|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 March, 2011

இதே நாள் 27 மார்ச் 2011

  • சர்வதேச தியேட்டர் தினம்
  •  பர்மாவின் ராணுவ படை தினம்
  •  மல்தோவா, பெசராபியா ஆகியன ருமேனியாவுடன் இணைந்தன(1918)
  •  நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது(1969)
  •  கொன்கோர்ட் விமானம் தனது முதலாவது சுப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது(1970)

வெற்றியை நிர்ணயிப்போம்... வாருங்கள்!


தேர்தல் வாக்குறுதிக்கு அரசியல் கட்சிகள் கட்டுப்பட்டவை அல்ல என்பதால், வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன.

* "தட்டினால் தங்கம் வரும்; வெட்டினால் வெள்ளி வரும்' என்றனர். தலைவர்கள் வீட்டில் மட்டும், தங்கமும், வெள்ளியும் வந்தது.

* "தேனும், பாலும் ஓடும்' என்றனர். நீர் இல்லாமல்... மணலை அள்ளி, நதிகள் மரணித்து வருகின்றன.

* "இந்தி போராட்டம்' என்றனர். தலைவர்களின் பிள்ளைகள், பார்லிமென்டில் பேச அல்லது பேசுவது புரிய இந்தி படிக்கின்றனர்.

* இலவச மதுபானமும், இலவச சினிமாவும் மட்டும் பாக்கி... அதையும் அடுத்து அறிவித்து விடுவர். கங்கை, காவிரி போன்ற நதிநீர் இணைப்பு பற்றி, யார் பேசுவர்? வெளிநாட்டில் உள்ள தமிழக தமிழர்கள் நல வாரியம் யார் பேசுவர்? அவர்களுக்கு என்ன ஓட்டு உள்ளதா, இருந்தாலும், ஓட்டுப் போடப் போகின்றனரா? வாக்குறுதிகள் எல்லாம் சின்னப்பிள்ளைக்கு தின்னத் தரும் ஐஸ்குச்சி போல. சப்பி, சப்பி, நக்கிய பின், குச்சி மட்டும் தான் மிஞ்சும். ஒவ்வொரு தேர்தல் முடிவிலும், மகாஜனம் குச்சியுடன் தான் நிற்கிறது.

* ஓட்டுக்கு லஞ்சம் தரும் வேட்பாளர், என்ன அவரின் பாட்டன், அப்பன் சொத்தை விற்றா தருகிறான். "திருடியதைத்தான் திருப்பி தருகிறான்...' எனவே, வாக்காளரும், ஓட்டுக்கு நோட்டை எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.

* வாக்காளர்கள் பணம் வாங்குவதை மறுத்தால், "இது உங்களிடம் திருடியது தான்; உங்கள் பணம் பெற்று கொள்ளுங்கள்' என்று கூறும் நிலை வேட்பாளருக்கும் வந்து விட்டது.

எந்த கட்சி இன்று தேர்தல் நிதி திரட்ட, உண்டியல் குலுக்கி ஊர்வலம் வருகிறது. இல்லையே... தொழில் அதிபர்களின் தோளில் கட்சிகள் சாய்ந்து விட்டதே. நன்கொடை என்ற பேரில், முன் பேரம் பேசப்பட்டு வருகிறது. காந்தி படம் உள்ள கரன்சி நோட்டு காட்டினால் தான், காந்தி கூட டிபாசிட் பெற முடியும். இலவசம் எனும் மறைமுக லஞ்சம் எல்லாரையும் அடிமையாக்கி விட்டது. வரிபணம், வளங்களை ஏற்படுத்தாமல், வாரி இறைக்கப்படுகிறது, கவலை தரும் நிலை. வாரிசு அரசியல் என்பது, மேல் மட்டத்தில் மட்டுமில்லை. வார்டு கவுன்சிலர் வரை வந்து விட்டது. தாத்தா எம்.பி., அப்பா அமைச்சர், மகன் எம்.எல்.ஏ., என, தலைமுறை, தலைமுறையாக தொகுதியை தக்க வைக்கவும், தொகுதி வாரிசுகள் வந்து விட்டன.

