|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 August, 2011

6 லட்சம் கட்டி விடிய விடிய ஆடிப் பாடி, குடித்துக் கொண்டாட அனுமதிக்கும் ஹோட்டல்!

மும்பையில் உள்ள சன் அன் ஷீல் என்ற ஹோட்டலில் நடந்தேறும் இரவு நேர ரகசியங்கள், அலங்கோலங்கள் அம்பலத்திற்கு வந்து அனைவரையும் பரபரக்க வைத்துள்ளது. இந்த ஹோட்டலில் ரூ. 6 லட்சம் பணம் கட்டினால், இரவு முழுக்க டான்ஸ் பார்க்கவும், ஆடவும், மூக்கு முட்ட குடிக்கவும், செக்ஸ் வைத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படுகிறதாம். அதனால்தான் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்த திரில்லைக் கொடுக்கிறது இந்த ஹோட்டலும், அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மற்றும் உள்ளே நடக்கும் விஷயங்களும். தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பு அரணின் கீழ் உள்ள இந்த ஹோட்டலுக்குள் அவ்வளவு சீக்கிரம் யாரும் உள்ளே நுழைந்து விட முடியாது.

அந்தேரியில் உள்ள இந்த ஹோட்டலில் கடந்த வாரம் போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போதுதான் உள்ளே நடந்து வந்த அலங்கோலங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஹோட்டலில் எந்தப் பக்கம் போனாலும் விபச்சாரம் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்து போலீஸார் பயந்து போய் விட்டனராம். அத்தோடு மதுவும் லிட்டர் கணக்கில் ஊற்றி ஓடிக் கொண்டிருந்தது. கண்களைக் கூச வைக்கும் அரைகுறை ஆடைகளுடன் நடந்த கண்மண் தெரியாத ஆட்டமும் போலீஸாரை அதிர வைத்தது. படு ரகசியமாக இந்தத் 'தொழிலை' நடத்தி வந்துள்ளது இந்த ஹோட்டல் நிர்வாகம். அதை விட முக்கியமாக படு தெளிவாக திட்டமிட்டு செயல்பட்டு வந்துள்ளனர்.

இங்கு ஒரு இரவுக்கு ரூ. 6 லட்சம் கட்டணம் வாங்கி வந்துள்ளனர். அந்த இரவு முழுவதும் நம் இஷ்டப்படி உள்ளே கொட்டமடிக்கலாம். விடிய விடிய குடிக்கலாம், விரும்பும் வரை டான்ஸ் ஆடலாம், போர் அடித்தால் பொழுதுபோக்க பெண்களையும் ஏற்பாடு செய்து தரும் ஹோட்டல் நிர்வாகம். அவர்களுடன் கூத்தடிக்கலாம். எல்லாவற்றுக்கும் கட்டணம்தான் இந்த ரூ. 6 லட்சம். அதேசமயம், யார் வேண்டுமானாலும் போய் பணத்தைக் காட்டி உள்ளே போய் விட முடியாது. மாறாக, இந்த ஹோட்டலுக்கு ரெகுலராக வருவோர் யாராவது ரெபரன்ஸ் செய்தால்தான் அனுமதி கிடைக்கும்.

ஹோட்டலுக்குள் திடீரென யாராவது 'எதிரிகள்' (அதாவது போலீஸார்) புகுந்து விட்டால், தப்பித்து வெளியேறுவதற்காக ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகளையும் செய்து வைத்துள்ளது இந்த ஹோட்டல் நிர்வாகம். இதற்காக ரகசியப் பாதைகளையும் அமைத்து வைத்துள்ளனர். உள்ளே 'ஆடி'க் கொண்டிருப்பவர்களுக்கு சிக்னல் கொடுக்க எலக்ட்ரானிக் சிஸ்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் டான்ஸ் ஆடுவோர் உடை மாற்றிக் கொள்ளவும் பல ரகசிய அறைகளை அமைத்து வைத்துள்ளனர்.

ஹோட்டலுக்கு வெளியே பார்த்தால் படு சாதாரணமாகத்தான் காட்சி தருகிறது. ஆனால் உள்ளே போனால் யாரும் மிரண்டு விடுவார்கள். அத்தனை நவீன வசதிகளுடன் உள்ளது இந்த ஹோட்டல். இரவுதான் இந்த ஹோட்டலுக்கு வேலையே. காலை 6 மணி வரை படு பிசியாக இருக்குமாம் இந்த ஹோட்டல். இந்த ஹோட்டலுக்கு வருவோர் பெரும்பாலும் தொழிலதிபர்கள்தான்.

