|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 September, 2011

மிஸ் யுனிவர்ஸ் 2011 உள்ளாடை போடமல் வந்த கொலம்பிய அழகி!



பிரேஸிலில் நடக்கும் மிஸ் யுனிவர்ஸ் 2011 போட்டிக்கு கொலம்பியா சார்பில் பங்கேற்ற மாடல் அழகி, உள்ளாடை எதுவும் அணியாமல் வந்து அதிர வைத்தார். அவரை புகைப்படமெடுத்துத் தள்ளினர் புகைப்படக்காரர்கள்.
பிரேசிலில் உள்ள சாபவ்லோ நகரில் 2011-ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி (பிரபஞ்ச அழகி போட்டி) நடைபெற்று வருகிறது. முதல் சுற்று போட்டி நேற்று நடந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் மேடையில் தோன்றினர்.

அதில், கொலம்பியா நாட்டு அழகி கேடாலினா ரொபாயோ (22) 'தம்மாத்துண்டு' குட்டை பாவாடை அணிந்திருந்தார். ஆனால் அவர் உள்ளாடை (பேண்டி) அணியவில்லை. இது போட்டியை காண வந்தவர்களையும், போட்டி நடுவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், இதை கேடாலினா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எதுவும் நடைபெறாதது போன்று சர்வ சாதாரணமாக சிரித்தபடி இருந்தார். இதனால் உற்சாகமடைந்த புகைப்படக்காரர்கள் அவரது உடை அலங்காரத்தை படம் எடுத்து தள்ளினர்.

அதேநேரம், கேடலினா செய்தது தவறு என போட்டி ஏற்பாட்டாளர்கள் கண்டித்துள்ளனர். இது தவறான முன்னுதாரணமாகிவிடும். போட்டிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அனைவரது கவனத்தையும் கவரத்தான் கேடாலினா இப்படி வேண்டுமென்றே செய்துவிட்டதாக மற்ற மாடல் அழகிகள் புகார் தெரிவித்தனர்.

Alyssa Campanella Should Win Miss Universe 2011


USA! I'm not usually much of a "Go, team, go!" kinda gal, and I'm even less of a beauty pageant fan, particularly when toddlers dressed like prostitutes are involved. BUT, that said, I can't think of a more appropriate person to win the Miss Universe Pageant on Monday, September 12 than Alyssa Campanella, Miss USA 2011. Just one day after the 10 year anniversary of 9/11? Come on, give it up for Miss USA!


I'm not the only one rooting for Campanella -- even people who follow this type of thing expect she'll at least make the Top 4. And I hope she does. To me, she proved herself as pageant royalty at the Miss USA competition when she gave the most non-commital, no-way-anybody-could-take-offense-at-this answer to her Big Question, regarding the legalization of marijuana. (The upshot: She's neither for nor against. Also, she's both.) 


Hell, this girl might even have a future in politics!

இதே நாள்...


  • லத்தின் அமெரிக்கா ஆசிரியர்கள் தினம்
  •  மகாகவி சுப்ரமணிய பாரதியார் இறந்த தினம்(1921)
  •  பாகிஸ்தானை உருவாக்கிய முகம்மது அலி ஜின்னா இறந்த தினம்(1948)
  •  நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது(2001)
  • நேருவின் ஆடம்பரத்தால் அரசுக்கு பல கோடி இழப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி!

    போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் ஆடம்பரச் செலவுகளால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார். இது தொடர்பான ஆதாரங்களை புத்தகமாக அச்சிட்டு அனைத்து எம்.எல்.ஏ.களுக்கும் வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் சனிக்கிழமை அவர் பேசியது: போக்குவரத்துக் கழகங்கள் அதிமுக ஆட்சியில் லாபத்திலும், திமுக ஆட்சியில் நஷ்டத்திலும் இயங்கி வருகின்றன.


    கடந்த அதிமுக ஆட்சியில் 90 சதவீத பஸ்கள் சாதாரண கட்டணத்தில் இயக்கப்பட்டன. திமுக ஆட்சியில் 40 சதவீத பஸ்கள் மட்டுமே சாதாரண கட்டணத்தில் இயக்கப்பட்டன. கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கே.என். நேருவும், திமுகவினரும் போக்குவரத்துத் துறையின் பணத்தை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியுள்ளனர். போக்குவரத்துத் துறையின் பணத்தில் 17 சொகுசு கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கார்கள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, முன்னாள் அமைச்சர்கள் க. பொன்முடி. ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளன.

