|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 October, 2012

பூஜை என்ற அடைமொழி சரஸ்வதி பூஜைக்கு தான்.

 சரஸ்வதி பூஜை நடத்த நல்ல நேரம்: காலை 10.45 - 11.45 மணி. ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும். படத்திற்கு அருகம் புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும். மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, அதன்மேல் படத்தை வைக்க வேண்டும்.  படத்தின் முன் இலைவிரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல், தண்ணீர் ஆகியவற்றைப் படைக்க வேண்டும். கற்பூரம் அல்லது நெய்தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள், படிப்புச் செலவிற்கு பணஉதவி ஆகியவற்றை வசதிக்கு தக்கபடி கொடுக்க வேண்டும். மறுநாள், காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் படத்தை எடுத்து விட வேண்டும். முகம் வைத்திருந்தால் அதை நீர்நிலையில் கரைக்க வேண்டும்.  

சரஸ்வதிபூஜை - அர்த்த்ம்: பண்டிகைகளில் பூஜை என்ற அடைமொழி சேர்ந்திருப்பது சரஸ்வதி பூஜைக்கு தான். தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என்று சொல்வதில்லை. பூஜை என்ற சொல் பூஜா என்பதில் இருந்து பிறந்தது. பூ என்றால் பூர்த்தி. ஜா என்றால் உண்டாக்குவது. தான் என்ற அகங்காரம், அடுத்தவனை விட நன்றாக வேண்டுமென்ற பொறாமை, உலக வாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. இதையே சைவசித்தாந்தத்தில் ஆணவம், கன்மம், மாயை என்கிறார்கள். இந்த மும்மலங்களையும் அகற்றி ஞானத்தை உண்டாகச் செய்வதே பூஜை. சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால், அவளது விழாவுக்கு மட்டும் பூஜை என்ற அடைமொழி இணைந்தது.  

சாமுண்டிதேவி: நவராத்திரியில் ஒன்பதாவது நாள் தேவியானவள் சாமுண்டி மாதா என அழைக்கப்படுகிறாள். இந்த நாள் தேவிக்கு மிகவும் சிறப்பு தரும் நாளாகும். சப்தமாதர்களுள் ஒருத்திதான் சாமுண்டி. துர்க்கா தேவி மகிஷனை வதம் செய்யப் போகும் போது அவளை எதிர்த்து சண்டையிட மகிஷனின் அமைச்சர்களாகிய சண்டன், முண்டன் வந்தனர். துர்க்காதேவி தன் அம்சமான சாமுண்டி தேவியை அனுப்பி சண்டனையும் முண்டனையும் அழிக்குமாறு பணித்தாள். அசுரனின் அமைச்சர்கள் இருவரையும் வீழ்த்தியதால் அதாவது சண்ட முண்ட வதம் செய்ததால் சாமுண்டி என அவள் அழைக்கப்பட்டாள். சாமுண்டி தேவியை வழிபடுவது பண்டைய காலம் தொட்டு இருந்து வரும் வழக்கம். நாகை மாவட்டத்தில் பூவனுர் என்ற ஊரில் சாமுண்டிக்கு தனிச் சன்னதி உண்டு. சில சிவாலயங்களில் சப்தமாதர்கள் வரிசையில் சாமுண்டியின் திருவுருவம் இருக்கும். நான்கு கைகளும், மூன்று கண்களும், கோரைப் பற்களும், உக்ரமான திருமுகமும் உடைய நிலையில் இவள் உருவம் இருக்கும். புலித்தோலை ஆடையாக அணிந்திருப்பாள். கத்தி, சூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தியிருக்கும் இவளுடைய மற்றொரு கை அபய ஹஸ்தமாக இருக்கும். சிறிய மணிகளால் ஆகிய மாலை தாங்கியிருப்பாள். சாமுண்டி தேவியை வழிபடுவதால் ஏவல், பின்னி, சூன்யம் வைப்பு முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும். பகை, அர்த்தமற்ற அச்சம் விலகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நவராத்திரி ஒன்பதாம் ஆலயங்களில் உள்ள சப்தமாதர் வரிசையில் கொலுவிருக்கும் சாமுண்டி தேவியை வழிபட்டால் எல்லா நன்மைகளும் தேடி வரும்.

நடவடிக்கையை நிறுத்துமாறு உத்தரவிடுங்கள்.


கள்ளநோட்டை கண்டறிவதற்காக வாடிக்கையாளரிடம் கையெழுத்து வாங்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தவிட்டுள்ளது. கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில கடைகள், வணிக நிறுவனங்களுக்கு செலுத்தும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளின் எண்களை எழுதி கையெழுத்திடுமாறு வாடிக்கையாளர்களை வற்புறுத்தினர். சிலர் பணத்தை வாங்க மறுத்தனர். இதனால் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இது ரிசர்வ் வங்கி ஆலோசனைக்கு சென்றதும் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பது குற்றம் என அறிவித்தனர்.கள்ள நோட்டை புழக்கத்தை கண்டறிவதற்காக வாடிக்கையாளர்களிடம் கையெழுத்து வாங்கும் நடைமுறையை நிறுத்துமாறு வங்கிகள், அரசு துறைகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறித்தியுள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கையெழுத்து பெறும் நிலை இன்னும் நீடிக்கிறது.
இது குறித்து நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து அவர் கடிதத்தில் குறிப்பிட்ட வங்கி, காப்பீ்ட்டு, மின்வாரிய அலுவலகங்களுக்கு ரிசர்வ் வங்கி பொது மேலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ரூ.1000, ரூ.500 நோட்டுகளின் எண்களை எழுதி வாங்கி கையெழுத்திடுமாறு உங்கள் வங்கி கிளையில் கூறுவதாக புகார் வந்துள்ளது. இது குறித்த உங்கள் அலுவலகத்தில் இருந்து குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளதா என எங்களுக்கு தெரிவிக்கவும். இல்லாவிட்டால் உங்கள் கிளைகளுக்கு இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு உத்தரவிடுங்கள். அதிக அளவில் பணம் பெறும் கிளைகளில் கள்ள நோட்டை கண்டறியும் புற ஊதா கதிர் விளக்குகளையோ வேறு அங்கீகரிக்கப்பட்ட எந்திரங்களையோ நிறுவுங்கள் என அறிவுறுத்தியுள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...