|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 November, 2011

தியான பயிற்சியில் கனிமொழி!

 2ஜி ஊழலில் சம்பந்தப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி, சிறையில் தியானம், ஆத்ம, ஆன்மீக சிந்தனைப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம். தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வருவதால் கனிமொழி மனமுடைந்து காணப்படுகிறார். டெல்லி சிபிஐ கோர்ட் வளாகத்தில் வைத்து தாயார் ராசாத்தியம்மாளை கட்டிப்பிடித்து அழுதார். ராசாத்தியும் அழுதார். சிறைக்கு தன்னைப் பார்க்க வந்த அண்ணன் ஸ்டாலினிடமும் கண்ணீர் வடித்தார். இந்த நிலையில் மனதை ஒருமுகப்படுத்தவும், அமைதியை ஏற்படுத்தவும் தியானம், ஆன்மீக சிந்தனை குறித்த பயிற்சிகளில் அவர் ஈடுபட்டிருக்கிறாராம். அரசு சாரா தொண்டு நிறுவனமான திவ்ய ஜோதி ஜாக்ரிதி சன்ஸ்தன் என்ற அமைப்பு கைதிகளுக்கு ஒழுக்க நெறிகள், தியானம், ஆன்மீக சிந்தனைகள் குறித்த பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இதுதொடர்பான புத்தகங்களையும் அது வழங்குகிறது. அதில் தான் கனிமொழியும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருவதாக சிறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...