|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 June, 2011

58 வயதிலும் நிர்வான போஸ் கொடுத்த முன்னாள் அதிபரின் மகள்!


இதே நாள்

  • திமுக தலைவர் மு.கருணாநிதி பிறந்த தினம்(1924)

  •  மொண்டெனேகுரோ நாடு, செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது(2006)

  •  2001ல் அகற்றப்பட்ட கண்ணகி சிலை மீண்டும் திறக்கப்பட்டது(2006)

  •  நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது(1965)

  • ஜிமெயில் பாஸ்வேர்ட்களை சீன ஹேக்கர்கள் திருடி வருகின்றனர்-கூகுள்!

    Hundreds of personal Gmail accounts, including those of some senior U.S. government officials, were hacked as a result of a massive phishing scheme originating from China, Google said Wednesday.The account hijackings were a result of stolen passwords, likely by malware installed on victims' computers or through victims' responses to e-mails from malicious hackers posing as trusted sources. That type of hack is known as phishing. Gmail's security systems themselves were not compromised, Google said. 
    The company believes the phishing attack emanated from Jinan, China. In addition to the U.S. government personnel, other targets included South Korean government officials and federal workers of several other Asian countries, Chinese political activists, military personnel and journalists. "The Department of Homeland Security is aware of Google's message to its customers," said Chris Ortman, a spokesman for the agency. "We are working with Google and our federal partners to review the matter, offer analysis of any malicious activity, and develop solutions to mitigate further risk."

    Secretary of State Hillary Clinton addressed the issue Thursday morning."Google informed the State Department of this situation yesterday in advance of its public announcement," she said. "These allegations are very serious, we take them seriously, we're looking into them, and because this will be an ongoing investigation I would refer you to first Google for any details that they are able to share at this time, and to the FBI, which will be conducting the investigation."

    Federal Bureau of Investigation spokesman Paul Bresson said the agency is working with Google and with U.S. government agencies "to review this matter further to identify the origin of this campaign and to see what information may have been compromised." He declined to comment further on the investigation. 

    அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் பலர், சீனாவில் ஜனநாயகம் கோரி குரல் கொடுத்து வரும் அரசியல் தலைவர்கள், அமைப்பினர், ஆசிய நாடுகள் பலவற்றின் முக்கிய அதிகாரிகள் ஆகியோரின் பாஸ்வேர்ட்கள் திருட்டுப் போயுள்ளதாக அறிகிறோம். ராணுவ அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் பலரின் பாஸ்வேர்ட்களும் கூட இதுபோல திருட்டுப் போயுள்ளதாக அறிகிறோம் என்று அது கூறியுள்ளது.

    கூகுளின் இணையதள செயல்பாடுகளில் சீன ஹேக்கர்கள் ஊடுறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ஹேக்கர்கள் அட்டகாசத்துடன், சீன அரசின் அடக்குமுறைகளும் அதிகரித்ததால்,சீனாவில் உள்ள தனது அலுவலகத்தை மூடுவதாக அறிவித்தது கூகுள் என்பது நினைவிருக்கலாம்.

    அதன் பின்னர் சீனாவில் உள்ள தனது செயல்பாடுகளை ஹாங்காங்குக்கு மாற்றி விட்டது கூகுள்.இந்த நிலையில், ஜிமெயில் பாஸ்வேர்ட்களை திருடும் கும்பல்களின் அட்டகாசம் சீனாவில் அதிகரித்துள்ளதாக கூகுள் கூறியிருப்பதால் மீண்டும் பரபரப்பு. 

    பசங்கா விளையாடும் 15 அறிவுபூர்வமான விளையாட்டு !

    Bioshock: Infinite: After the success of Bioshock 1 and 2, 2K Games has decided to release the third iteration of the franchise that takes place in the city of Columbia situated high up in the air. Set in 1912, the user dons the role of lead protagonist Booker DeWitt, a disgraced former private detective who's picked up a new case. The job is to find Elizabeth, a young woman who's gone missing and find her unharmed. We have only seen one gameplay footage and it has truly blown us away. Can't wait to see what 2K Games will show off at E3 2011.

    Duke Nukem Forever: Brought back from the dead, Duke Nukem Forever has been in the making for over 10 years. The aliens are back and they have taken all the girls and it is up to Duke to save the day. We cannot wait to say, “Hail to the king” when we see the game in at E3 2011.

    Call of Duty: Modern Warfare 3: One of Activition's largest selling First Person Shooter franchises is all set to makes a grand entrance at E3 2011. Continuing the Modern Warfare franchise, we wouldn't be surprised if the Osama Bin Laden assassination makes an appearance in this game.

    Rage: Known for the legendary Doom and awesome Quake franchises, id Software is all ready to take on the First Person Shooter genre with Rage. Set in a post-apocalyptic future, Rage gives the user access to a vast arsenal of weapons to take down the mutants and save the day. Using id's idTech 5 technology the game looks rich, vibrant and realistic.

    Battlefield 3: A recently launched sniper gameplay demo is truly impressive. Battlefield 3 looks stunning and the attention to detail is awesome. Could this be the Ying to Call of Duty's Yang? The answer will be revealed as E3 kicks off on June 6, 2011.

    Mass Effect 3: Commander Shepard is back in his third outing and this time his mission is to save Earth. The first Mass Effect re-defined the RPG (Role Playing Game) genre and Mass Effect 2 combined RPG with third person shooter elements taking the gameplay to a whole new level. Many have tried to mimic this formula and failed. It will be interesting to see what developer BioWare has hidden under Commander Shepard's sleeve.

    Metal Gear Solid: Rising: A PS3 exclusive franchise coming to the XBOX 360? That's all we heard about the future of the Metal Gear Solid franchise and we're excited about seeing which direction creator and executive producer Hideo Kojima is going to push the story. The lead protagonist has changed to Raiden and the story follows his journey to recovering the remains of Big Boss. The events of the game are set before the happenings of Metal Gear Solid 4.

    Star Wars: Kinect: Waving your hands in front of the TV and feeling like a true Jedi Knight – haven't we all wanted to be there?. Star Wars for Kinect was shown off last year to a select few journalists behind closed doors and even they weren't allowed to play the game. This year at E3 we not only hope to see the game in action but hear a release date as well.

    Forza 4: The only simulated racing franchise to give GT5 a run for its money, Forza 4 is not only set to raise the bar on the XBOX 360, but show-up with Kinect support as well. Now feel like you are in the driver's seat as you “drive” through lush environments using Microsoft motion sensor.

    Gears of War 3: A spectacular conclusion to an outstanding franchise, Gears of War 3 sees the final chapter in Marcus Fenix and Delta Squad's fight against the Locust. The multiplayer Beta has already proven that the game has surpassed all expectations. But will the single player campaign match up? Stay tuned, as we will bring you the complete lowdown from the halls of E3 2011.

