|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 August, 2011

சிம்புவுடன் குத்தாட்டம் போட கத்ரீனாவுக்கு ரூ.1 கோடி!

ஒஸ்தி" படத்தில் சிம்புவுடன் குத்தாட்டம் போட பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பாலிவுட்டில் சூப்பர், டூப்பர் ஹிட்டான படம் "தபாங்". இப்படம் தமிழில் "ஒஸ்தி" என்ற படத்தில் ரீ-மேக் ஆகி வருகிறது. படத்தில் நாயகனாக சிம்புவும், நாயகியாக ரிச்சாவும் நடித்து வருகின்றனர். தரணி இயக்கி வருகிறார். ஒஸ்தி படத்தின் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தி தபாங்கில் "முன்னி..." என்ற பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் மல்லிகா அரோரா, கலக்கலாக ஒரு குத்தாட்டம் போட்டு அனைவரையும் கிறங்கடித்தார். அதேபோல் ஒஸ்தியிலும் இதுபோன்று ஒரு பாடல் அமைக்க வேண்டும் என்று சிம்புவும், தரணியும் விரும்புகின்றனர்.

இதற்காக கலக்கலான குத்து சாங்க் ஒன்றும் தயாராகி வருகிறது. இந்நிலையில் சிம்புவுடன் சேர்ந்து குத்தாட்டம் போடுவதற்கு, சிம்புவின் மாஜி காதலி நயன்தாராவை கேட்டு பார்த்தனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனையடுத்து இந்தி நடிகைகள் திபீகா, கத்ரீனா, ப்ரியங்கா சோப்ரா, மல்லிகா அரோரா உள்ளிட்ட பலரிடம், ஒஸ்தி படக்குழு அணுகியது, யாரும் முன்வரவில்லை. கத்ரீனா மட்டும் ரூ.1 கோடி கொடுத்தால் ஓ.கே., என்று சொல்லியிருக்கிறார். சிம்புவும், கத்ரீனா என்றதும் உடனே ஓ.கே. சொல்லுமாறு கூறிவிட்டாராம். இன்னொரு பக்கம் ராணா நாயகி, தீபிகா படுகோனேவிடமும் இதே ஆஃபரை வைத்துள்ளனர். அவர் இன்னும் எந்த பதிலும் சொல்லாததால், கத்ரீனாவையே ஒப்பந்தம் செய்துவிடலாம் என்ற முடிவில் உள்ளனராம்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...