|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 April, 2012

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேலும் 4 அணு உலைகள்! ஆணைய தலைவர்!

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கூடுதல் அணு உலைகளால் தென்னிந்தியாவின் மின் தேவையை பூர்த்தி செய்யலாம். கூடங்குளத்தில் அணு உலை பகுதியில் அணு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையம் எதுவும் அமைக்கும் திட்டம் இல்லை.கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்றார்.கூடங்குளத்தில் தற்போது தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் உள்ளன. அதில் முதல் உலையில் விரைவில் மின் உற்பத்தி துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அணு மின் நிலைய ஊழியர்கள் இரவு பகல் பாராது பணியாற்றி வருகிறார்கள். இதற்கு போராட்டக்குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...