தமிழை அறிமுகம் செய்வதிலிருந்து மாறுபட்டு எழுதுவதற்கு எளிய எழுத்துகளை முதலில் அறிமுகம் செய்து பிறகு மற்ற எழுத்துகளை நசன் அறிமுகம் செய்கின்றார். ட, ப, ம என்று இவரின் எழுத்து அறிமுகம் உள்ளது.

எடுத்துக்காட்டாக ஐந்து நிலைகளில்(Level) 19 பாடங்களை (Lesson) இவர் அமைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து பயிற்சிகளை அமைத்து அடுத்த ஐந்து நிலைகளில் பதினாறு பாடங்களை அமைத்துள்ளார். ஐந்து பாடல் பகுதிகளை அமைத்து அதில் 247 எழுத்துகளையும் பாடி அறியும்படியும் நசன் செய்துள்ளார். அதுபோல் ஓரெழுத்துச்சொற்கள் ஈரெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் இவற்றையும் பட்டியலிட்டு அறிமுகம் செய்துள்ளார்.தமிழ்க்களம் தளத்தில் குறியிலக்கும் நோக்கங்களும், தமிழ் கற்றல் கற்பித்தல், வகுப்பறை என்னும் மூன்று பகுப்பில் செய்திகள் உள்ளன. தமிழ்க்களத்தில் பாடங்கள் மூன்று பெரும் பகுதிகளாக அமைந்துள்ளன.

பகுதி 1: எழுத்துகள் அறிமுகமும் அவற்றாலான சொற்களைப் படித்தலும் எழுதலும். பகுதி 2: சொற்களஞ்சியம் பெருக்கம். பகுதி 3: கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய திறன்களில் உயர்நிலை எய்துதல்

பகுதி 1: பகுதி ஒன்றில் பதினான்கு பாடங்கள் தமிழ் எழுத்துகளின் வரிவடிவம் அறிந்து ஒலித்துப் பயிற்சி பெற அமைந்துள்ளன. அவ்வெழுத்துகளாலான எளிய சொற்களைப் படிக்கவும் , எழுதவும் பயிற்சிபெற விரும்புவோர் அப்பாடங்களில் தொடர்ச்சியாகப் பயிற்சி பெறவும் வழியமைக்கப்பட்டுள்ளது.

வரிவடிவ எழுத்துப் பயிற்சிக்கு என எட்டுப் பாடங்கள் அமைந்துள்ளன ஒவ்வொரு பாடமும் மூன்று கூறுகளை உட்கொண்டுள்ளன. தமிழ்ப் பாடங்கள் பேராசிரியர் திரு.வி.கணபதி புலவர் இ.கோமதிநாயகம் ஆகியோரால் எழுதப் பெற்றுள்ளன. தமிழ்க்களத்தில் எழுத்துரு தரவிறக்கம், ஒலிப்புக்குரிய மென்பொருள் தரவிறக்கம் தேவைப்படுகின்றன. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி பள்ளிக் கல்வி என்னும் தமிழக அரசின் தளத்தில் பள்ளிக்கல்விக்குரிய பாடநூல்கள் இடம்பெற்றுள்ளன(கட்டுரை உருவான சமயத்தில் சமச்சீர் கல்வி குறித்த சிக்கலால் பாடநூல்கள் இடம்பெறவில்லை. எனவே விரிவாகப் பார்வையிட இயலவில்லை).

தமிழமுதம் தமிழமுதம் என்ற இணையவழி வானொலியில் தமிழ் இலக்கியங்கள் சார்ந்த பாடல்கள் ஒலிவழியாகக் கேட்கும் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாகத் திருவெம்பாவைப் பாடல்கள், திருமுறைகள்(பித்தா பிறைசூடி) கேட்கும்வகையில் இனிய முறையில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.

இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனம் மைசூர் இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனத்தின் சார்பில் தமிழ்ப்பாடங்கள் இணையத்தில் உள்ளன. இதில் இணையம் வழியாகத் தமிழ் கற்க 500 உருவா கட்டணம் கட்டிப் படிக்க வேண்டும்(அமெரிக்க டாலர் 50). மாதிரிப்பாடங்கள் சிறிது வைக்கப்பட்டுள்ளன. ஒலிப்பு வசதி உண்டு. எழுத்துகளைத் தரவிறக்கிக் கற்க வேண்டும். தளம் புதுப்பிக்கப்பட வேண்டும். தரமான முயற்சியில் இத்தளம் தமிழை அறிமுகப்படுத்துகின்றது.


