|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 December, 2011

நதிகள் மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் தேசியமயமாக்கி, நீர் தொகுப்பு உருவாக்க வேண்டும் அப்துல்கலாம்!


நதிகள் மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் தேசியமயமாக்கி, நீர் தொகுப்பு உருவாக்க வேண்டும்'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆலோசனை தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், வேளாண்மை கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது.  முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் துவக்கி வைத்து பேசியதாவது: நாட்டில் பல்வேறு காரணங்களால் விவசாய நிலங்களின் அளவு குறைந்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் உணவு உற்பத்தி அதிகம் தேவைப்படுகிறது. குறைந்த அளவு நிலத்தில், குறைந்த அளவு தண்ணீரில், குறைந்த அளவு மனித சக்தியை வைத்து, அதிகளவில் உணவு உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் நீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. தற்போது 1,500 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. கடலில் கலக்கும் தண்ணீரில் 300 டி.எம்.சி., தண்ணீர் நமக்கு கிடைத்தால் கூட தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். நீர் பிரச்னை என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் முழுவதும் உள்ளது. அமெரிக்காவில் கூட நதிநீர் பிரச்னை இருந்தது. அங்கு நதிகள் தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்டதால், 31 மாநிலங்கள் பயன் அடைகிறது. அதுபோல ஒரு நிலை நம் நாட்டிலும் உருவாக வேண்டும். நதிநீர் பிரச்னையால் உள்நாட்டு போர் உருவாகிவிடக் கூடாது. நதிகள் மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் தேசியமயமாக்கப்பட வேண்டும். பெரிய அணைகளையும், நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் ராணுவம், கப்பல் படை போன்ற அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். அனைத்து மாநில நதிகளையும் இணைக்க வேண்டும். வறண்ட பூமி பகுதிகளில் புதிய கால்வாய்களை வெட்டி விட வேண்டும். எல்லா பகுதிகளிலும் நீர் இருக்கும் போது, விவசாயத்தை தாராளமாக செய்ய முடியும். எந்த இடத்திலும் தேவையில்லாத நிலம் இருக்காது. தேசிய நெடுஞ்சாலைகள், தேசிய மின் தொகுப்பு இருப்பது போல, தேசிய நீர் தொகுப்பு உருவாக்க வேண்டும். அதன் மூலம் மாநில அரசுக்கு தேவையான நீரை மத்திய அரசு பிரித்து கொடுக்க வேண்டும். முல்லை பெரியாறு பிரச்னை உள்ளிட்ட எந்த நீர் பிரச்னையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைவர்கள் பேசி தீர்த்து கொள்ள வேண்டும்.

குஜராத்தில் விவசாயம் தங்கு தடையின்றி நடக்கிறது. அங்கு 24 மணி நேரமும் மின்சார வசதி கிடைக்கிறது. விஞ்ஞான பூர்வமாக விவசாய உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் அம்மாநில விவசாய உற்பத்தியில் 9 சதவீதம் வளர்ச்சி என்ற நிலையில் உள்ளது. ஆனால், தேசிய அளவில் விவசாய வளர்ச்சி 2 சதவீதம் தான் உள்ளது. பீகாரிலும் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே, தமிழகத்திலும் விவசாய உற்பத்தி அதிகரிக்க வேண்டும். விவசாய தகவல் மையம் டில்லியில் உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில், விவசாய தகவல் மையத்தை ஊராட்சிகள் அளவில் துவக்க வேண்டும்.

தரமான விதை, தரமான உரம், வங்கி கடன், எந்தெந்த விவசாயத்திற்கு எந்தெந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அந்த மையத்தில் இடம் பெற வேண்டும். இதுபோன்ற நடவடிக்கையால் விவசாய உற்பத்தியை அதிகரிக்க முடியும். அதிகமான உற்பத்தி கிடைத்த பின் அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலையை கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் திறமையை மேம்படுத்தும் வகையில், விவசாய சம்பந்தப்பட்ட பயிற்சிகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும். விவசாயிகள் வங்கி கடனை கேட்டதும் வழங்க வேண்டும். மண்ணின் தன்மைகளுக்கேற்ப தரமான விதை, அதிக மகசூல் விதை, நல்ல உரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அப்துல்கலாம் பேசினார். "முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பான கேள்விகளை அப்துல்கலாமிடம் நிருபர்கள் எழுப்பிய போது, அவர், "தேசிய அளவில் நீர்நிலைகளை இணைக்கும் பணியை செய்ய வேண்டும். மின்சாரத் தொகுப்பிலிருந்து மின்சாரத்தை எடுத்து பயன்படுத்துவது போல தேசிய நீர் தொகுப்பு உருவாக்கி பயன்படுத்த வேண்டும்' என்றார்.

