|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 July, 2012

பாருக்குள்ளே கொடுமை நாடு!

மாணவியை சிறுநீர் குடிக்க வைத்தது,சாலையில் சென்ற டீன் ஏஜ் பெண் 20 பேர்  கும்பலால் மானப்பங்கப்படுத்தப்பட்டது, பணம் திருடியதாக மாணவியிடம் ஆடை களைந்து  சோதனை என்ற அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான கொடுமைகளின்  உச்சமாக, கர்நாடகாவில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை கணவன் சிறுநீர்  குடிக்க வைத்த சம்பவம்  என கடந்த ஒரு வார காலத்தில்,  அடுத்தடுத்து பெண்களுக்கு எதிராக நடைபெற்றுள்ள கொடுமைகள் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளன. 

சம்பவம் 1:மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சாந்தி நிகேதன் என்ற பள்ளியின்  விடுதியில்,ஒரு மாணவி படுக்கையில் சிறுநீர் கழித்தால் என்பதற்காக, அந்த மாணவி  சிறுநீர் கழித்த போர்வையை எடுத்துவரச் செய்து,பின்னர் அதனை பிழிந்து குடிக்கச்  செய்துள்ளார் அந்த விடுதி வார்டன்.இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி கடும் கண்டனக்குரல்கள் எழுந்தவுடன், படுக்கையில்  சிறுநீர் கழிக்கும் சிறுவர்களுக்கு அளிக்கப்படும் ஒருவித பாரம்பரிய சிகிச்சையாகவே தாம்  அதனை செய்ததாக அந்த விடுதிவார்டன் சால்ஜாப்பு சொன்னார்.
ஆனால்  தமக்கு தண்டனை அளிப்பதற்காகவே அவ்வாறு செய்ததாக அந்த  மாணவி கதற, அந்த வார்டன் தற்போது கம்பி எண்ணுகிறார். 

சம்பவம் 2


இந்த சர்ச்சை ஓய்வதற்குள்,அசாமில் ஒரு டீன் ஏஜ் பெண்ணை  20 பேர் கொண்ட  கும்பல் மானப்பங்கம் செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.சம்பவம்  நிகழ்ந்து மூன்று தினங்கள் கழித்தே, நேற்று இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. 

அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள பார் ஒன்றில், நண்பரின் பிறந்த  நாளையொட்டி,  இரவு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு, வீடு  திரும்பிக்கொண்டிருந்த அப்பெண்ணை,சுமார் 20 க்கும் அதிகமானோர்களை கொண்ட ஒரு  கும்பல் அந்த பெண்ணை முடியை பிடித்து இழுத்தும்,மேலே தூக்கியும், கீழே   போட்டும், அடித்து உதைத்தும்,ஆடைகளை இழுத்து, கிழித்தும்   மானப்பங்கப்படுத்தியுள்ள்னர்.

போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் நடைபெற்ற இச்சம்பவத்தை,உள்ளூர்  தொலைக்காட்சி ஒன்று படம்பிடித்து ஒளிபரப்பாக்கியது.அத்துடன் சமூக  வலைதளங்களான யூ டியூப், ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரிலும் அந்த வீடியோ  வெளியிடப்பட்டது.இதனையடுத்தே,அசாம் அரசு இது குறித்து விசாரணை நடத்தி  குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டது.



இதனையடுத்து காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அக்கும்பலை   சேர்ந்த 4 பேரை மட்டும் இதுவரை கைது செய்துள்ளனர்.மேலும் 11 பேர் அடையாளம்   காணப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த பிரச்னை சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த பெரும் விவாதத்தை  கிளப்பிய நிலையில்,தேசிய மகளிர் ஆணையம்,மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்  மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் சம்பந்தப்பட்ட  குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தினர்.இவ்வாறு நெருக்கடிகள் அதிகரித்ததை தொடர்ந்து குற்றவாளிகளை இன்னும் 48 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு இன்று கெடு விதித்துள்ளார் அசாம் முதல்வர் தருண் கோகை! 

