|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 November, 2011

ஐரோம் ஷர்மிளா தனது பட்டினிப் போராட்டத்தை இன்று 12-வது ஆண்டில் அடியெடுத்து...!


ஐரோம் ஷர்மிளா சானு... மணிப்பூர் மாநிலத்தின் இரும்புப் பெண்மணி. 'ஆணின் போக நுகர்வுக்காகவே ஆண்டவனால் படைக்கப்​பட்டது பெண்ணுடல்’ என்று காலம் காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட கற்பிதத்தைத் தகர்த்துத் தரை மட்டமாக்கி, தன் உடலை ஆதிக்க அத்துமீறல்களுக்கு எதிராக ஒரு வலிமை மிக்க போர்க் கருவியாக்கிய காந்தியப் போராளி ஷர்மிளா. ஜனநாயக உரிமைகளை முற்றாக மறுதலிக்கும் ஒரு கொடிய ராணுவச் சட்டத்துக்கு எதிராக, 10 ஆண்டுகளுக்கு மேல் இன்று வரை தொடர்ந்து இது வரை உலகம் கண்டறியாத உண்ணாவிரதப் போரை, மகாத்மாவை மனதில் நிறுத்தி நடத்தி வரும் நம் வாழ்காலத் தேவதையே ஷர்மிளா. மணிப்பூர் மாநிலம், மலை சூழ்ந்த பூமி; வட கிழக்கு இந்தியாவில் வளர்ந்து வரும் தீவிரவாத அமைப்புகளின் சரணாலயம்; சீரான வளர்ச்சி இல்லாத, புறக்கணிக்கப்பட்ட பிரதேசம். மணிப்பூரை ஒரு சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சுயேச்சை நாடாக்கும் முயற்சி 1964-ல் தொடங்கியது. அதற்கு முன்பே, நாகர்களுக்குத் தனி நாடு தாகம் உருவாகிவிட்டது. பிரிவினைவாதிகள் ஆயுதம் தாங்கி, வன்முறைக் கிளர்ச்சிகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். பேச்சுவார்த்தைகள் பெரும் பயன் அளிக்காததால், இந்திய அரசு ராணுவ சட்டங்களைக் கடுமையாக்கியது. பலாத்காரத்தை வெல்வதற்கு பலாத்காரத்தால் இயலாது என்பதை, உலகம் முழுவதும் உள்ள ஆட்சியாளர்கள் உணர்வது இல்லை. நெருப்பை அணைக்க நெய்யைப் பயன்படுத்தும் மத்திய அரசின் அணுகுமுறையில் மணிப்பூர் மக்கள் மனம் கசந்தனர்.

இந்திய வரைபடத்தில் இருந்து மணிப்பூரைப் பிரித்தெடுக்க, 34 போராளிக் குழுக்கள் முயன்று வருகின்றன. இவற்றுள், ஐக்கிய விடுதலை முன்னணி, மக்கள் புரட்சிகர இயக்கம், மணிப்பூர் மக்கள் விடுதலைப் படை ஆகிய மூன்றும் முக்கியமானவை. இந்த மூன்று தீவிரவாத அமைப்புகளிலும் ஏறக்குறைய 7,000 பேர் இயங்குகின்றனர். இவர்களை ஒடுக்கவே இந்திய அரசு, ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் இயற்றியது. ஆயுதப் படை அதிகாரிகள் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி, சந்தேகத்துக்கு உரிய யாரையும் கைது செய்யலாம்; கலவரத்தில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கி சூடு நடத்தலாம்; எந்த இடத்தையும் முன் அனுமதி இன்றிச் சோதனையிடலாம்; இவர்களுடைய நடவடிக்கைகளை நீதித் துறை உட்பட எந்த அமைப்பும் கேள்விக்கு உட்படுத்த முடியாது. இந்தச் சூழலில்தான், ஐரோம் ஷர்மிளா காந்திய ஆயுதத்தைக் கையில் எடுத்தார்.

'மலோம்’ என்ற பெயரில் அழைக்கப்படும் கிராமம் 'இம்பால்’ விமான நிலையத்துக்கு அருகில் உள்ளது. அங்கு உள்ள பேருந்து நிறுத்தத்தில் 2 நவம்பர், 2000 அன்று எந்தக் குற்றத்திலும் ஈடுபடாத 10 அப்பாவி மக்கள் குழுமி இருந்தனர். வன்முறையாளர்கள் நடத்திய வெடிகுண்டு சம்பவத்தில் வெறியேறிப்போன பாதுகாப்புப் படையினர் ஒரு ராணுவ வாகனத்தில் வேகமாக வந்து இறங்கினர். அவர்கள் பொழிந்த துப்பாக்கி மழையில் 10 அப்பாவிகளும் பலியாகினர். இதயத்தில் ஈரம் இல்லாதவர்கள் கண நேரத்தில் நடத்திய ஊழிக் கூத்தில் பெருக்கெடுத்த ரத்தம் மலோம் மண்ணை ஈரப்படுத்தியது. அடுத்த நாள் ஊடகங்கள் சுமந்து வந்த இந்த சோகத்தால், ஷர்மிளாவின் மனம் அதிர்ச்சிக்குள்ளானது. அவர் எந்த அமைப்பையும் சார்ந்தவர் இல்லை. எந்தப் பின்புலமும் அவருக்கு இல்லை. ஆனால், மனிதநேயம் அவரைத் தனி ஒரு காந்தியப் போராளியாகக் களத்தில் இறங்கத் தூண்டியது. தன் தாயின் நல்லாசியுடன் 'மலோம் படுகொலை’ நடந்த இடத்தில் உண்ணாவிரதப் போரைத் தொடங்கினார். 'ராணுவ சட்டம் ரத்தாகும் வரை, என் உண்ணாவிரதம் தொடரும்’ என்று அவர் 5 நவம்பர், 2000 அன்று அறிவித்தார். 10 ஆண்டுகளுக்கு மேல் அவருடைய லட்சியப் போர் நீடிக்கிறது. உலக வரலாற்றில் மிக நீண்ட காலம் உண்ணாவிரதம் இருப்பவர் ஷர்மிளா. இது எப்படி அவருக்கு சாத்தியமானது? 



உண்ணாவிரதம் தொடங்கியபோது ஷர்மிளாவின் வயது 28. அவர் உண்ணாவிரத்தில் அமர்ந்த மூன்றாம் நாள் கைது செய்யப்பட்டார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக ஒரு பொய் வழக்கு போடப்பட்டது. நீதிமன்றக் காவலிலும் அவருடைய உண்ணாவிரதம் நீடித்ததால், உடல்நிலை மோசமானது. ஜவஹர்லால் நேரு மருந்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷர்மிளாவின் மூக்கு வழியாக வலுக்கட்டாயமாக உணவைச் செலுத்த முற்பட்டனர். முடியவில்லை. தண்ணீர் அருந்தவும் மறுத்துவிட்டார். நாட்கள் நடந்தன. மரண வாசல் ஷர்மிளாவின் விழி முன் விரிந்தது. லட்சியம் நிறைவேறுவதற்குள் உயிர் துறப்பது விவேகம் இல்லை என்ற தெளிவு பிறந்தது. மூக்கின் வழியே குழாய் மூலம் வெறும் திரவத்தை மட்டும் மருத்துவர் செலுத்த அனுமதித்தார். ஓர் ஆண்டு இந்த நிலை நீடித்தது. தற்கொலை முயற்சிக்கு இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 309 அதிகபட்சம் ஓர் ஆண்டு சிறைத் தண்டனையை மட்டுமே குறிப்பிடுவதால், ஷர்மிளா 21 நவம்பர் 2001-ல் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான ஷர்மிளா வீட்டுக்குச் செல்லவில்லை. இம்பாலில் பொது இடத்தில் மீண்டும் உண்ணாவிரதப் போரைத் தொடர்ந்தார். காவல் துறை கைது செய்தது. ஒவ்வோர் ஆண்டு முடிவிலும் காவல் துறை ஷர்மிளாவை விடுவிப்பதும், உண்ணா விரதத்தில் ஈடுபடும்போது சிறைப்படுத்துவதுமாகப் 10 ஆண்டுகள் முடிந்துவிட்டன. மணிப்பூரில் பாமோன் காம்பு பகுதியைச் சேர்ந்த தங்கஜம் மனோரமா என்ற பெண், பாதுகாப்புப் படையினரால் 11 ஜூலை, 2004-ல் கற்பழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. 'அஸ்ஸாம் ரைஃபிள்ஸ்’ தலைமை அலுவலகத்தின் முன்பு ஊர்வலம் நடத்திய பெண்களில் 12 பேர் ஆடையின்றி நிர்வாணமாக நின்றனர். அவர்களில் சிலர் 'ராணுவமே! எங்களைக் கற்பழிக்க வா!’ என்ற வாசகம் அடங்கிய விரிப்பைப் பிடித்தபடி தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். அப்போதுதான் இந்திய ஊடகம் மணிப்பூரில் கால் பதித்தது. ஷர்மிளாவின் உண்ணாவிரதப் போரை அறிந்துகொண்டது.

