|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 May, 2012

இந்த வார பலன்18-5-2012 முதல் 24-5-2012 வரை



மேஷம் பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு அதிகரிக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். உடன் பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். சமையல் அறையில் வேலை செய்யும்போது கவனமாக இருக்கவும்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். யாரிடமும் உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டாம்.

ரிஷபம் பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். நட்பு வட்டாரம் விரிவடையும்.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். உறவினர்களிடம் மனம் திறந்து பேசாமல் இருப்பது நல்லது.வேலை பார்ப்போருக்கு: வேலையில் கூடுதல் கவனம் தேவை. உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது.

மிதுனம் பொது: அமைதியான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சில் நிதானம் தேவை.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை. புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.

கடகம் பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் பேச்சால் மற்றவர்களை கவர்வீர்கள். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம். சமையல் அறையில் வேலை செய்யும்போது கவனமாக இருக்கவும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைத்து மகிழ்வீர்கள். சிலருக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்கக்கூடும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும்.

சிம்மம்பொது: அமைதியான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். திறமை மேம்படும். அறிவும், ஆற்றலும் பளிச்சிடும். யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழக்கூடும். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். உடல் நலனில் கவனம் தேவை.வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். மனம் உற்சாகமாக இருக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு அதிகரிக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள்.வேலைக்கு போகும் பெண்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைத்து மகிழக்கூடும். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். அடுத்தவர்கள் சொந்த விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. 

துலாம் பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. வீண் செலவைக் குறைப்பது நல்லது. நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவர் அன்பாக இருப்பார். எதிர்பாராத உதவிகள் பெறக்கூடும். வேலைக்கு போகும் பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். வேலை பளு குறையும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது. 

விருச்சிகம் பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பொருளாதாரம் மேம்படும். பயணங்களால் நன்மை உண்டு. உடல் நலனில் கவனம் தேவை. முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனமாக இருக்கவும்.பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும். சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழக்கூடும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும்.

தனுசு பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு சீராக இருக்கும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். இருப்பினும் அவர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம்.வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் குடும்ப விஷயங்களில் ஈடுபட வேண்டாம். உங்கள் ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம்.

மகரம் பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் முடியும். பண வரவு நன்றாக இருக்கும். வீடு மாற்ற இது உகந்த வாரம். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். கணவரிடம் பாராட்டு பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொறுப்புள்ள பதவி கிடைக்கும். உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். 

கும்பம் பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பொருளாதாரம் மேம்படும். பயணங்களால் நன்மை உண்டு. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.பேச்சில் நிதானம் தேவை.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். நீண்ட நாட்களாக வராத உறவினர் வந்து மகிழ்ச்சியடையக்கூடும். கணவர் அன்பாக இருப்பார். குழந்தைகள் சொல்படி நடப்பார்கள். உடல் நலனில் கவனம் தேவை.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளும் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள்.

மீனம் பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். பெற்றோர் நலனில் கவனம் தேவை.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்லவும். வேலைக்குப் போகும் பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.வேலை பார்ப்போருக்கு: வேலை பளு குறையும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணி நிமித்த பயணங்களால் நன்மை உண்டு. சிலர் வருமானம் அதிகம் கிடைக்கும் வேலைக்கு செல்ல முயற்சிக்கலாம்.

குரு பெயர்ச்சி...