சம்பவம் 3 : 

நேற்றைய அசாம் சம்பவ அதிர்ச்சி மற்றும் மேற்கு வங்கத்தில் மாணவியை ஏற்கனவே  சிறுநீர் குடிக்கவைத்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி விலகுவதற்குள், அதே மாநிலத்தில்  மாணவியிடம் ஆடையை களைந்து சோதனை செய்யப்பட்டதாக இன்று செய்தி வெளியாகி, மேலும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் பாரக்னாஸ் மாவட்டத்தில் இயங்கி வரும் கோபால் நகர் பாலிகா   வித்யாலாயா பள்ளியிலேயே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.இப்பள்ளியின் 8 ஆம் வகுப்பில் பணம் காணாமல் போனது. இதையடுத்து குறிப்பிட்ட   அந்த மாணவி மீது சந்தேகம் அடைந்த ஆசிரியை ரூபாலி,மற்ற மாணவர்கள் முன்பு அந்த  மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்தார்.இதனால் அந்த மாணவி மிகுந்த வேதனையடைந்து அவமானம்   அடைந்தார்.அழுதுகொண்டே வீடு திரும்பிய அந்த மாணவி, இது குறித்து தமது   பெற்றோரிடம் கூறினார்.அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து போலீசில் புகார்   அளித்தனர்.இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி   வருகின்றனர்.

சம்பவம் 4  மேற்கூறிய சம்பவத்திற்கெல்லாம் உச்சமாக, கர்நாடக மாநிலத்தில் கர்நாடகாவில்  கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சிறுநீர் குடிக்கவைத்து கணவன்  கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம்,  மகளிர் அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை  ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு அருகே உள்ள தவான்கரே என்ற இடத்தை சேர்ந்த சப்னா என்ற 27 வயது  பெண்ணுக்குத்தான் இந்த கொடுமை நடந்துள்ளது. இவரது கணவர் ஆகாஷ் ராஜ் ஒரு பல் மருத்துவர்.கடந்த 2011 ஆம் ஆண்டு இவர்கள்  இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது ஆகாஷ் ராஜுக்கு, ஒரு கிலோ தங்கம்,ஐந்து கிலோ வெள்ளி  சாமான்களை வரதட்சணையாக கொடுத்துள்ளார் சப்னாவின் தந்தை.


ஆனால் திருமணம் ஆனதிலிருந்தே,”வரதட்சணை போதாது;மேலும் 25 லட்சம்  ரூபாயை உனது தந்தையிடமிருந்து வாங்கி வா..!” என்று கூறி சப்னாவை அடித்து  துன்புறுத்தி வந்துள்ளார் ஆகாஷ் ராஜ்.இதற்கு ஆகாஷ் குடும்பத்தினரும் உடந்தையாக  இருந்துள்ளனர். இந்த அராஜகத்தின் உச்சமாகத்தான் சப்னாவை தனது சிறுநீரை குடிக்கவைத்து  கொடுமைப்படுத்தியுள்ளார் ஆகாஷ் ராஜ்.பொறுத்து பொறுத்து பார்த்த சப்னா,கணவன் வீட்டைவிட்டு வெளியேறி தனது சகோதரன்  வீட்டிற்கு வந்துவிட்டார்.அவர்களிடம் நடந்த சம்பவங்களை கூறி அவர் அழுதார். இதனையடுத்து தற்போது ஆகாஷ் ராஜுக்கு எதிராக காவல்துறையில் புகார்  அளிக்கப்பட்டுள்ளது.காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அடுத்தடுத்து நடந்துள்ள இந்த கொடுமைகளை பார்த்தால்,”பாருக்குள்ளே கொடுமை  நாடு... இந்த பாரத நாடு!”  என்று பெண்கள் பாடும் நிலைமை ஏற்பட்டுவிடும்போல!

பிரபாகரனின் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும்' பழ.நெடுமாறன்.

