|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 June, 2011

இதே நாள்...


  •  தென்னாப்பிரிக்க இளைஞர் தினம்(1976)
  •  இந்திய விடுதலை போராட்ட வீரர் சித்ரஞ்சன் தாஸ் இறந்த தினம்(1925)
  •  ஹவாய் குடியரசை அமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாடு எட்டப்பட்டது(1897)
  •  பிரிட்டிஷ் பெண்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது(1915)
  •  தேசிய தொழில் புரட்சி சட்டம் கொண்டுவரப்பட்டது(1933)

Sexiest Women in the World 2011 - Part 4

                                                                49. Rachel Stevens

                                                


                                        48. Kara Tointon
                                                           47. Lea Michele
                                                              46. Nadine Coyle
                                                    45. Beyonce Knowles
                                                            44. Miranda Kerr
                                                                   43. Shakira
                                                             42. Karen Gillan
                                                                 41. Una Healy
                                                           40. Diora Baird
                                                         39. Kate Middleton  
                                          38. Eliza Dushku 
                                          37. Summer Glau
                                                             36. Sarah Harding
                                                      35. Gemma Arterton
                                                           34. Amber Heard
                                                             33. Eva Mendes
                                                       32. Scarlett Johansson
                                                               31. Pixie Lott
                                                     30. Kaya Scodelario
                                                             29. Daisy Lowe
                                                          28. Abbey Clancy
                                                   27. Audrina Patridge
                                                   26. Michelle Keegan

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்!

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் தொடங்கியது. 11.52க்கு (15.06.2011) துவங்கியுள்ள சந்திர கிரகணத்தை அதிகாலை 3.35 (16.06.2011) மணி வரை காணலாம். முழுமையான கிரகணத்தை ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய மக்கள் மட்டுமே காண முடியும். சென்னையில் பிர்லா கோலரங்கத்தில் கிரகணத்தை காண 5 கருவிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன 12.15 மணி அளவில் வானில் மேகமூட்டமாக இருப்பதால் கிரகண நிகழ்வை காண முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

தாய் நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம்

உலகின் பல்வேறு நாடுகளில் வசிப்பவர்களில், தாய்நாட்டிற்கு அதிக அளவில் பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர்.
உலகளவில் பல நாடுகளில், பலதரப்பட்ட துறைகளில் இந்தியர்கள் பணி புரிந்து வருகின்றனர். குறிப்பாக, வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் அதிக அளவில் பணியாற்றுகின்றனர். இவ்வாறு அயல்நாடுகளில் பணிபுரிவோர், தாய் நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினருக்கும் பணம் அனுப்பி வருகின்றனர்.


வெளிநாடுகளில் பணிபுரிவோர், தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வரும் பணம் குறித்து உலக வங்கி புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. 'இடம் பெயர்ந்தோர் மற்றும் பணமளிப்பு விவரம்' என்ற தலைப்பிலான இந்த அறிக்கையில், வெளிநாடுகளில் உள்ளோர், தங்கள் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில், இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஆண்டுதோறும், இந்தியர்கள், தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவது அதிகரித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.கடந்த 2010ம் ஆண்டு, வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாய்நாட்டிற்கு 5,500 கோடி டாலர் (2 லட்சத்து 53ஆயிரம் கோடி ரூபாய்) அனுப்பியுள்ளனர். இது, முந்தைய ஆண்டு 4,960 கோடி டாலராக (2 லட்சத்து 28ஆயிரத்து 160 கோடி ரூபாய்) இருந்தது.இதில், சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார், மஸ்கட்,ஓமன் நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா கூட்டுறவு கழகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது.