ஒவ்வோர் ஆண்டு முடிவிலும் விடுவிக்கப்​படுவதுபோல், 2006 அக்டோபரிலும் விடுவிக்கப்பட்ட ஷர்மிளா, அரசின் கண்காணிப்பை மீறி, ஆதரவாளர்​களுடன் புது டெல்லி புறப்பட்டார். காந்தி அடிகளின் ராஜ்காட் சமாதியில் நுழைந்தவர், 'மகாத்மா இன்று உயிரோடு இருந்தால், மணிப்பூரில் ராணுவ சட்டத்துக்கு எதிராக மக்கள் இயக்கம் நடத்துவார். எங்களுடைய போராட்டத்துக்கு இந்திய மக்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார். அங்கே இருந்து நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள ஜன்தர் மந்தரில் வந்து உண்ணா விரதத்தில் அமர்ந்தார். திரவ உணவையும் நிராகரித்துவிட்டு மூன்று நாட்கள் உண்ணா விரதம் இருந்தவரின் உடல்நிலை மோசமானதும், காவல் துறை கைது செய்து, அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் கொண்டுசேர்த்தது. பின்னர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஷர்மிளா, மீண்டும் இம்பாலை அடைந்தார். தற்கொலை முயற்சி என்ற பெயரில் திரும்பத் திரும்ப அவர் கைது செய்யப்படுகிறார். அவருடைய மூக்கில் ரப்பர் குழாய் நிரந்தரமான இடத்தைப் பெற்றுவிட்டது.

'உங்கள் மீது அரசு 'தற்கொலை முயற்சி’ என்ற குற்றச்சாட்டைச் சுமத்துவதற்கு உங்கள் பதில் என்ன?’ என்று கேட்டபோது, 'தற்கொலை செய்துகொள்ள நான் விரும்பினால், மின்சாரத்தில் கை வைக்கலாம். தூக்கில் தொங்கலாம். உண்ணா விரதம் ஏன் இருக்க வேண்டும்?’ என்று சிரிக்கிறார் ஷர்மிளா. நோபல் பரிசுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது, 'புகழுக்கும் பரிசுக்கும் விருந்துக்கும் நான் உண்ணாவிரதம் இருக்கவில்லை’ என்றார். 'வன்முறை கொதி நிலையில் உள்ள மண்ணில் மகாத்மாவின் போர் முறையைப் பின்பற்றும் மனம் எப்படி வந்தது?’ என்று கேட்டால், 'ஆன்மிக உணர்வுக்கு வடிவம் தருவதுதான் மகாத்மாவின் உண்ணா நோன்பு. பகைமையற்ற புரிந்துணர்வின் அடிப்படையில்தான் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்’ என்று பதில் தருகிறார் அந்த தேவதை.

ராணுவ சட்டங்களால் அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து 10 ஆண்டு​களுக்கு மேல், தன் மெல்லிய உடம்பை ஆயுதமாகக்கொண்டு நடத்தும் யுத்தத்தில், இன்று ஷர்மிளா இளமைப் பொலிவிழந்து, உள்ளுறுப்புகள் அனைத்தும் உருக்குலைந்து, மாதவிடாய் சுழற்சி முற்றாக முடிந்து, எழுந்து நிற்கும் சக்தி இழந்து, உயிர் உடம்பில் ஊசலாட, 30 கிலோ எடை உள்ள வெறும் எலும்புக்கூடாய், ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் மானுட சுதந்திரத்துக்காக நம்பிக்கையோடு சிலுவை சுமக்கிறார். ஆயுதப் படையின் சிறப்பு அதிகார சட்டம் அரசினால் திரும்பப் பெறப்படுமா? அல்லது... மனித இனம் காலப் பெருவெளியில் அரிதினும் அரிதாகக் காணக்கூடிய ஐரோம் ஷர்மிளா சானு என்ற தேவ மகளின் உயிர் மூச்சு விரைவில் ஒரு நாள் காற்றில் கலந்துவிடுமா? காலம் பதில் சொல்லும்!


நன்றி: ஜூ.வி.   

வெளிநாட்டில் ஏழாம் அறிவை மிஞ்சிய வேலாயுதம் !

விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த படம் 'வேலாயுதம்'. ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். தீபாவளி தினத்தன்று வெளியான இப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது. முதல் வாரத்தை விட இரண்டாம் வாரத்தில் அதிக தியேட்டர்களில் வெளியாகி இருப்பதால்,  அந்த சந்தோஷத்தை கொண்டாட படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்து அளித்தார் விஜய். 'வேலாயுதம்' குறித்து ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. 'வேலாயுதம்' படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கி வெளியிட்டது ஐங்கரன் நிறுவனம். இங்கிலாந்தில் 'வேலாயுதம்'   17 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு (அக்டோபர் 26-30 வரை)  1.03 கோடி வசூலித்து உள்ளது.  அதே நேரம்  'ஏழாம் அறிவு' திரைப்படம்  19 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு (அக்டோபர் 26-30 வரை) 85.77 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. 'வேலாயுதம்' படத்தின் இந்த வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கும் விஜய், அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 'நண்பன்' படத்தினையும் மிகவும் எதிர்பார்த்து காத்து இருக்கிறார். 'வேலாயுதம்' படத்தின் இந்த வெற்றியால்  மீண்டும் விஜய் - ஜெயம் ராஜா கூட்டணி சேர்த்தாலும சேரும் என்கிறார்கள்

வலைப்பதிவு எழுதுவது இல்லை ஹோசரே முடிவு!

தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவை (ப்ளாக்) பதிவேற்றம் செய்து வந்த ராஜூ பருலேகருடனான உரசல் காரணமாக, மூத்த சமூக ஆர்வலர் அண்ணா ஹஜாரே இனி வலைப்பதிவு எழுதுவது இல்லை என்று முடிவு செய்துள்ளார். மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளரான பருலேகர், ஹஜாரே கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை, அவரது அனுமதியின்றி வெளியிட்டதால் சர்ச்சை எழுந்தது. அக்டோபர் 23 தேதியிட்ட அந்தக் கடிதத்தில், தமது ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் உயர் நிலைக் குழுவை கலைத்துவிட முடிவு செய்துள்ளதாக ஹஜாரே கூறுவதாக தகவல் இடம்பெற்றிருந்தது. பருலேகர் சனிக்கிழமை வெளியிட்ட அந்த வலைப்பதிவில் கேஜரிவால், கிரண் பேடி, பிரசாந்த் பூஷன் ஆகியோரை உயர் நிலைக்குழுவில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவாளரால் வெளியிடப்பட்ட கடித விவரம் குறித்து அண்ணா ஹஜாரே மறுப்பு தெரிவித்துள்ளார்.  தாம் சொல்லாத விஷயங்கள் எல்லாம் அதில் எழுதப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், தமக்கு எதிராக சதி நடப்பதாக தெரிவித்தார்.  இந்த சர்ச்சையின் காரணமாக, இனி வலைப்பதிவு எழுதுவது இல்லை என்று தாம் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதே நாள்...

  •  தஜிகிஸ்தான் அரசியலமைப்பு தினம்(1994)
  •  டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டது(1844)
  •  எட்வின் ஆம்ஸ்ட்ராங், எஃப்.எம்., ஒளிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்(1935)
  •  புளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது(1944)
  •  போலந்தில் 2வது போலந்து குடியரசு அமைக்கப்பட்டது(1918)

சீரிய நடத்தையே மாமனிதனுக்கான அடையாளம்!



சரியான நடத்தை நெறிமுறைகளை கடைபிடிப்பவர், பிறரிடத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, நன்மதிப்பையும் பெற முடியும். சிறப்பான மற்றும் கவர்ச்சிகரமான ஆளுமைக்கு, சரியான நடத்தை நெறிமுறைகள் அவசியம். உற்சாகம், நாகரீகம், அன்புடைமை, தூய்மை மற்றும் அழகியல் நயம் முதலிய பண்புகள் சிறப்பான ஆளுமையைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவை. எனவே இத்தகையப் பண்புகளை நாம் உதாசீனப்படுத்த இயலாது. சிலர், இத்தகையப் பண்புகளை தமது பள்ளிப் பருவத்திலேயே பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், பலருக்கு இந்தப் பண்புகள் வாழ்வின் பெரும்பகுதி வரை கைகூடுவதில்லை. நல்ல ஆளுமையை மேம்படுத்திக் கொள்வதற்கான சிறந்த நடத்தை நெறிமுறைகளை ஒருவர் ஒரு குறிப்பிட்ட வயதிற்குள்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லை. நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ள வயது ஒரு தடையே இல்லை. ஆளுமைப் பண்புகள், பொதுவாக, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதேசமயம், நமது ஆளுமை கட்டமைப்பு வரவேற்பை பெறுவதும், எதிர்ப்பை பெறுவதும், நாம் வாழும் சமூக சூழ்நிலையைப் பொறுத்ததே.

