|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 November, 2011

மீன்பிடிப்பதற்காக மீனவர்களை சுட்டுத்தள்ளும் ஒரே நாடு இலங்கை தா. பாண்டியன்!


தமிழக மீனவர்களை தாக்குவதன் மூலம் இலங்கை இந்தியாவுக்கு எதிராக அறிவிக்கப்படாத யுத்தம் நடத்துகிறது. கடலில் மீன் பிடிப்பதற்காக மீனவர்களை சுட்டுத் தள்ளும் ஒரே நாடு இலங்கை தான் என்று இந்திய ம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தா. பாண்டியன் கலந்து கொண்டார்.


கூட்டம் முடிந்த பின் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகிறது. கடலில் மீன் பிடிப்பதற்காக அவர்களை சுட்டுத்தள்ளும் ஒரே நாடு இலங்கை தான். இவ்வாறு தொடர் தாக்குதல் நடத்துவதன் மூலம் இலங்கை இந்தியாவுக்கு எதிராக அறிவிக்கப்படாத யுத்தம் நடத்துகிறது என்றே வைத்துக் கொள்ளலாம். நேச நாடு என்று சொல்லிக் கொள்ளும் எந்த நாடாவது இவ்வாறு செய்யுமா என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...