குருபகவான் ஆண்டுதோறும், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது, குரு பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு குரு பகவான் இன்று மாலை 6.18 மணிக்கு, மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குரு பெயர்ச்சியையொட்டி, குரு கோவிலில் இன்று மாலை 6.18 மணிக்கு, குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெறும். அதேபோல் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கண்ணபிரான் செய்துள்ளார். கோவிந்தவாடி அகரம்காஞ்சிபுரம்- அரக்கோணம் சாலையில், கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் குரு கோவில் உள்ளது. இங்கு மவுன குருவாகிய தட்சிணாமூர்த்தியே, ஆதிகுருவாக விளங்குகிறார். பக்தர்கள் தட்சிணாமூர்த்தியை குரு பகவானாக வழிபடுகின்றனர்.இங்கு தட்சிணாமூர்த்தி ஜடாமுடியில் பிறை சந்திரனை தாங்கிக் கொண்டு, இடது மேல் கையில் அக்னி, வலது மேல் கையில் சர்ப்பம், இடது கீழ் கையில் மறைச்சுவடி, வலது கையில் சின்முத்திரை காட்டியபடி உள்ளார். யோக தட்சிணாமூர்த்திக்கு, தமிழகத்தில் இங்கு மட்டும் தனிக்கோவில் உள்ளது. 

நவக்கிரகங்களில் ஐந்தாவது இடத்தைப் பெறுவது குரு. நவக்கிரக சன்னிதிகளில், நவக்கிரகங்களுள் ஒருவராக குரு அமர்ந்திருப்பார். அவருக்கு, தேவகுரு, பிரகஸ்பதி, வியாழபகவான் எனப் பல பெயர்கள் உண்டு. பிரகஸ்பதி என்றால் அறிவில் சிறந்தவர் என்றும், குரு என்றால் இருளைப் போக்குபவர் என்றும் பொருள். ஜோதிடப்படி குரு பலம் இருந்தால்தான், எதிலும் வெற்றிபெற முடியும் என்பது நம்பிக்கை. திருமணம் நடைபெற குருபலம் தேவை. தென் மாநிலங்களில் குருவுக்கு தனிக் கோவில், காஞ்சிபுரத்தில் மட்டுமே உள்ளது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில், வேகவதி ஆற்றின் வடக்குக் கரையில், கமலாம்பிகை உடனுறை காயாரோகணே சுவரர் கோவில் உள்ளது. நவக்கிரகங்களில் ஒன்றான குருபகவானுக்கு, மூலவருக்கு எதிரே உட்பிரகாரத்தில் தனி சன்னிதி உள்ளது. குரு பகவான் இறைவனை வழிபடும் நிலையில், கைகளை நெஞ்சுக்கு நேர் கூப்பி வணங்கும் நிலையில் அமர்ந்தபடி காட்சி அளிக்கிறார். குருபகவான் தனி சன்னிதியில் எழுந்திருப்பதால், இக்கோவில் குரு கோவில் என்றே அழைக்கப்படுகிறது.

கர்ப்பிணிகள் மரணம் இந்தியாவில் தான் அதிகம்!


தற்போது ஐக்கிய நாடுகள் நடத்திய ஆய்வில் உலகிலேயே இந்தியாவில் தான் கர்ப்பிணிகள் அதிகம் மரணம் அடைகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. பெண்களின் கல்வியறிவு அதிகரிப்பு மற்றும் சுகாதாரத்திட்டம் போன்றவற்றால் முன்னணியில் இருக்கும் இந்தியாவில் கற்பம் அடைந்த பெண்கள் அதிகம் மரணமடைகின்றனர் என்று தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையில் உலக அளவில் 2,87,000 பெண்கள் கற்பகாலத்தின் போதும், குழந்தைபெரும் போதும் மரணமடைவதாக 2010ம் ஆண்டு கணக்கீட்டின்படி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்போது 19% மரணம் இந்தியாவிலும், 14% மரணம் நைஜீரியாவிலும் மற்றும் இதர 8 நாடுகளில் 40% மரணமும் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்குக் காரணம் குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் அதிக ரத்தபோக்கு, கற்பகாலத்தின்போது ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு போன்றவற்றால் ஏற்படுகிறது என்றும் கூறுகிறது.மேலும் அந்த அறிக்கையின் படி 1990ம் ஆண்டில் 10,00,000 குழந்தை பிறப்பிற்கு 400 மரணங்கள் என்ற நிலையில் இருந்து, 2010ம் ஆண்டு 10,00,000 குழந்தைகள் பிறப்பிற்கு 210 மரணங்கள் என்றும் குறைந்துள்ளதாக கூறுகிறது. தற்போது மரண விகிதம் கடந்த இருபது வருடங்களில் பாதியாக குறைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7am Arivu movie...