"முல்லைப்பெரியாறு பிரச்னையில் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யத்தயார். தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பி.,க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் விஜயகாந்த்!


முல்லைப்பெரியாறு பிரச்னையில், மத்திய அரசின் பாராமுகத்தை கண்டித்து, நான் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யத்தயார். அதே வேளை தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பி.,க்களும் ராஜினாமா செய்ய வேண்டும்,'' என்று தேனியில் விஜயகாந்த் ஆவேசமாக பேசினார்.முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் மத்திய அரசையும், கேரள அரசையும் கண்டித்து தேனியில் தே.மு.தி.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார். அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாநில துணைச்செயலாளர்கள் இளங்கோவன், தேனி முருகேசன், ஆஸ்டின், எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜன், ராஜா, மாவட்ட செயலாளர்கள் தினேஷ், ராஜா, தமிழ்முருகன், பாலச்சந்தர், அரவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர். விஜயகாந்த் பேசியதாவது: நான் முல்லைப்பெரியாறு அணை தண்ணீரை குடித்து வளர்ந்தவன். அதனால் தான் இப்பிரச்னையில் உணர்வுடன் போராடுகிறேன். முல்லை பெரியாறு அணை பிரச்னையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளா தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. அணை பலப்படுத்தப்பட்டு விட்டதால், நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் கேரளா கண்டுகொள்ளவில்லை. கோர்ட் உத்தரவை அமல்படுத்த மத்திய அரசும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அப்போது ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கருணாநிதியும், நடவடிக்கை எடுக்கவில்லை.


எல்லா பிரச்னைகளிலும் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒன்று தான். அவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. நான் மக்கள் மீது அக்கறை கொண்டவன் என்பதால் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறேன். இப்பிரச்னையில் கேரள அரசு தூங்குவதை போல் நடிக்கிறது.நான் மக்கள் நலனின் அக்கறை உள்ளவன். இந்த விஷயத்தில் நான் அரசியல் நடத்த விரும்பவில்லை.எவ்வளவோ கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருந்தாலும் முல்லை பெரியாறு அணை பிரச்னையில் நாங்கள் அனைத்து கட்சிகளுடனும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.இப்பிரச்னையில் மத்திய அரசு மந்தமாக செயல்படுகிறது என கருணாநிதியே கூறியிருக்கிறார். இதை தெரிந்து கொள்ள அவருக்கு எட்டு ஆண்டுகள் ஆகியிருக்கிறது. முல்லை பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசின் அடாவடியினை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி செயல்பட அறிவுறுத்த வேண்டும். அணை பாதுகாப்பிற்கு மத்திய படையையோ, ராணுவத்தையோ நிறுத்த வேண்டும். இந்திய நதிகள் முழுவதையும் தேசியமயமாக்க வேண்டும். அப்போது தான் இந்த பிரச்னை தீரும்.



கேரளத்தின் பசப்பு வார்த்தைகளை நம்பி பேச்சுவார்த்தை என்ற பெயரில் இனியும் ஏமாறக்கூடாது.கேரளமும், கர்நாடகமும் தமிழகத்தை மழைக்காலத்தில் மட்டும் நீர் வழிந்து செல்லும் வடிகாலாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். காவிரி நதிநீர் பிரச்னையில் மத்திய அமைச்சர் பதவியை வாழப்பாடி ராமமூர்த்தி ராஜினாமா செய்ததைப்போல், பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பி.,க்களும் ராஜினாமா செய்ய வேண்டும்.கருணாநிதி நாங்கள் முடிவெடுப்போம் என்கிறார். தி.மு.க., இந்த விஷயத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும். முல்லை பெரியாறு பிரச்னைக்காக நான் என் பதவியை ராஜினாமா செய்ய தயார். எனது கட்சி எம்.எல்.ஏ.,க்களும் ராஜினாமா செய்ய தயாராக உள்ளனர். பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்,என்றார்.

ரோட்டில் ஆக்கிரமித்து கோவில் கணக்கெடுப்பு...