வடக்குக் கரோலினா பல்கலைக்கழகம் வடக்குக் கரோலினா பல்கலைக்கழகத் தளத்தில் தமிழ் கற்பதற்குரிய பல வசதிகள் உள்ளன. முன்னுரையுடன் மூன்று பகுதிகள் உள்ளன. பன்னிரு இயல்கள் உள்ளன. 38 பாடங்கள் உள்ளன. பின்னிணைப்புகளும் உள்ளன. தமிழ் கற்பதற்குரிய அடிப்படைச்செய்திகள் எழுத்துருச் சிக்கல் இன்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒலிப்பு வசதி, எழுதிக்காட்டும் வசதி யாவும் கொண்டு தரமான தளமாக இந்தத் தளம் உள்ளது

இந்தியானா பல்கலைக்கழகம் இந்தியானா பல்கலைக்கழகத்தின் தளத்திலும் தமிழ் கற்பதற்குரிய வசதிகள் உள்ளன.
.
தமிழ் டியூட்டர் தமிழ் டியூட்டர் என்ற தளத்தில் பதிவு செய்துகொண்டால் தமிழைக் கற்கும் வசதியை இந்தத் தளம் தருகின்றது..

குழந்தைகளுக்கான தளம் குழந்தைகளுக்கான பன்மொழி கற்கும் வாய்ப்புடைய தளம் இது. இதில் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழி அறிமுகம் எளிய நிலையில் செய்யப்பட்டுள்ளது.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் இனிய இசைகொண்ட அறிமுகப்பாடலுடன் இந்தத் தளம் விரிகின்றது. சிங்கப்பூர் கல்வி அமைச்சின் சார்பிலான தளம். சிங்கப்பூரில் தமிழ் கற்பிக்கும் சில காணொளிப் பகுதிகளைக் கொண்டுள்ளது. சிங்கப்பூரில் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டங்கள் சிலவும் காட்சி விளக்கவுரைகளும் இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ளன (http://www.uptlc.moe.edu. sg/index.php/ntlrc/primary).

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின்முயற்சிஎஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் வழியாக இணையவழிக் கல்வி, கணினித்தமிழ்க் கல்வி அளிக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. தமிழ் முதுகலை, இளம் முனைவர் பட்டத்திற்குரிய பாடப்பகுதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தளம் தமிழ் உயர்கல்விக்கான தேவைகளை நிறைவுசெய்யும் என நம்பலாம்.

தமிழ் டைசஸ்டு தமிழ் டைஜஸ்ட் திட்டம், ஆங்கில மொழியைப் பயன்படுத்தி, தொடக்க நிலையிலிருந்து மேம்பட்ட நிலைவரை தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இணையம் வழியாக இத்திட்டம் தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும், தமிழ்நாட்டிற்கு வெளியே, மற்றும் இந்தியாவிற்கு வெளியேயும் வாழ்ந்துவரும் தமிழ் பேசும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ் டைஜஸ்ட் திட்டம் தன் இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

16 வெவ்வேறு நிலைகளில் உள்ள பாடத்திட்டம் இதில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திட்டமும் சற்றொப்ப ஒன்றரை மணி நேரம் வரை ஓடக்கூடியது. பாடத்திட்டத்தை ஹை என்ட் டிஜிடல் காணொளியிலும், எலக்ட்ரானிக் அல்லது வன்படி பயிற்சிப் புத்தகம் வழியாகவும் தமிழ் டைஜஸ்ட் திட்டம் வழங்குகிறது. இந்தப் பாடத் திட்ட முறைகள், குழந்தைகள், பெரியவர்கள் என்று வேறுபாடு இல்லாமல் தமிழ் கற்கும் பட்டறிவை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் மேற்கொள்ள உதவுகிறது. ஆறு மாதங்களில் தமிழ் கற்கும் வசதியை இந்தத் தளம் வழங்குகின்றது.

