|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 October, 2013

எப்படியும் புது ஆடைகள் எடுக்கத்தான் போறீங்க?



நண்பர்களே! 500 ரூபாய் சேலையை 1500 ரூபாய்க்கு விற்கும் (நடிகர்கள் - விளம்பரங்களுக்கு யார் குடுப்பாங்க!) இன்றைய பண்டிகை சூழலில்.. நமது பணம் உரியமுறையில் செலவளிக்கப்படுவது இன்பம்!  எனவே அனைவரும் ஒரு சேலையையாவது சட்டையையாவது கோ-ஆப்-டெக்ஸ்ல வாங்குங்க மக்கா!அதுவும் இந்த முறை முன்னாள் மதுரை ஆட்சியர் சகாயம் அவர்கள் தற்போது எம்.டி.ஆக .. பேக்கேஜிங் முதல் டிசைன்கள் வரை பலவித புதுமைகளை புகுத்தியுள்ளார் என்பதை நேரில் அறியமுடிந்தது ! அதுவும் கோரா காட்டன் சாரிகள் செம ! அவசியம் கூட்டுறவுத்துறைக்கு உங்கள் ஆதரவை தெரிவியுங்க!பல ஆண்டு நஷ்டத்திற்குப்பின் முதல் முறையாக சென்ற ஆண்டு இலாபம் ஈட்டியிருக்கும் இந்நிறுவனத்தை ஆதரிப்பது நமது கடமை ! அந்நிறுவனம் ஈட்டிய ஒரு கோடி ரூபாய் இலாபத்தை தினமும் ரூ 65 க்கு உழைக்கும் ஏழை நெசவுத் தொழிலாளிகளுக்கு இலாபப்பங்கு மூலம் பிரித்துக்கொடுத்திருக்கிறார் திரு சகாயம் இ.ஆ.ப அவர்கள்.நமது பணம் யார் கைக்கு செல்கிறது என்பதுவும் முக்கியமானதுதானே ! கண்ணில் பட்ட நல்ல விஷயத்தை நாலு பேர் மத்தியில் வைகோ கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரியதுதான்...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...