|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 July, 2012

காய்கறி விற்று சமூக சேவை சென் ஷு-சூ!

தாய்வான் நாட்டைச் சேர்ந்த காய்கறி விற்கும் பெண்ணான சென் ஷு-சூ, இந்த ஆண்டு மகசேசே விருது பெற தேர்வான ஆறு பேரில் ஒருவராவார்.இவர் தினமும் காய்கறிகளை விற்பனை செய்து அதில் வரும் பணத்தைக் கொண்டு பல அறக்கட்டளைகளுக்கும், அனாதை இல்லங்களுக்கும் நன்கொடை வழங்கி பலரது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்துள்ளார்.சாதாரண எளிய வீட்டில் வசிக்கும் சென், தனக்காக எந்த ஆடம்பரப் பொருட்களையும் வாங்காமல், தரையில் படுத்துத்தான் உறங்குகிறார். தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், ஆதரவற்றவர்களுக்கும், பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவுவதையே வாடிக்கையாக வாழ்ந்துள்ளார். இவரை கௌரவிக்கும் வகையில் மகசேசே விருது வழங்கப்பட உள்ளது.

பார்த்ததில் பிடித்தது


விபசாரத்தில் ஈடுபடும் AIRTEL , VODAFONE , DOCOMO. 

விபசாரம் என்பதில் ஆண் , பெண் தவிர இடைத்தரகர்களாக சிலர் வருவார்கள் அவர்கள் போல செயல்படுகின்றது இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் (பெயரிளியே தொடர்பு என இருப்பதாலோ என்னவோ ).இதில் எனக்கு தெரிந்து Airtel , Vodafone, Docomo மூன்றிலும் வரும் செய்திகளை கிழே குடுத்துள்ளேன் ...

சில தினகளுக்கு முன் வந்த ஒரு SMS in தமிழாக்கம் : 

“தமிழ் ஹாட் கேர்ள் சங்கீதா உங்களுக்காக காத்திருகின்றார். அவருடன் பேச உடனே தொடர்பு கொள்ளுங்கள்” என கூறி ஒரு எண் குடுத்து உள்ளனர் . கால் கட்டணம் நிமிடத்திற்கு 5 ருபாய்.

மற்றொரு SMS :

தனது இரவு நேர அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள சுதா காத்திருக்கிறார். உடனே அழையுங்கள் . இதுக்கும் கால் கட்டணம் நிமிடத்திற்கு 5 ருபாய்.

இது போல SMS மட்டுமல்லாது உங்கள் கணக்கில் உள்ள தொகையினை சோதிக்கும் போதும் வருகின்றது . இதில் என்ன கொடுமை என்றால் சண்டே அன்று 50% தள்ளுபடியாம்

நேற்று வந்தது :
Make new friends and Love chat with beautiful Girl 24 Hours call Now 006745599251 Neha.. ISD rates apply only 18 Yrs +.
(கடல்கடந்து கடலைபோட வழி செய்றாங்களாம் )


ரோட்டு ஓரத்தில் நின்று கொண்டு, பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு ஆட்கள் பிடிக்கும் மாமாக்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்.

TRAI க்கு சில கேள்விகள் :

•இது போன்ற SMS அனுப்புவது உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா ?•வியாபார சம்பந்தமாக SMS அனுப்புவதை தடுக்க தினமும் 200 SMS மட்டுமே அனுப்பலாம் என தடை போட்ட நீங்கள் இதுக்கு ஏன் தடை போடவில்லை ?•போட்டிக்கு அனுப்பும் SMS முலம் மீடியாக்கள் கோடி கணக்கில் வருமானம் பார்கின்றது. மீடியாக்களும் தினமும் இவ்வளவு SMS தான் பெற முடியும் என கொண்டு வந்தால் என்ன ?•குழந்தைகள் கூட பதில் சொல்லும் கேள்விகளை கேட்டுவிட்டு Call Waiting இருந்தாகூட நிமிடத்திற்கு 10 ரூபாய் பிடுங்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு ஏன் அனுமதி வழங்கவேண்டும் ?•Vodafone இல் ஓகே பட்டனை அழுத்தினாலே சில கட்டண வசதிகள் தானாகவே Activate ஆகின்றது . கேட்டால் உங்கள் மொபைல்ல FLASH MESSAGE என்ற வசதியை OFF பண்ணி வையுங்கள் என்கின்றனர் . இது தெரியாத கிராமத்து ஆட்கள் என்ன செய்வார்கள் ?•ரீ-சார்ஜ் செய்தால் குறைந்த பைசாவும் , சில SMS உம் தருகின்றன நிறுவனங்கள் . SMS அனுப்ப தெரியாத , அனுப்பாத நபர்களுக்கு இது வேஸ்ட் தானே ?

இது போல பல தேவை இல்லாத செயல்களில் பல தொலை தொடர்பு நிறுவங்கள் ஈடுபடுகின்றது இதை தடுக்க என்ன வழி ?

சிவனின் மடியில் முருகனும் பார்வதியின் மடியில் விநாயகனும் சிறுவர்களாக இருப்பதைப் போன்ற பேமிலி ஓவியத்தை நிறைய இடங்களில் பார்த்திருப்பீர்கள். இதை சோமாஸ்கந்தமூர்த்தம் என்கிறார்கள். இதற்கு பின்னால் ஒரு செயல்திட்டம் உள்ளது அது சைவம் எனும் மார்க்கம் ஒற்றை பெருமதமாய் திரட்டப்பட்டக் கதை. இது கி.பி எட்டாம் நூற்றாண்டு அல்லது அதற்கு பிறகான காலங்களில் நிகழ்ந்திருக்கலாம்.

சிவனை வழிபடும் சைவம், விஷ்ணுவை வழிபடும் வைணவம், சக்தியை வழிபடும் சாக்தேயம் அல்லது சாக்தம், விநாயகனை வழிபடும் காணபத்தியம், முருகனை வழிபடும் கெளமாரம், சூரியனை வழிபடும் செளரம் என ஆறு மார்கங்கள் இந்தியாவெங்கும் பரவலாக இருந்தது.. இந்த ஆறையும் தொகுத்துத் தான் தற்போதைய இந்து மதம் உருவானது.. இதில் சைவம் எனப்படும் சிவமார்கம் சக்தி, விநாயகன், முருகன் எனும் தனித் தனி வழிபாட்டு முறைகளை உள்வாங்கி சைவம் எனும் ஒற்றைப் பெருமதமாய் வளர்ந்தது.. வைணவம் சூரியனை வழிபடும் செளரத்தை மட்டும் உள்வாங்கிக் கொண்டது (சூரியநாரயணர் ஓவியம் பார்த்திருப்பீர்கள் அது செளரத்தை உள்வாங்கியதை குறிப்பிடுகிறது).. பின்னாட்களில் இந்த சைவமும் வைணமும் இணைந்து வேதமறுப்பு பேசும் பெளத்தம் சமணம் தவிர நாட்டார் தெய்வங்கள் போன்றவற்றை உள்வாங்கிக் கொண்டு இன்றைய இந்து மதமாய் வளர்ந்து நிற்கிறது..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...