|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 January, 2013

Watch Kanna Laddu Thinna Aasaiya Movie Online


அலெக்ஸ்பாண்டியன் Movie Online


உங்கள் சுதந்திரம் உங்கள் கையில்!

இப்படி சந்தோசமா என்றாவது ஒரு நாள் நீங்களும் இப்படி வீடியோ எடுத்தால் அதுவும் என்றாவது ஒருநாள் இப்படி அனைவரும் பார்க்கும்படி ஆகிவிடும் எச்சரிக்கை!

நம் வீட்டு பொங்கல்!



சிரிப்பு கண்டிப்பா உண்டு!


பவர் ஸ்டார் பவர்ல சந்தானம் பவர், சிம்பு பவர், எல்லாம் காணோம்! வயிறு  ரொம்ப வலிக்கல ஆனால் சிரிப்பு கண்டிப்பா உண்டு! தமன் இசைல 3 பாட்டு நல்ல இருக்கு 2 பாட்டு சொதப்பல். (பாவம் பாக்கியராஜ் sir) பையனுக்கு ஒரு பிரேக் கொடுக்க வைத்திருந்த கதை யாரு யாரோ திருடி ... படம் ஓகே!

இதுவும் மறந்துபோகும்...?

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதிபராசக்தி  தனியார் பல் மருத்துவமனை, முதுநிலை மருத்துவப் படிப்பைத் தொடங்குவதற்கான அங்கீகாரம் பெறுவதற்காக, கேட்கப்பட்டதாகக் கூறப்படும் கையூட்டுத் தொகை ரூ.1 கோடியில், முன்பணமாக ரூ.25 லட்சத்தை இந்தியப் பல் மருத்துவக் குழு உறுப்பினரிடம் வழங்கியபோது, சி.பி.ஐ. போலீஸாரால் இரு தரப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய மருத்துவக் குழுத் தலைவர் டாக்டர் கேதான் தேசாய், பஞ்சாபைச் சேர்ந்த ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்க ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த வழக்கு என்ன ஆனது என்பதை எல்லோரும் மறந்துவிட்ட நிலையில், இரண்டாவது சம்பவம் இது. இந்தியாவில் ஆங்கில மருத்துவத்தையே பலரும் நாடுவதாலும், மருத்துவத்தில் "நிறைய சம்பாதிக்க முடியும்' என்பதாலும், மருத்துவக் கல்வி ஒரு வியாபாரமாக மாறிவிட்டது. இந்தக் கல்வி வியாபாரத்தில் பல்மருத்துவக் கல்லூரிகளும் தங்களை இணைத்துக் கொண்டுவிட்டன.

இந்தியாவில் அங்கீகாரம்பெற்ற பல்மருத்துவக் கல்லூரிகள் 136 உள்ளன. இவற்றிலிருந்து ஆண்டுக்கு 24,000 பல்மருத்துவர்கள் இளநிலை பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். முதுநிலை பல்மருத்துவத்துக்கு ஆண்டுக்கு 3,000 இடங்கள் மட்டுமே உள்ளன. முதுநிலை படிப்புக்கான போட்டித் தேர்வுகளில் ஊழலும் முறைகேடும் ஒருபுறம் இருக்க, தங்கள் கல்லூரிகளில் முதுநிலைப் பல்மருத்துவம் கொண்டுவந்துவிட வேண்டும் என்கின்ற வியாபார ஆர்வம் தனியார் கல்லூரிகளைப் பற்றிக்கொண்டிருக்கிறது. இதற்கான அங்கீகாரம் பெறத்தான் தற்போது "லஞ்ச பேரம்' பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த பேரம், மற்றும் கல்வி வியாபாரத்தின் விளைவு, லாபம் பாராமல் சிகிச்சை அளித்த பல்மருத்துவர்களையும் தற்போது நாம் இழந்து கொண்டிருக்கிறோம். வெறும் ரூ.30க்கும் ரூ.50க்கும் பற்களைப் பிடுங்கியெறிந்த விவகாரமாக இன்றைய பல்மருத்துவம் இல்லை. எடுத்த எடுப்பில் வேர்சிகிச்சை ஆரம்பித்து (குறைந்தது ரூ.1,500) விடுகிறார்கள். "ஃபில்லிங்' செய்வது பழைய காலம். இப்போதெல்லாம் "கேப்' வைக்காமல் விடுவதில்லை. குறைந்தது ரூ.1,500. வழக்கமாக, விபத்துகளில் தாடையும் பற்களும் உடைந்ததைக் காணத்தான் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பார்கள். இப்போதெல்லாம், வேர்சிகிச்சைக்கே எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிந்துரைக்கும் நிலைக்கு பல்மருத்துவம் முழு வியாபாரமாக மாறிக்கொண்டிருக்கிறது. உபயம் - தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள்!