ஏனெனில், நமது சொந்த சமூகத்தில் நமது பெரியவர்கள் பின்பற்றும் முறைகளை சரியென்று நினைத்து அதையேப் பின்பற்றுவோம். அது நமது சமூகத்திற்கு ஒத்துப்போய்விடும். ஆனால், அதேப் பழக்கவழக்கத்தை வேறொரு சமூகத்தில் கடைபிடிக்கையில் சிக்கல் உண்டாகும். உதாரணமாக, மதுரை மற்றும் கோயம்புத்தூரில் இருக்கும் பழக்கவழக்கத்தை, பெய்ஜிங், பாரிஸ் போன்ற இடங்களில் கடைபிடிக்க முடியாது.இந்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே சில பொதுவான விரும்பத்தகாத பழக்கவழக்கங்கள் இருக்கின்றன. அவை,
* பொது இடங்களிலோ அல்லது சாதாரணமாகவோ நகத்தைக் கடிக்கும் பழக்கம்
* பலரின் முன்னிலையில் பல் குத்துதல்
* சாப்பிடும்போதோ அல்லது தண்ணீர் அருந்தும்போதோ, அருவருப்பான சத்தத்தை ஏற்படுத்தல்
* பொது இடத்தில் மூக்கு நோண்டுதல்
* பொது இடத்தில் சிறுநீர் கழித்தல்
* பொது இடத்தில் எச்சில் துப்புதல்
* மொபைல் அல்லது தொலைபேசியில் பேசும்போது, பிறருக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் மிகவும் சத்தமாக பேசுவது.
* சாலையை நினைத்த இடத்தில் கடப்பது.
* ஒருவர் அமர்ந்திருக்கையில், அவருக்கு முதுகு காட்டி அமர்தல்
* அலுவலக டேபிளில் அமர்வது
* பெண்கள் முன்பாக ஆபாசமான விஷயங்கள் மற்றும் ஜோக்குகளைப் பகிர்வது
* ஒருவரின் உடல் ஊனம் அல்லது அறியாமையைப் பார்த்து கிண்டலடிப்பது
* பூங்கா போன்ற இடங்களில் புல் மீது நடப்பது
* ஒரு தெருவில் அல்லது பலர் வரும் வழியில் நண்பர்களுடன் நடந்து செல்கையில், பிறரை பற்றி கவலைப்படாமல், பாதையை ஆக்ரமித்துக் கொண்டு செல்வது.
* வரிசை இருக்கும் இடத்தில் அதை மதிக்காமல் நடந்துகொள்வது.
* ஒரு கலந்துரையாடலில், பிறரை பேசவிடாமல், தானே முந்தி முந்தி பேசுவது
* ஒரு பேருந்திலோ அல்லது ரயிலிலோ பயணம் செய்கையில், வயதானவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகள் வந்தால் அவர்களுக்கு எழுந்து இடம்விடாமல் அமர்ந்திருப்பது.
* தடை செய்யப்பட்ட இடத்தில் மற்றும் பிறருக்குத் தொந்தரவான பொது இடத்தில் புகைப் பிடிப்பது.
* பிறரின் அறை அல்லது இல்லத்தினுள் அனுமதியின்றி நுழைவது
* வதந்தியை பரப்புதல்
போன்ற பல விஷயங்களை சொல்லலாம். இவற்றை ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் விட்டொழிக்க வேண்டும்.

சமூகம் உங்களை மதிக்க வேண்டும் என்று விரும்பும் அதே நேரத்தில், சமூகத்திலுள்ளவர்களையும் நீங்கள் மதிக்க வேண்டும். மனிதனிடம் இருக்கும் ஒரு உன்னத ஆற்றல் என்னவெனில், தன்னை மாற்றிக் கொள்ளுதல். ஒரு தமிழன் அமெரிக்காவிலோ அல்லது பிரிட்டனிலோ அல்லது கனடாவிலோ சில ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்தால், அந்நாட்டு மக்களில் பலரை விட தெளிவாக ஆங்கிலம் பேசுவார் மற்றும் அவர்களின் கலாச்சாரத்தை கிரகித்துக் கொள்வார். இதுதான் ஒரு மனிதனுக்கு இருக்கும் மாண்பு. எனவே, நம்முடைய நடத்தை நெறிமுறைகளை சிறப்பான வகையில் மாற்றிக் கொள்வது நமக்கு முழு சாத்தியமே. "ஒரு சிறந்த பண்புநலன் என்பது, ஒரு குறிப்பிட்ட மாநிலத்திலோ அல்லது நாட்டிலோ மட்டுமல்லாது, உலகம் முழுவதும் அனைவரும் போற்றக்கூடியதாக இருக்க வேண்டும்".

நாம் முன்பே சொன்னதுபோல், ஒரு மனிதனின் முதல் பள்ளிக்கூடம் அவனது இல்லம்தான் மற்றும் முதல் ஆசிரியர்கள் அவனது பெற்றோர்தான். தன் தந்தை செய்யும் ஒரு தவறான செயலை அவரது மகன் பயமின்றி செய்கிறான். ஒரு தாயின் தவறான நடவடிக்கையை ஒரு மகள் பிற்காலத்தில் தயக்கமின்றி பின்பற்றுகிறாள். நன்கு படித்தவர்கள் என்று அறியப்படும் பல குடும்பங்கள்கூட, பொது இடங்களில் நாகரீகமாக நடந்துகொள்வதில்லை. இது எதைக் காட்டுகிறதென்றால், பாடத்திட்ட குறைபாட்டை அல்லது வீட்டின் பண்பாட்டு குறைபாட்டை.ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரு நடத்தை நெறிமுறை கோட்பாடு உண்டு. அதை கடைபிடிப்பதும், மீறுவதும் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அதேசமயம், ஒரே பழக்கம் ஒரு சமூகத்தில் வரவேற்கப்படும் மற்றும் இன்னொரு சமூகத்தில் விரும்பப்படாது. உதாரணமாக, இந்தியாவில், ஒரு பரிசுப்பொருளை ஒருவர் மற்றவருக்கு அளிக்கையில், அதை உடனே பிரித்து பார்ப்பது விரும்பத்தக்கதல்ல மற்றும் நாகரீகமானதல்ல. ஆனால், அமெரிக்காவில், ஒரு பரிசுப்பொருள் அளிக்கப்பட்டால், அதை உடனே பிரித்துப் பார்த்து, தனது சந்தோஷம் அல்லது கருத்தை தெரிவித்துவிட வேண்டும். இதுபோன்ற பழக்கங்கள் பெரிய விஷயமல்ல. ஆனால், மானுடரீதியான பண்புகளே அனைத்து இடங்களுக்கும் தேவை. சிறந்த நடத்தை நெறிமுறைகள் என்றால் அது வெறும் வரட்டு தத்துவம் என்பதாக இருக்கக்கூடாது. எந்த சூழ்நிலை என்றாலும், ஒரு சம்பிரதாயத்தை கட்டாயம் கடைபிடிப்பது என்பதல்ல சிறந்த நெறிமுறை. பிறருக்கு நன்மை தரக்கூடியதாகவும், பிறரை தொந்தரவு செய்யாததாகவும், பிறரை சந்தோஷப்படுத்துவதாகவும் இருப்பதே சிறந்த நடத்தை நெறிமுறை.
ஒரு குறையைக் கண்டால், அதற்கான பழிறை பிறரின் மீது போடாமல், உங்களால் முடிந்ததை செய்து அந்தக் குறையை நீக்க முற்பட வேண்டும். தமிழ்நாட்டிலே ஒரு நல்ல பொன்மொழி உண்டு, "இருட்டு, இருட்டு என்று சொல்லிக் கொண்டிருப்பதை விட, உன்னால் முடிந்தால் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை" என்பதே அது.
பொது இடத்தையோ அல்லது பொது சொத்தையோ சேதப்படுத்தாமல், சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பதில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பங்கு உண்டு. சமூக அளவில் சீரிய நடத்தை நெறிமுறையே இதை அடைவதற்கான வழியாகும். படித்தவர்கள் செய்கிறார்கள் என்பதற்காகவோ, பணக்காரர்கள் செய்கிறார்கள் என்பதற்காகவோ ஒரு விஷயத்தை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. பகுத்துப் பார்த்தே நாம் செயலாற்ற வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும், குடும்ப பொறுப்பு என்பதைத் தாண்டி, சமூகப் பொறுப்பும் உண்டு. யார் எக்கேடு கெட்டால், எனக்கென்ன என்று இருக்கக்கூடாது, ஏனெனில், மற்றவரும் அப்படியே நினைத்தால், உங்கள் நிலைமையும் கஷ்டமாகிவிடும்.ஒவ்வொரு இடத்திலுமே எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற கலாச்சாரம் கடந்த வரைமுறை உண்டு. அவற்றை எவரொருவர் கர்ம சிரத்தையோடு பின்பற்றுகிறாரோ, அவரே சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் நபராகவும், அனைவராலும் விரும்பப்படும் நபராகவும் இருப்பார்.

திருச்சி அமர் ஜுவல்லர்ஸ் நகை கடையில் தங்க நகைகள் கொள்ளை!