இந்நாடுகளில் வாழும் இந்தியர்கள், தங்கள் தாயகத்திற்கு கடந்த 2010ம் ஆண்டு 1,104 கோடி டாலர் (50ஆயிரத்து 784 கோடி ரூபாய்) அனுப்பியுள்ளனர். இது, முந்தைய 2009ம் ஆண்டில் 940 கோடி டாலராக (43ஆயிரத்து 240 கோடி ரூபாய்)இருந்தது.துபாயில் உள்ள யூ.ஏ.ஈ எக்ஸ்சேன்ஜ் நிறுவனம், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் வளைகுடா கூட்டுறவு கழகத்தை சேர்ந்த நாடுகளின் அன்னியச் செலாவணி பரிமாற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ”திர் குமார் ஷெட்டி கூறுகையில்,' அயல்நாட்டு பணியாளர்கள், சென்ற 2010ம் ஆண்டில் 2,500 கோடி - 3,000 கோடி டாலர் (ஒரு லட்சத்து 15ஆயிரம் கோடி ரூபா# - ஒரு லட்சத்து 38ஆயிரம் கோடி ரூபாய்) அளவிற்கு தாய்நாட்டிற்கு பணம் அனுப்பியுள்ளனர்' என்று தெரிவித்தார்.ஐக்கிய அரபு எமிரேட்டில் பணியாற்றும் அயல் நாட்டினர், கடந்த 2010ம் ஆண்டு தங்கள் தாயகத்திற்கு 1,054 கோடி டாலர் (48ஆயிரத்து 484 ரூபா#) அனுப்பியுள்ளனர். இது, முந்தைய 2009ம் ஆண்டு 951கோடி டாலராக (43ஆயிரத்து 746 கோடி ரூபாய்) இருந்தது. இந்த வளர்ச்சியை, கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டின் பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். கட்டுமானம் மற்றும் அது சார்ந்த துறைகளைத் தவிர்த்து, வணிகம், விருந்தோம்பல் மற்றும் ”ற்றுலாத் துறைகளின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. இது, அயல்நாட்டவருக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க துணைபுரிவதாக உள்ளது என, ”திர் குமார் ஷெட்டி மேலும் கூறினார். 

தனது குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்த கலெக்டர்!

  ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், கால்நடை மருத்துவத்தில் முதுகலை பயின்றவர். இவரது மனைவி ஸ்ரீவித்யா, எம்.பி.பி.எஸ்., படித்துள்ளார். தர்மபுரி கலெக்டராக ஆனந்தகுமார் பணிபுரிந்த போது, அவரது மகள் கோபிகா, அங்குள்ள மெட்ரிக் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்றார். ஜூன் 3ம் தேதி, ஈரோடு மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற அவர், கோபிகாவை, ஈரோட்டில் உள்ள பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். ஈரோடு கலெக்டர் பங்களாவில் இருந்து அரை கி.மீ., தொலைவில் உள்ள, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், நேற்று காலை இரண்டாம் வகுப்பில் சேர்த்தார். பள்ளிக்கு திடீரென வந்த கலெக்டரை, தலைமை ஆசிரியை ராணி வரவேற்று, தன் இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொண்டார். அந்த இருக்கையில் அமர மறுத்த கலெக்டர், தலைமை ஆசிரியையை அவருக்கான இருக்கையில் அமரும்படி கூறிவிட்டு, பெற்றோர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டார். மாணவர் சேர்க்கைக்கான படிவத்தை பூர்த்தி செய்தார். தன் மகளுக்கான மாற்றுச் சான்றிதழை தலைமை ஆசிரியையிடம் வழங்கி, மகளை அப்பள்ளியில் சேர்த்தார்.

""என் குழந்தைக்கு இலவச சீருடை வழங்கப்படுமா?'' என, கலெக்டர் கேட்டார். ""சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும் பள்ளி மூலம் இலவச சீருடை வழங்கப்படும். மற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படாது,'' என, தலைமை ஆசிரியை கூறினார். ""என் குழந்தையும் பள்ளியில் சத்துணவு சாப்பிடும். அதற்கான பட்டியலில் சேர்த்து, பள்ளி சீருடை வழங்குங்கள்,'' என, கலெக்டர் கேட்டுக் கொண்டார். பின், குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, கலெக்டர் அலுவலகம் சென்றுவிட்டார். இதையறிந்த நிருபர்கள், கலெக்டரிடம் கேட்டபோது, ""இது என் சொந்த விஷயம்; இதைப்பற்றி சொல்ல ஏதுமில்லை,'' என்றார்.

சத்தமில்லாத வன்முறை...

முதுமை என்பதும் மற்றுமொரு குழந்தைப் பருவம்தான் என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் பலரும் புரிந்து கொள்வதில்லை. இதன் காரணமாகவே இன்றைக்கு வீட்டில் இருக்கும் மூத்தவர்களை உதாசீனப்படுத்துவது அதிகரித்து வருகிறது.