ரெய்டுக்குப் பின்னர் ஹோட்டலின் உரிமையாளர் லால்ஜி சிங் என்கிற வினோத் சிங் உள்ளிட்ட 45 ஆண்களும், 6 பெண்களும் கைது செய்யபப்ட்டுள்ளனர். இதில் உரிமையாளர் சிங்கை, துபாய் போலீஸாரும் ஒரு மோசடி வழக்கில் தேடிக் கொண்டுள்ளனர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவருக்கு எதிராக இன்டர்போல் அலர்ட்டும் நிலுவையில் உள்ளதாம்.

சிங்குக்கு துபாய், மொரீஷியஸிலும் ஹோட்டல்கள் உள்ளனவாம். அங்கும் இதுபோலத்தான் தொழில் நடந்து வருகிறதாம்.

ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஷூட்டிங் இந்தியாவில்!

உலகப் புகழ் பெற்ற ஒற்றன் ஜேம்ஸ் பாண்ட் விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளார். அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஷூட்டிங்கை இந்தியாவில் நடத்தத் திட்டமிட்டுள்ளனராம்.டெல்லியின் சரோஜினி நகர் மார்க்கெட் மற்றும் அகமதாபாத்தின் நவகாம் நகர் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெறவுள்ளதாம். மேலும் மும்பை மற்றும் கோவா கடற்கரைப் பகுதிகளிலும் ஷூட்டிங் நடைபெறும் என்று தெரிகிறது.

இந்தியாவில் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஷூட்டிங்கை நடத்தத் தேவையான அனுமதியை மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஏற்கனவே கொடுத்து விட்டதாம். பாண்ட் பட வரிசையில் இது 23வது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் டெல்லியில் தொடங்கவுள்ளது. சரோஜினி நகர் மார்க்கெட் தவிர அன்சாரி சாலை, தார்யாகஞ்ச் ஆகிய பகுதிகளிலும் ஷூட்டிங் நடைபெறவுள்ளது. சாம் மென்டிஸ் படத்தை இயக்குகிறார். 2012ல் இப்படம் திரைக்கு வரும். பாண்ட் பட நிறுவனம் மற்றும் அப்படத்தின் முக்கிய கேரக்டரான டாக்டர் நோ ஆகியோருக்கு இது 50வது வருடம் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி தவிர வடக்கு கோவா, தென் கிழக்கு ரயில்வேயின் கீழ் வரும் துத்சாகர் சுரங்கப் பாதை, ஜூவாரி ரயில் பாலம் ஆகியவற்றிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது. வெளிநாட்டுப் படம் ஒன்றின் ஷூட்டிங் இந்தியாவில் நடைபெறுவது இது முதல் தடவையல்ல. ஏற்கனவே டாம் க்ரூஸ் நடித்த மிஷன் இம்பாசிபிள் உள்பட இதுவரை 22 வெளிநாட்டுப் படங்களுக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்துள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் 007, ஒரு கற்பனைக் கதாபாத்திரமாகும். இயான் பிளமிங் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் 1953ல் இந்த கதாபாத்திரத்தை வைத்து நூல்களை எழுதினார். மொத்தம் 12 நாவல்களையும், 2 சிறுகதைத் தொகுப்புகளையும் பாண்ட் கேரக்டரை வைத்து அவர் உருவாக்கியுள்ளார். அதை அடிப்படையாக வைத்துத்தான் இதுவரை 22 படங்கள் உருவாகி உலகெங்கும் பாண்ட்டுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களைத் தேடிக் கொடுத்துள்ளன.

1962ம் ஆண்டு முதல் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளியாகத் தொடங்கின. முதல் படத்தின் பெயர் டாக்டர் நோ. இது ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் இடம்பெறும் முக்கிய கேரக்டராகும். 1964ல் பிளமிங் மரணமடைந்தார். இதையடுத்து பின்னர் வெளியான பாண்ட் கதைகளை கிங்ஸ்லி அமிஸ், ஜான் கார்டினர், ரேமான்ட் பென்சன், செபாஸ்டியன் பால்க்ஸ், ஜெப்ரி டீவர் ஆகியோர் எழுதினர்.

ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்த முதல் நடிகர் சீன் கானரி. மொத்தம் 6 படங்களில் அவர் நடித்துள்ளார். அதிகபட்ச ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்தவர் ரோஜர் மூர். மொத்தம் 7 படங்களில் இவர் நடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்து, அதிகபட்சமாக 4 படங்கள் வரை பியர்ஸ் பிராஸ்னன் நடித்துள்ளார்.

தற்போது ஜேம்ஸ் பாண்ட் வேடங்களில் நடித்து வருபவர் டேணியல் கிரேக். இவர்தான் இதுவரை நடித்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர்களிலேயே அதிக அளவில் பிரபலமாகாத பாண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்ட் வேடங்களுக்கு நடிக்கப் பொருத்தமில்லாதவர் என்று ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டவர் கிரேக்.

இயான் புரடக்ஷன்ஸ் நிறுவனம்தான் இப்படங்களைத் தயாரித்து வருகிறது. கடைசியாக வெளியான ஜேம்ஸ் பாண்ட் படம் குவான்டம் ஆப் சொலஸ். 2008ல் இது வெளியானது.

போலீசாருக்கு பர்தாவை விலக்கி முகத்தை காட்டாவி்ட்டால் 1 ஆண்டு சிறை!

முஸ்லீம் பெண்கள் அணிந்துள்ள பர்தாவை, போலீசார் கூறினால் நீக்கி முகத்தை காட்ட வேண்டும். அதற்கு மறுப்பு தெரிவித்தால், 1 ஆண்டு வரை சிறைத் தண்டனை அளிக்கப்படும், என ஆஸ்திரேலியா அரசு கெடுபிடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில், சமீபத்தில் குற்றவாளியான ஒரு கிறிஸ்துவ பெண்ணிற்கு பதிலாக, பர்தா அணிந்த முஸ்லீம் பெண் ஒருவர் போலீசாரால் தவறுவதாக கைது செய்யப்பட்டார். பின்னர், சோதனையில் அவரல்ல என கண்டறியப்பட்ட பிறகு விடுவிக்கப்பட்டார்.

பொது இடங்களில் பெண்கள், பர்தா அணிந்து வருவதால், குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் தப்புவதற்கும் வாய்ப்புள்ளது. இந்த குழப்பங்களை தவிர்க்கும் வகையில், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில், முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவதற்கு, அடுத்த வாரம் முதல் புதிய கட்டுப்பாடுகள் வர உள்ளது.

அதன்படி, சாலையில் செல்லும் முகமுடி அணிந்தவர்கள், ஹெல்மேட் அணிந்தவர்கள், பர்தா அணிந்தவர்கள் ஆகியோரை, சந்தேகத்தின் பேரில் முகத்திரையை போலீசார் நீக்க கூறினால், உடனே அவர்கள் முகத்தை காட்ட வேண்டும். அப்படி காட்டாதவர்களிடம் அபராதம் விதிக்கப்படும்.

அதையும் மீறினால், 1 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். முகத்தை காட்டிய பின் தங்கள் முகத்திரை போட்டுக் கொள்ளலாம். பொது இடங்களில் முகத்தை காட்ட கலாச்சாரம், மதம், தனிப்பட்ட நம்பிக்கைகள் தடுக்கும் பட்சத்தில், அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு சென்று முகத்தை காட்டலாம்.

நீதிமன்றங்களிலும் இந்த சட்டம் அமலில் இருக்கும். சந்தேகத்தின் அடிப்படையில், பெண்களின் முகத்திரையை விலக்கி பார்க்கும் அதிகாரம் போலீசாருக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தற்போது சட்டமாகவே இயற்றப்பட்டுள்ளது.பிரான்ஸ், பெல்ஜீயம், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளின் சில பகுதிகளுக்கு அடுத்தபடியாக தற்போது, ஆஸ்திரேலியாவிலும் இந்த சட்டம் அமலுக்கு வர உள்ளது.

விடுதலைப் புலிகளைக் காப்பி அடித்து இலங்கை உருவாக்கிய படகுகளை இந்தியா வாங்குகிறது!


விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்படைப் பிரிவான கடற்புலிகள் வைத்திருந்த அதி வேக இடைமறிப்புப் படகுகளைப் பார்த்து அப்படியே காப்பி அடித்து இலங்கை கடற்படை உருவாக்கிய இடைமறிப்புப் படகுகளை வாங்க இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த செய்தி உண்மையாக இருந்தால், தன்னை விட சுண்டைக்காய் நாடு ஒன்றிடமிருந்து ராணுவ தளவாடங்களை வாங்கும் முதல் உலக நாடாக இந்தியா உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் கூறப்பட்டுள்ள செய்தி:

இந்தியக் கடற்படையில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட சாகர் பிரஹாரி பால் என்ற சிறப்புப் படைப் பிரிவுக்காகவே ரூ 250 கோடி மதிப்பில் இந்தப் படகுகள் வாங்கப்பட உள்ளன. சந்தேகத்துக்கிடமான கப்பல்கள், படகுகளை வழிமறித்தல், மற்றும் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவதற்கு இந்தப் படகுகளை இந்தியா பயன்படுத்தவுள்ளது.

இந்தப் படகுகள் இலங்கையின் சோலாஸ் மரைன் நிறுவனம் 36 மாதங்களுக்குகள் கட்டிக் கொடுக்கவுள்ளது. கடற்புலிகளின் போர்த்தந்திரங்களை அடியொற்றி இலங்கை கடற்படை உருவாக்கியிருந்த சிறப்புப் படகுப் படையணியை முன்னுதாரணமாகக் கொண்டே இந்தியா சாகர் பிரஹாரி பால் என்ற இந்தப் படைப்பிரிவை உருவாக்கியுள்ளது என்று அச்செய்திகள் கூறுகின்றன.

விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற் பிரிவினர் வைத்திருந்த இடைமறிப்புப் படகுகள் அதி நவீனமானவை. மிக நுனுக்கமான முறையில் இந்தப் படகுகளை அவர் வைத்திருந்தனர். இதைக் கொண்டுதான் இலங்கைக் கடற்படையினரின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வந்தனர் கடற்புலிகள். இத்தகைய படகைப் பார்த்துதான் இலங்கை கடற்படை பின்னர் புதிய படகுகளை வடிவமைத்து ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் பயன்படுத்த ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது புலிகளை வெல்ல புலிகளின் உபாயத்தையே இலங்கை கடற்படை பயன்படுத்த வேண்டியதாயிற்று.

தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா!

தமிழக சட்டசபையில் ராஜீவ் கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனையாக தூக்குத் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டது போல ஜம்மு காஷ்மீர் சட்டசபையிலும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்க கோரலாமா என்று கேட்டுள்ளார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உமர் அப்துல்லா ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ள தகவல் கடும் கண்டனத்துக்குரியது என்று பாஜக கூறியுள்ளது.

உமர் அப்துல்லா தனது ட்விட்டர் செய்தியில், தமிழகத்தில் ஒரு தீ்ர்மானம் போட்டிருப்பதைப் போல ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையிலும் ஒரு தீர்மானம் போட்டு அப்சல் குருவின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கூறினால் இதேபோலத்தான் அமைதி நிலவுமா? நான் அப்படி நினைக்கவில்லை என்று ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனையைக் குறைக்கக் கோரும் தமிழக சட்டசபை தீர்மானத்தை விமர்சித்துள்ளார் உமர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. அதேசமயம், பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக கூறுகையில், அப்சல் குருவின் செயலை ஆதரிப்பது போல உமர் அப்துல்லாவின் செய்தி உள்ளது. இதற்கு அவர் விளக்கம் தர வேண்டும். அவரது பேச்சு அதிர்ச்சியும், வியப்பும் தருகிறது என்று கூறியுள்ளது அக்கட்சி.

யிர்ப்பிச்சை கேட்கவில்லை, மறுக்கப்பட்ட நீதியைத்தான் கேட்கிறோம்- சீமான்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிரபராதிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு மறுக்கப்பட்ட நீதியைத்தான் நாங்கள் கேட்கிறோமே தவிர யாரிடமும் உயிர்ப் பிச்சை கேட்கவில்லை என்று நாம் தமிழர் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத் இடைக்காலத் தீர்ப்பு குறித்து சீமான் கருத்து தெரிவிக்கையில், தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. நீதிக்கு கிடைத்த வெற்றி. நாங்கள் யாரிடமும் உயிர் பிச்சை கேட்கவில்லை. மறுக்கப்பட்ட நீதியைத்தான் கேட்கிறோம்.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பள்ளி, கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியுடன் திரண்டு வந்து போராட்டம் நடத்தினார்கள். இடைக்கால தடை உத்தரவு, அந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. செங்கொடியின் அர்ப்பணத்திற்கு கிடைத்த வெற்றி.

தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு முதல்வர் ஜெயலலிதா தாயுள்ளத்தோடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரச்சினையை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று மரண தண்டனையை ரத்துசெய்ய தொடர்ந்து போராடுவோம் என்றார் அவர்.

தமிழகத்தின் அன்னா ஹசாரே என்று தன்னைத் தானே வர்ணித்து பேனர்களை வைக்கச் சொல்லும் விஜய், தனக்கு சம்பளம் எவ்வளவு என்பதை வெளிப்படையாகச் சொல்வரா?



இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கண்ணன் கூறியதாவது,
இவர் திட்டமிட்டே கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்நதவரான நடிகர் விஜய், எப்படி இந்து கடவுள்களான சிவனையும், முருகனையும் படைக்க முடியும்? தமிழகத்தின் அன்னா ஹசாரே என்று தன்னைத் தானே வர்ணித்து பேனர்களை வைக்கச் சொல்லும் விஜய், தனக்கு சம்பளம் எவ்வளவு என்பதை வெளிப்படையாகச் சொல்வரா? அந்த சம்பளத்திற்கு கட்டிய வருமான வரி கணக்கை காட்டுவாரா? அவருடைய கல்யாண மண்டபம் உள்ளிட்டவற்றிற்காக கட்டப்பட்டுள்ள வணிக வரி கணக்கை காட்டுவாரா? வேலாயுதம் படத்தை எப்படியாவது ஓட வைக்க வேண்டும் என்பதற்காக விஜய்யும், அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் இந்து மதத்தை புண்படுத்தும் இதுபோன்ற செயல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். உடனடியாக இந்த பேனர்களை திருப்ப பெற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்காவிட்டால், எங்கள் கட்சி போராட்ட களத்தில் இறங்கும் என்று இந்து மக்கள் கட்சி கண்ணன் தெரிவித்துள்ளார். 

பிள்ளையார்சுழி போட்டு...


விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவதற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத்தின் பொருளைத் தொகுத்து வழங்கியுள்ளோம். இதை விநாயகரின் முன் பக்தியோடு சொல்லி வழிபடுவோருக்கு தொடங்கும் செயல்கள் யாவும் இனிதே நிறைவேறும்.

* தனக்கு மேல் வேறு ஒரு தலைவன் இல்லை என்ற ஒப்பற்ற தனிப்பெருந்தலைவனே! கஜமுகாசுரனை அழித்து தேவர்களைக் காத்தவனே! அற்புதம் நிகழ்த்துபவனே! மோதகம் ஏந்தியவனே! சந்திரனைத் தலையில் சூடியவனே! உயிர்களை முக்தி நெறியில் செலுத்துபவனே! உன்னை நம்பும் அடியவர்களின் தீவினைகளைப் போக்கி கருணை காட்டும் கணபதியே! உம்மை வணங்குகிறேன்.

* தேவாதிதேவனே! பாமரர்களின் அறியாமையைப் போக்குபவனே! வல்லமை நிறைந்தவனே! ஆனைமுகனே! கருணை மிக்க இதயம் கொண்டவனே! அப்பாலுக்கும் அப்பாலாய் வீற்றிருக்கும் பரம்பொருளே! எப்போதும் உன் திருவடியை சரணடைந்து வழிபடும் பாக்கியத்தை அருள்வாயாக.

* ஓங்கார வடிவினனே! கருணாமூர்த்தியே! பொறுமை, மகிழ்ச்சி, புகழ் மிக்கவனே! எல்லா உயிர்களும் மகிழும்படி நன்மை அருள்பவனே! பணியும் அன்பர்களின் பிழை பொறுப்பவனே! அடியார் வேண்டும் வரம் தந்தருள்பவனே! நித்ய வடிவினே! உன்னை வணங்குகிறேன்

* கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகப்பெருமானே! சிரிப்பாலே திரிபுர சம்ஹாரம் செய்த சிவபெருமானின் புதல்வனே! பக்தர்களின் துயர் களைபவனே! ஊழிக் காலத்தில் உலகத்தைக் காத்தருள்பவனே! செய்யும் செயல்களின் வெற்றிக்குத் துணைநிற்கும் ஆதிபரம்பொருளே! உன்னை சரணடைந்து போற்றுகின்றேன்.