திருச்சி மலைக்கோட்டை வாசலில், போலீஸ் உதவி மையம் அருகே உள்ள நகைக் கடையில், 11 கோடி ரூபாய் மதிப்புடைய 40 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியின் வர்த்தக மையமான என்.எஸ்.பி., ரோடு மிகவும் பரபரப்பான பகுதி. இந்த வீதியில் தான், முக்கியமான ஜவுளிக் கடைகள், பெரிய நகைக் கடைகள், பாத்திரக் கடைகள் உள்ளன. மலைக்கோட்டையைச் சுற்றி ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. மலைக்கோட்டை வாசலுக்கு நேர் எதிரேயும், மலைக்கோட்டை வாசலை ஒட்டியும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹிரோன் கிடியாவின் மகன்கள் பரஸ்மால், பனன்லால், கன்சியான், தேவராஜ், நவீன்சன் ஆகியோருக்கு சொந்தமான, "அமர் ஜுவல்லர்ஸ்' என்ற நகைக் கடைகள் இயங்கி வருகின்றன.

அமர் ஜுவல்லரியில் மொத்தம், 24 பேர் பணியாற்றுகின்றனர். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு, கடை வியாபாரத்தை முடித்துக் கொண்டு, கடையை பூட்டிவிட்டுச் சென்றனர். நேற்று காலை வழக்கம் போல, 9.30 மணிக்கு கடையைத் திறக்க, கடை ஊழியர்கள் வந்தனர். உரிமையாளர் பரஸ்மால் வந்த பிறகு தான் கடை திறக்கப்பட்டது. நான்கு பூட்டுகள் திறந்தன. மற்ற இரண்டு பூட்டுகள் திறக்கவில்லை. அப்போது தான், அவை வேறு பூட்டு என்பது தெரிந்தது. சந்தேகமடைந்த பரஸ்மால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, பூட்டிலிருந்த கைரேகையை பதிவு செய்தனர். அதன் பின், பூட்டு உடைக்கப்பட்டு, கடை திறக்கப்பட்டது. உள்ளே சென்று பார்த்த போது, ஆரம், நெக்லஸ், ஒட்டியாணம் வைக்கப்பட்டிருந்த ÷ஷாகேஸ் காலியாக இருந்தது. மேலும், நகைப் பெட்டிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது கண்டு உரிமையாளர்களும், ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட கடையை ஆய்வு செய்த ஐ.ஜி., மஹாலி நிருபர்களிடம் கூறுகையில், ""கடையில் 40 கிலோ நகைகள் கொள்ளை போனதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார். மோப்ப நாய் ஜேக் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. ஜேக் அருகிலுள்ள பாத்திரக்கடை குடோன் வரை சென்றது. மீண்டும் அங்கிருந்து நேராக அமர் ஜுவல்லரிக்கு திரும்பியது.

மெயினை நிறுத்திய கொள்ளையர்கள்: நகைக் கடையில் உள்ள கேமரா இரவு நேரங்களில் செயல்படாது. ஆயினும், கொள்ளையர்கள் முன்கூட்டியே, மின்சாரம் சப்ளையாகும் மெயினை நிறுத்தி விட்டு தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர். அருகில், போலீஸ் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், மழையின் காரணமாக, அந்த கேமரா சில நாட்களாக செயல்படவில்லை. இதுவும், கொள்ளையர்களுக்கு வசதியாகி

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவ காலத்து சிவன் கோவில் புதையல் கிடைக்குமா ?

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, பல்லவ காலத்து சிவன் கோவிலில், முழுவதும் அடைக்கப்பட்ட ரகசிய அறை இருப்பது கண்டறியப்பட்டது. வரும் 8ம் தேதி, இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் முன்னிலையில், ரகசிய அறையை உடைத்துப் பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே, புது கும்மிடிப்பூண்டி கிராமத்தில், பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட தெய்வநாயகி உடனுறை சந்திரசேகரேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலின் பல பகுதிகள் சிதிலமடைந்ததால், புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2010 ஆகஸ்டில், புது கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., சின்னராஜன், கோவிலில் வழிபடச் சென்றார்.வள்ளி சுப்பிரமணிய தெய்வானை சன்னிதிக்கும், அடுத்துள்ள தெய்வநாயகி அம்மன் சன்னிதிக்கும் இடையே, 6 அடி அகலம், 15 அடி நீளத்தில் முழுவதும் அடைக்கப்பட்ட ரகசிய அறை இருப்பதைக் கண்டறிந்தார்.அறையின் நான்கு பக்கத்திலும் சுவர்கள் எழுப்பப்பட்டு, மேல் தளம் மூடப்பட்டு இருப்பதால், என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை. தகவல் அறிந்த இந்து அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, முழுவதும் அடைக்கப்பட்ட ரகசிய அறை இருப்பதை உறுதி செய்தனர். ரகசிய அறையை உடைத்து ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், வரும் 8ம் தேதி, இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் பத்மநாபன் முன்னிலையில், ரகசிய அறை உடைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து, அக்கோவிலில் பாதுகாப்பு கருதி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

இலங்கையில் என் படத்தை வெளியிட மாட்டேன்! - இயக்குநர் சசிகுமார்!


தமிழ்ப் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிப்பதும், தணிக்கை செய்வதும் தொடர்கிறது. அவர்கள் என்ன நமது படங்களுக்கு தடை விதிப்பது... இலங்கையில் எனது படத்தை திரையிட அனுமதி தரமாட்டேன். கோடம்பாக்கம் நினைத்தால் கொழும்பு வருமானத்துக்கே செக் வைக்க முடியும், என்றார் இயக்குநர் / தயாரிப்பாளர் சசிகுமார். சர்ச்சைக்குரிய தமிழ் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிக்கிறது. புதுப்படங்களை அங்குள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான வசனங்களை நீக்குகிறது. இஷ்டம் போல் காட்சிகளை வெட்டித் தள்ளி அரை குறையாக தியேட்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தீபாவளிக்கு ரிலீசான 7ஆம் அறிவு படத்திலும் தமிழர்களுக்கு ஆதரவான வசனங்கள் நீக்கப்பட்டன. இலங்கையின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இயக்குனர் சசிகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பத்திரிகைப் பேட்டியில், "தமிழனாகப் பிறந்த எல்லோருமே ஈழ உணர்வாளர்கள்தான். இதயத்தைப் பிளந்து காட்டித்தான் அதை வெளிப்படுத்த ணும்கிற அவசியம் இல்லை. சராசரி சசிகுமாரா அந்த துயரத்துக்காகத் துடிச்சிருக்கேன். கதறி இருக்கேன். உணர்வோ உதவியோ... என்னால முடிஞ்சதை எப்பவுமே செய்றவன் நான். அதை வெளியே காட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இப்பவும் 'போராளி’ படத்துக்கான எஃப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாதுங்கிறதுல நான் உறுதியா இருக்கேன். ஒரு தயாரிப்பாளரா இந்த முடிவு என்னைப் பாதிக்கும்தான். ஆனால், கண்ணீரும் கதறுலுமா நம்ம சொந்தங்கள் அல்லாடித் தவிக்கிற அந்த மண்ணில் படம் ஓட்டிக்காட்ட நான் விரும்பலை. முன்னாடிலாம் கிராமப்புறங்களில் வயதானவங்க இறந்துட்டா தூக்கம் விழிக்கணுங்கிறதுக்காக துக்க வீட்டில் சினிமா ஓட்டுவாங்க. உலகத்தையே உலுக்கிய துக்கத்துக்கும் நாம படம் ஓட்டிக்கிட்டு இருக்கிறது நியாயமா படலை.

அங்கே மிச்ச சொச்சமா இருக்கிற தமிழர்களும் படம் பார்க்கிற மனநிலையில் இல்லை. சுற்றுலாவும் சினிமாவும்தான் இலங்கையோட பொருளாதார ஆதாரம். தொப்புள்கொடி உறவுனு துடிக்கிற நாம் எதுக்காக இலங்கைக்கு எஃப்.எம்.எஸ். உரிமை கொடுக்கணும்? எவ்வளவு லாபத்தை இழந்தாலும், இனி நான் எடுக்கப்போற எந்தப் படத்துக்குமே எஃப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்குக் கொடுக் கப்போறது இல்லை. தமிழ் உணர்வு களைத் தட்டி எழுப்புற மாதிரி ஒரு வசனம் வந்தால்கூட சம்பந்தப்பட்ட படத்தை இலங்கை அரசாங்கம் தடை பண்ணிடுது. சமீபத்தில்கூட இந்த மாதிரி கெடுபிடிகளை இலங்கை அரசு காட்டி இருக்கு. அவங்க என்ன நம்ம படங்களைத் தடை பண்றது?

