|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 February, 2012

இதே நாள்...


  • இந்திய தேசிய அறிவியல் தினம்
  •  இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் இறந்த தினம்(1963)
  •  முதல் வளைகுடா போர் முடிவு பெற்றது(1991)
  •  வொலஸ் கரோதேர்ஸ் என்பவரால் நைலான் கண்டுபிடிக்கப்பட்டது(1935)
  •  எகிப்தின் விடுதலையை யூ.கே., அங்கீகரித்தது(1922)

அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி தங்களுக்கு மீண்டும் பணி வழங்காத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
 தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றிய 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி கடந்த நவம்பர் 8-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
 இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி மக்கள் நலப் பணியாளர் சங்கங்களின் நிர்வாகிகள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.


 இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சுகுணா கடந்த ஜனவரி 23-ம் தேதி தீர்ப்பளித்தார். மக்கள் நலப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்றும், அவர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கி, அவர்களுக்கான பணப் பலன்கள் முழுவதையும் வழங்கிட வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.  இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட மக்கள் நலப் பணியாளர் நலச் சங்கத் தலைவர் என். செல்லப்பாண்டியன் தமிழக அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


 மக்கள் நலப் பணியாளர்களின் பணி ஒப்பந்தக் காலம் வரும் மே 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதுவரை மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி வழங்குவதில்லை என்ற நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது.  எனவே, நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்லப்பாண்டியன் தனது மனுவில் கூறியுள்ளார்.  இந்த மனு நீதிபதி கே. சுகுணா முன்னிலையில்  திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
 அப்போது, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்

பார்த்ததில் பிடித்தது!

எப்படி எல்லாம் யோசிக்கறாங்க.... ? கத்தி சொருகி வைக்க...!! 


நாளைக்கு சின்ன பசங்க இதை பார்த்துட்டு கத்தியை சொருக தலையை 


தேடப்போவுதுங்க...!!!


அணுஉலை எதிர்ப்பிற்கு தமிழகத்தில் ஆதரவு இல்லை என்ற நச்சான 


கருத்துக்களை கூறி படமெடுத்து ஆடிய நச்சி பாம்புகளை தலைநகரத்திலேயே 


கூடி தலையில் தட்டி போட்ட அணு உலைக்கு எதிரான மக்கள்கூட்டம்!


நட்பு வலியது....

அது எளிதாய் எல்லோரையும் இணைத்துவிடும்"


மக்கள் விரோத மத்திய அரசே!

கூடங்குளம் அணுமின் திட்டத்தை நிறுத்து!


Tamil nadu electricity board ROCKZZZZZZ...


ஐநாவை முற்றுகையிட ஐம்பதாயிரம் மக்கள் ஐரோப்பா எங்கும் 


அணிதிரள்கின்றனர் .


Jai-Ho Moment !!!

Indian Hockey Team Qualified for London Olympics 2012 


Nature at it's extreme ..



இதெல்லாம் டூ மச்


பணத்திற்கு ஆசைப்பட்டு வேறு ஒரு பெண்ணின் கரு மூட்டையை பயன்படுத்தி செயற்கை கருத்தரிப்பு தடை விதிக்க போப் ஆண்டவர் வேண்டுகோள்!


ரோம் நாட்டில் உள்ள வாடிகன் நகரத்தில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கான 3 நாள் சிறப்புக்கூட்டம் நடந்தது. இதில் போப் ஆண்டவர் ஜான் பெனடிக்ஸ் கலந்து கொண்டு  அப்போது அவர்,   ‘’உலகம் முழுவதும் தற்போது குழந்தை இல்லாத தம்பதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருமணமான பிறகு தங்கள் நினைக்கும் நேரத்தில் குழந்தை பெற வேண்டும் என்று குழந்தை பிறப்பை தள்ளிப்போடுகிறார்கள். ஆனால் அவர்கள் குழந்தை பெற நினைக்கும் போது கருச்சிதைவு ஏற்படுகிறது. இதனால் மனம் உடைந்து போகும் அவர்கள் உடலுறவு மூலம் குழந்தை பெற முயற்சி செய்வதில்லை.உடனே அவர்கள் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்களிடம் சென்று செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற முயற்சிக்கிறார்கள்.

டாக்டர்களும் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு வேறு ஒரு பெண்ணின் கரு மூட்டையை பயன்படுத்தி செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தையை உருவாக்குகிறார்கள். சிலர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. செயற்கை கருத்தரிப்பு கடவுளின் படைப்புக்கு விரோதமானது. எனவே அதை உலகம் முழுவதிலும் தடை செய்ய வேண்டும். குழந்தையின்மைக்கான பரிசோதனைகளை செய்து குறைபாட்டை நீக்கலாம். ஆனால் செயற்கை கருத்தரிப்பை கிறிஸ்தவர்கள் ஆதரிக்கக்கூடாது. செயற்கையான முறையில் குழந்தைகளை உருவாக்கும் முறையை ஒழிக்கவேண்டும்’’என்று கூறினார். 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...