சத்தமில்லாத வன்முறை: இந்தியாவில் மட்டும் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 9 கோடி பேர் வசித்து வருகின்றனர். இவர்களின் பலரும் மகன் மற்றும் மருமகள்களால் சத்தமில்லாமல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.ஹெல்ப் ஏஜ் இந்தியா என்ற நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மூத்த குடிமக்கள் மீது நிகழ்த்தப்படும் குற்றங்கள் 41 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

உதாசீனத்தால் பாதிப்பு: இந்த வன்முறை சம்பவங்கள் மூத்த குடிமக்களை பெரிதும் பாதித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினர் செய்யும் உதாசீனம் அவர்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்துவதும் தெரியவந்துள்ளது. நமக்கும் முதுமை வரும் என்பதை இன்றைய தலைமுறையினர் உணர்ந்து கொண்டு வயதானவர்களின் மீதான வன்முறைப் போக்கினை கைவிட வேண்டும்.முன்பெல்லாம் மாமியார் கொடுமைதான் அதிகம் பேசப்படும். ஆனால் இன்றோ மருமகள்களால் அவதிப்படும், அல்லலுறும், சித்திரவதைக்குள்ளாகும் மாமியார்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாம்.

வீட்டில் நிலவும் இப்படிப்பட்ட நிம்மதியில்லாத நிலைமை, அல்லலிருந்து தப்பிக்க விரும்புவது ஆகியவை காரணமாக உறவுகள் எல்லாம் இருந்தும் கூட முதியோர் காப்பகங்களை நாடி வரும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. பல வீடுகளில், பிள்ளைகளே, தங்களது பெற்றோர்களை காப்பகஙக்ளுக்கு அனுப்பி வைத்து விடும் அவலங்களும் கண் கூடாகி வருகிறது. வயது முதிர்ந்தவர்களுக்காக உதவி புரிவதற்காகவே ஹெல்ப் ஏஜ் இந்தியா என்ற நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக சேவை புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராசி பலன் (10-6-2011 முதல் 16-6-2011

மேஷம்: 


பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் சிறப்பாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். உடல் நலம் மேம்படும். பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். பெரியோர் ஆசி கிடைக்கும். வீண் பேச்சைக் குறைக்கவும். உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.

வேலை பார்ப்போருக்கு:அலுவலகத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.
ரிஷபம்:                                                                                                                            
 

பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பொருளாதாரம் மேம்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். பண வரவு நன்றாக இருக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். உடல் நலனில் கவனம் தேவை. வேலை பார்ப்போருக்கு: வேலைகள் திட்டமிட்டபடியே முடியும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. தடைகள் அகலும். மனதில் நிம்மதி ஏற்படும்.
மிதுனம்:  
                                                                                    

பொது: வெற்றிகரமான வாரம். எடுக்கும் காரியங்களை நல்லபடியாக முடிப்பீர்கள். சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். அதனால் நன்மை பெறக்கூடும். அசையா சொத்துகள் வாங்கலாம். வழக்குகள் சாதகமாக முடியும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். உடல் நலம் மேம்படும். கணவரை அனுசரித்துச் செல்லவும். உறவினர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். மனதில் புது தெம்பு பிறக்கும்.


கடகம்:
                                                                                      

பொது: நன்மையான வாரம். கனவு நனவாகும். பண வரவு சீராக இருக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்த விஷயம் ஒன்று நடக்கும். சகல சவுக்கியங்கள் பெற்று மகிழ்வீர்கள். பெரியவர்கள் நட்பு கிடைக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக இருக்கும். குடும்பத்தாரிடையே மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும்.
வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் சிறப்பாக செயல்படுவீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.


சிம்மம்:                                                                                           


பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்களை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். பேச்சில் வசீகரம் இருக்கும். எதிர்பாராத பயணம் மேற்கொள்ளக்கூடும். பகைகள் அகலும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும். இறையருள் கிடைக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். குழப்பங்கள் தீரும். மனம் தெளிவு பெரும். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு குறையும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு ஊதிய உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைத்து மகிழக்கூடும். செயல்திறன் அதிகரிக்கும்.