தமிழகத்தின் தலைவிதியோ வேறு. ஒரு கட்சியோ, குடும்ப அரசியல் நடத்துகிறது. இன்னொரு கட்சியை, ஒரு குடும்பம் மட்டும் நடத்துகிறது. மாற்று தீர்வு என்று எண்ணியவர் கூட, மண்டியிட்டு, அடிபணியும் போது, தமிழகத்தில் இனி, திராவிட கட்சிகளின் ஊழலுக்கு தீர்வு இல்லை என்று தான் எண்ணத் தோன்றுகிறது. கூட்டணி என்பது குடும்பத்தை காப்பாற்றவும், அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை பெற மட்டுமே என்பதை, ஒவ்வொரு தேர்தலும் உணர்த்துகின்றன. ஈழத் தமிழர் நலம் பேசிய விடுதலை சிறுத்தைகளும், பா.ம.க.,வும், காங்கிரஸ் கைபிடித்து விட்டன. வன் கொடுமை சட்டத்தை ஆதரிக்கும் விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., கூட்டணியில், அதை எதிர்க்கும் கொங்கு கவுண்டர் கழகம். தேர்தலுக்கு பிறகு, கூட்டணியில் இருந்து விலகி, வேறு ஒரு கட்சி ஆட்சி அமைக்க, ஒவ்வொரு கட்சியும் பேரம் பேசும். இதையும் சகித்து கொள்ள வேண்டும். இதற்கு பெயர் அரசியல் சாணக்கியம். ஜாதி கட்சிக்கு ஓட்டளிக்காமல், அதே தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிக்கு ஓட்டளியுங்கள். ஒரு தொகுதியில் குறிப்பிட்ட ஜாதி மட்டும் உள்ளதா? ஜாதி கட்சியின் வேட்பாளர்கள் தோற்றால் தான், ஜாதி கட்சிகளுக்கு புத்தி வரும்.

ராமன் ஆண்டால் என்ன; ராவணன் ஆண்டால் என்ன என்பதில் என்ன பெருமை. நாம் யாரால் ஆளப்பட வேண்டும் என்பதில், நமக்கு அக்கறையில்லை என்றால், மிருகத்திற்கும், மனிதனுக்கும் என்ன வேறுபாடு? தவறான வேட்பாளருக்கு எதிராக ஓட்டளிக்காமல் ஒதுங்கி நிற்பது கூட, தவறான வேட்பாளரை ஆதரிப்பது போல் ஆவதுடன், தவறான வேட்பாளர் வெற்றி பெற பெரிதும் உதவுகிறது; இதுவும், ஒரு ஜனநாயகப் படுகொலை தான். ஒரு எம்.எல்.ஏ., ஜெயித்தால், குறைந்தபட்சம் என்ன செய்வார் என பாருங்கள்...

தொகுதி பற்றி சட்டசபையில் பேசுவாரா? தொகுதி மக்களை அடிக்கடி சந்திப்பாரா? எம்.எல்.ஏ., விடுதியில் சந்திக்க அனுமதி தருவாரா? தொகுதியில் தொழில் வளம் பெருக என்ன செய்தார், செய்வார்? கட்சி மாறுவதில் வல்லவரா என பார்த்து ஓட்டளியுங்கள். கட்சி தலைமை என்ன என்பதை மறந்து, நல்ல வேட்பாளர்களுக்கு ஓட்டளியுங்கள். இதன் மூலம், நல்ல வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், ஜாதி கட்சிகளும் உணரும். எல்லா அரசியல் கட்சிக்கும் என்று, சில ஓட்டு வங்கிகள் இருக்கும். அவர்கள் அந்த கட்சிக்கு அல்லது அதன் கூட்டணிக்கு தான் ஓட்டளிப்பர். யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என முடிவு செய்யாத வாக்காளர்கள், ஒவ்வொரு தொகுதியிலும் இருப்பர். உண்மையில் அவர்கள் தான், வெற்றியை நிர்ணயம் செய்பவர்கள். அவர்களில் நானும், நீங்களும் உள்ளோம். நல்ல வேட்பாளருக்கு ஓட்டளித்து, வெற்றியின் காரணியில் பங்கு பெறுவதில் பெருமை கொள்வோம். சிந்தியுங்கள்... ஏப்ரல் 13 அன்று, ஓட்டுச்சாவடியில் சந்திப்போம். இ-மெயில்: asussusi@gmail.co.in

- எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி , வழக்கறிஞர்

சிறுத்தையை உயிரோடு எரித்த கொடூர கும்பல்


ஒரு துளியில் உலகம்



 

தமிழ் குறும் படம் தேவதை

காதல் நட்பு  இரண்டும் எமாற்றியதால் நடக்கும் நிகழ்வு இயக்கம்  Dr. முருகப்பன்

Fears of radioactive seawater grow near nuclear plant despite efforts



Earlier in the day, radioactive iodine-131 at a concentration 1,250.8 times the legal limit was detected Friday morning in a seawater sample taken around 330 meters south of the plant, near the drain outlets of its troubled four reactors, the government’s Nuclear and Industrial Safety Agency said.
The level rose to its highest so far in the survey begun this week, after staying around levels 100 times over the legal limit. It is highly likely that radioactive water in the plant has disembogued into the sea, the utility said.
Radioactive materials ‘‘will significantly dilute’’ by the time they are consumed by marine species, the agency said, adding that it will not have a significant impact on fishery products as fishing is not conducted in the area within 20 kilometers of the plant because the government has issued a directive for residents in the area to evacuate.
If people ingest 500 milliliters of water containing the same level of radioactive iodine, the radiation levels would reach the 1 millisievert limit which people can be safely exposed to in one year

ஆபத்து விளைவிக்கக்கூடிய ஆரம்ப அளவை விட 250 மடங்கு அதிகமாக இப்பகுதி கடல் நீரில் கதிரியக்க அயோடினின் அளவு காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கரையிலிருந்து சுமார் முந்நூறு மீட்டர்கள் தள்ளி கடல் நீரில் கதிரியக்கம் அளக்கப்பட்டிருந்தது.
கதிரியக்கம் கடலில் கலந்ததன் காரணமாக அப்பகுதி கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை இல்லை என ஜப்பானிய அமைச்சரவையின் செயலர் யுகியோ எதானோ தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இப்பகுதி கடல்நீரில் காணப்பட்ட கதிரியக்க அயோடினின் அளவை விட தற்போது எட்டு மடங்கு அதிகமான அளவில் இது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது

100வது சதத்துக்காக சச்சின் காத்திருக்க வேண்டும்: அப்ரிடி


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30 ந்தேதி மொகாலியில் நடைபெறும் 2 வது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா  பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் இருந்து இந்தியா வந்தது. முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி அந்நாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,

இந்தியா  பாகிஸ்தான் மோதுவதுதான் கிரிக்கெட் இரு அணி வீரர்களுமே அரை இறுதியில் வெற்றி பெற போராடுவார்கள். தற்போது நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம். இதனால் இந்திய அணியை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவுடன் மோதும் போட்டியை எதிர் கொள்வதில் எங்கள் அணி வீரர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்தப் போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பது எனக்கு தெரியும். இதன் காரணமாக பரபரப்பான இந்த ஆட்டத்தில் வீரர்கள் உணர்வுகளை கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன்.   பொதுவாக இந்தியா  பாகிஸ்தான் மோதுவது என்றாலே வீரர்களுக்கு நெருக்கடி தான் ஏனென்றால் இரு அணிகள் மோதும் போட்டிக்கு அதிக எதிர்பாப்பு இருப்பது தான் இந்திய அணி உள்ளூரில் விளையாடுவதால் எங்களை விட அவர்களுக்கு தான் நெருக்கடி அதிகமாக இருக்கும்.

உலக கோப்பை போட்டியில் நாங்கள் இந்தியாவை வென்றது இல்லை. இந்த வரலாறு மாறும் மிகவும் சவாலான இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் குழு தயார் நிலையில் உள்ளது. இரு அணிகளும் மோதுவது கிரிக்கெட் போட்டிக்குத்தான் என்பதை ரசிகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தெண்டுல்கர் சர்வதேச போட்டியில் 100 வது சதத்தை எதிர் நோக்கி உள்ளார். அதற்காக அவர் உலக கோப்பை முடியும்வரை காத்திருக்க வேண்டும். தெண்டுல்கர் மட்டுமின்றி எந்த ஒரு இந்திய வீரரையும் நாங்கள் மிகப் பெரிய ரன் எடுக்க அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அப்ரிடி கூறினார்.