    The Legend of Zelda: Skyward Sword: The only Wii game on our list (and it is here because its Zelda, duh!), the Legend of Zelda: Skyward Sword was demoed by none other than creator Shigeru Miyamoto himself at E3 2010. Skyward Sword introduces full motion control made possible with the Wii MotionPlus accessory, which synchronizes player movements with link's actions while offering greatly intuitive gameplay.

    Uncharted 3: Need we say more? Uncharted 3 is a sequel to the critically acclaimed Uncharted 2. Developer Naughty Dog outdid themselves with Uncharted 2. Will they repeat themselves  with Uncharted 3? This is one of the most beautiful looking games with a captivating story that twists and turns and keeps you glued to your seat. With all the hype surrounding this game, words cannot express our anticipation for this title.

    Hitman Absolution: Agent 47 is about to make his reappearance after a long break in Hitman Absolution. The rumour mill was hard at work predicting the existence of the game and hearsay was confirmed the day the first screen shots were revealed. Hope to see some gameplay in action at E32011.

    Assassins Creed Revelation: The final chapter in Ezio Auditore da Firenze's saga, Assassins Creed Revelations finally brings closure to the never-ending war between the Assassins and the Templars. The series has been credited for recreating real life scenarios in a fictional reality. Go anywhere, climb anything gameplay has been the most unique aspect of this game.

    Batman Arkham City: Batman Arkham Asylum put developer Rocksteady on the gamers' map and now they are planning to one up their best creation by taking the Dark Knight to the next level. Expect to face-off with villains such as Two-Face, Cat Woman, Penguin, the Joker and many more in this outing of the caped crusader. The gadgets were a highlight of the previous game and we hope they make a grander appearance in Arkham City.

    தன் மகனின் படத்தை பிரசுரித்ததற்க்காக தமிழ் பத்திரிக்கை மீது வழக்கு போடும் கனிமொழி!

    ஜெயில்ல உக்காந்து யோசிபாங்களோ! 
    Kanimozhi, currently in jail in Delhi for her alleged role in the country's biggest scam, has sued two Tamil magazines for publishing photos of her son. Kanimozhi was sent to Tihar Jail last month by a special court in Delhi that's trying the 2G scam. On multiple occasions, her young son and husband, G. Aravindan, have been present in court with her.

    "By publishing the photographs of Ms Kanimozhi's minor son, while she is defending herself in the ongoing 2G case, the intent of the publisher seems to be not just to defame her and distort facts. The motive of those behind this immoral act appears to be to cause agony and induce trauma on to the minor child as well", declared a statement issued by her office. Kanimozhi's father, M Karunanidhi, is the head of the DMK and was voted out as the Chief Minister of Tamil Nadu last month after his party delivered one of its worst-ever electoral performances. Analysts believe that the 2G scam, which seems inextricably linked to several top leaders of the DMK, was largely to blame for the party's obliteration in the elections.

    A Raja, once a favourite of Mr Karunanidhi's, was arrested in February for masterminding the 2G scam when he was Telecom Minister is 2008. He allegedly gave mobile network licenses and spectrum at throwaway prices to companies that were ineligible for them. One of those firms - Swan Telecom - is accused of sending him a kickback worth Rs. 214 crore. That bribe was deposited, according to investigators, with a TV channel in Chennai that is owned largely by Kanimozhi and her step mother. Kanimozhi has argued that she was not an active participant in the company's affairs. She has also said that the money from Swan was in exchange for equity and was returned with interest after the deal fell through

    பிறந்தநாளுக்கு தன் பெண்ணை சந்திக்கும் கலைஞர் !

    DMK chief M Karunanidhi is expected to spend his 88th birthday in Delhi tomorrow by meeting his daughter Kanimozhi. Kanimozhi, a Rajya Sabha MP,  and DMK's trusted member and former Telecom Minister A Raja are cooling their heels in Delhi's Tihar jail for their alleged role in the 2G scam.

    The DMK, founded by Dravidian veteran C N Annadurai, intends to make the birthday an opportunity to redeem itself, with all claims of coming back to power on the basis of performance falling flat and the 2G spectrum scam making a heavy dent on its image.

    The arrest and incarceration of his youngest child has been difficult for Mr Karunanidhi. He made his unhappiness clear and did not meet Congress leader Sonia Gandhi on a trip to Delhi on May 23, when he met his daughter in Tihar jail. However,  he later said that he did not meet Sonia Gandhi in Delhi as it would not have been appropriate when his daughter is in jail.

    எது எதற்குத்தான் பெட் கட்டுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது.

    மும்பையில் இந்த பருவ காலத்தில் எந்த அளவுக்கு மழை பெய்யும் என்று கூறி சூதாட்டக்காரர்கள் பெட் கட்டி வருகின்றனராம். கிட்டத்தட்ட ரூ. 25,000 கோடி அளவுக்கு மழையை வைத்து அடுத்த நான்கு மாதங்களில் பணம் கைமாறப் போவதாக தகவல் கூறுகிறது. கிரிக்கெட்டைத்தான் சூதாட்டம் ஆட்டிப்படைக்கிறது என்றால் இப்போது பல்வேறு பொருட்களின் மீதும் பெட் கட்டி பணம் பார்க்க ஆரம்பித்துள்ளது புக்கிகள் கூட்டம்.

    சமீபத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மீதும் தாறுமாறாக பெட் கட்டி பணம் பார்த்தனர். இந்த நிலையி்ல மும்பையில் இந்த பருவ காலத்தில் எவ்வளவு மழை பெய்யும் என்று பெட் கட்ட ஆரம்பித்துள்ளனராம் மும்பையில். இந்த சூதாட்டத்தில் இறங்கியிருப்பவர்கள் மும்பையைச் சேர்ந்த புக்கிககள் இல்லையாம். பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் மும்பையில் முகாமிட்டு இந்த பெட்டைக் கட்டி வருகின்றனராம்.

    கிட்டத்தட்ட ரூ. 25,000 கோடி அளவுக்கு இந்த சூதாட்டத்தில் பணம் புழங்குவதாக அதிர்ச்சித் தகவல் கூறுகிறது. தென் மேற்குப் பருவ மழை தற்போது தொடங்கியுள்ளது. இந்த மழை ஜூன் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மும்பைக்கு வந்து சேரலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை வைத்துத்தான் தற்போது பெட்டிங் தொடங்கியுள்ளது.

    அதாவது இந்த மழைக்காலத்தில் மும்பையில் 2000 மில்லிமீட்டர் மழை பெய்யும் என்பதுதான் பெட். கொலாபா மற்றும் சான்டாகுரூஸ் வானிலை ஆய்வு மையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு தனித் தனியாக ரேட் நிர்ணயித்து இந்த முறை பெட் கட்டி வருகின்றனராம். இதுகுறித்து ஒரு புக்கி கூறுகையில், கிரிக்கெட் போட்டிகள் மீது கட்டப்படும் பெட்டுக்கும், இந்த மழை பெட்டுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. வானிலை ஆய்வு மையங்களின் அறிக்கைகளை அடிப்படையாக வைத்துத்தான் நாங்கள் பெட்டிங்கில் ஈடுபடுவோம் என்கிறார்.