கன்னி: 
பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மனதில் புது தெம்பு பிறக்கும். அசாதாரணமான மனோதைரியம் உண்டாகும். பண வரவு நன்றாக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடியும்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். வீண் செலவுகளைக் குறைக்கவும். உடல் நலனில் கவனம் தேவை. கணவர் பாராட்டக்கூடும். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீண் பேச்சைக் குறைக்கவும். பொருளாதாரம் மேம்படும்.

துலாம்:
பொது: அமைதியான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். பண வரவு நன்றாக இருக்கும். வீடு மாற்ற உகந்த வாரம்.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். உறவினர்களை அனுசரித்து நடப்பீர்கள். பிரச்சனைகளை சாமர்த்தியமாக தீர்ப்பீர்கள். எதையும் துணிவுடன் எதிர்கொள்ளக்கூடும். வேலை பார்ப்போருக்கு: கடுமையாக உழைக்கக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைத்து மகிழ்வீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்ப விஷயங்களைப் பற்றி யாரிடமும் பேச வேண்டாம்.

விருச்சிகம்:
பொது: சாதகமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். இல்லத்தில் சுபநிகழ்ச்சி நடத்தி மகிழக்கூடும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நல்ல செய்தி ஒன்று வீடு தேடி வரும். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். வேலையில் கவனம் தேவை. இல்லையெனில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம்.

தனுசு:
பொது: வெற்றிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. சமுதயாத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல் நலம் மேம்படும்.

பெண்களுக்கு: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழக்கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். மனோதைரியம் அதிகரிக்கும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். தடைபட்டிருந்த காரியங்கள் கூட வெற்றிகரமாக முடியும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்.

மகரம்:

பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எண்ணங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். யாருக்கும் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டாம். எதிர்பாராத தனலாபம் உண்டு.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். பண வரவு நன்றாக இருக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: எதிர்பாராத நிம்மதி கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளலாம். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு.


கும்பம்
  
பொது: மிதமான வாரம். கடுமையாக உழைக்கக்கூடும். மனதில் ஏதோ இனம்புரியாத பயம் ஏற்படலாம். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. பண வரவு சீராக இருக்கும். உடல் நலனில் கவனம் தேவை. பெரியவர்களை சந்தித்து நன்மை பெறக்கூடும்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: தேவையற்ற அலைச்சல் உண்டாகும். வெளியூர் பயனத்தில் வெற்றி கிடைப்பதில் சிரமம் ஏற்படும். சக ஊழியர்களிடம் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.

மீனம்:

பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். எதிலும் நிதானத்துடன் செயல்படவும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். பண வரவு நன்றாக இருக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரக்கூடும். மனதைக் கட்டுப்படுத்தவும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் சக ஊழியர்கள் ஆதரவோடு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வீண் பேச்சைக் குறைக்கவும். அடுத்தவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம்.

Hyosung superbikes launched in India (CHENNAI) at a price range of Rs 4,75,000 to Rs 5,69,000


சென்னையில் ஹயோசங் சூப்பர் பைக்குகளுக்கான பிரத்யேக ஷோரூமை கார்வேர் மோட்டார்ஸ் நிறுவனம் திறந்துள்ளது.

தென்கொரியாவை சேர்ந்த எஸ் & டி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹயோசங் பிராண்டு சூப்பர் பைக்குகளை, கூட்டு குழுமத்தின் அடிப்படையில் இந்தியாவை சேர்ந்த கார்வேர் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் கார்வேர் நிறுவனம், தனது கீழ் இயங்கும் ஈஸ்வரி மோட்டார்ஸ் பெயரில் ஹயோசங் சூப்பர் பைக்குகளுக்கான ஷோரூம்களை திறந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் ஹயோசங் பைக்குகளுக்கான புதிய ஷோரூம் ஈஸ்வரி மோட்டார்ஸ் என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது.புதிய ஷோரூமில் ஜிடி650ஆர் சூப்பர் பைக்கும், எஸ்டி 7 குரூசர் பைக்கும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஷோரூமில் ஜிடி 650ஆர் சூப்பர் பைக் ரூ.4.90 லட்சம் விலையிலும், ரூ.5.69 லட்சம் ஆரம்ப விலையிலும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



South Korean two-wheeler manufacturer S&T Motors Corporation, in collaboration with Pune-based Garware Motors, Wednesday launched its Hyosung brands of 650-700 cc superbikes India at a price range of Rs 4,75,000 to Rs 5,69,000 (ex-showroom-Delhi).
"We have analysed the market very closely and we foresee a great potential for the superbike segment in India," said S&T Motors' president Taekwon Kim said.


