|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 January, 2017

நெஞ்சு முழுக்க நஞ்சு!


50 வருடங்களுக்கு முன்னர் நாம் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிக்கனிலும், இன்று நாம் சாப்பிட்டு கொண்டிருக்கும் சிக்கனிலும் பல வேறுபாடுகள் உள்ளன. பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவு சிக்கன். ஆனால், அது இன்று உயிரைக் கொல்லும் ஸ்லோ பாய்சன் உணவாக மாறி வருகிறது.சிக்கனில் அதன் கருவுறுதல் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆன்டி-பயாடிக்ஸ் அதிகளவில் உட்செலுத்துகின்றனர். இது கோழியின் ஆரோக்கியத்தையும் சீரழிக்கிறது.. அதை சாப்பிடும் மக்களின் ஆரோக்கியத்தையும் சீரழிக்கிறது.

1950-களில் இருந்த கோழிகளை விட இன்று இருக்கும் கோழிகள் நன்கு மடங்கு உருவில் பெரிதாக இருக்கிறது. மேலும், ஒரு ஆய்வில் அன்றைய கோழிகளை காட்டிலம் இன்றைய கோழிகளில் கொலஸ்ட்ரால் அளவு 250% அதிகரித்து காணப்படுகிறது என அறியப்பட்டுள்ளது. ட்ரக்ஸ் மூலமாக கோழியின் ஹார்மோன்-ல் ஏற்படுத்தப்படும் மாற்றம் தான் இதற்கான காரணமாக இருக்கின்றது. இதை வியாபாரம் மற்றும் லாபம் அதிகம் காண உற்பத்தியாளர்கள் பின்பற்றுகின்றனர்.

ஆர்சனிக் என்பது ஒருவகை ரசாயனம். இதை இன்று உற்பத்தி செய்யப்படும் கோழிகளில் அதிகம் சேர்க்கின்றனர். இதை அரசு அறிவுரைக்கு அதிகமான அளவில் பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மனித உடலுக்கும், ஆரோக்கியதிற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சிக்கனில் நெஞ்சு பகுதி அனைவரும் விரும்பு உண்ணும் பாகம். ஆனால், இன்று நாம் சாப்பிடும் சிக்கனின் நெஞ்சு பகுதி 97% பாக்டீரியா தாக்கம் நிறைந்து இருக்கிறது என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. இதுவும் நமது ஆரோக்கியத்தை சீரழிக்கும் ஒன்று தான்.




25 January, 2017

இந்த கேள்விக்கெல்லாம் பதில் இருக்கா தமிழக அரசே? காவல்துறையே?


நான் போலீஸ் இல்ல பொறுக்கி!


நான் போலீஸ் இல்ல பொறுக்கி!


மாற்றம் முன்னேற்றத்தின் முதல் படி!



1945 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் மீது அமெரிக்கா நியூக்கிளியர் அணு குண்டு வீசியது... 71  ஆண்டுகள் கழித்தும் அமெரிக்காவால் ஒரு கண்டு ஊசி கூட
ஜப்பானில் விற்பனை செய்ய இயலவில்லை. 
ஜப்பான் அரசு அமெரிக்க நாட்டு பொருட்களுக்கு எந்த தடையையும் விதிக்கவில்லை. 
நம் நாட்டின் மீது இப்படி ஈவு,இரக்கம் இன்றி நச்சு அணுகுண்டு வீசி விட்டதே என மக்களே எடுத்த தீர்க்க முடிவு. 
ஆனால் நாம் சீன போரில் நம் கயிலாயத்தையும் இழந்து நமக்கு தொடர்ந்து எல்லைப் பிரச்சனைகளை தரும் சீன பொருட்களை வாங்குகிறோம்.
ஜப்பானியர் தேசப்பற்று எங்கே?.
நம் இந்தியர்களின் தேசப்பற்று எங்கே?.
தேசம் காத்த நம் முன்னோர்களின் உடல் பலிகளை மறந்து நாம் சீன பொருட்களை வெட்கம் இன்றி வாங்குகிறோம்.
மாற்றம் அவசியம்.

12 January, 2017

இப்போ கொழுந்து விட்டு எரியிது இனி கொல விழுகப் போகுது..!


மாடு புடிக்கப் போறோண்டா 
நாங்க மல்லுக்கட்ட வாறோண்டா 
மாடு புடிக்கப் போறோம்டா 
நாங்க மல்லுக்கட்ட வாறோடா 
திமிரோடு இருக்கோண்டா 
நாங்க திமில புடிக்கப் போறோண்டா 
திமிரோடு இருக்கோண்டா நாங்க திமில புடிக்கப் போறோண்டா 
மாட்டுக்கு பொங்க வச்ச மனுசப் பய 
எங்கள நீ கொம்பு சீவி விட்டுட்ட 
எங்க கொலத்த அழிக்கப் பாத்துட்ட 
எங்கள கொம்பு சீவி விட்டுட்ட கொலத்த அழிக்கப் பாத்துட்ட
எங்க கொல சாமிய எங்க கொல சாமிய 
இறக்குவோண்டா களத்துல ஏந்துவோண்டா நெஞ்சில 
வாடிவாச பக்கங் கூட வந்ததில்ல நீங்க 
வாடி வாச பக்கங் கூட வந்ததில்ல நீங்க
வைக்க புல்லு எல்லாம் போட்டு வளர்த்தவங்க நாங்க 
வைக்க புல்லு எல்லாம் போட்டு வளர்த்தவங்க நாங்க 
பொங்க வச்சி ஊட்டுவோம் நாங்க 
பொங்க வச்சி ஊட்டுவோம் 
வீட்டில் போட்டா எடுத்து மாட்டுவோம் 
இதுக்கு மேல நெருக்குனா இனி யாருன்னு காட்டுவோம் 
இதுக்கு மேல நெருக்குனா இனி யாருன்னு காட்டுவோம் 
இப்போ கொழுந்து விட்டு எரியிது இனி கொல விழுகப் போகுது..

                                                                                          இயக்குனர் சற்குணம். 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...