தமிழகத்தில் நெடுஞ்சாலை, மற்றும் உள்ளாட்சிகளில் பொதுஇடங்களை ஆக்கிரமித்து வழிபாட்டு தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை குறித்து வருவாய் துறை மற்றும் போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர். தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்ட தினத்திற்குள் அகற்ற நோட்டீஸ் வினியோகிக்க முடிவு செய்துள்ளனர்.அதை வாங்க மறுத்தால், அந்தந்த வி.ஏ.ஒ.,க்கள் மூலம் வழிபாட்டு தல கதவில் நோட்டீஸ் ஒட்டவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக போலீசாரும், வருவாய்த்துறையினரும் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர்.ஆக்கிரமிப்பு அகற்றும் போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில், போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா?


முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக கவிஞர் வைரமுத்து ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில்,  ’’முல்லைப் பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் தீவிரம் அடைவது கவலை தருகிறது. அந்த தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்பதால் இன்னும் கூடுதலாக வலிக்கிறது. கேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல்லைப் பெரியாற்று தண்ணீரில் கேரள சகோதரனுக்கும் சேர்த்துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடுகிறான்.  கேரளம் தங்கள் உணவுக்கு எதிராகவும், எங்கள் உணர்வுக்கு எதிராகவும் நடந்து கொள்வது என்ன நியாயம்?

என்னவோ தெரியவில்லை. உடைந்த சோவியத் யூனியன் என் நினைவில் வந்து வந்து போகிறது. மூன்றாம் உலகப்போர் மூண்டால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற கணிப்பு ஒன்று உண்டு. அந்தப் போர் எங்குமே நிகழக் கூடாது. குறிப்பாக, இந்தியாவில் தொடங்கிவிடக்கூடாது. அணை பலவீனமாகி விட்டது என்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு சொல்லப்பட்டு 33 ஆண்டுகள் கழிந்து விட்டன. 

அதன்பிறகு நவீன தொழில்நுட்பத்தோடு அணையும் வலிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. 33 ஆண்டுகள் உடையாத அணையை உங்கள் சுயநலம் உடைக்கப் பார்க்கிறது.எங்களைப் போன்ற படைப்பாளிகள் கலக்கத்தோடு கவனித்துக் கொண்டிருக்கிறோம். நியாயத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு சாதகமாக ஒரு நிரந்தர தீர்வு இதில் எட்டப்படாவிட்டால், எங்களைப் போன்றவர்களையும் காலம் களத்தில் இறக்கிவிடலாம். பச்சைத்தமிழ்நாடு பாலைவனமாக சம்மதிக்க மாட்டோம். போராடுவோம்.  முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். மலையாளிகளைத் தொட மாட்டோம் என்ற முழக்கத்தோடு முன்னேறுவோம்.தமிழர்கள் பட்ட சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழ் சாதியை? தமிழ் இனமே ஒன்றுபடு. இந்திய அரசே தலையிடு’’என்று கூறியிருக்கிறார்.

சங்கம், சங்கமாக பிரிந்து கிடந்தால் எதிரிகள் நம்மை அங்கம்,அங்கமாக வெட்டி வீழ்த்திவிடுவார்கள் சீமான்!

தமிழர்களுக்கு சொந்தமான தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தோடு இணைக்கவேண்டும். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்யவேண்டும், அம்பேத்கார் திரைப்படத்தினை வரி நீக்கி தமிழக அரசே திரையிடவேண்டும், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசன் வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும், குடந்தை மோதிலால்தெருவிற்கு கதிர் தமிழ்வாணன் தெரு என்று பெயர் சூட்டவேண்டும், உடையாளூரில் ராஜராஜ சோழன் நினைவு மண்டபத்தை உடனே கட்ட வேண்டும், குடந்தை நகருக்கு வெளியே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை நகருக்குள் உடன் கொண்டு வரவேண்டும், கடைகளில் உள்ள விளம்பர பலகைகளில் தமிழில் பெயரிடவேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
கூட்டத்தில்  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசும்போது, ’’புரட்சியாளர் அம்பேத்காருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் அவர் கனவை நினைவாக்க இந்த கூட்டத்தை நடத்துகிறோம். அவர் நினைவு நாளை டிச.6-ந் தேதி உரிய நாளில் கொண்டாடக்கூட நமக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஜாதியால் தமிழினம் இன்று அடிமைப்பட்டு கிடக்கிறது.ஜாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது. சங்கம் வைத்து நம் முன்னோர்கள் தமிழை வளர்த்தார்கள். ஆனால் இன்று தமிழன் சங்கம் வைத்து சாதி சங்கத்தை வளர்த்து கொண்டிருக்கிறான். சங்கம், சங்கமாக பிரிந்து கிடந்தால் எதிரிகள் நம்மை அங்கம்,அங்கமாக வெட்டி வீழ்த்திவிடுவார்கள்.
 