மாற்று ஆபரேசன் மூலம் மிருக உறுப்புகளை மனித உடலில் பொருத்த திட்டம்

பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகள் மற்றொரு நபரிடம் இருந்து தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மிருகங்களின் உடல் உறுப்புகளை பொருத்த சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
சீனாவில் உள்ள நாஜ்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அதற் கான ஆய்வை மேற்கொண் டுள்ளனர்.முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகள் மனித உடலில் பொருத்தப்பட உள்ளன.
அது இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தொடக்கத்தில் மரபணு மாற்றம் செய்யப் பட்ட பன்றிகள் பயன்படுத்தப்பட உள்ளன. பின்னர் மற்ற விலங்குகளின் உடல் உறுப்புகளையும் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Anger in Syria புரட்சியாளர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு; 100 பேர் பலி

எகிப்து, துனிசியா, லிபியாவை தொடர்ந்து சிரியாவிலும் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. அதிபர் பஷார் ஆசாத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் கடந்த 8 நாட்களாக உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. தலைநகர் டமாஸ்கஸ்-இல் தொடங்கிய இப்போராட்டம் டாரா உள்ளிட்ட 6 நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் பரவியுள்ளது.

இந்நிலையில் நேற்று டமாஸ்கஸ் நகரில் போராட்டம் நடத்த புரட்சி யாளர்கள் பேரணியாக திரண்டனர்.   அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் ஆசாத்தின் ஆதரவாளர்களும் அங்கு வந்தனர். அதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. எனவே மோதலை தடுக்க போலீசாரும், ராணுவத் தினரும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
 
இதில் சுமார் 30 பேர் பலியானார்கள். இருந்தும் இறந்தவர்களின் உடலை வைத்துக்கொண்டு புரட்சி யாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து சிரியாவில் போராட்டம் வலுவடைந்துள்ளது. இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட 100-க் கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் 34 பேர் பலியானதாக அரசு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் கருணாநிதிக்கு பதட்டம் - பழ. நெடுமாறன்

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை பெரிதும் வரவேற்பதாகவும், அதன் நடவடிக்கையை கண்டு கருணாநிதிக்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது குறித்து தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது, 
தமிழக தேர்தலில் சில அதிரடி நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்திருப்பதை வரவேற்கிறோம். ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் முதல்வர் கருணாநிதி இந்த நடவடிக்கையை கண்டு பதட்டம் அடைந்திருக்கிறார். தனது தரப்பில் தவறு ஏதும் இல்லை எனில் அவர் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டிக்க தேவையில்லை. அனைத்து கட்சியினரும் தேர்தல் ஆணைய நடவடிக்கையை பாராட்டும் போது அவருக்கு மட்டும் பயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
தமிழக தேர்தல் வேட்பு மனு தாக்கல் முடிந்த பிறகு யாருக்கு ஆதரவு என்று தெரிவிப்போம். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, வேலையில்லா திண்டாட்டங்களை ஒழிப்பது போன்ற தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் இல்லை. கருணாநிதியின் தேர்தல் அறிக்கை ஒரு மாயமான தேர்தல் திட்டமாகும் என்றார்.

இலவசங்கள் எதுவாக இருந்தாலும் அவை மனிதனின் தன்மானத்தை உரசிப்பார்க்கும் செயல் தங்கர் பச்சான் ...

இலவசங்கள் எதுவாக இருந்தாலும் அவை மனிதனின் தன்மானத்தை உரசிப்பார்க்கும் செயல். அதைப் புரிந்து கொள்ளாமல் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளிவிட்டிருப்பது முகம் சுளிக்க வைக்கிறது என தங்கர் பச்சான் கூறியுள்ளார்.