பழ.நெடுமாறன் எழுதிய 'பிரபாகரன் தமிழர் எழுச்சி வடிவம்' நூலின் அறிமுக விழா சிதம்பரத்தில் நேற்று நடைபெற்றது.இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய பழ.நெடுமாறன்,"உலகத்தில் எத்தனையோ விடுதலைப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.ஆனால் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் விடுதலைப் போராட்டத்தை ஒப்பிட முடியாது.ஏனெனில் பிரபாகரன் போராட்டத்துக்கு எந்த ஒரு நாடும் உதவி செய்யவில்லை.மாறாக 20 நாடுகள் அணி திரண்டு அவரை ஒழிக்க முயற்சித்தன.


உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் நிதி திரட்டி ஆயுதங்களைப் பெற்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் போரை நடத்தியவர் பிரபாகரன்.இன்று போரில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம்.மீண்டும் பிரபாகரன் தலைமையில் 5-ம் கட்ட விடுதலைப் போர் நிச்சயம் தொடரும். பிரபாகரனின் வீரம் செறிந்த வரலாறு கொண்ட இந்நூல்,தமிழக இளைஞர்களுக்கு அளித்த ஆயுதமாகும்.இந்நூலைப் படிக்கும் இளைஞர்கள் பிரபாகரனின் அடுத்த கட்ட போராட்டத்துக்கு துணை நிற்க வேண்டும்,தோள் கொடுக்க வேண்டும்.
இலங்கை தமிழர் படுகொலையில் ராஜபக்ச மட்டும் குற்றவாளி அல்ல. மன்மோகன்சிங்கும் குற்றவாளி,அதற்கு துணையாக நின்ற கருணாநிதியும் குற்றவாளிதான்" என்றார்.

ஆதி மனிதனின் முழுமையான முதல் எலும்புக் கூடு!



ஆதி மனிதன் ஒருவனின் முழுமையான எலும்புக்கூடு ஒன்று முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடு இது என்றும் தெரிய வந்துள்ளது.ஆதி மனிதன் ஒருவனின் எலும்புக் கூட முழுமையாக நமக்குக் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆதி மனிதர்களின் உடல் கூறு குறித்த புதிய பரிமாணத் தகவல்கள் நமக்குக் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.
தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள்தான் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இது கண்டுபிடிக்கப்பட்டதே பெரும் சுவாரஸ்யமானதாகும். தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரின் வடக்கே ஒரு பாறைப் பகுதியில் 2008ம் ஆண்டு இந்த எலும்புக்கூட கண்டுபிடிக்கப்பட்டது. இதை முழுமையாக ஆராய்ச்சி செய்வதற்காக ஆய்வகத்திற்குக் கொண்டு சென்றனர்.அந்தப் பாறைப் பகுதி ஆய்வகத்திலேயே இருந்து வந்தது. அதில் என்ன இருக்கிறது என்பது கூட சரியாக அனுமாணிக்க முடியவில்லை. இந்தநிலையில் அந்தப் பாறையில் ஒரு பல் ஒட்டிக் கொண்டிருப்பதை ஆய்வக உதவியாளரான ஜஸ்டின் முகாங்கா பார்த்தார். இதை விஞ்ஞானிகளிடம் அவர் சொன்னார்.
இதையடுத்து அந்த பாறையை தீவிரமாக ஆராய்ந்தனர். அப்போதுதான் அந்தப் பாறையில் ஒரு மனிதனின் எலும்புக் கூட பாசில் வடில் ஒட்டிய நிலையில் புதைந்திருந்தது தெரிய வந்தது.இந்த மனிதனுக்கு நீண்ட கால்கள், கைகள் உள்ளன. மூளை சிறிதாக உள்ளது. முதல் வரிசை மனித இனத்தைச் சேர்ந்தவனாக இந்த ஆதி மனிதன் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.எனவே இந்த மனிதன் குறித்த ஆய்வு பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த எலும்புக் கூட்டுக்கு கரபோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மனின் இறந்தபோது அவனுக்கு 9 முதல் 13 வயதுக்குள் இருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த எலும்புக் கூட கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை உலக பாரம்பரிய பகுதியாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. மனித குலத்தின் தொட்டில் என்றும் இப்பகுதி விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது. காரணம், இங்கு பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துவண்ணம் உள்ளன. மனிதனின் தோற்றம் குறித் பல முக்கியத் தகவல்களும் இந்தப் பகுதியில் ஏற்கனவே கிடைத்துள்ளன.தற்போது ஒரு முழுமையான ஆதி மனிதனின் எலும்புக் கூட கிடைத்திருப்பதால் இப்பகுதியில் மேலும் தீவிர சோதனைகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் உணர்வு பெரியார் தி.கா.மட்டும்தானா?