கோடம்பாக்கம் மனசு வைத்தால் கொழும்புக்கே வருமானரீதியா செக் வைக்க முடியும். நமக்கும் இதில் இழப்பு இருக்கத்தான் செய்யும். என்ன பண்றது? உயிரையும் உயிரா நெனச்ச மண்ணையும் இழந்தவங்களுக்காக வருமானத்தை இழக்குறது தவறே இல்லை!'' என்று கூறியுள்ளார். சசிகுமாரின் இந்த அதிரடி முடிவு தமிழ் உணர்வு கொண்ட பல தயாரிப்பாளர்களையும் யோசிக்க வைத்துள்ளது. சசிகுமார் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், "இலங் கைக்கு எஃப்.எம்.எஸ். உரிமை வழங்கலாமா, கூடாதா என்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்கு நர்கள் சங்கம் உள்ளிட்டவை கலந்து ஆலோசித்து இப்படி ஒரு திட்டத்தைச் சொன்னால், நிச்சயமாக அதனை ஏற்று நடப்பேன். தமிழர்களின் வலி அறிந்த ஒரு தயாரிப்பாளர்களில் ஒருவனாக சசியின் கருத்துக்குத் தலைவணங்குகிறேன். சினிமா வுக்கு வருமானம் அவசியம்தான் என்றாலும், அதைவிட, தமிழனின் தன்மானம் முக்கியமானது!'' என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் ஏழை எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கணக்கெடுப்பு !


கடந்த 2010-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் 15 பேருக்கு ஒருவர் ஏழைகளாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றிற்கு நான்கு பேர் உள்ள குடும்பத்தினரின் ஆண்டு வருமானம் 11 ஆயிரத்து 157 டாலராகவும் , தனிநபரின் ஆண்டு வருமானம் ஐந்தாயிரத்து 570 டாலருக்‌கு கீழே உள்ளவர்கள் வறுமைக்‌கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1990-ம் ஆண்டிற்கு பின்னர் தான் அமெரிக்காவில் வேலைவாய்‌ப்பின்மை என்பது அதிகரித்து வந்துள்ளது என்றும், தொழிற்துறை நகரங்களான டெட்ராய்ட், கிராண்ட் ரேபிட், ஓ‌ஹியோ, ஆகிய இடங்களில் வறுமை நிலை தொடர்ந்து நீடித்து வருவதாகவும், லாஸ்வேகாஸ், கேப்கோரல், கலிபோர்னியா பகுதிகளில் ‌வேலைவாயப்பு வசதி இல்லாததால் வீடுகளின் மதிப்பு மற்றும் கட்டுமான பணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த 2000 மாவது ஆண்டிற்கு பின்னர்தான அங்கு ஏழைகளின் எண்ணிக்கை 41 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 40 க்கும் மேற்பட்ட மாவட்டங்களை கொண்டதாக திகழும் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இங்கு 10.7 சதவீதத்தினர் வறுமையில் வாடுவதாகவும், மற்ற மாகாணங்களான மிஸிஸிப்பி, நியூமெக்‌சி‌கோ, நெவாடா ஆகியவற்றில் 4.6 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.

சச்சினின் 100வது சதம் எதிர்பார்ப்பு!


மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தனது 100வது சர்வதேச சதத்தை சச்சின் பூர்த்தி செய்வார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கிரிக்கெட் உலகில் அதிக ரன்களை குவித்தவர், அதிக டெஸ்ட் சதங்கள், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் என்று இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 99வது சதத்தை அடித்த சச்சின் அடுத்து வரும் போட்டிகளில் 100வது சதமடிப்பார் என்று ரசிகர்கள் இடையே எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் அதன்பின் சச்சின் கலந்து கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அந்த சாதனையை நிகழ்த்த முடியவில்லை.

மொத்தம் கலந்து கொண்ட 12 போட்டிகளில் 431 ரன்களை மட்டுமே எடுத்தார். அதிகபட்சமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக இந்திய அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்ற போது அந்த சாதனை நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் தொடர் தோல்விகளோடு நாடு திரும்பியது தான் மிச்சம்.

இந்தியாவுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது காயம் காரணமாக சச்சின் எந்த போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்தியா அணியின் சகவீரர்கள் கூட சோர்ந்து போய்விட்டனர்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள மேற்கிந்திய தீவு அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி நாளை துவங்க உள்ளது. இந்த போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள சச்சின் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது வழக்கமான முகபாவனையில் அணியின் சகவீரர்களுடன் பேசி மகிழ்ந்தார். எந்த மன அழுத்தமுமின்றி காணப்பட்டார். மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் ஷிவ்நரேன் சந்தர்பால், டாரன் பிராவோ, பிஷூ உள்ளிட்ட வீரர்கள் களமிறங்க உள்ளது. இந்திய அணியின் சார்பாக காயம் காரணமாக ஓய்வில் இருந்த சச்சின் உடன், சேவாக், யுவராஜ் சிங் ஆகியோரும் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இளம் வீரர்களுடன் தற்போது பலமான நிலையில் உள்ள இந்திய அணியில் அனுபவ வீரர்களும் இணையும் பட்சத்தில் நாளைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவே இருக்காது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இறந்த தாயுடன் 2 நாட்கள் வாழ்ந்த 3 வயது சிறுமி!


நியூசிலாந்தில் இறந்த தாயுடன் 2 நாட்களாக இருந்த 3 வயது பெண் குழந்தையை உறவினர்கள் மீட்டனர். நியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் வசித்தவர் லாரன்சில் பெரி(28). ஷைலா சில்பெரி என்ற 3 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். லாரன்சில் அடிக்கடி, தனது தாய் மற்றும் சகோதரரிடம் போனில் பேசுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக லாரன்சில் யாருக்கும் போன் செய்யவில்லை. நேற்று லாரன்சில் பெரிக்கு அவரது சகோதரர் பீட்சில்பொரி போன் செய்தார். ஆனால் யாரும் போன் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பீட்சில்பொரி, லாரன்சில்சின் பக்கத்து வீட்டில் வசித்து தனது நண்பருக்கு போன் செய்து தகவல் கொடுத்தார்.

பக்கத்து வீட்டுக்காரர் லாரன் சில்சின் வீடு அருகே சென்ற போது பிணவாடை வீசியுள்ளது. இதில் சந்தேகமடைந்த அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்த உள்ளே தாளிடப்பட்டிருந்த கதவை உடைத்து பார்த்தார்.அப்போது லாரன்சில் பெரி இறந்து கிடந்தார். தாய் இறந்ததை அறியாத ஷைலா பெரி, அவரது அருகில் மயங்கி கிடந்தாள். லாரன்சில் இறந்து 2 நாட்களாகி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். வீட்டை சோதனையிட்ட போது உணவுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. தாய் இறந்ததை அறியாத சிறுமி ஷைலா, பிரிட்ஜில் இருந்த வெண்ணெய், ரொட்டி, பால் ஆகியவற்றை எடுத்து சாப்பிட்டது தெரிந்தது. பிண நாற்றத்தில் மயங்கிய நிலையி்ல் மீட்கப்பட்ட ஷைலா மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டாள். நல்ல உடல்நலத்துடன் இருந்த லாரன்சில் திடீரென இறந்த காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

போலி ரேஷன் கார்டு குறித்து தகவல் அளித்தால் ரூ.250 சன்மானம் தமிழக அரசு!


தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள போலி கார்டுகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.250, ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தகவல் அளத்தால் ரூ.1,000 சன்மானமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக கடந்த திமுக ஆட்சியில் கண்டறியப்பட்டது. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக போலி ரேஷன் கார்டுகளை குறித்து தகவல் அளித்தால் ரூ.250 சன்மானம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 16,94,401 போலி ரேஷன் கார்டுகள் களையப்பட்டு தற்போது 1,97,36,525 ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் ரேஷன் கார்டு மூலம் மாதந்தோறும் இலவச அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் நுகர்வு அதிகரித்துள்ளது.இந்த சந்தர்ப்பத்தை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு ரேஷன் அரிசியை சுயலாபத்துக்காக அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய அருகில் உள்ள மாநிலங்களுக்கு கடத்துகின்றனர்.

ரேஷன் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக அளிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டால் தகவல் அளித்த நபருக்கு வழங்கப்படும் சன்மானம் ரூ.500 என இருந்தது. இதை ரூ.1000 என்று உயர்த்தப்படுகிறது. அதேபோல புழக்கத்தில் உள்ள போலி ரேஷன் கார்டுகள் குறித்து அளிக்கும் தகவல் அடிப்படையில் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டால், தகவல் அளிப்பவர்களுக்கு அளிக்கப்படும் சன்மானம் ரூ.200ல் இருந்து ரூ.250 ஆக உயர்த்தப்படுகிறது, என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசணையின் மூலம் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் போலி ரேஷன் கார்டுகள் புழக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூயார்க் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சீமான்!


அமெரிக்காவில் நடைபெறும் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அவரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்து அனுப்பிவிட்டனர்.

இது குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்ட அறிக்கை: உலகத் தமிழர் பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகள் அமெரிக்காவில் தங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு சீமானுக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதற்கான முறையான பயண அனுமதியும் அந்நாட்டு அரசிடமிருந்து பெற்று சீமானின் பயண ஏற்பாடுகளை உறுதி செய்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு சீமான் புறப்பட்டுச் சென்றார். இன்று அதிகாலை சீமான் நியூயார்க் சென்று சேர்ந்தபோது, அவரை நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி விமான நிலையத்திலேயே தடுத்து வைத்துள்ளனர்.