சினிமா ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சான் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

"அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்தை ஆளக்கூடியவர்களை தேர்வுசெய்யக்கூடிய பொறுப்பும், கடமையும் வாக்காளர்களாகிய நமக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. சரியானவர்களை தேர்ந்தெடுப்பதை விட்டுவிட்டு பின்னர் குறைசொல்லிக் கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை.

மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பது அரசியல் கட்சிகளின் வேலை. ஆனால், ஏலம் போடுவது மாதிரி உங்களை விட நான் என்னவெல்லாம் தருகிறேன் பாருங்கள் என்று சொல்லி மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இலவசங்கள் எதுவாக இருந்தாலும் அவை மனிதனின் தன்மானத்தை உரசிப்பார்க்கும் செயல்கள்தான். அவரவர்கள் சொந்த காலில் நின்று உழைத்து பொருளாதாரத்தை உயர்த்தி தன் உழைப்பில் குடும்பத்தை நடத்திக் கொள்வதற்கான எந்த திட்டமும் இந்த வாக்குறுதிகளில் இல்லை.

ஏற்கனவே தன்னைப் பற்றியோ, தன் குடும்பத்தைப் பற்றியோ சிந்திக்காமல் உழைக்கத் தயங்கி மாதத்திற்கு 10 நாட்கள் வேலைசெய்தால் போதும் என அந்த பணத்தில் முக்கால்வாசியை டாஸ்மாக் கடைக்கு செலவழித்துவிட்டு கால்வாசியைக்கூட தன்னையே நம்பி இருக்கிற குழந்தைகளுக்கும் மனைவிக்கும் பெற்றோருக்கும் தராமல் சோம்பேறியாக அலைந்து கொண்டிருக்கும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட அடித்தட்டு மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.

இந்த நிலையில், அவனுக்கு எல்லாவற்றையுமே அரசாங்கம் வீட்டுக்கு வந்து இலவசமாக கொடுத்துவிட்டால் அவன் உழைத்து முன்னேற வேண்டும் என்ற முனைப்பே இல்லாமல் பிச்சைக்காரன் போல் எல்லா தேவைக்கும் அரசாங்கத்தையே நம்பியிருக்கக்கூடிய காலம் வந்துவிடும்.

தங்கள் பொருட்களை மக்களிடத்தில் விற்பனை செய்ய வியாபாரிகள் மேற்கொள்ளும் விளம்பர தந்திரங்களைத்தான் இப்போது ஓட்டுக்காக அரசியல் கட்சிகள் செய்துகொண்டிருக்கின்றன. தமிழகத்தைப் போல மேற்கு வங்காள மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.

35 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுகொண்டிருக்கிற மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் மம்தா பானர்ஜியும் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், எந்த ஒரு இலவச திட்டமும் இல்லை. எல்லா திட்டங்களுமே வேலைவாய்ப்பு, தொழில்நிறுவனங்கள், விவசாயம் தொடர்பான, மக்களை பொருளாதாரத்தில் உயர்த்தும் திட்டங்கள்தான்

தமிழகத்தில் சாராய கடைகளை மூடாமல் எத்தனை திட்டங்கள் கொண்டுவந்தாலும் மக்களின் வாழ்க்கை தரம் முன்னேறாது. எனவே, மதுவிலக்கை அறிவிக்கப்போகும் கூட்டணிக்குத்தான் பெண்கள் வாக்களிக்க காத்திருக்கிறார்கள்
-இவ்வாறு தங்கர் பச்சான் கூறியுள்ளார்.

ரூபாய் நாணயங்களை உருக்கினாலோ அல்லது அழித்தாலோ கடுங்காவல் ஜெயில் தண்டனை!



ரூபாய் நாணயங்களை உருக்கினாலோ அல்லது அழித்தாலோ, அதற்கான கடுங்காவல் ஜெயில் தண்டனையை 7 ஆண்டுகள் வரை அதிகரிக்க வகை செய்யும் புதிய சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது.