சென்னை தாம்பரத்தில் இலங்கை விமானப் படையினருக்கு பயிற்சி தந்த விவகாரத்தின் சூடு தணிவதற்குள்ளாகவே 4 இலங்கை ராணுவ அதிகாரிகள் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்துக்கு வந்துள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது,இலங்கை, வங்கதேசம், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 40 அதிகாரிகள் பயிற்சிக்காக தமிழ்நாட்டின் குன்னூர் வெலிங்டன் பயிற்சி முகாமுக்கு வந்துள்ளனர்.
ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள இனவெறி ராணுவத்துக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி தரக்கூடாது என்பது ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் கோரிக்கையாக இருந்து வருகிறது. அண்மையில் தாம்பரத்தில் பயிற்சி பெற்ற சிங்கள அதிகாரிகள், தமிழகத்தின் எதிர்ப்பால் வெளியேற்றப்பட்டிருந்தனர்.இந்நிலையில் குன்னூரில் மீண்டும் பயிற்சிக்காக மத்திய அரசு அனுமதித்திருக்கிறது. சிங்கள படையினரை குன்னூரில் இருந்து வெளியேற்றாவிட்டால் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று பெரியார் தி.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய அமைப்புகள் எச்சரிக்கைவிடுத்துள்ளன.

விடுதலைப் புலிகள் பெரும் அச்சுறுத்தல்-மத்திய அரசு.

*கட்டுக்கட்டாய் கருப்புப்பணம் அச்சுறுத்தல் இல்லையா?

*காமென்வெல்த் ஊழல் அச்சுறுத்தல் இல்லையா?

*தேர்தலில் ஜெயிக்காமல் வெற்றி அடைந்ததாய் அறிவித்த ஜனநாயக படுகொலை அச்சுறுத்தல் இல்லையா?

*ஒரு இத்தாலிய பெண் இந்தியாவின் அரசியலை தீர்மானிப்பது அச்சுறுத்தல் இல்லையா?

*நீரா ராடியா இந்தியாவின் அமைச்சர்களை தீர்மானிப்பது அச்சுறுத்தல் இல்லையா?

போங்கடா உங்க நாட்டுப்பற்றுல தீயை வைக்க...

-இறையாண்மையுடன் இந்தியத் தமிழன்.

ஏமாற்றாதே ஏமாறாதே...!



திரையரங்குகளில் வெளியாகியுள்ள பில்லா 2 திரைப்படம் லாஜிக்கலி தோல்வியடைந்தாலும், நேற்று நண்பர்களோடு டெக்னிக்கலாக போட்டுப்பார்த்த ஒரு கணக்குப்படி முதல் மூன்று நாளிலேயே 69 கோடி ரூபாயை வசூல் செய்யும் என தெரிகிறது! குப்பை படங்களை போதிய மார்க்கெட்டிங் மூலமாக ஹைப் ஏற்றி, மக்களை முட்டாளாக்கி முதல் மூன்று நாளிலேயே பல கோடிகளில் லாபம் ஈட்ட முடியுமெனில் எப்படி நல்ல படங்கள் எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் நம் இயக்குனர்களிடமும் திரைத்துறையினரிடமும் உருவாகும்! இப்படியே போச்சினா இயக்குனர்களும் ஹீரோக்களும் கதை திரைக்கதைக்காக யோசிக்காமல் எப்படி அக்ரஸீவாக மார்க்கெட் பண்ணி முதல் மூன்றுநாளில் வசூலை அள்ளலாம் என்பதை பற்றி சிந்திக்கத்தொடங்கலாம். 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...