The superbikes on offer include GT650 R and ST 7. The GT650 R is a 650cc sports bike which is priced at Rs 4,75,000 for single tone colour and Rs 4,90,000 (ex-showroom-Delhi) for dual tone colour.

இன்டிகோ - வெளிநாட்டு விமான சேவையை ஆரம்பிக்கிறது

இந்தியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்டிகோ, வரும் செப்டம்பர் முதல் வெளிநாட்டு சேவையை தொடங்குகிறது.
முதல் கட்டமாக செப்டம்பர் 1-ம் தேதி டெல்லி - துபாய் சேவையையும், செப்டம்பர் 15-ம் தேதி டெல்லி- பாங்காக் மற்றும் அக்டோபர் 2-ல் டெல்லி - சிங்கப்பூர் சேவையையும் இந்த நிறுவனம் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

"இந்த மூன்று மார்கங்களில் பயணிப்போரிடம் கட்டண வித்தியாசம் காட்டாமல், ஒரே கட்டணத்தை வசூலிக்கிறது இன்டிகோ என்பதுதான் ஸ்பெஷல். டெல்லியிருந்து, துபாய், சிங்கப்பூர் அல்லது பாங்காக் என எந்த ரூட்டில் போனாலும் கட்டணம் ரூ 9999 மட்டும்தான்," என்கிறார் இன்டிகோ தலைவர் ஆதித்ய கோஷ்.

இந்த சலுகைக் கட்டணம் முதல் 25000 இருக்கைகளுக்கு தரப்படுகிறது. டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1டி மற்றும் 1 சியிலிருந்து இன்டிகோ சர்வதேச விமானங்கள் இயக்கப்படும். அடுத்த ஆண்டு கொல்கத்தாவிலிருந்து டாகா மற்றும் பாங்காக்கு புதிய விமானங்களை இயக்குவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் இன்னும் விமான சேவை துவங்கப்படாத 34 சதவீத செக்டார்களில் புதிய சேவையைத் தொடங்கவும் இன்டிகோ முடிவு செய்துள்ளது.

2006-ல் சேவையைத் துவங்கிய இன்டிகோ, 39 விமானங்களுடன் இந்தியாவின் 26 நகரங்களுக்கிடையே இயங்கி வருகிறது. நாளொன்று 250 விமான சேவைகளைத் தரும் இந்த நிறுவனம், வரும் 2015-க்குள் 100 ஏர்பஸ்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது.

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 4வது இடம்


உலகில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. பெண் சிசுக் கொலை, குழந்தைகள் கடத்தல் உள்ளிட்டவை இந்தியாவில் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக நடத்தப்பட்ட சர்வேயில்.

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக திகழ்வது ஆப்கானிஸ்தான். 2வது இடத்தில் காங்கோவும், 3வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன. இந்த வரிசையில், 4வது இடத்தில் இந்தியாவும், 5வது இடத்தில் சோமாலியாவும் உள்ளன.

பெண்கள் உரிமைக்கான சட்டப்பூர்வ தகவல் மற்றும் சட்ட ஆதரவு அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தர வரிசைப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் 3 நாடுகள் தெற்காசியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் கொடுமைகள், சுகாதார சீர்கேடு, பாலியல் அல்லாத கொடுமைகள், கலாச்சார ரீதியிலான சித்திரவதைப் பழக்கவழக்கங்கள், மதம் அல்லது பாரம்பரியம் சார்ந்த பெண்களுக்கு எதிரான பழக்க வழக்கங்கள், கடத்தல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நாடுகள் இதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை பெண் சிசுக் கொலை, சிசுக் கொலைகள், பெண் குழந்தைகள் கடத்தல் ஆகியவை அதிகமாக இருக்கிறதாம். 2009ம் ஆண்டு இந்தியாவில் 1 கோடி பேர் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டதாக மத்திய உள்துறை செயலாளர் மதுகர் குப்தா கூறியதாக ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் 2009ம் ஆண்டு நடந்த குழந்தைகள் கடத்தல் சம்பவங்களில் 90 சதவீதம் இந்தியாவுக்குள் நடந்தவையாகும். மீதமுள்ள 10 சதவீதம் வெளிநாட்டுக் கடத்தல் சம்பவங்களாகும். மேலும் இந்தியாவில் 30 லட்சம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவர்களில் 40 சதவீதம் பேர் 18 வயதுக்குக் குறைவானவர்கள் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது. கட்டாயத் திருமணங்களும் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான முக்கியக் கொடுமைகளில் ஒன்றாக விளங்குகிறது.