இந்தத் தளத்தின் பாடத்திட்டங்களைப் பயன்படுத்த கட்டணம் கட்டுதல் வேண்டும். மாதிரிப்பகுதிகள் இணையத்தில் உள்ளன. ஆங்கிலம் வழியாகத் தமிழ் மொழியைக் கற்கத், தொடக்க நிலையிலிருந்து உயர்நிலை வரை மிகச்சிறப்பாகப் பாடத்திட்டங்கள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

இணையத்தில் இடம்பெற்றுள்ள தமிழ்ப்பாடங்கள் அவரவர்களின் வாய்ப்புகள், தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளன. உயர்கல்விக்குரிய பாடங்கள் இனிதான் உருவாக்கப்பட வேண்டும் அகவை முதிர்ந்த நிலையில் உள்ள தமிழ்ப்பேரறிஞர்களின் வாய்மொழி வடிவில் தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்கள் பாடமாக நடத்தப்பெற்று இணையவெளியில் பாதுகாக்கப்பட வேண்டும். அதுபோல் பிறநாட்டுத் தமிழறிஞர்களின் வாய்மொழியிலும் தமிழ்ப்பாடங்கள் நடத்தப்பெற்றுத் தொகுக்கப்பெற வேண்டும். தமிழ் சார்ந்த பாடங்கள் உருவாக்கும் முயற்சி உலக அளவில் நடந்தாலும் இவற்றை எல்லாம் ஒரு குடையில் பார்க்கவும், ஆராயவும், பாடத்திடங்களுக்கு இடையே ஓர்மை காணப்படவும் அறிஞர்கள் சிந்திக்கவேண்டும்

இணையவழித் தமிழ்க் கல்விக்குரிய தளங்கள்:

1.http://www.pallikalvi.in/Schools/Samacheerkalvi.htm
2.http://tamilkalam.in/
3.http://www.tamil-online.info/Introduction/design.htm
4.http://www.plc.sas.upenn.edu/tamilweb/
5.http://www.uptlc.moe.edu.sg/
6.http://www.tamilvu.org/
7.http://ccat.sas.upenn.edu/~haroldfs/tamilweb/webmail.html
8.http://www.maharashtraweb.com/learning/learningTamil.htm
9.http://www.tamilamudham.com/tamil-resources.html
10.http://www.tamil-online.info/Introduction/learning.htm
11.http://www.talktamil.4t.com/
12.http://www.tamiltoons.com/view/14/tamil-alphabet-/
13.http://www.thamizham.net/
14.http://ethirneechal.blogspot.com/2010/06/learn-tamil-online.html
15.http://www.thetamillanguage.com/
16.http://www.unc.edu/~echeran/paadanool/home.html http://www.learntamil.com/
17.http://www.tamilo.com/learn-tamil-education-57.html
18.http://www.languageshome.com/
19.http://www.google.com/search?q=learn+tamil&hl=en&prmd=vnb&source=univ&tbs=vid:1&tbo=u&ei=4AfqS5utMIfStgODn7WiDg&sa=X&oi=video_result_group&ct=title&resnum=4&ved=0CDkQqwQwAw
20.http://www.saivam.org.uk/saivamTamil.htm
21.http://www.ukindia.com/zip/ztm1.htm
22.http://www.tamilcube.com/tamil.aspx
23.http://www.mylanguageexchange.com/Learn/tamil.asp
24.http://kids.noolagam.com/
25.http://www.tamilunltd.com/
26.http://languagelab.bh.indiana.edu/tamil_archive.html#basic
27.http://www.srmuniv.ac.in/tamil_perayam.php#
28.http://www.tamildigest.com/
29.http://www.youtube.com/watch?v=euFzMK4LS8o&feature=relatedhttp://ccat.sas.upenn.edu/~haroldfs/tamilweb/webmail.htmlhttp://www.tamilamudham.com/tamil-resources.htmlhttp://www.tamiltoons.com/view/14/tamil-alphabet-/http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/

ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான்!

சென்னை ஈழப் பிரச்சினை தொடர்பாக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கடைசி வரை நாங்கள் துணை நிற்போம்.

ஈழத் தமிழர்களை கொன்றழித்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ராஜபக்சேவை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி சென்னை சைதாப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.கட்சித் தலைவர் சீமான், இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சீமான் பேசியதாவதுஇலங்கை அதிபர் ராஜபசேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என வலியுருத்தியும் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

தேர்தல் நேரத்தில் இலங்கைப் பிரச்சனைக்கு தனி ஈழம்தான் தீர்வு என ஜெயலலிதா கூறியிருந்தார். அதை தேர்தல் நேரத்துப் பசப்பு வார்த்தைகள் என அப்போது சிலர் கூறினர். தேர்தலில் அதிமுக வென்றதோடு மட்டுமல்லாமல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தையும் சட்டப் பேரவையில் நிறைவேற்றியபோது, இது வெறும் தீர்மானத்தோடு நின்றுவிடும் என்றும் சிலர் கூறினர்.