மக்களவையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று தாக்கல் செய்த இந்த 'நாணயங்கள் தயாரித்தல் 2009' என்ற சட்ட மசோதா விவாதம் எதுவும் இன்றி குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது அமலில் உள்ள 4 சட்டங்களை உள்ளடக்கியதாக இந்த புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. நாணயங்களை உருக்குதல் மற்றும் அழித்தல் ஆகிய குற்றங்களுக்கு கள்ள நாணயம் தயாரிப்பு குற்றம் போன்று 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கும்படி பாராளுமன்ற நிலைக்குழு சிபாரிசு செய்து இருந்தது.

ஆனால் அதை ஏற்க மறுத்து 7 ஆண்டு சிறை தண்டனை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் 'நாணயம்' என்ற வார்த்தையின் விளக்கம், தற்போது கிட்டத்தட்ட புழக்கத்தில் இல்லாத ஒரு ரூபாய் நோட்டுக்கும் பொருந்தும் என்றும், இந்த சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேங்கிக் கிடக்கும் வழக்குகளால் ரூ 1.50 லட்சம் கோடி வரி வசூல் முடக்கம் !




நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் பல்வேறு வழக்குகளால் ரூ 1.50 லட்சம் கோடி வரி வசூல் முடங்கிக் கிடப்பதாக இந்திய தலைமை கணக்கு அதிகாரி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இந்த தொகை, அதற்கு முந்தைய ஆண்டு முடங்கிய தொகையை (ரூ.50 ஆயிரத்து 890 கோடி) விட 5 மடங்குக்கும் அதிகம்.

இவற்றில் ரூ.2.2 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட வரி பாக்கி தொடர்பான வழக்குகள், தீர்ப்பாயங்களிலும், மீதி பாக்கி தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளன.

இவற்றில், ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் கோடி வரிபாக்கி தொடர்பான வழக்குகள், 5 ஆண்டுகளுக்கும் குறைவாக நிலுவையில் உள்ள வழக்குகள். மீதி 8 ஆயிரத்து 417 கோடி வரிபாக்கி தொடர்பான வழக்குகள், 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி, உற்பத்தி வரி வசூல் பாக்கியை வசூலிப்பது தொடர்பாக கோர்ட்டுகளில் 50 ஆயிரத்து 657 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதன் மூலம் வசூலாகாமல் உள்ள தொகை மட்டும் ரூ 3.1 லட்சம் கோடி. இந்தியாவின் கார்ப்பொரேட் வரி வசூலை விட அதிகம் (கார்ப்பொரேட் வரி வசூலே ரூ 2.4 லட்சம் கோடிதான்!). ஆண்டு வருமான வரி வசூலை விட இரண்டரை மடங்கு அதிகம் (மொத்த வருமான வரி வசூல் ரூ 1.31 லட்சம் கோடிதான்!)

இங்கே எல்லாம் இப்போது இலவசம். ஓட்டுக்கு மட்டும் காசு


தேர்தல்கள் ஜனநாயகத்தைக் காக்க நடப்பதாகக் கூறிக் கொண்டு, நாட்டையும் மக்களையும் சிதைத்துவிட்டது. இங்கே எல்லாம் இப்போது இலவசம். ஓட்டுக்கு மட்டும் காசு என்றாகிவிட்டது, என்றார் இயக்கநர் சீமான்.


இந்தத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்களை வீழ்த்த பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தனது 17 நாள் சூறாவளிப் பிரச்சாரத்தை, காங்கிரசுக்கு எதிரான போராட்டமாக அறிவித்துள்ள சீமான், நெல்லையில் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

திசையைன்விளை பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்டமான பொது கூட்டம் 6 மணிக்குத் தொடங்கியது.

இக் கூட்டதின் துவக்கமாக வீரத்தாய் பார்வதி அம்மாள் அவர்களுக்கும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமாருக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


தமிழனின் தாய் நிலமான ஈழ மண்ணில் தமிழ் இனத்தின் விடுதலை போராட்டத்தை ஒடுக்கி ஈழத்து உறவுகளை கொன்று குவிக்க சிங்கள இனவெறி அரசிக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சியை 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் தோற்கடிப்பதை லட்சியமாய் ஏற்று காங்கிரசை கருவருக்க அடித்தளமாக இப் பொதுக் கூட்டத்தை அமைத்துள்ளோம்" என்று அறிவித்து சீமான் தனது போர் முழக்கத்தை துவக்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "இந்த நாட்டில் எல்லாமே இலவசமாகிவிட்டது. சாப்பாடு, துணி, வீடு, மனைவி என எல்லாமே இலவசமாகத் தருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு, குழந்தை பெற்றுக் கொள்வது கூட இலவசம்தான். வலி மட்டும்தான் உங்களுக்கு. ஒரு மொத்த சமுதாயத்தையே சோம்பேறிகளாக்கிவிட்டதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

