|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 June, 2011

16 வருட போராட்டத்திற்குப் பின் பிளஸ்டூ பாஸ் செய்த ஒரிஸா அமைச்சர்

16 வருடத்திற்கு முன்பு பிளஸ்டூவில் பெயிலான ஒரிசா அமைச்சர் ஒருவர் கடும் போராட்டத்திற்குப் பின்னர் தற்போது பாஸாகி பெரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார். மேல் படிப்பு' தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரிசா மாநில பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரமேஷ் சந்திர மாஜி வெற்றிகரமாக பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் அமைச்சரவையில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக உள்ளார் ரமேஷ் சந்திர மாஜி. அவர் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதினார். அதில் 600-க்கு 376 மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த செய்தியைக் கேள்விப்பட்டவர்கள் பூங்கொத்துகள் மற்றும் இனிப்பு கொடுத்து அமைச்சரை வாழ்த்தினர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...