* ஒற்றைக் கொம்பனே! கணபதீஸ்வரா! சிவபெருமானின் பிள்ளையே! ஆதி அந்தமில்லாதவனே! துன்பம் துடைப்பவனே! யோகியர் உள்ளத்தில் குடிகொண்டவனே! உன் திருவடிகளை எப்போதும் திருவடியில் வைத்து சிரம் தாழ்த்தி வணங்கும் இச்சிறியேனையும் காத்தருள்வாயாக. விநாயகப்பெருமானின் இத்துதியை அதிகாலையில் பாராயணம் செய்வோருக்கு நோய்நொடிகள் அனைத்தும் விலகும். தோஷம் யாவும் நீங்கும். வாழ்வில் உண்டாகும் துன்பம், தொல்லை யாவும் அடியோடு அகலும். குலம் தழைக்க மழலைச் செல்வம் கிடைக்கும். நற்புகழும், மேம்பாடும் உண்டாகும். அஷ்டமாசித்திகள் கைகூடும். எனவே, அந்த விக்ன விநாயகப்பெருமானை வழிபடுவோமாக.

மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். இவரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவர். எந்த சுபவிஷயத்தை செய்யத் தொடங்கினாலும், பிள்ளையாருக்கு சிதறுகாய் போட்டு,அப்பனே! விநாயகனே! தொடங்கும் செயல் தடையேதும் இல்லாமல் இனிதே நிறைவேற்றி அருள்வாய்! என்று வணங்கிவிட்டே செயல்படுவர். எழுதத் தொடங்கினாலும், பிள்ளையார்சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு என்று குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்கள் வழிகாட்டுவர். விநாயகரும் சிறந்த எழுத்தாளராகப் பணியாற்றி இருக்கிறார். தன் தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கி வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதியவர் விநாயகர். சதுர்த்திநாளில் வணங்குவோருக்கு விநாயகப் பெருமானின் அருளால் செல்வாக்கும், சொல்வாக்கும் உண்டாகும்.

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!


பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சர் தகுதி பரிசு பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் கே.. அண்ணாமலை (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக அரசின் சார்பில் 2011ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1055 மற்றும் அதற்கு மேலும் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 1077 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம்மாறிய கிறிஸ்தவ மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் தகுதி பரிசு வழங்கப்பட்டு வருகிறதுஇத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு ரூ.1500 வீதம் தொடர்கல்வி படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, தமிழ்மொழியை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். தொடர்கல்வி சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கல்வி நிலையத்தில் படிப்பவராக இருக்க வேண்டும்மதிப்பெண் மற்றும் சாதிச் சான்றிதா நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து கல்வி நிலைய தலைவரின் முகப்புக் கடிதத்துடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணை !


செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள, எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., தனித்தேர்வுக்கான அட்டவணைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.



எஸ்.எஸ்.எல்.சி. :
23.9.11-மொழி முதற்தாள்
24.9.11-மொழி இரண்டாம் தாள்
26.9.11-ஆங்கிலம் முதற்தாள்
27.9.11-ஆங்கிலம் இரண்டாம் தாள்
28.9.11-கணிதம்
29.9.11-அறிவியல்
30.9.11-சமூக அறிவியல்


ஓ.எஸ்.எஸ்.சி.: 21.9.11-மொழி முதற்தாள்
22.9.11-மொழி இரண்டாம் தாள்
23.9.11-தமிழ்
24.9.11-சிறப்பு மொழித்தாள் மூன்று
26.9.11-ஆங்கிலம் முதற்தாள்
27.9.11-ஆங்கிலம் இரண்டாம் தாள்
28.9.11-கணிதம்
29.9.11-அறிவியல்
30.9.11-சமூக அறிவியல்

இத்தேர்வுகள் அனைத்தும், காலை 10.15க்கு துவங்கி, 12.45க்கு முடிவடையும் என்றும், முதல் 15 நிமிடம் வினாத்தாள் படிக்கவும், விடைத்தாளில் உள்ள விவரங்களை பதிவு செய்யவும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

மீண்டும் லேப் டாப் சந்தையில் தடம் பதிக்கிறது எல்.ஜி!