    நேரு தனக்காக மட்டும் 8 சொகுசு கார்களை பயன்படுத்தியுள்ளார். அவரது 3 உதவியாளர்களுக்காக 6 கார்கள் வழங்கப்பட்டுள்ளன.
    இந்த சொகுசு கார்கள் அனைத்தும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திமுகவினரின் குடும்பத்தினர், உறவினர்கள் போன்றோர் பயன்படுத்தி வந்தனர். இதன் மூலம் போக்குவரத்துத் துறைக்கு ரூ. 5 கோடி விரயம் ஏற்பட்டுள்ளது.
    ஜவாஹர்லால் நேரு, அவரது தந்தை வாங்கிக் கொடுத்த 4 கார்களை மட்டுமே பயன்படுத்தினார். ஆனால், இந்த கே.என். நேரு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் உழைப்பால் கிடைத்த பணத்தில் 8 கார்களை வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார். கடந்த திமுக ஆட்சியில் அமைச்சரின் அலுவலகச் செலவு என்ற வகையில் ரூ. 36 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள நேருவின் வீட்டுக்கு வரும் திமுகவினர், உறவினர்களுக்காக இந்தத் தொகை செலவு செய்யப்பட்டுள்ளது.

    அமைச்சரின் அலுவலகம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கும்போது, திருச்சியில் உள்ள அமைச்சரின் வீடு முகாம் அலுவலகம் என்று கூறப்பட்டு இந்தச் செலவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல அமைச்சரின் வருகை செலவு என்ற வகையில் ரூ. 35 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. ஆனால்,  குறிப்பட்ட நாளில் பணிமனைகள், அலுவலகங்களுக்கு அமைச்சர் வருகை தந்ததாக குறிப்பேட்டில் பதிவு செய்யப்படவில்லை.

    கடந்த திமுக ஆட்சியில் நல்ல நிதியுடன் கவனித்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர், நடத்துநர் போன்ற பணிகள் வழங்கப்பட்டன. தருமபுரி மண்டலத்தில் பணத்தைப் பெற்றுக் கொண்டு தேவைக்கும் அதிகமாக 687 ஓட்டுநர்கள், 964 நடத்துநர்களை நியமித்துள்ளனர். இவர்களுக்கு பணி கொடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டது. இவ்வாறு தேவைக்கு அதிகமான நியமனங்களால் அரசுக்கு ரூ. 70 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. திருச்சி அருகே உள்ள தனது தோட்டத்துக்கு நேரு செல்லும்போது போக்குவரத்து நெரிசலால் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்படுகிறது. உடனே அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என உத்தரவிடுகிறார். அதன் காரணமாக அரசு பஸ்கள் 2 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் வகையில் திருப்பி விடப்பட்டன. இதனால் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ. 51 லட்சம் விரயம் ஏற்பட்டுள்ளது.

    2010-11-ம் ஆண்டில் மட்டும் திமுகவினர் மற்றும் வேண்டியவர்களுக்காக மட்டும் நேரு 540 இலவச பஸ் பாஸ்களை வழங்கியுள்ளார். இதன் மூலம் ரூ. 4 கோடி விரயம் ஏற்பட்டுள்ளது. திமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பலர் வேலைக்கு செல்லாமல் சம்பளம் பெற்றதன் மூலம் சுமார் ரூ. 23 கோடி விரயம் ஏற்பட்டுள்ளது.

    அதுபோல நேருவின் உறவினர் நிறுவனங்களின் விளம்பரங்கள் பஸ்களில் அதிகமாக இடம் பெற்றதால் போக்குவரத்து கழகத்துக்கு கிடைக்க வேண்டிய விளம்பர வருவாய் கிடைக்கவில்லை. கடந்த 3 மாத அதிமுக ஆட்சியில் விளம்பரம் மூலம் ரூ. 1.17 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
    போக்குவரத்து கழகங்களுக்கு ரூ. 2,017 கோடி கடன் நிலுவையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் ஆடம்பரச் செலவுகளும், லஞ்ச முறைகேடுகளுமே இதற்கு  காரணம். நேரு செய்த செலவுகளை ஆதாரத்துடன் இரண்டு புத்தகங்களாக அச்சிடப்பட்டுள்ளன. அவை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும். இந்தத் துறை சீர் செய்யப்பட்டு லாபத்துடன் இயங்கும் துறையாக மாற்றப்படும். பஸ் வசதி இல்லாத அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி ஏற்படுத்தப்படும் என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

    கொலையும் செய்வாள் பத்தினி !