கல்லூரிக்கு அனுமதி பெறவே "சில கோடி ரூபாய்' வழங்கத் தயாராக இருக்கும் இந்தக் கல்வி நிறுவனங்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்களுக்கு தனி "கோட்டா' ஒதுக்கவும் செய்கின்றன. அப்படியானால், இதை ஈடுகட்டவும், கூடுதல் லாபம் பெறவும் மாணவர்களிடம் எந்த அளவுக்குக் கட்டணங்களையும் நன்கொடையும் வசூலிப்பார்கள் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்? முதுநிலை பல்மருத்துவப் படிப்பு வழங்கும் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்றாலும், அதற்கான உள்கட்டமைப்போ, பேராசிரியர்களோ இல்லாமல் முதுநிலை பல்மருத்துவப் படிப்பு எந்த வகையில் பயனுள்ளதாக அமையும்? லஞ்சம் கொடுத்து அனுமதி பெற்றாலும், இவர்கள் பேராசிரியர்களை, வெளியிடங்களிலிருந்து வரவழைத்துத்தான் பாடம் நடத்தியாக வேண்டும். அல்லது இவர்களது கல்லூரியில் பணியாற்றுவதாக போலியான பதிவேட்டைத் தயாரிக்க வேண்டியிருக்கும்.

தமிழ்நாட்டில் சுமார் 20 பல்மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல்மருத்துவக் கல்லூரி ஒன்று மட்டுமே அரசாங்கம் நடத்துவது. மற்ற அனைத்தும் தனியார் பல்மருத்துவக் கல்லூரிகள்.மாவட்டம்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கி, எம்பிபிஎஸ் படிப்பை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும்போது, ஏன் மாவட்டம் தோறும் ஒரு பல்மருத்துவக் கல்லூரியையும், இதன் இணைப்பாகத் தொடங்கவில்லை?தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களிடம் கொள்ளை லாபம் பார்க்க வழிதிறந்தது ஏன்? தமிழக மாணவர்கள் மிகக் குறைந்த செலவில் பல்மருத்துவத்தைப் படிக்கவே முடியாத நிலைமைக்குத் தமிழக அரசும் ஒரு மறைமுகக் காரணம்.

இந்திய பல் மருத்துவம் மட்டுமல்ல, பொதுமருத்துவக் கல்வித்தரமும் ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. அண்மையில் இங்கிலாந்தில் மருத்துவப் பணிபுரிவதற்காக தகுதித்தேர்வு எழுதிய இந்திய மருத்துவர்களில் 65% பேர் தேர்ச்சி பெறவில்லை. நம் மருத்துவக் கல்வி உலகத் தரத்தில் இல்லை என்பதற்கு இது ஒரு சான்று.அரசுக் கல்லூரிகள் இல்லாத நிலையில், பல லட்சம் செலவழித்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயின்று பட்டம் பெறும் மாணவர்கள், மருத்துவராகி, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் தொழில் செய்யத் தொடங்கும் இவர்களை கார்ப்பரேட் மருத்துவ உலகமும், பன்னாட்டு மருந்து கம்பெனிகளும் தங்கள் பேராசைக்கேற்ப மூளைச் சலவை செய்துவிடுகின்றன. சமூகம் முழுதும் அதன் சுமையை ஏற்க நேருகிறது.காளான்கள் போலத் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளிப்பதும், முறையான கட்டுப்பாடுகள் இல்லாமல் தரமற்ற மருத்துவர்களை உருவாக்கி உலவ விடுவதும், எத்தனை ஆபத்தானது என்பதைப் பற்றிக்கூட நமது ஆட்சியாளர்களுக்குக் கவலை இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சொத்தைப் பல்லாகிவிட்டிருக்கும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் விவகாரத்தில் இன்றைய உடனடித் தேவை மூடி மறைக்கும் "கேப்' அல்ல, "வேர்' சிகிச்சை!


சுபத்துடன் துவங்குவோம்...

சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளே மகரசங்கராந்தி. இந்நாளை தமிழகத்தில் பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். தேவலோக காலக்கணக்குப்படி, நம்முடைய ஓராண்டு என்பது, அவர்களுக்கு ஒருநாள். இதில், தைமுதல் ஆனி வரையுள்ள ஆறுமாதங்கள் பகல்பொழுது. இதனை உத்ராயணம் என்று குறிப்பிடுவர். இந்த காலத்தில் சூரியன் வடதிசை நோக்கிச் சஞ்சரிக்கும். ஆடிமுதல்மார்கழி வரை இரவுப்பொழுது. அப்போது சூரியன் தெற்குநோக்கி சஞ்சரிக்கும்.உத்ராயண காலத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவது சிறப்பு.

சூரிய மந்திரம்
நம: ஸவித்ரே ஜகதேச சக்ஷúஷே
ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாச ஹேதவே
த்ரயீமயாய த்ரிகுணாத்ம தாரிணே
விரிஞ்ச நாராயண சங்கராத்மனே
ஜபாகு ஸும ஸங்காசம்
காஸ்யபேயம் மஹாத்யுதிம்
த்வாந்தாரிம் ஸர்வ பாபக்னம்
ப்ரணதோஸ்மி திவாகரம்
என்ற சூரிய மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

பொருள்: உலகிற்குக் கண்ணாக இருப்பவனே! முத்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்பவனே! வேத வடிவமே! முக்குணங்களைப் பெற்றவனே! பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியாகவும் திகழும் சூரியனே! உமக்கு நமஸ்காரம். காஷ்யப முனிவரின் மகனே! செம்பருத்திப்பூவின் நிறத்தைக் கொண்டவனே! இருளின் எதிரியே! பேரொளி உடையவனே! பாவங்களைப் போக்குபவனே! திவாகரனே! உம்மைப் போற்றுகிறேன்.இந்த மந்திரத்தை ஜெபித்தால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் உண்டாகும். சூரியவழிபாட்டுக்கு உகந்த நாள் ஞாயிறு. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்கள் சிறந்தவை. திதிகளில் வளர்பிறை சப்தமி ஏற்றது. இந்த நாட்களில் காலையில் நீராடிய
பிறகு, கிழக்கு நோக்கி நின்று சூரியனை வணங்க வேண்டும். 

தைமாதம் சுக்லபட்சம் திரிதியை திதி, அவிட்டம் நட்சத்திரம், சித்தயோகம், கும்பலக்னம், கும்பராசி, செவ்வாய் ஓரையில் காலை 9.28க்கு பிறக்கிறது. அன்று திங்கள்கிழமை. அந்நாளில் சூரியன் மகரராசியில் நுழைகிறார். இதை "மகர சங்கராந்தி' என்பர். "சங்கராந்தி' என்றால் "நுழைதல்'. ஒவ்வொரு ஆண்டும் வரும் மகரசங்கராந்திக்கு, ஒரு தேவதையை ஜோதிட சாஸ்திரத்தில் நியமித்துள்ளனர். இந்த தேவதையை "புருஷர்' என்பர். இவ்வாண்டுக்குரிய புருஷரின் பெயர் தூவங்கிஸி. இவர் பூமியை நோக்கி கிழக்கே அமர்கிறார். இதனால், நாடெங்கும் நல்ல மழை பொழியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழமையான கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

தமிழ் எழுத படிக்கத்தெரியாத தமிழ்நாட்டு MLA?

ஓசூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுக்கு, தமிழிலில் எழுதப் படிக்கத் தெரியாததால், தொகுதி வளர்ச்சிப் பணி பிரச்னைகளை, நிறைவேற்ற முடியாமல் திண்டாடி வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதி, காங்., - எம்.எல்.ஏ., கோபிநாத். 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று, ஹாட்ரிக் சாதனை படைத்து, தற்போது தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் குழுத் தலைவராக உயர்ந்துள்ளார். கோபிநாத்.ஆனால் அவருக்கு, தமிழில் எழுதப் படிக்கத் தெரியாது. தெலுங்கு மொழியில் படித்த அவருக்கு, சுத்தமாக தமிழில் எழுதத் தெரியாது. தட்டுத் தடுமாறி மிகவும் சிரமப்பட்டு எழுத்து கூட்டி மட்டுமே படிக்கிறார். தமிழ் மொழியை கற்றுக் கொள்ளவும் அவர் ஆர்வப்படவில்லை. அனைத்து அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பேசும் போது அவர், "எனக்கு தமிழ் சரியா வராது; அதனால் மன்னிக்கவும்' என, கூறி முழுமையாக தெலுங்கில் மட்டுமே பேசுவார்.
இம் இப்படியும் ஒரு MLA தேர்ந்த்தெடுத்த மக்களை சொல்லனும். நாம என்ன பண்ண முடியும் 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...