இதற்கான காரணம் கேட்டதற்கு, சீமான் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நெருக்கமானவர் என்றும், அவரை அனுமதித்தால் அது அமெரிக்க நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஆகலாம் என்ற அச்சம் காரணமாக அனுமதி மறுக்கப்படுவதாக கூறியுள்ளனர். சீமானுக்கு பயண அனுமதி வழங்கப்பட்டபோது இந்த உண்மைகள் அவர்களுக்கு தெரியாமல் போனது ஏன்? இதிலிருந்து தமிழினத்தின் நலனுக்கு எதிரான சக்திகள் அளித்த தகவல்கள் பேரிலேயே சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

இது அமெரிக்காவில் நடை முறையில் உள்ள மனித உரிமை, கருத்துச் சுதந்திர சட்ட உரிமைகளுக்கு முரணான நடவடிக்கையாகும். இந்நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக உண்மையாகப் போராடிவரும் அனைத்து தமிழர் தலைவர்களும் இப்படிப்பட்ட சட்ட அராஜகங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவராக உள்ள அருட்தந்தை இம்மானுவேல் அடிகளாரை இதேபோல்தான் சென்னை விமான நிலையத்தில் இந்திய குடியேற்ற துறை விமானத்தில் வைத்து இறங்கவிடாமல் திருப்பி அனுப்பியது. அதுதான் இன்றைக்கு சீமானுக்கும் நடந்துள்ளது. தமிழீன விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, சிங்கள பவுத்த இனவாத ஆட்சியின் அரச பயங்கரவாதத்திற்கு துணை நின்று, தமிழினப் படுகொலைக்கு உதவிய அரசுகள், இன்று தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அரசியல் தளத்திலும் முடக்க இப்படிப்பட்ட வன்செயல்களில் ஈடுபடுகின்றன.

இன்றைக்கு சீமானுக்கு இழைக்கப்பட்ட அநீதி தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் தமிழினத்தின் அரசியல் போராட்டம் ஒருபோதும் முடங்கிவிடாது. தமிழீழ விடுதலைக்காகப் போராடி தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் ஆத்ம பலத்தை சிந்தையில் ஏந்தி விடுதலைப் போராட்டம் வென்றே தீரும்.இன்று இரவு ஒரு மணிக்கு சென்னை திரும்பும் சீமானை வரவேற்க நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்தில் திரளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

90 வினாடி மட்டுமே பின்லேடன் கதை!


அமெரிக்கா அறிவித்தது போல 45 நிமிட சண்டையில் பின் லேடன் கொல்லப்படவில்லை. 90 வினாடிகளில் அவர் கதையை முடித்துவிட்டனர் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் பதுங்கி இருந்த அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடன் கடந்த மே மாதம் 2-ந்தேதி அமெரிக்கப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பின்லேடன் கோஷ்டியினருடன் 45 நிமிடங்கள் நடந்த துப்பாக்கி சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.ஆனால், அவர் 45 நிமிட துப்பாக்கி சண்டையில் கொல்லப்படவில்லை. அமெரிக்காவின் 'நேவி சீல்' என்ற அதிரடிப்படையினரால் 90 வினாடிகளிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இச்சம்பவம் குறித்து பின்லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்காவின் நேவி சீல் என்ற அதிரடிப்படையின் முன்னாள் கமாண்டர் சக் பாரெர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.அதில், பின்லேடன் பதுங்கி இருந்த பாகிஸ்தான் அபோதாபாத் வீட்டிற்கு 2 ஹெலிகாப்டர்களில் வீரர்கள் புறப்பட்டு சென்றனர். அதில் ஒன்று நொறுங்கி விழுந்து விட்டது. 

மற்றொரு ஹெலிகாப்டர் மட்டும் பின்லேடனின் அபோதாபாத் வீட்டின் மாடியில் இறங்கியது. அதில் இருந்து இறங்கிய அதிரடிப்படை வீரர்கள் பின்லேடன் வீட்டிற்குள் புகுந்து 4 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். முதல் ரவுண்டில் பின்லேடன் மனைவிகளில் ஒரு காயமடைந்ததாகவும், பின்னர் அவரே வழிகாட்டியதாகவும் இந்தப் புத்தகம் கூறுகிறது.
அதை தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த 90 வினாடிகளிலேயே பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார். 45 நிமிட சண்டையின்போது அவர் கொல்லப்படவில்லை என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பின்லேடன் சாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பின்லேடனைக் கொன்ற விஷயத்தில் அமெரிக்கா பொய்யான தகவலை வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.

மீண்டும் 5 வது முறையாக ஜாமீன் மனுவை சமர்ப்பித்துள்ளார்!


நான் ஒரு பெண்... எனக்கு சிறிய குழந்தை இருக்கிறான். எனவே எனக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும், என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார் கனிமொழி எம்பி. 2 ஜி முறைகேடு வழக்கில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு, 6 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கனிமொழி. இதுவரை அவருக்கு நான்கு முறை ஜாமீன் மறுக்கப்பட்டுவிட்டது. கடைசியாக இரு தினங்களுக்கு முன் சிபிஐ நீதிமன்றம் கனிமொழியை ஜாமீனில் விடுவிக்க மறுத்துவிட்டது. பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடியவர்களுக்கு மன்னிப்பு கிடையாது என்றும், கனிமொழி செய்த தவறு சாதாரணமானதல்ல என்றும் நீதிபதி ஓபி ஷைனி குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் 5 வது முறையாக தனது ஜாமீன் மனுவை சமர்ப்பித்துள்ளார். இந்த முறை டெல்லி உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளார் கனிமொழி. தனது மனுவில், "இந்திய கிரிமினல் சட்டம் 437 படி பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் மற்றும் நோயாளிகள் அவர்களின் சமூக அந்தஸ்துக்கு அப்பாற்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்படலாம் என்கிறது. ஆனால் எனக்கு அந்த சலுகை மறுக்கப்பட்டுள்ளது. என்னை நம்பி 9 வயதேயான மகன் இருக்கிறான். கடந்த 6 மாதங்களாக என்னைப் பிரிந்து என் மகன் தவிக்கிறான். எனது அரவணைப்பு தேவைப்படும் காலகட்டத்தில் என்னை சிறையில் வைத்திருப்பது அவனை பாதித்துள்ளது.

இதையெல்லாம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை. மேலும் என்மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடன், ஜாமீனுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. சிபிஐயும் எனக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்க்காத நிலையில், நீதிபதி எனக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது ஒருதலைப்பட்சமானது. சிபிஐயின் விசாரணை முடிவடைந்துவிட்ட நிலையில், என்னை வெளியில் விட மறுப்பது ஏன்?," என்று கூறியுள்ளார். கனிமொழியுடன் கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார், குசேகான் பழங்கள் மற்றும் காய்கறி நிறுவன இயக்குநர்கள் ஆசிப் பால்வா மற்றும் ராஜீவ் பி அகர்வால் ஆகியோரும் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி இன்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகின்றன.

உலகின் 700 கோடியாவது குழந்தை எங்கு பிறந்தது என்பதை கணிக்க முடியவில்லை: பான் கி மூன்


உலகின் 700 கோடியாவது குழந்தை எங்கு பிறந்தது என்பதை ஐ.நா.வால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, இந்தியா மற்றும் பிலிப்பைன்சில் இருந்து வந்த குழந்தை பிறப்பு குறித்த அறிக்கைகளை நான் கண்டேன். எனினும் எந்த நாட்டில் 700 கோடியாவது குழந்தை பிறந்தது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. அதை தெளிவாகச் சொல்லும் நிலையில் நான் இல்லை என்றார். 

உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோவின் புறநகர் பகுதியில் உள்ள தனூர் கிராமத்தில் பிறந்தது. இந்த குழந்தை அங்கு இந்திய நேரப்படி காலை 7 20 மணிக்கு பிறந்தது. 3 கிலோ எடை உள்ள அந்த பெண் குழந்தை அங்குள்ள சமுதாய நல ஆஸ்பத்திரியில் பிறந்தது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான சான்றிதழை அதிகாரிகள் வழங்கினார்கள். 
700வது கோடி குழந்தை எங்கள் நாட்டில்தான் பிறந்தது என்று ரஷியா அறிவித்து இருக்கிறது. அங்குள்ள பெட்ரோபாவ்லோஸ்விக் காமாசாட்ஸ்கை என்ற ஊரில் அக்டோபர் 31 ந்தேதி நள்ளிரவு இந்த குழந்தை பிறந்து இருப்பதாவும், அந்த ஆண் குழந்தைக்கு அலெக்சாண்டர் என்று பெயரிடப்பட்டு இருப்பதாகவும் அறிவித்து உள்ளது. காலினின்கிரேட் என்ற ஊரிலும் அதேநேரத்தில் ஒரு குழந்தை பிறந்து இருக்கிறது என்றும் ரஷியா கூறி இருக்கிறது. 
பிலிப்பைன்ஸ் நாடும்,  எங்கள் நாட்டில்தான் 700 வது கோடி குழந்தை பிறந்து இருக்கிறது. அந்த குழந்தைக்கு டேனி சாமே என்று பெயரிட்டு இருக்கிறோம்' என்று அறிவித்து இருக்கிறது.