    1700 மில்லி மீட்டர் மழைக்கு 32 பைசாவும், 1800 மில்லிமீட்டர் மழைக்கு 55 பைசாவும், 1900 மில்லிமீட்டர் மழைக்கு 1.05 ரூபாயும் பெட் வைக்கப்படுகிறது. இது கொலாபா பிராந்தியத்துக்கான பெட்டிங். சான்டாக்ரூஸைப் பொறுத்தவரை 1800 மில்லிமீட்டருக்கு 21 பைசா, 1900 மில்லிமீட்டருக்கு 42 பைசா, 2000 மில்லிமீட்டருக்கு 95 பைசா, 2100 மில்லிமீட்டருக்கு ரூ. 1.45 என பெட்டிங் கட்டணம் நிர்ணயித்துள்ளனராம் புக்கிகள்.

    கிட்டத்தட்ட ரூ. 25,000 கோடி வரை இந்த பெட்டிங்கில் பணம் புழங்கும் என்று கூறப்படுகிறது.

    தோல்நோய்களை குணமாக்கும் குன்றுமணி

    குப்பையில் எறிந்தாலும் குன்றுமணி கறுக்காது ’ என்று ஒரு பழமொழி உண்டு.
    இந்தியாவைச் சேர்ந்த இந்த தாவரம் வெப்ப மண்டலப் பகுதிகளிலும், வேலி மற்றும் புதர்களிலும் வளர்கிறது. இந்தியாவில் பண்டைய காலத்தில் பொன் மற்றும் வைரங்களின் அளவு அறிய விதைகள் எடைகளாகப் பயன்பட்டன.

    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: விதைகளில் அபிரின், இன்டோன் ஆல்கலாய்டுகள், டிரைடெர்பினாய்டு சபோனின்கள், ஆந்தசையானின்கள் உள்ளன. வேர்கள் மற்றும் இலைகளிலும் கிளைசரிரைசா, சிறிது அபிரினும் காணப்படுகின்றன. விதைகளில் அபிரின்கள் ஏ, பி,சி அபிரலின், அபிரைன், கேலிஜ் அமிலம், அமினோ அமிலங்கள், விதை எண்ணெயில் கரிம அமிலங்களான பால்மிடிக், ஸ்டிராக் ஒலியிக்,லினோயிக் அமிலங்களும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

    தோல்நோய்கள்: இலைகள், வேர் மற்றும் விதைகள் மருத்துவப் பயன் கொண்டவை. இலைகளின் கசாயம் இருமல், சளி மற்றும் குடல்வலி போக்கும். இலையின் சாறுடன் எண்ணெய் கலந்து வலியுடனான வீக்கங்கள் மீது பூசப்படுகிறது. வெண்குஷ்டம், பித்தம், நமைச்சல், போன்ற தோல் வியாதிகளை நீக்க உதவும்.

    நரம்பு கோளறுகளை குணமாக்கும்: வேர் வலுவேற்றி, சிறுநீர்போக்கு, வாந்தி தூண்டுவது, வாய்குழறச்செய்வது, பால் உணர்வு தூண்டுவது, நரம்புக் கோளறுகளுக்கு மருந்தாகிறது. கருச்சிதைவு தோற்றுவிப்பது, விதைகளின் பசை மேல்பூச்சாக தோள்பட்டை வலி, தொடை நரம்பு வலி, மற்றும் பக்கவாதத்தில் பயன்படுகிறது.

    முடி வளர குன்றிமணி: “ கையாந்தகரை சாறு நாலுபலம் எடுத்து
    ரெண்டு பலம் குன்றிமணிப் பருப்பு கலந்தரைத்து
    ஒரு பலம் எள் எண்ணெய் சேர்ந்து காய்ச்சி சீலை வடிகட்டி
    தினம் பூசப்பா கிழவனுக்கு குமரன் போல் சடை காணும் “
    என்பது சித்தர் பாடல்.

    வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். முடி நன்றாக செழித்து வளரும்

    நச்சுத்தன்மை: நவீன ஆய்வுகளில் விதைகளின் உறைச்சத்து விந்துக்களின் உற்பத்தியை குறைப்பதுடன் அவற்றின் கருவளத்தினையும் பாதிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அபிரின் மிகக் கடுமையான நச்சாகும். அந்தமான் தீவுகளில் உள்ள பழங்குடியினர் விதைகளை வேகவைத்து உணவாக உட்கொள்வதாகத் தெரிகிறது. வேகவைக்கும் போது நச்சு முறிக்கப்படுகிறது.

    Herb Description:

    Hindi Name:Ratti
    Sanskrit Name:Gunja, Raktika
    Common Name:Indian Liquorice Root
    Latin Name:Abrus Precatorius Linn
    Medicinal Properties:Gunja seeds are considered as poisonous in Ayurveda, thus special method to purify them before use as a medicine is prescribed. Purified Gunja seeds are a potent nervous system stimulant and are widely used in Vata disorders like joint pains and paralysis. The paste of seeds is applied locally to help in alopecia and skin ailments. It has also been mentioned as a contraceptive in Ayurvedic literatures
    Effect on Dosha:Seed pacify both Kapha and Vata, Leaves pacify Tridosha.
    Main Classical Uses:Gunjabhadra rasa, Gunja tail.
    Reference:Dravyaguna Vigyan, Prof. Priyavrat Sharma, Chaukhambha Bharti Academy, Varanasi. INDIA

    தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் சேவை: பிரமாண்ட கப்பல் வருகை

    தூத்துக்குடியிலிருந்து கொழும்புவுக்கு ஜூன் 2வது வாரம் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் பொருட்டு பிரமாண்டமான பயணிகள் சொகுசு கப்பலான ஸ்காட்டியா பிரின்ஸ் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளது. தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவங்க வேண்டும் என 10 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதற்கான தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.1.76 கோடி மதிப்பில் பயணிகள் முனைமம் அமைக்கப்பட்டது. இதில் சுங்கசோதனை, குடியுரி்மை சோதனை, பணப்பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து வகையான வசதிகளுடன், உடமைகளை சோதனை செய்யும் ஸ்கேனர் கருவியும் அமைக்கப்பட்டது.

    தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு பயணிகள் கப்பலை இயக்குவதற்கான உரிமையை பிளமிங்கோ லைனர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் ஸ்காட்டியா பிரின்ஸ் என்ற பயணிகள் சொகுசு கப்பலை தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கு இயக்க ஓப்பந்தம் செய்துள்ளது. இந்த சொகுசு கப்பல் தற்போது தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளது.

