|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 December, 2011

ஓய்வூதியம் பெறும், அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு, வாழ்நாள் முழுவதும், குடும்ப ஓய்வூதியம்!



மத்திய அரசு, ஓய்வூதியதாரர்களின், திருமணமாகாத, விதவை, விவாகரத்தான மகளுக்கு, குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழக அரசின் ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டுமென, பல்வேறு சங்கங்கள் கோரிக்கை வைத்தன. இதை பரிசீலித்த அரசு, 25 வயதை கடந்த, குடும்ப ஓய்வூதியதாரர்களின் திருமணமாகாத, விதவை, விவாகரத்துப் பெற்ற மகள் ஆகியோருக்கு, குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதற்கான நிபந்தனைகள்:
* ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களின், 25 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத மகளும், விதவை மற்றும் விவாகரத்தான மகள்களும், வாழ்நாள் முழுமைக்கும் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள்.
* ஒரு குடும்பத்தில், 25 வயதுக்கு குறைவான, குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுள்ள, குழந்தைகளின் தகுதி காலம் முடிந்த பின்போ, அந்த குடும்பத்தில், வேறு மாற்றுத் திறன் படைத்த குழந்தைகள் இல்லாவிட்டாலோ, 25 வயதுக்கு மேற்பட்ட மகள்கள் பெறலாம்.
* திருமணமோ, மறுமணமோ புரிந்தால், அவர்களின் ஓய்வூதியம் உடனே நிறுத்தப்படும். இதை உறுதி செய்யும் வகையில், ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும், திருமணம் அல்லது மறுமணம் புரியாமை சான்றிதழை வழங்க வேண்டும்.
* வயது அடிப்படையில் மூத்தவருக்கு முதலில், வாழ்நாள் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். மூத்தவர் மறுமணம் புரிந்தாலோ, இறக்க நேரிட்டால் மட்டுமே, அடுத்த இளைய மகள், குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி பெறுவார்.
* மாத வருமானம், 2,550 ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் மட்டுமே, ஓய்வூதியம் பெறலாம். இது தொடர்பான வருமானச் சான்றிதழை ஆண்டுதோறும், ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு, நவ., 28ம் தேதியிலிருந்து, அமலுக்கு வந்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...