மீண்டும் லேப் டாப் தயாரிப்பு துறையில் நுழைய எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன் முதல் கட்டமாக நெட்புக்குடன் கூடிய 13 புதிய ரக லேப் டாப்புக்களை இந்தியாவில் எல்.ஜி., நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை ரூ.26,000 முதல் ரூ.66,780 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் தங்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான முக்கிய அம்சம் என எ.ஜி., இந்தியா தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை லேப்டாப்க்கள் ஐ.டி., துறையில் 12 முதல் 14 சதவீதம் வரை முக்கிய பங்களிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் எல்.ஜி., தெரிவித்துள்ளது. மேலும் எல்.ஜி., ஏ530 என பெயரிடப்பட்டுள்ள 3டி லேப்டாப்பையும் எல்.ஜி., அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வகை லேப்டாப்க்கள் உயர்தர பேட்டரியுடனும், எடை குறைவாகவும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்திய பயோ-டெக் துறை வளர்ச்சி 4 பில்லியன் டாலர்களை தாண்டியது !

கடந்த ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு பயோ டெக் துறை வளர்ச்சி 4 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இந்திய பயோ டெக் வளர்ச்சி 3 பில்லியன் டாலர்களாக இருந்ததாக ஏன்ஸ்ட் அன் யங் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. தடுப்பூசி, நோய் கண்டறிதல், அதற்கான சாதனங்கள் மற்றும் தனிப்பட்ட மருத்துவம் உள்ளிட்டவைகள் பயோ டெக் துறையின் வளர்ந்து வரும் முக்கிய பிரிவுகளாகும். உலக அளவில் இந்திய பயோ டெக் துறை அதிக வேகமாக வளர்ந்து வருவதாக சர்வதேச பயோடெக்னாலஜி கழகம் தெரிவித்துள்ளது. பயோடெக் துறையை மையமாக கொண்டு பல்வேறு நிறுவனங்களும் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சூழ்நிலைகளுக்கு ஏற்றாற் போல் உள்நாட்டு பயோ டெக் துறை மாற்றம் பெற்று, வளர்ச்சி கண்டு வருவதாக பயோ டெக் துறை‌யினர் தெரிவித்துள்ளனர். 

இதே நாள்...


  • மலேசிய விடுதலை தினம்(1957)
  •  வேல்ஸ் இளவரசி டயானா இறந்த தினம்(1997)
  •  தாமஸ் ஆல்வா எடிசன், முதலாவது கினேட்டஸ்கோப்புக்கான காப்புரிமம் பெற்றார்(1897)
  •  வட கொரியா தனது முதலாவது செய்மதியை ஏவியது(1998)
  • அரசு கேபிள் டிவி சேவை செப். 2ம் தேதி முதல் துவங்கும்! 70 ரூபாய் கட்டணத்தில் 90 சேனல்கள் வசதி!!


    மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான அரசு "கேபிள் டிவி' சேவை, செப்., 2ம் தேதி முதல் துவங்கும் என்று, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அரசு "கேபிள் டிவி'யில் மாதக்கட்டணம் 70 ரூபாயில், 90 சேனல்கள் தெரியும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு: கடந்த ஆட்சியில் துவக்கப்பட்ட அரசு "கேபிள் டிவி' நிறுவனம், 50 ஆயிரத்திற்கும் அதிகமான இணைப்புகளை வழங்கியது. முந்தைய ஆட்சியாளர்களின் சுயநலம் காரணமாக, அரசு "கேபிள் டிவி' நிறுவன இணைப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, 432 இணைப்புகளாக சுருங்கிவிட்டது.

    தி.மு.க., அரசால் துவக்கப்பட்ட அரசு "கேபிள் டிவி' நிறுவனம், அந்த அரசாலேயே முடக்கப்பட்டு விட்டது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அரசு "கேபிள் டிவி' நிறுவனத்தின் நடவடிக்கைகளை புனரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், என் அரசு தீவிரமாக மேற்கொண்டது. இந்நிறுவனத்திற்கு ஒரு முழுநேர தலைவர் மற்றும் ஒரு நிர்வாக இயக்குனர் நியமிக்கப்பட்டனர்.