    பிரமண்டமான இந்த சொகுசு கப்பலில் 1050 பேர் பயணிக்க முடியும். தொழில் நுட்ப பணியாளர்கள் 50 பேரும், உபசரிப்பு பணியாளர்கள் 150 பேரும் இதில் பணியாற்றுகின்றனர். இதில் பயணிகளுக்கு 322 அறைகளும், பணி்யாளர்களுக்கு 98 அறைகளும் உள்ளன. 322 பேர் அமரக்கூடிய ஹோட்டல், 76 பயணிகள் அமரக்கூடிய காப்பி ஷாப், 253 பேர் அமர கூடிய பார்வையாளர் மடம் உள்ளிட்ட வசதிகளும் இடம் பெற்றுள்ளன.

    மேலும் மதுபான அரங்கு, காசினோ எனப்படும் பொழுதுபோக்கு மையம், பரிசுபொருள் அங்காடி, சுங்கவரி விலக்கு அங்காடி, மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை ஆகியவை உள்ளன. சுமார் 200 கார்கள் கொண்டு செல்வதற்கான இடவசதி கொண்ட இந்த கப்பலில் சுமார் 2 ஆயிரம் டன் சரக்கையும் கொண்டு செல்ல முடியும்.

    மணிக்கு சுமார் 13 கடல் மைல் முதல் 18 கடல் மைல் வேகத்தி்ல் இந்த கப்பலில் பயணிக்க முடியும். காற்றின் வேகம் மற்றும் கடலின் தன்மைக்கு ஏற்ப தூத்துக்குடியிலிருந்து கொழும்புவுக்கு சுமார் 9 மணி முதல் 12 மணி நேரத்தில் செல்ல முடியும். தூத்துக்குடியிலிருந்து கொழும்புவுக்கு ஜூன் இரண்டாவது வாரத்தில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தயாநிதி மாறனால் இழப்பு ரூ.440 கோடி? "தூங்குகிறது சி.பி.ஐ. அறிக்கை'

    நினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள்ளை! தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என்.எல்.லைப் பணிக்கிறார். இது எங்கே நடந்தது தில்லியிலா, இல்லையில்லை சென்னையிலேயேதான். இந்த 323 இணைப்புகளும் அமைச்சரின் பெயரில் அல்ல சென்னை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே இணைக்கப்படுகின்றன.

     இவை வெறும் 323 தொலைபேசி இணைப்புகள் அல்ல - இவை ஒரு தொலைபேசி இணைப்பகமே; இந்த இணைப்பகம் அமைச்சர் குடும்பத்து வியாபார நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 3.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பொது வீதியில் "ரகசியமாக' கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து குடும்பத்து வர்த்தக நிறுவனத்துக்கு இணைப்பு தரப்பட்டிருக்கிறது. இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு.

    பொதுச் சொத்துகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த புத்திசாலியான அமைச்சர் யார்? அலைக்கற்றை ஊழலில் சிக்கி பெயரையும் புகழையும் இழந்திருக்கிறாரே அந்த ஆ. ராசாவா? இல்லையில்லை, இன்னமும் மத்திய அமைச்சராகப் பெயருடனும் புகழுடனும் வலம் வருகிறாரே அந்த தயாநிதி மாறன்தான் அவர். ஆ. ராசாவுக்கும் முன்னதாக அந்தத் துறையை வகித்துவந்தார், இப்போது ஜவுளித்துறையில் அமைச்சராக இருக்கிறார்.


    அவருடைய இந்த இணைப்பக ஊழலை விசாரித்த மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) இந்த மோசடிக்காக தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்தியத் தகவல் தொடர்புத்துறை செயலருக்கு 10.9.2007-ல் கடிதம் எழுதியது. இந்தக் கடிதம் ஒரு பெட்டிச் செய்தியாகவும் சி.பி.ஐ. அறிக்கையின் சாரம் தனிச் செய்தியாகவும் தரப்பட்டுள்ளது. படியுங்கள், படியுங்கள் படித்துக்கொண்டே இருங்கள்.


    323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் பொழுதுபோக்குக்காக வைத்துக் கொள்ளவில்லை. சென்னையில் தான் வசித்த போட்கிளப் சாலை வீட்டிலிருந்து அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகம் வரையிலும் தன்னுடைய குடும்ப நிறுவனத்தின் பயன்பாட்டுக்காகத் தனிப்பட்ட முறையில் தொலைபேசி இணைப்புக் கேபிள்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய வீட்டுடனான 323 தொலைபேசி இணைப்புகளையும் மோசடியாக தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.


    இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.

     இவை சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்ல; விலைமதிப்புள்ள ஐ.எஸ்.டி.என். இணைப்புகளைக் கொண்டவை. செயற்கைக் கோள்களைவிட அதிக விரைவாக உலகின் எந்தப்பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் செய்திகளையும் படங்களையும் விடியோ காட்சிகளையும் நொடிக்கணக்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் அதிநவீன தகவல் தொடர்பு இணைப்புகளாகும்.
     டிஜிடல் வழியிலான தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் விடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெகு திறமையாகச் செயல்பட பெரும் பங்காற்றியவை.

    இதை சன் குழுமம் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு அமர்த்தியிருந்தால் கோடிக்கணக்கான ரூபாய்கள் இதற்காகச் செலவிட வேண்டியிருந்திருக்கும். ஆனால் அமைச்சரின் அபாரமான உத்தியால் இவை அனைத்தும் நயா பைசா செலவில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே குடும்ப வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.

     இது அமைச்சரின் சொந்த உபயோகத்துக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட இணைப்பகம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒரு சில ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதவண்ணம் மிகமிக ரகசியமாக இது வைக்கப்பட்டிருந்தது என்று இந்த விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.

    மேலோட்டமாகப் பார்க்கும்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அமைச்சர் தன்னுடைய வீட்டில் பயன்படுத்தியதைப்போலத் தோற்றம் அளிக்கும். ஆனால் இந்த இணைப்புகள் அனைத்தும் நீட்டிக்கப்பட்ட கேபிள்கள் வழியாக அமைச்சருடைய குடும்ப நிறுவனத்தின் வர்த்தக நோக்கத்துக்குப் பயன்பட்டன என்று சி.பி.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது.

     கூகுள் மேப் சேவை மூலம் இந்தத் தொலைவைக் கணக்கிட்டபோது அது மொத்தம் 3.4 கிலோ மீட்டர் என்று காட்டுகிறது. நகரின் மையப் பகுதியில் பெரிய சாலைகள் வழியாக இந்த கேபிள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதை ரகசியமான மோசடி என்று சொல்ல முடியாது, பகிரங்கமாக நடத்தப்பட்ட ரகசிய மோசடி என்றே கருத வேண்டும்.


     இதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு? மலைக்கவைக்கும் இந்தக் கணக்கையும் சி.பி.ஐ.யே ஒரு மாதிரிக்கு போட்டுக் காட்டியிருக்கிறது. 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக எத்தனை லட்சம் - இல்லையில்லை - கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.