வலிமையான தமிழ் தேசிய இனம் உருவாக வேண்டும். தமிழர்கள் ஜாதி, மதம் கடந்து ஒன்றுபட்டு அடிமை, வறுமை, தீண்டாமை ஆகிய 3 கொடுமைகளையும் விரட்டி அடிக்கவேண்டும். சமதர்மம் என்பது அனைவருக்கும் சமவாய்ப்பு உள்ளதாக இருக்கவேண்டும். கூடங்குளம் அணு உலை ஆபத்து இல்லை என்கிறார்கள். அணுகுண்டு வெடித்தால் ஆபத்தா, இல்லையா? கூடங்குளத்திற்கு தமிழகத்தில் ஆபத்தில்லை என்று சொல்லும் நாராயண சாமி, புதுச்சேரியில் அணு உலை கூடம் நியமிக்கத்தயாரா? 30 ஆயிரம் கோடி செலவு என்கிறார்கள்.

சேது திட்டம் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டது. அத்திட்டம் என்னவாயிற்று? சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு கொண்டு வருவதை அனைவரும் எதிர்க்கின்றனர். தமிழன் எங்கும் வாழ வழியில்லாமல் அடிமையாக இருக்கிறான். உலகத்தில் தமிழனுக்கு என்று நாடு இல்லாததுதான் அதற்கு காரணம். வீரம் செரிந்த ஆயுத போராட்டத்தை என் அண்ணன் பிரபாகரன் நடத்தினான். எங்களுக்கு ஆயுத போராட்டம் தேவையில்லை. அமைதியாக ஜனநாயக வழியில் சட்ட வழியில் விடுதலையை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்.கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடக்கவில்லை எனில் உண்மையாக பல செயல்கள் நடந்தே தீரும்’’ என்று தெரிவித்தார்.

போலி குடும்ப அட்டை தகவல் கொடுத்தால் ரூ. 250 சன்மானம்!


போலி குடும்ப அட்டை பற்றித் தகவல் கொடுத்தால் ரூ. 250 சன்மானம் வழங்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி அறிவித்து உள்ளார்.
ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசாணையின்படி அத்தியாவசியப் பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக தகவல் அளிப்போருக்கு (கைப்பற்றுதலில் முடிந்தால்) ரூ. 1,000 சன்மானம் வழங்கப்படும். போலி குடும்ப அட்டைகள் தொடர்பாக தகவல் கொடுத்தால் ரூ. 250 சன்மானம் வழங்கப்படும். தகவல்களை கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலர், தனி வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலரிட்ம் தகவல் தெரிவிக்கலாம்.
இத்தகைய தகவல்களை அளிக்கும் நபர்களின் பெயர் மற்றும் முகவரி ரகசியமாக வைக்கப்படும்.
தகவல் தெரிவிக்க வேண்டிய அதிகாரிகாரிகளின் செல்போன் எண்கள்:
மாவட்ட விநியோக அலுவலர் 9445000209.
வட்ட வழங்கல் அலுவலர்கள்:
கடலூர் 9005000210. சிதம்பரம்: 9445000211. காட்டுமன்னார்கோயில் 9445000212.
திட்டக்குடி 9445000214.
விருத்தாசலம் 9445000213.
பண்ருட்டி 9445000215.
குறிஞ்சிப்பாடி 9445796405.

இதே நாள்...


  • இந்திய எரிபொருள் சேமிப்பு தினம்
  •  ஐநா.,வின் தலைமையகத்தை நியூயார்க் நகரில் அமைக்க முடிவானது(1946)
  •  நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது(1939)
  •  ரைட் சகோதரர்கள், தமது வான்வெளிப் பயணத்தை முதல் முறையாக சோதித்தனர்(1903)
  • ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் அகத்தியர்,


    நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமல்ல என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று.இருந்தாலும் சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் என்கிறார் அகத்தியர், இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல் ...
    அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
    அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
    தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
    சிறப்பான ஓமமது தீர்க்கமாக
    வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
    மகத்தான பிரமமய மாவாய்பாரு
    இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
    என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே
    பொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டுமாம். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து  இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர். 

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...