    நெல்லை அருகே உள்ள குறிச்சிகுளத்தில் லாரி டிரைவர் பாபு என்பவர் கடந்த 26.07.2011 அன்று மர்மமான முறையில் இறந்தார். அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சு திணறி இறந்ததாக தெரிய வந்தது. இதுகுறித்து தாளையூத்து போலீசார் விசாரணை நடத்தி இரண்டு மாதங்களுக்கு பிறகு 09.09.2011 அன்று பாபுவின் மனைவி உமாவை (27) கைக்குழந்தையுடன் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் சோர்சு சொல்லுவதாவது, தாளையூத்தில் பாபு அவரது மனைவி உமா, இவர்களது வீட்டருகே நல்லசாமி (37) குடும்பத்தோடு குடியிருந்து வந்தார். நல்லசாமி அங்கே லாரி செட் நடத்தி வந்தார். நல்லசாமியிடம் கடந்த 2009 முதல் லாரி டிரைவராக பாபு வேலை பார்த்தார். இதன் காரணமாக பாபு அடிக்கடி வெளியூர் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போதைய நேரங்களில் நல்லசாமி அடிக்கடி உமாவின் வீட்டிற்குள் சென்று வந்ததால் அவர்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இறுக்கமானார்கள். 

    இதனை அறிந்த பாபு, அங்கிருந்து 2010ம் ஆண்டு தன்னுடைய வீட்டை மாற்றி, மானூர் அருகே உள்ள குறிச்சிக்குளத்தில் குடியேறினார். மேலும், நல்லசாமியிடம் பார்த்த டிரைவர் வேலையை விட்டுவிட்டார். பின்னர் வேறொரு லாரி ஒன்றில் டிரைவர் வேலைக்கு சென்று விட்டார்.பாபு வீடு மாறினாலும் உமாவுக்கும் நல்லசாமிக்கும் உள்ள கள்ளத்தொடர்பு நீடித்தது. இதற்கிடையே 20.107.2011 அன்று தன் வீட்டுக்கு பாபு வந்தபோது, அங்கு உமாவும் நல்லசாமியும் தனிமையில் இருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்தார். ஆத்த்திரம் அடைந்தவர் நல்லசாமி மற்றும் உமாவை தாக்கினார். இதனால் நல்லசாமியும் கர்ப்பமாக இருந்த உமாவும் பாபு உயிரோடு இருந்தால் தங்களது காதலுக்கு இடையூறாக இருக்கும். மேலும் தங்களது உல்லாசம் தொடர வேண்டுமானால் பாபுவை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டனர். 
    இதையடுத்து கடந்த 26.07.2011 அன்று இரவு பாபு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, உமா பாபுவின் இரு கால்களையும் பிடித்துக்கொள்ள, நல்லசாமி தலையணையால் பாபுவின் முகத்தில் அழுத்தினார். இதனால் மூச்சுத் திணறி பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    பின்னர் காலையில் உமா, தன் கணவர் பாபு இறந்துவிட்டாக கூச்சல் போட்டப்படியே வெளியே ஓடினார். அதைக்கண்டு பதறிப்போன அக்கம் பக்கத்தினர் பாபுவை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் பாபு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


    இதற்கிடையே பாபுவின் உறவினர்கள், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதனை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று தாளையூத்து போலீசில் புகார் செய்தனர். பாளை அரசு மருத்துவக் கல்லூரியில் பாபுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த உமாவுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பாபுவின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், பாபு மூச்சுத் திணறி கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. 


    இதனைக்கண்டு அதிர்ந்த தாளையூத்து போலீசார், சந்தேகம் மரணத்தை கொலை வழக்கமாக மாற்றி உமாவை விசாரித்தனர். தனது கணவரை நல்லசாமியுடன் சேர்ந்து தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதற்கு காரணம் கள்ளக்காதலால் ஏற்பட்ட விளைவு என்றார். விசாணை நடத்திய போலீசார், உமாவை கைக்குழந்தையுடன் கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட நல்லசாமியை போலீசார் தேடி வருகின்றனர். கணவனே கண் கண்ட தெய்வம் என்கிற கலாச்சாரம், கல்லறைக்குள் போய்விட்டது என எண்ணத் தோன்றுகிறது உமாவின், அடுத்தவனுக்கு முந்தி விரிப்பு வாழ்க்கை. 

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...