ஆனால் அண்மையில் டெல்லிக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்த முதல் கோரிக்கையே இலங்கைப் பிரச்சனை பற்றித்தான். அதனால் ஈழப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது.

சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கடைசி வரை நாங்கள் துணை நிற்போம்.இதே நிலை நீடித்தால் அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் அதிமுகதான் கைப்பற்றும் என்பது நிச்சயம்.

காங்கிரஸ் கட்சியின் தயவு அதிமுகவுக்குத் தேவையில்லை. அதிமுகவின் தயவுதான் காங்கிரஸ் கட்சிக்குத் தேவை. எனவே அதிமுக ஒருபோதும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கக்கூடாது. காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்தேன். அதே நேரத்தில் இரட்டை இலைக்கு ஓட்டுப்போடுங்கள் என்று வாக்கு சேகரித்தேன். இதனால் என்னை நிறைய பேர் கேலி செய்தார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்ததற்காக இப்போது பெருமைப்படுகிறேன்.

ஈழப்பிரச்சனைக்கு குரல் கொடுப்பார் புரட்சித்தலைவி என்று எதிர்ப்பார்த்திருந்தோம். எங்கே செய்யாமல் விட்டுவிடுவாரோ என்று பயமும் இருந்தது. ஆனால் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது மட்டுமல்லலாமல் பிரதமரிடம் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார் என்றார் சீமான்.

இதே நாள்...

  •  சர்வதேச அகதிகள் தினம்
  •  அர்ஜெண்டினா கொடி நாள்
  •  இந்திய சிப்பாய்க் கழகம் முடிவுக்கு வந்தது(1858)
  •  விக்கிமீடியா அமைப்பு உருவானது(2003)
  •  யுரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1990)

Father’s Day 2011...



தந்தையர்க்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) கொண்டாடப்படுகிறது.இத்தினம் தற்போது பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினம் கொண்டாட்டங்கள் மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தியாவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்றைய தினம் சில பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் தங்களது தந்தைக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கலாம். பாசத்துக்கு எப்போதும் அன்னை தான் உதாரணம். ஆனால் தந்தைதான் ஒரு குழந்தைக்கு வழிகாட்டியாக இருக்கிறார். "அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்' என்ற பாடல் வரிகள் தாய், தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. சிறு வயதிலேயே குழந்தைக்கு தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இதன் நோக்கம். தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு தந்தையும் தனது குழந்தைக்கு ஒரு பொறுப்புள்ள தந்தையாக செயல்படவேண்டும். அதே நேரத்தில் தந்தையின் தியாகங்களை கருத்தில் கொண்டு, வயதான காலத்தில் குழந்தைகள் அவர்களை பேணிக்காக்க வேண்டும்.

எப்போது தொடங்கியது :அமெரிக்காவில் 1909ல் சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற இளம் பெண் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். அன்னையர் தினம் கொண்டாடும் போது தந்தையர் தினம் ஏன் கொண்டாடக் கூடாது என வலியுறுத்தினார். இவர் தனது தாயாரின் மறைவுக்கு பிறகு தந்தை வில்லியம் ஆறு குழந்தைகள் கொண்ட தனது குடும்பத்தை கடுமையான சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார். இது தான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு தூண்டியது. இதன் படி 1910ம் ஆண்டு முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால் அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே...:தந்தையர் தினத்தில் "அப்பாக்களின்' நினைவுப் பகிர்வுகள்:"தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை... தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என நமது முன்னோர்கள் சொல்லிச் சென்றனர். அறிவியலும், விஞ்ஞானமும் அதிகம் அறிமுகமில்லாத அந்தக் காலத்தில், பிள்ளைகளும் அப்படியே வாழ்ந்தனர். இன்று ஒரு பிள்ளையை பேணி வளர்த்து, சான்றோனாக்க வேண்டுமென்றால், சுற்றியுள்ள சூழ்நிலைகளை எதிர்த்து போராட வேண்டியுள்ளது. மழலைப் பருவத்தில் தந்தையின் கைப்பிடித்து பள்ளி சென்று, பாடம் பயின்றோம். கல்லூரிப் பருவத்தில் தோழனாய் பழகினோம். இப்போது தந்தையின், தாயின் ஸ்தானத்தில் நாம் இருந்தாலும், தந்தை காட்டிய தோழமை, நாம் வளர குடும்ப பாரத்தின் சுமைதாங்கியாய் இருந்தது, இன்னும் நம் நெஞ்சில் பசுமையாக நிறைந்திருக்கும்.
Father’s Day 2011 will be celebrated worldwide in many countries. Father’s Day complements Mother’s Day, the celebration honoring Mothers. Many people tend to forget Father’s Day date and they often search online about the exact date of Father’s day.