எ. டி. ம். மிசினில் என்ன வரும்?

ஸ்பெயினில் உள்ள ஏடிஎம் மெஷினில் இருந்து பாம்பு வந்திருக்கிறது. ஸ்பெயினின் பாஸ்க் பகுதியில் உள்ளது லாடியோ நகரம். இங்குள்ள கஜா மாட்ரிட் வங்கி ஏடிஎம்-க்கு நேற்று ஒருவர் பணம் எடுக்க வந்தார். கார்டை நுழைத்து கடவுச்சொல்லை அடித்து பண தொகையை டைப் செய்தார். பணம் வரும் வழியில் தயாராக கையை வைத்திருந்தார்.நாணய நோட்டுகளுடன் கூடவே வழுவழுவென்று ஏதோ தென்பட்டது. சுதாரித்த அவர் நோட்டுகளை சட்டென்று இழுத்துவிட்டார். பாம்பு ஒன்று புஸ்.. புஸ் என்று சத்தம் போட்டபடியே மெதுவாக வெளியே தலையை நீட்டியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பொலிசுக்கு தகவல் கொடுத்தார்


ஏழரைச் சனி ஆரம்பம்...!


சனிக் கோளின் வானவியல் ஆய்வு : குரு கிரகத்துக்கு அடுத்து பெரிய கிரகம் சனி. இதன் குறுக்களவு சுமார் 73,000 மைல். "சனி வளையம்' என்று கூறப்படும் வளையத்தின் குறுக்களவு 1,70,000 மைல். மிக லேசான பொருட்களால் ஆனதால் இந்த கிரகத்தின் அடர்த்தி மிகவும் குறைவு. 0.715- அதாவது தண்ணீரைவிட குறைவான ஒப்படர்த்தி உள்ளது. எனவே, சனி கிரகத்தை பெரிய கடல் நீரில் போட்டால் மிதக்கும். சூரியனிலிருந்து இதன் தொலைவு 89.6 கோடி மைல். பூமிக்கும் சனிக்கும் இடையில் உள்ள தொலைவு 75 கோடி மைல். இது தன்னைத் தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 10 மணி 14 நிமிடங்கள் ஆகின்றன. அதனால் கிட்டத்தட்ட பத்தரை மணி நேரமே சனி கிரகத்தின் ஒருநாள். இது ஒருமுறை சூரியனைச் சுற்றிவர இருபத்தொன்பதரை ஆண்டுகள் ஆகின்றன. அதாவது பூமியில் இருபத்தொன்பதரை ஆண்டுகள் கழிந்தால் சனியில் ஓராண்டு கழிந்திருக்கும். சாதாரணமாகப் பார்த்தால் மஞ்சள் நிற நட்சத்திரமாக இது தெரியும். தொலைநோக்காடியின் மூலம் பார்த்தால் இதைச் சுற்றியுள்ள வளையம் தெரியும். வேறு எந்த கிரகத்திற்கும் இத்தகைய வளையம் கிடையாது. 1610-ல் கலிலியோதான் இதை முதன்முதலில் கண்டுபிடித்தார். சனியை இந்த வளையம் மிக வேகமாகச் சுற்றுகிறது. உள்ளுக்குள் உள்ளாய் மூன்று வளையங்கள் உள்ளன என்று தற்கால ஆராய்ச்சியில் கண்டிருக்கிறார்கள். சனிக்கு ஒன்பது உட்கிரகங்கள் உள்ளன. அவற்றுள் டைட்டன் என்பது மிகப்பெரியது. இது சனியிலிருந்து 76,000 மைல் தூரத்தில் உள்ளது. சந்திரனைவிட இரட்டிப்பு கனமுடையது. எப்போதும் கடுமையான குளிர். பிராணவாயு இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை. சனி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும்போது பம்பரம்போல் பக்கவாட்டில் சுற்றுவதாகக் கூறுகிறார்கள். இதுவரை கன்னி ராசியில் இருந்த சனி பகவான் (21-12-2011) கர வருடம், மார்கழி மாதம் 5-ஆம் தேதி புதன்கிழமை, நாழிகை 3.30 அளவில் (காலை 7.30) துலா ராசிக்கு- சித்திரை 3-ஆம் பாதத்தில் மாறுகிறார். இது வாக்கியப் பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டது. திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா வாக்கியப் பஞ்சாங்கப்படி 21-12-2011-ல்தான் நடக்கிறது. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 15-11-2011 கர வருடம், ஐப்பசி மாதம் 29-ஆம் தேதி நாழிகை 10- 11 விநாடிக்கு (காலை 10.05 மணி) அளவில் சனிப்பெயர்ச்சி என்று கணிக்கப்படுகிறது. சனீஸ்வரருக்கு அதிகாரப்பூர்வமான தலம் திருநள்ளாறுதான்! ஊர் ஊருக்கு அய்யப்ப சுவாமிக்கு கோவில் கட்டினாலும், கேரளத்தில் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலே அதிகாரப்பூர்வமான கோவில் என்பதுபோல திருநள்ளாறு கோவிலே சனீஸ்வரருக்கு உரிய திருத்தலம். அதனால் நாமும் சனிப்பெயர்ச்சி நாளாக 21-12-2011-ஆம் தேதியை எடுத்துக் கொள்வோம். 

அந்த காலத்தில் கோடீஸ்வரனாக இருப்பது ரொம்பவும் அபூர்வம். அதேபோல கோடீஸ்வரர் வீட்டில் குடை வைத்துக் கட்டி குடைவீடு என்பார்கள். இந்த காலத்தில் கோடீஸ்வரர்கள் என்பது சர்வ சாதாரணம்.

மற்ற எல்லா கிரகங்களையும்விட சனி கிரகம் பலமான- சக்தி பெற்ற கிரகம் மட்டுமல்ல; ஒரு ராசியில் அதிக காலம்- இரண்டரை வருடம் தங்கிப் பலன் செய்யும் கிரகம். அதனால் அவருக்கு மந்தன் என்றும் முடவன் என்றும் பல பெயர்கள் உண்டு.

ஒரு ராசியில் இரண்டரை வருடம் என்ற விகிதத்தில் 12 ராசி களையும் ஒருமுறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகும். அந்த முப்பது ஆண்டுகளில் பொதுவாக மனித வாழ்க்கையிலும் சரி; வீட்டிலும் நாட்டிலும்- அரசியல், ஆன்மிகம், சமுதாயம், பொது வாழ்வு, தொழில்துறை என எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுவது இயல்பு. அதனால்தான் முப்பது வருடத்துக்குமேல் சேர்ந்தாற்போல் யோகத்திலே திளைத்தவர்களும் இல்லை; கஷ்டத்திலேயே இளைத்தவர்களும் இல்லை என்பார்கள்.

அவரவர் ராசிக்கு (சந்திரன் நிற்கும் இடம் ராசி எனப்படும். அதற்கு) 12-ஆம் இடத்தில் சனி வரும்போது ஏழரைச் சனி ஆரம்பம். அது முதல் கட்டச் சனி. அங்கு இரண்டரை வருடம் இருக்கும் சனி விரயச் சனி எனப்படும். அடுத்து ஜென்ம ராசிக்கு மாறும் சனி (2-ஆம் கட்டம்) ஜென்ம ராசியில் இரண்டரை வருடம் இருக்கும். அது ஜென்மச் சனி எனப்படும்.

அதைவிட்டு விலகி ஜென்ம ராசிக்கு 2-ஆமிடத்தில்  சனி வரும்போது (மூன்றாம் கட்டச் சனி) இரண்டரை வருடம் பாதச் சனி, குடும்பச் சனி, வாக்குச் சனி எனப்படும். இப்படி மூன்று கட்ட மாக வரும் சனியின் மொத்த காலம்தான் ஏழரைச் சனியின் காலம் எனப்படும். ஜாதகரீதியாக ஒருவருக்கு வரக்கூடிய சனி தசை என்பது வேறு; கோட்சாரரீதியாக வரும் ஏழரைச் சனி என்பது வேறு. சனீஸ்வரரால் சங்கடப்படுகிறவர்களும் பாதிக்கப்படுபவர்களும் சோதிக்கப்படுகிறவர்களும் பக்தியோடு அவரைச் சரணடைந்து வழிபட்டால் சனியின் கருணைக்குப் பாத்திரமாகலாம். அவர் பிடியில் இருந்தும் விடுபடலாம்.

சனி காயத்ரி மந்திரம்

"காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோயாத்'.

சனி ஸ்லோகம்

"நீலாஞ்சன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்டம் ஸம்பூதம்
தம் நமாமி சனைஸ்சரம்.'