எல்லாமே இலவசம்... ஓட்டு மட்டும் காசு. இப்படியும் ஒரு தேசம். மக்களே, இந்தத் தேர்தலில் உங்களுக்கு நிறையா பணம் 
தருவார்கள். தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள். காரணம் அது உங்கள் பணம்தான். 2 ஜி ஸ்பெக்ட்ரமில் அடித்த கொள்ளையின் ஒரு பகுதிதான் அது. ஆனால் வாக்களிக்கும்போது மட்டும், மீண்டும் இப்படி ஒரு கொள்ளை அரங்கேறி, நாடே நாசமாகப் போக வேண்டுமா என்பதை எண்ணிப் பாருங்கள்.

காங்கிரஸ் கட்சி பஞ்சமா பாதகங்களை கொஞ்சமும் கூசாமல் செய்து வரும் கட்சி. என் அன்பான திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்கள் பலருக்கும் இந்த உண்மை தெரியும். அவர்களும் குமுறலோடுதான் காங்கிரஸைப் பார்த்துக் கொண்டுள்ளனர்.

இந்தத் தேர்தலோடு, காங்கிரஸ் கட்சி தடம் தெரியாமல் அழிந்து போகவேண்டும். அதுதான் நடந்த கொடுமைகளுக்கெல்லாம் ஒரு தீர்வாக இருக்கும். இனி வரும் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்க அத்தனை கட்சிகளும் அச்சப்பட்டு ஒதுங்கி ஓட வேண்டும். அந்த நிலையை இந்தத் தேர்தலில் ஏற்படுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்..." என்றார்.

"சரியான திட்டமிடல் இருந்தால், தமிழ்மொழியில் படித்து ஐ.ஏ.எஸ்., ஆகலாம்



"சரியான திட்டமிடல் இருந்தால், தமிழ்மொழியில் படித்து, தேர்வெழுதி ஐ.ஏ.எஸ்., ஆகலாம்" என மனிதநேய ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய இணை இயக்குனர் ராஜராஜன் தெரிவித்தார்.

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : பிளஸ் 2 முடித்த உடனே எதிர்காலம் குறித்த திட்டமிடல் இருக்க வேண்டும். ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என நினைத்தால், பொது அறிவுக்காக பத்திரிகைகளை தவறாமல் படிக்க வேண்டும். பொழுதுபோக்காக பக்கங்களை புரட்டாமல், ஒவ்வொரு தகவலையும் பகுத்து ஆராய வேண்டும்.

சிவில் சர்வீஸ் தேர்வில் முதல்நிலை, முக்கியத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகள் உள்ளன. முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு மற்றும் விருப்பப்பாடம் என்ற தேர்வுகள் நடத்தப்படும். விருப்பப் பாடப் பிரிவில், பிடித்தமான பாடத்திட்டத்தை மாணவர்கள் தேர்வு செய்யலாம். ஆங்கிலம் படித்தவர்கள் தான் ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பதில்லை. தமிழிலும் படித்து தேர்வெழுதலாம், வெற்றி பெறலாம். வெறுமனே தேர்ச்சி பெற வேண்டும் என்று நினைக்காமல், ஐ.ஏ.எஸ்., தேர்விலேயே அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று நினைத்தால் தான் இலக்கை அடையமுடியும்.

எந்த ஒரு பதவியை அடைய வேண்டுமானாலும், அதற்கேற்ப நமது எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுடன் கலந்துரையாடினால், முழுமையான விளக்கம் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக ஐ.ஏ.எஸ்., ஆவதுடன் சமுதாயத்தின் மீதும் அக்கறை கொள்ள வேண்டும், என்றார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...