|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 May, 2011

புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வராகிறார் ரெங்கசாமி

காங்கிரசில் இருந்து ஒதுங்கி இருந்த ரெங்கசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கட்சியில் இருந்து விலகி என்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார். பின்னர் அ.தி.மு.க,.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இதில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் 15 இடங்களிலும், அ.தி.மு.க., 5 இடங்களிலும் மொத்தம் 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

காஙகிரஸ் 7 இடங்களிலும் , தி.மு.க., 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. சுயயேச்ச‌ை வேட்பாளர் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். கதர்காமம், இந்திரா நகர் என 2 தொகுதிகளில் போட்டியிட்ட ரெங்கசாமி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். மக்கள் இடையே எளிமையானவர் என்று பெயர் எடுத்த ரெங்கசாமி புதுச்சேரியில் முதல்வராகிறார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...