தமிழ் துதி

"சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வர தேவே 
இச்சகம் வாழ இன்னருள் தா! தா!'

"முனிவர்கள் தேவர்கள் ஏழுலக மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வும் உன் மகிமையது அல்லாதுண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே
காகமேறும் சனி பகவானே உனைத் துதிப்பேன்
தமியேனுக்கு அருள் செய்வாயே!'

நவகிரகங்களில் முதன்மையான ஆதிகிரகம் சூரியன். துவஷ்டாவின் மகள் சஞ்ஞிகை என்பவள் (உஷா என்றும் ஒரு பெயர்) சூரியனை விரும்பித் திருமணம் செய்துகொண்டாள். வைவஸ்வதமநு, யமன் (மகன்கள்); யமுனை (மகள்) என்ற மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். இருந்தும் சூரியனுடைய வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள். அதனால் சூரியனுக்குத் தெரியாமல் தன்னுடைய நிழலையே தன் மாதிரி பெண்ணாக்கி சூரியனுடன் குடும்பம் நடத்தும்படி கூறி விட்டுத் தன் தகப்பனார் வீட்டுக்குப் போய்விட்டாள். அப்படி உருவாக்கப்பட்டவளே சாயாதேவி. பிரத்யுஷா என்றும் இன்னொரு பெயர். சஞ்ஞிகையின் வேண்டுகோளின்படிதான் வேறு ஒருத்தி என்ற ரகசியத்தை வெளியிடாமல் சூரியனுடன் அவன் முதல் மனைவி போலவே வாழ்ந்தாள் சாயாதேவி அவளும் மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். சாவர்ணீமனு என்ற ஆண் மகனும், அடுத்து சனி பகவா னும் பிறகு பத்திரை என்ற பெண் மகளும் பிறந்தனர். சாயாதேவிக்கு குழந்தைகள் பிறந்ததும் சஞ்ஞிகையின் குழந்தைகளை சக்களத்திப் பிள்ளைகளாகக் கருதி கொடுமைப்படுத்த ஆரம்பித்தாள். இதை அறிந்த சூரியனின் மூத்த தாரத்து இளைய குமாரன் யமன் (தர்ம ராஜன்) சாயாதேவியை மிரட்டி அடிக்கப் போனான். சனி தன் தாய்க்குப் பரிந்து கொண்டு சஞ்ஞிகையை "ஓடிப்போனவள்' என்று உதாசீனமாகப் பேசவே, யமன் கோபங்கொண்டு தன்னுடைய தண்டத்தால் சனியின் முழங்காலில் அடித்தான். அதனால் சனி பகவானின் வலதுகால் ஊனமானது.

இந்நிலையில் சூரியனுக்கு தன் மனைவியைப் பற்றிய உண்மை தெரிய வந்தது. தன்னைவிட்டுப் பிரிந்துபோய் தவம் செய்து கொண்டிருந்த மூத்த மனைவி சஞ்ஞிகையை சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்தான். அதனால் சனிக்கு விரக்தி ஏற்பட்டு காசிக்குச் சென்று சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு கிரக பதவி பெற்றான். ஈஸ்வரனால் சனீஸ்வரன் என்ற பட்டம் பெற்றான்.  சனிக்கு மந்தன், பிணிமுகன், முதுமகன், முடவன், காரி என்று பல பெயர்கள் உண்டு. சனிக்கு நீலா என்பவள் மனைவி. அவளைத் தவிர மந்தா, சேஷ்டை என்ற இரு மனைவிகளும் உண்டு என்று நூல்கள் கூறும். சனிக்கு குளிகன் என்ற மகனும் உண்டு என்று ஜோதிட நூல்கள் கூறும். ஒவ்வொரு நாளிலும் குளிகனுக்குரிய காலம் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நற்காரி யங்கள் செய்தால் மேன்மேலும் விருத்தி உண்டாகும் என்றும்; தீய காரியங்கள் செய்யக்கூடாது என்றும் கூறப்படுகிறது.

சனி பகவான் ஒரு முகமும் நான்கு கைகளும் உடையவன். மேல் இரு கைகளில் அம்பும் வில்லும்; கீழ் இரு கைகளில் வாளும் வரதமும் கொண்டவன். நீல மேனி உடையவன். சடைமுடி தரித்தவன். கருநிற ஆடை, கரு சந்தனம், நீல மலர் மாலை, நீல மணி மாலை புனைந்தவன். இடப்பாகத்தில் நீலா என்ற தேவியைப் பெற்றுத் திகழ்பவன். சனி பகவான் வில் வடிவமான ஆசனத்தில், சூரியனுக்கு முன்பாகிய மேற்கு திசையை தனக்குரிய இடமாகக் கொண்டு குள்ள வடிவினனாக வீற்றிருப்பவன். அலித்தன்மையும் தாமத குணமும் கொண்டவன். உலோகம்- இரும்பையும்; ரத்தினம்- நீலத்தையும்; தானியம்- எள்ளையும்; புஷ்பம்- கருநீல மலரையும்; சமித்து- வன்னியையும்; சுவை- கசப்பையும்; பாஷை- அன்னிய பாஷையையும்; வாகனம்- காகத்தையும் கழுகையும் தனக்கென்று உரியவன். ஆயுள் காரகன் சனிக்கு அதிதேவதை யமன். பிரத்யதி தேவதை பிரஜாபதி. யமன் சனி பகவானுக்கு வலமாகவும், பிரஜாபதி சனிக்கு இடமாகவும் விளங்குபவர். சனிக்குரிய தலமாக திருநள்ளாறு திகழ்கிறது. இத்திருத்தலம் காரைக் காலுக்கு அருகில் இருக்கிறது. நள மகாராஜாவுக்கு விமோசனம் கொடுத்த தலம். நளச் சக்கரவர்த்திக்கு ஏழரைச் சனி காலத்தில் பல வகையிலும் கஷ்ட- நஷ்டங்களைத் தந்து முடிவில் சனி விலகிய இடம். ஒவ்வொரு புண்ணிய தலத்திற்கும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற பெருமைகள் உண்டு. திருநள்ளாறில் இம்மூன்று பெருமைகளும் உண்டு. இத்தலத்தின் மூர்த்தி தர்ப்பாரண்யேஸ்வரர். கிழக்கு பார்த்த சந்நிதி. சுயம்புமூர்த்தி. தர்ப்பை வனத்தில் எழுந்தருளியதால் தர்ப்பை யிலான வடுக்கள் திருமேனியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அம்பாள் பிராணேஸ்வரி என்றும்; யோக மார்த்த பூண்முலையாள் என்றும் பெயர் வழங்கப்படுகிறது. முசுகுந்த சக்கரவர்த்தி தேவேந்திர னிடமிருந்து வாங்கி வந்த சப்த விடங்க பெருமான் என்னும் ஏழு லிங்கங்களில், இரண்டாவது நகவிடங்கத் தியாகர் இங்கு அருள் பாலிக்கிறார்.

இத்திருத்தலத்தில் அஷ்டதிக் பாலகர்கள் எட்டு பேரும் எட்டு தீர்த்தங்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். சந்நிதிக்கு எதிரே வாணி தீர்த்தமும், கோவில் வட திக்கில் அன்ன தீர்த்தமும் அகத்திய தீர்த்தமும், வடமேற்கில் நள தீர்த்தமும், அதற்குப் பக்கத்தில் நள கூபமும் உள்ளன. பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், அம்ச தீர்த்தம் என்று பதின்மூன்று தீர்த்தங்கள் உண்டு. அம்மன் சந்நிதிக்குப் பின்புறம் கிழக்குப் பக்கத்தில் சனி பகவான் திருச்சந்நிதி இருக்கிறது. மற்ற எட்டு கிரகங்களும் இல்லாமல் சனி பகவான் மட்டுமே தனி யாகக் காட்சி தருகிறார். கலி நீங்கிய நள மகாராஜன் நள தீர்த்தத்தை உருவாக்கி வைகாசி மாதம் புனர்பூச நன்னாளில் திருவிழா நடத்திப் புகழ்பெற்றதாக திருஞான சம்பந்தர் தமது பதிகத்தில் பாடியுள்ளார். வைகாசி மாதம் உத்திரட்டாதியில் தொடங்கி பதினெட்டு நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கும். சனிப்பெயர்ச்சிக் காலங்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து நள தீர்த்தத்தில் நீராடி ஈர உடைகளை அங்கேயே விட்டுவிட்டு கோவிலுக்குச் சென்று வழிபடுவது உத்தமம்.

குரும்பு வாக்கிங்...


நமது தேவையை நாமே உருவாக்குவோம்!

நமது விழிப்புணர்வுக்காக... 

நண்பர்கள் அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!


நடுரோட்டில் நயகரா..!

நம்ம சென்னைதாங்க... அண்ணார்ந்து பார்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலைக்குடிசை கட்டி பொன்னான உலகென்று பெயரும் இட்டால் இந்தப்பூமி சிரிக்கும்...அந்தச்சாமி சிரிக்கும்..!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...