    தஞ்சாவூர், திருநெல்வேலி, கோவை மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் தலைமுனைகள், பராமரிப்பு செய்யப்பட்டன. மீதமுள்ள 27 மாவட்டங்களில், தனியார் வசம் உள்ள தலைமுனைகள் வாடகைக்கு பெறப்பட்டும், புதிதாக அனலாக் தொழில்நுட்ப "கேபிள் டிவி' கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டும், அரசு "கேபிள் டிவி' புனரமைக்கப்பட்டது. மேலும், இந்த நிறுவனம், "தமிழ்நாடு அரசு "கேபிள் டிவி' நிறுவனம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

    சென்னை நீங்கலாக, அனைத்து மாவட்டங்களிலும்,"கேபிள் டிவி' சேவையைத் தொடங்கும் வகையில், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.,க்களை, அரசு "கேபிள் டிவி' நிறுவனத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள, 34 ஆயிரத்து 344 கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.,க்கள், மிகுந்த ஆர்வத்துடன், அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இவர்களிடம், ஒரு கோடியே 45 லட்சம் இணைப்புகள் உள்ளன. 31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள ஒளிபரப்பு மையங்களை, 24 மணி நேரமும் பராமரிக்கவும், ஒளிபரப்பு சேவையை தங்குதடையின்றி மக்களுக்கு வழங்கவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
    அரசு "கேபிள் டிவி' ஒளிபரப்பின் மூலம், கட்டணச் சேனல்கள் உட்பட 90 சேனல்களை ஒளிபரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலில் இலவச சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படும். கட்டணச் சேனல்களை பெற, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    விரைவில், கட்டணச் சேனல்களும், அரசு "கேபிள் டிவி' மூலம் வழங்கப்படும்.
    செப்டம்பர் 2ம் தேதி முதல் ஒளிபரப்புச் சேவைகள் துவங்கப்பட்டு, குறைந்த செலவில் நிறைவான சேவையை, அரசு "கேபிள் டிவி' நிறுவனம், தமிழக மக்களுக்கு வழங்கும். அரசு "கேபிள் டிவி' நிறுவனத்தில் சேர்ந்துள்ள கேபிள் ஆபரேட்டர்கள் மூலம், "டிவி' சேவையை பெறும் சந்தாதாரர்களிடமிருந்து மாதச் சந்தாவாக 70 ரூபாய் மட்டுமே "கேபிள் டிவி' ஆபரேட்டர்களால் வசூலிக்கப்படும்.

    இந்த ஒளிபரப்பை வழங்கும், "கேபிள் டிவி' ஆபரேட்டர்களிடமிருந்து கட்டணமாக, ஒரு இணைப்பிற்கு 20 ரூபாய், அரசு "கேபிள் டிவி' நிறுவனத்தால் வசூலிக்கப்படும். மிகக் குறைந்த கட்டணத்தில், "கேபிள் டிவி' இணைப்பை, தமிழக மக்கள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கேபிள் இணைப்பு பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சேமிப்பு ஏற்படும்.
    இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

    என்ன செய்ய வேண்டும்!""அரசு, "கேபிள் டிவி' ஒளிபரப்பைப் பெற, பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்ற கேள்விக்கு, அரசு "கேபிள் டிவி' நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:"கேபிள்' ஆபரேட்டர்கள் அரசுடன் இணைந்துள்ளதால், தற்போது, "கேபிள்' இணைப்பு பெற்றுள்ள பொதுமக்கள், அந்த இணைப்பிலேயே, அரசு "கேபிள் டிவி' இணைப்பை பெற முடியும். அரசு, "கேபிள் டிவி'யைப் பெற, அவர்கள் தனியாக யாரையும் அணுக தேவையில்லை.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

    சென்னைக்கு?கடந்த 2002ம் ஆண்டு, "கண்டிஷனல் அக்சஸ் சிஸ்டம்' என்ற சட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு, சென்னை, டில்லி, மும்பை, கோல்கட்டா ஆகிய நான்கு நகரங்களில் இந்த சட்டம் முன் மாதிரியாக அமல்படுத்தப்பட்டது. இதன்படி, இந்த நகரங்களில் உள்ளவர்கள், கட்டண சேனல்களை பெறுவது என்றால், "செட் - டாப் பாக்ஸ்' உதவியுடன் மட்டுமே பெற முடியும். இதற்கு எதிராக பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டதால், கடந்த 2006ம் ஆண்டு முதல், சென்னை தவிர மற்ற மூன்று பெருநகரங்களிலும், இந்த நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டது. "சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு, இன்னும் மூன்று மாதங்களுக்குள் சென்னையிலும் அரசு, "கேபிள் டிவி' கால் பதிக்கும்' என, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...