    2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ. இதையே சி.பி.ஐ. மதிப்பிடாமல் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணக்கிட்டால் இன்னமும் துல்லியமாக - ரூ.440 கோடியைவிட - அதிகமாக இருக்கக்கூடும். கதை இத்தோடு முடியவில்லை. இந்த இணைப்புகள் சன் டி.வி. குழுமத்தோடு நிற்கவில்லை; அதன் சகோதர நிறுவனமான தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகப் பதிப்புக்கும் பயன்பட்டிருக்கிறது, அந்த தொலைபேசி இணைப்புகள் குறித்து துல்லியமான விவரங்கள் கிடைக்காவிட்டாலும் பயன்பாடு குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன என்கிறது சி.பி.ஐ. அறிக்கை.
    10 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் தயாநிதிமாறன் நோட்டீஸ்:

    தன்னைப் பற்றி அவதூறாக கட்டுரை வெளியிட்ட நாளிதழ்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  


    தயாநிதி மாறன் சார்பாக வக்கீல் ரவீந்திரன் அனுப்பியுள்ள நோட்டீசில் 
     ’’  தயாநிதி மாறனால் இழப்பு ரூ.440 கோடி?’ என்ற தலைப்பில்  ஜூன் 2ம் தேதி ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளீர்கள்.
    இதற்கு என் கட்சிக்காரர் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க பொய்யானது. அடிப்படை ஆதாரமற்றது.  எனது கட்சிக்காரரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் ஒரே நோக்கத்துடன் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையை எழுதியுள்ள எஸ்.குருமூர்த்தி, எனது கட்சிக்காரருக்கு விரோதமாக உள்நோக்கத்துடன் செயல்படும் நபர்களில் முக்கியமானவர் ஆவார்.




    இந்த இணைப்பகத்தை சன் டிவி தனது ஒளிபரப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த இணைப்பகம் தினகரன் நாளிதழ் அலுவலகத்துடனும் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, ஆதாரமற்றவை, உள்நோக்கம் கொண்டவை. எனது கட்சிகாரரின் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கற்பனையாக புனையப்பட்டவை.  
    இந்தக் கட்டுரையில் எனது கட்சிக்காரர் அவரது வீட்டில் 323 இணைப்புகள் கொண்ட பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பகத்தை ஏற்படுத்தி அவரது இல்லத்திலிருந்து ரகசிய கேபிள் வழியாக சன் நெட்வொர்க்  அலுவலகத்துக்கு இணைப்பு கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 



    இதேபோன்ற கட்டுரை கடந்த 2009ம் ஆண்டு தினமணி பத்திரிகையில் வெளியானது. அப்போது எனது கட்சிக்காரர் (தயாநிதி மாறன்) கோரிக்கையை ஏற்று, மத்திய அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் இருந்தபோது போட்கிளப் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு ஒரேயொரு இணைப்புதான் கொடுக்கப்பட்டது என பிஎஸ்என்எல் விளக்கம் அளித்தது.

    இணைப்பு கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து 2009 மார்ச் வரை 4 லட்சத்து 50 ஆயிரம் அழைப்புகளை பயன்படுத்திக் கொள்ள அமைச்சருக்கு தகுதி இருந்தும், எனது கட்சிக்காரர் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 698 அழைப்புகளைத்தான் பயன்படுத்தினார் என பிஎஸ்என்எல் தெளிவுபடுத்தியுள்ளது. 
    இந்த இணைப்புக்கான பில்லிங் தகவல்கள் மாதந்தோறும் நாடாளுமன்ற தொடர்பு அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி பொது மேலாளர் வி.மீனலோசினி கடந்த 6-5-2009 அன்று எழுதிய கடிதத்தின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை மேற்படி கடிதம் தெளிவாக நிரூபிக்கிறது.




     இந்த தொலைபேசி இணைப்பு குறித்து தவறான செய்தி வெளியிட்டதற்காக கடந்த 25-4-2009 அன்று தினமணி பத்திரிகைக்கு எனது கட்சிக்காரர் சார்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதேபோன்ற குற்றச்சாட்டை தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கடந்த 2009ம் ஆண்டு அமைந்தகரை பொதுக்கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டு இருந்தார். இதற்காக அவர் மீது சென்னை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

    இதை எதிர்த்து ஜெயலலிதா ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.  அவதூறான செய்தி வெளியிட்டதற்காக தொடரப்பட்ட வழக்கிலும், அதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கிலும் தீர்ப்பு வரும் வரை காத்திராமல் மீண்டும் அதே பொய்யான தகவல்களை கட்டுரையாக வெளியிடுவது நீதித்துறையின் செயல்பாடுகளில் குறுக்கீடு செய்வதுடன் மலிவான விளம்பரத்துக்காகவும் எனது கட்சிக்காரரின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதற்காகவும்தான் என்று தெரிகிறது.

    இந்தக் குற்றச்சாட்டுகளை எனது கட்சிக்காரர் திட்டவட்டமாக மறுக்கிறார்.  எனது கட்சிக்காரரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் ஒரே நோக்கத்துடன் தவறான தகவல்களை கட்டுரையில் வெளியிட்டிருக்கிறீர்கள். தவறான கட்டுரை வெளியிட்டதற்கு ஆசிரியர், அச்சிடுபவர், வெளியீட்டாளர் மற்றும் கட்டுரையாளர் அனைவரும் சமமான பொறுப்பாவீர்கள்.

    இந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். கட்டுரைக்கு அளித்த அதே முக்கியத்துவத்துடன் அந்த மன்னிப்பை உங்கள் பத்திரிகையில் பிரதானமாக வெளியிட வேண்டும். மேலும் நஷ்டஈடாக ரூ. 10 கோடி தரவேண்டும். தவறினால் உங்கள் அனைவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றுகூறப்பட்டுள்ளது.

     

    இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவை கூண்டில் ஏற்றக் கூடாதா?வைகோ!

    Vaiko speaks about Tamil developments at Brussels 
    conference: A conference has been organized at Brussels, the city of Belgium to find settlements to the Sri Lankan Tamil issues  and  Vaiko will deliver a speech about  the ways finding a settlement to the issues of Tamils.

    Marumalarchi Diravida Munnetra Kalagam General Secretary will submit some proposals about  the Tamil peoples living conditions and settlements because two years have been concluded after the end of final war in Sri Lanka.
    The Nortik Green Left and Europe United Left movements which belong to European parliament had made arrangements for this conference. World Tamil movement Chairman S.J.Emmanuel will host the conference.

    சூடான் அதிபர் அல் பசீரை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி தண்டனையும் விதித்தார்களே? நூரெம்பெர்க் நீதிமன்றத்தில் நாஜித் தளபதிகளைத் தண்டித்தார்களே? செர்பியாவில் 8000 பேரை படுகொலை செய்தான் என்று போஸ்னியாவின் தளபதி ராட்கோ மிலாடிக்கைக் கைது செய்து விட்டார்களே?. அதே வரிசையில் இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவை கூண்டில் ஏற்றக் கூடாதா என்று பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய கருத்தரங்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

    ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், குறிப்பாக இடதுசாரி பசுமைக் கட்சிகளும், தமிழ் ஈழ மக்களவைகளின் அனைத்து உலகச் செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த ஈழத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சனை குறித்த கருத்தரங்கம், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைக் குழு கூடும் அரங்கில் நேற்று நடந்தது.

    பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை நடந்த இந்தக் கருத்தரங்கில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல நாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பால் மர்பி தொடக்க உரை ஆற்றினார்.

    இடதுசாரி பசுமை இயக்கத்தின் முக்கிய நிர்வாகியான டாஞ்சா நீமர் தலைமை தாங்கினார்.

    இந்த அமர்வில் ஒவ்வொருவரும் பேச தலா 5 நிமிடங்கள், அதிகபட்சமாக 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. வைகோவுக்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. மாலை 5.30 மணிக்குத் தன் உரையைத் தொடங்கிய வைகோ 18 நிமிடங்கள் உணர்ச்சி ததும்ப உரையாற்றினார்.

    வைகோ உரை விவரம்:

    ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுடன் தொப்புள் கொடி உறவு கொண்ட, 7 கோடித் தமிழ் மக்கள் வாழுகின்ற, இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்தில் இருந்து நான் வந்திருக்கின்றேன்.

    என் உரையைத் தொடங்குவதற்கு முன்பு, ஈவு இரக்கம் இன்றிச் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த தமிழ் மக்களுக்கும், குறிப்பாக, வயது முதிர்ந்தோர், தாய்மார்கள், குழந்தைகளுக்கும், ஆயுதம் ஏந்திப் போராடி இரத்தம் சிந்தியும், மகத்தான உயிர்த்தியாகம் செய்தும் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் என் வீர வணக்கத்தை, அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

    எங்கள் ஈழத் தமிழ் மக்களின் விம்மலும், அழுகைக்குரலும், மனித குலத்தின் மனசாட்சியை, அனைத்து உலக நாடுகளின் இதயக் கதவுகளை, நிச்சயமாகத் திறக்கச் செய்யும் என்ற நம்பிக்கையோடு நான் பேசுகிறேன். பனிக் காலம் வந்தால், வசந்த காலம் வராமலா போகும்?.

    ஐரோப்பாவில் வசந்த காலத்தை இப்போது அனுபவித்தீர்கள். அதுபோல, ஈழத்தமிழ் மக்களுக்கும் வசந்தம் விடியட்டும். அதற்கு, உலகின் ஜனநாயக நாடுகள், பாதை அமைக்கட்டும். பிரஸ்ஸல்சில் நடக்கும் இந்தக் கூட்டம் அதற்கு வழி காட்டட்டும்.

    ஈழத் தமிழரின் கண்ணீரை, அனைத்து உலக நாடுகள், பல ஆண்டுகள் கண்டு கொள்ளவில்லை. அவர்களின் மரண ஓலம் உலக நாடுகளின் செவிகளில் ஏறவில்லை. ஐ.நா. மன்றம் தன் கடமையை ஆற்றவில்லை. இருப்பினும், ஈழத் தமிழர்களுடைய கொடுந்துயரத்தை உணர்ந்து, ஐரோப்பிய நாடாளுமன்றம், 2009 மார்ச் 12ம் நாள், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக, தரணி வாழ் தமிழர்களின் சார்பில், என் இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    மார்சுகி தாருஸ்மன் தலைமையில் அமைக்கப்பட்ட ஐ.நாவின் மூவர் குழு, வெளியிட்டு உள்ள அறிக்கையில், சில பக்கங்களை வாசிக்கவே மனம் நடுங்கியது. இதோ, இதயத்தை ரணமாக்கும் அந்தப் பகுதிகளை இங்கே நான் வாசிக்கின்றேன்.

    மருத்துவமனைகள் மீது குண்டு வீசப்பட்டது. படுகாயமுற்றவர்களுக்கு மருந்து இல்லை. அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய நிலையில், அதற்கான மயக்க மருந்துகள் இல்லை. கசாப்புக் கடைகளில் பயன்படுத்தப்படும் பட்டாக் கத்திகளைக் கொண்டு, உறுப்புகளை வெட்டினார்கள். குழந்தைகளுக்குப் பால் பவுடர் வாங்க வரிசையில் நின்ற தாய்மார்கள் குண்டுவீச்சில் கொல்லப்பட்டுச் செத்துக் கிடந்தபோது, அவர்கள் கைகளில் பால் பவுடர் அட்டைகள் இருந்தன.

    தமிழர்களின் பிணங்கள் ஆங்காங்கு சாலை ஓரங்களில் சிதறிக் கிடந்தன. பக்கத்திலேயே படுகாயமுற்றவர்கள் மரண வேதனையில் துடிதுடித்தபோது, எந்த உதவியும் கிடைக்கவில்லை. தமிழர் பிணங்களின், அழுகிப் போன உடல்களின் நாற்றம், காற்று மண்டலத்தை நிறைத்தது. தமிழ்ப்பெண்கள் தனியாக இழுத்துச் செல்லப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டனர். கற்பழித்துக் கொல்லப்பட்டனர்.

    விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனையும், அமைதிச் செயலகத்தின் தலைவர் புலித்தேவனையும், ஆயுதங்களை மெளனித்து விட்டோம் என்று அறிவித்து விட்ட நிலையில், அவர்கள் தங்களை ஒப்படைத்துக் கொள்ளலாம் என்று சிங்கள அரசு அறிவித்து விட்டு, ஐ.நா. அதிகாரிகளுக்கும், நார்வே, பிரிட்டன், அமெரிக்க அரசுகளுக்கும் தெரிவித்துவிட்டு, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வெள்ளைக் கொடி பிடித்து வந்தபோது, சுட்டுப் படுகொலை செய்தது கொடுமையிலும் கொடுமை அல்லவா?.

    அனைத்து உலக நாடுகளின் மனசாட்சி செத்துப் போய் இருந்ததா?. ஐ.நா. மன்றம் தன் கடமையைச் செய்யவில்லை என்று மூவர் குழு சொல்லிவிட்டது.

    ஈழத் தமிழரின் தேசியப் பிரச்சனையின் அடிப்படை என்ன, வரலாறு என்ன என்பதை, இந்த அமர்வு ஆய்வு செய்கிறது. ஈழத் தமிழர்கள்தான், இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளின் பூர்வீகக் குடிமக்கள். வரலாற்றின் வைகறைக் காலத்தில் இருந்து, சுதந்திர அரசு அமைத்து, தனித்துவமான நாகரிகத்தோடு வாழ்ந்தனர். அவர்கள்தான் பூர்வீகக் குடிமக்கள் என்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய தன் கடைசி உரையில் குறிப்பிட்டார்.

    போர்த்துகீசியர் படை எடுத்தனர். 1619ல் தமிழர்கள் தங்கள் அரசை இழந்தனர். 1638ல் டச்சுக்காரர்கள் தமிழ் ஈழத்தைக் கைப்பற்றினர். பின்னர், பின்னர் 1796ல் பிரிட்டன் படைகள் வந்தன. நிர்வாக வசதிக்காக, தமிழர்களையும், சிங்களவர்களையும் தங்கள் காலனி ஆட்சியின் கீழ் ஒன்றாக்கினர்.