தமிழ் மொழியில் அறிமுகமாகும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9

மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தி, அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துள்ளது.

பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த பிரவுசர் வெளியான போது மைக்ரோசாப்ட் இந்தியாவில் பிரபலமான 29 இணைய தளங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ பிரபலப்படுத்த இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும் என நம்பப்டுகிறது.

தமிழ் மற்றும் பிற மொழிகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை நமது கணணியில் இயக்க http://windows.microsoft.com/en-US/internet-explorer/downloads/ie-9/worldwide-languages என்ற முகவரி சென்று அங்கிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். நமது கணணியில் இயங்கும் ஆபரேட்டிங் சிஸ்டம் ( விஸ்டா/விண்டோஸ் 7 x 32 / 64 பிட் ) எது என அறிந்து அதற்கேற்ற பதிப்பினை தரவிறக்கம் செய்யலாம்.

மேலும், விண்டோஸ் எக்ஸ்பியில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 இயங்காது என்பது குறிப்பிடதக்கது. இருப்பினும் இந்த வரிசையில் மைக்ரோசாப்ட் சற்று தாமதமாகவே நுழைந்துள்ளது. ஏற்கனவே கூகுள் குரோம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த எபிக் ஆகிய பிரவுசர்கள் இந்திய மார்க்கெட்டைக் குறி வைத்து உருவாகி அமலில் உள்ளன என்பது நினைவிருக்கலாம்.

அதேசமயம், இந்திய சந்தையை மைக்ரோசாப்ட் குறி வைப்பது முதல் முறையல்ல. பொனடிக் கீபோர்ட், இந்திய மொழிகளுக்கான இன்டிங் லாங்குவேஜ் இன்புட் டூல் உள்ளிட்டவற்றை ஏற்கனவே அது அறிமுகப்படுத்தியுள்ளது. இமெயில், மெசஞ்சர் ஆகியவற்றிலும் இந்திய மொழிகளை அது ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது.

சேனல் 4 ஆவணப்படத்தை பரிசோதிப்போம்: இலங்கை அரசு!


விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்டப் போரில் நிகழ்ந்தவை தொடர்பாக சேனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப் படத்தை நிபுணர்களை வைத்து பரிசோதிக்கவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. 'இலங்கையின் கொலைக்களங்கள்' (Sri Lanka's Killing Fields) எனப் பெயரிடப்பட்ட சேனல் 4-ன் 50 நிமிட ஆவணப் படம், போர்க் குற்றங்களுக்கான மிக முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. இப்படம் நேற்று வெளியிடப்பட்டது.


இதுகுறித்து இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல அளித்த பேட்டியில், " இந்த ஆவணப் படத்தை நாங்கள் மிகவும் கவனமாக பரிசோதிப்போம். எங்களது தடயவியல் நிபுணர்களும், வெளிநாட்டு நிபுணர்களும் பரிசோதனையில் ஈடுபடவுள்ளனர். அதற்குப் பிறகு இதுகுறித்து பதில் தெரிவிப்போம்.

அதற்குள்ளாக பதில் கூறுவது காலத்துக்கு முந்தைய செயலாக அமையும். 2009-ம் ஆண்டிலும் சேனல் 4 இதுபோன்ற வீடியோ ஒன்றை ஒளிபரப்பியது. அது போலியானது என நிரூபிக்கப்பட்டுள்ளது," என்றார் அவர்.  அதேநேரத்தில், தற்போது வெளியாகியுள்ள ஆவணப் படத்தை போலியானது என்று இலங்கை ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஆவணப் படம், இலங்கை ராணுவத்தின் மீது சர்வதேச அளவிலும், உள்ளூர் மட்டத்திலும் தவறான பார்வையை ஏற்படுத்தாது என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, சேனல் 4 ஆவணப் படத்தில் காட்டப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் உண்மை என்பது தெரியவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.


பார்க்கும் விழிகள்யாவும் விதைகளாகும் ...!


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...