மதனின் கேள்வி- பதில் பகுதி விகடனில் இடம் பெறாது?


ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து முற்றாக விலக்கப்பட்டார், அதில் பல ஆண்டுகள் கார்ட்டூனிஸ்டாக, கேள்வி- பதில் பகுதி எழுதும் பொறுப்பிலிருந்த மதன்.ஆனந்த விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் மதன். கார்ட்டூனிஸ்டாக நுழைந்து, எஸ் பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், விகடன் குழும இதழ்களின் இணை ஆசிரியராக உயர்ந்தவர் மதன்.அந்த பத்திரிகைகளில் மதன் எழுதிய தொடர்கள், கேள்வி பதில்கள் அவரை கார்ட்டூனிஸ்டிலிருந்து எழுத்தாளராக உயர்த்தின.ஆனால் ஒரு கட்டத்தில், விகடனுக்கு வெளியிலும் பணியாற்ற முனைந்தார் மதன். அன்றைக்கு விஜய் மல்லையா நிர்வாகத்தில் இருந்த விஜய் டிவியில் இவர் நிகழ்ச்சிகள் செய்தார். மேலும் சினிமா படங்களுக்கும் வசனம் எழுத ஆரம்பித்தார்.

இந் நிலையில் விகடன் நிர்வாகத்துக்கும் அவருக்கும் பிரச்சனை வெடிக்க, 'golden handshake' என்ற முறையில் விகடனை மதன் சுமூகமாகவே பிரிந்தார்.ஆனாலும் மதனின் கார்ட்டூன்கள் மற்றும் கேள்வி பதில் பகுதி மட்டும் தொடர்ந்து இடம்பெறும் என விகடன் அறிவித்திருந்தது. கடந்த இதழ்வரை மதனுக்காக இந்த இரு பகுதிகளும் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இவற்றுக்கு தனி வாசகர்களே உள்ளனர்.இந்த நிலையில், 2.5.2012 விகடனில் மதன் கேள்வி பதில்கள் பகுதியில் வெளியான ஒரு புகைப்படம் விகடனிலிருந்தே மதனை வெளியேற்றியுள்ளது.


கேள்வி: உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்?

பதில்: ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு 'எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் ('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. 'நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு!

மேற்கண்ட கேள்வி- பதிலுக்குப் பொருத்தமாக, இன்றைய முதல்வர் ஜெயலலிதா காலில், ஒரு அமைச்சர் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடும் படம் இடம்பெற்றிருந்தது.இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.அதில், "பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் 'ஹாய் மதன்’ பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் - வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும் நான் அநேகமாகத் தொடுவதில்லை.2.5.2012 இதழில் 'காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது!

ஜெயா டி.வியில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வியின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், 'அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.முக்கியமான பிரச்சனைகள் எத்தனையோ சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்து கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்....வரும் இதழிலேயே 'புகைப்படங்கள், லே- அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று கூறியிருந்தார் மதன் தனது கடிதத்தில்.

மதன் கேள்வி- விகடனின் அதிரடி பதில்...இந்தக் கடிதத்துக்கு விளக்கம் அளித்து இந்த வார விகடனில் அதன் ஆசிரியர் கொடுத்துள்ள விளக்கமான பதில் இது...மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.'ஹாய் மதன்' பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத- அதே சமயம், அந்தக் கேள்வி- பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.அதேபோல், 'இது பொது அறிவுப் பகுதி மட்டுமே' என்று இப்போது மதன் குறிப்பிடும் 'ஹாய் மதன்' பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது.

நடுநிலை இல்லை...இதையெல்லாம் பார்க்கும்போது... தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், 'ஹாய் மதன்' பகுதியை மட்டும் அல்ல... கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு... செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி- பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளார் விகடன் ஆசிரியர்.இதன் மூலம் விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த மதன், முற்றாக நீக்கப்பட்டுள்ளார்.

பார்த்ததில் பிடித்தது !


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...