    1948 பிப்ரவரி 4ல் இங்கிலாந்து ஆட்சியாளர்கள் இலங்கைக்கு சுதந்திரம் தந்தபோது, அதிகாரத்தை சிங்களவர்களிடம் ஒப்படைத்தனர். இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆனால், ஈழத் தமிழர்கள் அடிமைகள் ஆனார்கள். பத்து இலட்சம் இந்தியத் தமிழர்களின் குடி உரிமை பறிக்கப்பட்டது.

    1956ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என அறிவிக்கப்பட்டது. புத்த மதமே அரச மதம் ஆயிற்று. தமிழர்கள் தந்தை செல்வா தலைமையில் அமைதி வழியில், அறவழியில், காந்திய வழியில் உரிமைக்குப் போராடினர். காவல்துறையையும், இராணுவத்தையும் கொண்டு, சிங்கள அரசு அடக்குமுறையை ஏவியது. தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

    1957ல் பண்டாரநாயகா- செல்வநாயகம் ஒப்பந்தமும், 1965ல் சேனநாயகா- செல்வநாயகம் ஒப்பந்தமும், சிங்கள அரசால் கிழித்துக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டன. தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் தகர்க்கப்பட்டன. சிங்களர் குடியேற்றத்தைத் தமிழர் தாயகத்தில் அரசே நடத்தியது.

    கற்பழிப்பு, கொலை, கொள்ளை, தமிழர்கள் மீது ஈவு இரக்கம் அற்ற தாக்குதல்கள் அன்றாட நிகழ்வுகள் ஆயின. தமிழர் அமைப்புகள் அனைத்தும் கூடி, தந்தை செல்வா தலைமையில், 1976 மே 14ம் நாள் வட்டுக்கோட்டையில் கூடி, சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்தை நிர்மாணிப்பது என்று பிரகடனம் செய்தன.

    1977 பொதுத் தேர்தலில், தமிழ் மக்கள் சுதந்திரத் தமிழ் ஈழத்தை ஆதரித்து வாக்கு அளித்ததால், அதுவே ஒரு பொது வாக்கெடுப்பு ஆயிற்று. ஆனால், இதன்பிறகு, சிங்கள அரசு, தமிழர்களைக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியது.

    யாழ் நூலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தியது. 1983ல் வெலிக்கடைச் சிறையில், தமிழர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்தது. தமிழர்கள் தாயகம் என்பதையும், சுய நிர்ணய உரிமையையும், சிங்கள அரசு ஏற்காது என்று திம்பு பேச்சுவார்த்தையில் கூறியது.

    இந்தப் பின்னணியில், உலகின் பல தேசிய இனங்கள் கடைப்பிடித்த போர்முறையான ஆயுதப் போராட்டத்தை, பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் முன்னெடுத்தனர். போர்க்களத்தில் வெற்றிகளைக் குவித்தனர். யுத்தகள அதிசயமாக யானை இறவைக் கைப்பற்றினர். தங்கள் பலத்தை நிருபித்த நிலையில், விடுதலைப் புலிகள்தான் போர் நிறுத்தத்தைத் தாங்களாக அறிவித்தனர்.

    2001 டிசம்பர் 24ம் நாள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள், 30 நாள்களுக்கான போர் நிறுத்தத்தையும், அதன் பின்னர் மேலும் 30 நாள்களுக்கான போர் நிறுத்தத்தையும், விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தனர்.

    ஐரோப்பிய நாடுகளின் தலையீட்டால், வேறு வழி இன்றி, சிங்கள அரசும் போர் நிறுத்தத்தை அறிவித்தது. பின்னாளில் 2008 ஜனவரியில், போர்நிறுத்தத்தைச் சிங்கள அரசு முறித்தது. சிங்கள அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில், முதலாம் கட்ட, இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தாய்லாந்திலும், மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நோர்வேயிலும் நடந்தன.

    இந்த முயற்சிகளை இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்க பாழாக்கினார். 2005ல் மகிந்த ராஜபக்சே அதிபர் ஆனார். ஈழத்தமிழர் படுகொலை தீவிரம் ஆயிற்று. ஆழிப்பேரலை நிவாரண முகாமில், 2006 ஆகஸ்ட் 8ம் நாள், 17 தமிழ் இளைஞர்கள் சிங்களரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆறு நாள்கள் கழித்து, செஞ்சோலையில், தாய் தந்தையரை இழந்த குழந்தைகள் காப்பகத்தில், சிங்கள விமானக் குண்டுவீச்சில், 61 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

    வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் இலங்கைக்குள் செல்ல முடியவில்லை. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் பட்டப்பகலில் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    ஏழு வல்லரசுகளின் ராணுவ உதவியோடு, சிங்கள அரசு, கொடூரமாக தமிழ் மக்களைக் கொன்று குவித்தது. எங்கும் தமிழர் பிணங்கள். தமிழ்நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக்குளித்து மடிந்தனர். ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் போரை நிறுத்தச் சொல்லியும், இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை.

    2009ல் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டபோது, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, ஜெர்மனி கொண்டு வந்த தீர்மானத்தை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரித்தன.

    இலங்கை அரசைப் பாராட்டி, போர் நிலைமையை வெற்றிகரமாகச் சமாளித்ததாக வாழ்த்தி, இலங்கைக்குப் பொருளாதார உதவி செய்ய வேண்டும் எனக்கோரி சிங்கள அரசு தயார் செய்த தீர்மானத்தை, கியூபா, பொலிவியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, உள்ளிட்ட 29 நாடுகள் ஆதரித்தன.

    மனித உரிமைக் கவுன்சிலில் 2009 மே 27ல் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றின. 12 நாடுகள் அந்த அக்கிரமமான தீர்மானத்தை எதிர்த்தன. அவ்வாறு, இலங்கைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என தற்போது ஐ.நா. மூவர் குழு பரிந்துரைத்து விட்டது.

    2010 ஜனவரியில் டப்ளின் தீர்ப்பு ஆயம் சிங்கள அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டுமென்று அறிவித்தது.

    இந்த அரங்கில் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன். சூடான் அதிபர் அல் பசீரை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி தண்டனையும் விதித்தார்களே? நூரெம்பெர்க் நீதிமன்றத்தில் நாஜித் தளபதிகளைத் தண்டித்தார்களே? இதோ, கடந்த வாரத்தில், செர்பிய முஸ்லிம்கள் 8000 பேரை, 95 இல் படுகொலை செய்தான் என்று, போஸ்னியாவின் தளபதி ராட்கோ மிலாடிக்கைக் கைது செய்து விட்டார்களே? ஏன், ராஜபக்சேயைக் கூண்டில் ஏற்றக் கூடாது?.