History of Father’s Day
ho had been lost in the Monongah Mining disaster several months earlier in Monongah, West Virginia, on December 6, 1907. It’s possible that Clayton was influenced by the first celebration of Mother’s Day that same year, just a few miles away. Clayton chose the Sunday nearest to the birthday of her recently deceased father. 
Father’s Day is a celebration of fathers inaugurated in the early twentieth century. It is followed by Mother’s Day Father’s Day celebrating fatherhood and male parenting. Father’s Day is celebrated on a variety of dates worldwide and typically involves gift-giving, special dinners to fathers, and family-oriented activities. 

Father’s Day first observance actually took place in Fairmont, West Virginia on July 5, 1908. It was organized by Mrs. Grace Golden Clayton, who wanted to celebrate the lives of the 210 fathers
 
Unfortunately, the day was overshadowed by other events in the city, West Virginia did not officially register the holiday, and it was not celebrated again. All the credit for Father’s Day went to Sonora Dodd, who invented independently her own celebration of Father’s Day just two years later, also influenced by Jarvis’ Mother’s Day. Clayton’s celebration was forgotten until 1972, when one of the attendants to the celebration saw Nixon’s proclamation of Father’s Day, and worked to recover its legacy. The celebration is now held every year in the Central United Methodist Church – the Williams Memorial Methodist Episcopal Church, South, was torn down in 1922. Fairmont is now promoted as the “Home of the First Father’s Day Service”.  A bill to accord national recognition of the holiday was introduced in Congress in 1913. In 1916, President Woodrow Wilson went to Spokane to speak in a Father’s Day celebration and wanted to make it official, but Congress resisted, fearing that it would become commercialized. US President Calvin Coolidge recommended in 1924 that the day be observed by the nation, but stopped short of issuing a national proclamation. Two earlier attempts to formally recognize the holiday had been defeated by Congress. In 1957, Maine Senator Margaret Chase Smith wrote a proposal accusing Congress of ignoring fathers for 40 years while honoring mothers, thus “[singling] out just one of our two parents” In 1966, President Lyndon B. Johnson issued the first presidential proclamation honoring fathers, designating the third Sunday in June as Father’s Day. Six years later, the day was made a permanent national holiday when President Richard Nixon signed it into law in 1972. International Men’s Day is also celebrated in many countries on November 19 for men and boys who are not fathers.
Father’s Date Celebration In the World


Father’s Day In India
Father’s day will be on celebrated on June 19 2011. It is normally celebrated on the third June 2011.
Father’s Day Celebration In Usa
Father’s Day will be widely celebrated in USA on 19 June 2011. It is celebrated by almost all people in all states of USA.
Father’s Day Date In Australia
Father’s Day Date in Australia is September 4 2011. Father’s date will be the same date, September 4 2011 in countries near Australia. Fiji, New Zealand and Papua New Guinea will also celebrate Father’s Day on September 4. September 4 is the first Sunday in September.

Father’s day will be celebrated in Singapore on June 19. On June 19, Father’s Day will be celebrated in a lot of countries.
Father’s Day In Singapore  
Father’s Day 2011 in Brazil will be celebrated in August 14 2011. August 14 is the second Sunday in August. 


Father’s Day In India
Father’s day will be on celebrated on June 19 2011. It is normally celebrated on the third June 2011.
Father’s day will be celebrated in UK on June 19 2011. On this special day, there will be lot of shopping activity and malls are usually crowded.: 
 


Father’s Day Celebration In Usa:Father’s Day will be widely celebrated in USA on 19 June 2011. It is celebrated by almost all people in all states of USA.

Father’s Day Date In Australia: Father’s Day Date in Australia is September 4 2011. Father’s date will be the same date, September 4 2011 in countries near Australia. Fiji, New Zealand and Papua New Guinea will also celebrate Father’s Day on September 4. September 4 is the first Sunday in September.

Father’s Day In Singapore
Father’s day will be celebrated in Singapore on June 19. On June 19, Father’s Day will be celebrated in a lot of countries. 

Father’s Day In Brazil: 
Father’s Day 2011 in Brazil will be celebrated in August 14 2011. August 14 is the second Sunday in August.


Father’s Day in UK: Father’s day will be celebrated in UK on June 19 2011. On this special day, there will be lot of shopping activity and malls are usually crowded.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...