    அவன் சகோதரர்களையும், கொலைகாரக் கூட்டாளிகளையும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். அதற்கு, ஐ.நா. மன்றம் ஏற்பாடு செய்ய வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம், அந்த முயற்சியில் ஈடுபட வேண்டும்.

    இங்கே, பால் மர்பி அவர்கள் பேசும்போது, வட அயர்லாந்தில் குண்டுகளை வீசினார்கள், ஆயுதங்களால் தாக்கினார்கள், ஆயினும் வெற்றி பெற முடியவில்லை என்று குறிப்பிட்டார்.

    அயர்லாந்து விடுதலைப் போராட்ட வரலாற்றை என் கல்லூரி நாள்களில் படித்து உணர்வு பெற்றவன் நான். வட அயர்லாந்திலே நடைபெற்ற ஐரிஷ் விடுதலை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அடிப்படையில் வேற்றுமைகள் உண்டு. இரண்டையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது. அங்கே இங்கிலாந்து அரசு, இனக்கொலை செய்யவில்லை. ஆனால், சிங்கள அரசு தமிழ் இனக்கொலை நடத்தியது.

    பிரபாகரன் அவர்கள் முப்படைகளை உருவாக்கினார். ஏழு வல்லரசுகளை எதிர்த்து, யுத்தக் களத்தில் நின்றார். ஈழத்தில் புலிகளின் ஆயுதப் போராட்டம் வரவலாற்றுக் கட்டாயமாயிற்று.

    இந்த அரங்கத்தில் உள்ள என் நண்பர்களுக்குச் சொல்கிறேன். ஒரேயொரு கேள்வி. யாராவது ஒரு சிங்களப் பெண்ணை, விடுதலைப் புலிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக, கொடியவன் ராஜபக்சே கூட்டம் கூடச் சொன்னதில்லையே?. அப்படி அவர்கள் நடந்து கொண்டதாக யாராவது நிருபித்தால், நான் தமிழ் ஈழத்தை ஆதரித்துப் பேசுவதை விட்டு விடுகிறேன்.

    நடேசனும், புலித்தேவனும் கொல்லப்பட்டது கொடுமை அல்லவா?. இசைப்பிரியா எனும் தமிழ்த் தங்கையை, கொடூரமாகக் கற்பழித்துச் சிங்கள ராணுவத்தினர் கொன்றார்களோ? அத்தங்கையின் நிர்வாண உடலைச் சுற்றி நின்று கும்மாளம் அடித்தார்களே? என்ன பாவம் செய்தார்கள்? எட்டுத் தமிழ் இளைஞர்களை, கண்களைக் கட்டி, கைகளைக் கட்டி அம்மணமாக இழுத்துக் கொண்டு வந்து, காலால் மிதித்துக் கீழே, பிடரியில் சுட்டுக் கொன்றார்களே?.

    சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இந்தக் காணொளி முற்றிலும் உண்மையானது என்றும், இது கொடூரமான போர்க் குற்றங்கள் என்றும், ஐ.நா. மன்றத்தின் உலகில் அநியாயப் படுகொலைகளை விசாரணையை ஆய்வு செய்யும் ஐ.நாவின் அதிகாரியான கிறிஸ்டோபர் ஹெய்ன்ஸ் என்பவர், நேற்றைய தினம் ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கையாகத் தாக்கல் செய்து விட்டார்.

    கிழக்குத் தைமூர் தனி நாடாக வாக்கெடுப்பு நடத்திய ஐ.நா. மன்றம், தெற்கு சூடான் தனி நாடாக வாக்கெடுப்பு நடத்திய ஐ.நா. மன்றம், கொசாவா தனிநாடாக அனுமதித்த ஐ.நா. மன்றம், தமிழ் ஈழம் சுதந்திர தேசமாவதற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டாமா?.

    ஆம். வாக்கெடுப்பு வேண்டும். அனைத்து நாடுகளின் பார்வையாளர்களின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களும், அந்தந்த நாடுகளிலேயே பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    பிரஸ்ஸல்ஸ் மாநாடு அறிவிக்கும் செய்தி, ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை. சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான வெகுஜன வாக்கெடுப்பு என்பதாக இருக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், இலங்கையில் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவமும் காவல்துறையும் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

    சிங்களர் குடியேற்றங்கள் அடியோடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

    வீடு வாசல்களை இழந்து முகாம்களில் வைக்கப்பட்டு உள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து உலகச் செஞ்சிலுவைச் சங்கமும், அனைத்து உலகத் தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.

    சிங்கள ராணுவத்தாலும், போலீசாலும் கைது செய்யப்பட்டு உள்ள தமிழ் இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

    என் உரையை முடிக்கும்போது, என் மனதில், என் உள்ளத்தில் தாக்கமாகி உள்ள ஒரு கவிதையைச் சொல்லுகிறேன்.

    கல்லறைகள் திறந்து கொண்டன
    மடிந்தவர்கள் வருகிறார்கள்
    மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன
    புகழ் மலர்களோடும், உறுவிய வாளோடும் வருகிறார்கள்
    இதயத்தில் ஈழத்தின் விடுதலையை ஏந்தி வருகிறார்கள்
    ஈழ விடுதலை முரசம் ஒலிக்கட்டும்
    ஈழம் உதயமாகட்டும்
    சுதந்திர ஈழக் கொடி பட்டொளி வீசிப் பறக்கட்டும்
    ஆம்; ஐ.நா. சபைக்கு முன் சுதந்திர தேசங்களின் கொடிகளோடு
    எங்கள் தமிழ் ஈழ தேசக் கொடியும் பறக்கட்டும்

    இவ்வாறு வைகோ உரையாற்றினார்.

    ஜெர்மனியின் டுவிஞ்சன் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் ஜான் பீட்டர் நீல்சன், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகள் குழுவின் தலைவர் ஹெய்டி ஹெளடாலா, இலங்கையைச் சேர்ந்த சிங்களத் தொழிற்சங்கத் தலைவர் ஸ்ரீநாத் பெரைரா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் செல்வராஜா, இலங்கை வழக்கறிஞர் சங்கச் செயற்குழு உறுப்பினர் கனகசபை சண்முகரத்தினம்,

    உலகத் தமிழர் அமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர் ஸ்ரீ ரஞ்சன், போர் நடைபெற்றபோது ஈழத்தில் மருத்துவமனையில் செவிலியராக இருந்த தமிழ்வாணி ஞானக்குமார், லண்டனைச் சேர்ந்த இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜனனி ஜனநாயகம் அம்மையார்,

    பிரான்ஸ் தமிழ் ஈழ மக்கள் அவையின் உறுப்பினர் திருசோதி, பிரித்தானியத் தமிழர் பேரவையின் சார்பாக வாகீசன், தமிழர் ஒருங்கமைப்பு இயக்கத்தின் சார்பாக சாரா எல்ரிட்ஜ் அம்மையார் ஆகியோரும் இந்தக் கருத்தரரங்கில் உரையாற்றினர்.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...