|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 January, 2012

இயக்குநர் பாரகானின் கணவரை நடிகர் ஷாருக்கான் புரட்டி எடுத்தாரா?

பிரபல பாலிவுட் நடன இயக்குநரும்,  இயக்குநருமான ஃபராகானின் கணவர் சிரிஷ் குந்தரை நடிகர் ஷாருக்கான் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பையில் அக்னீபாத் பட வெற்றிக்காக ஞாயிற்றுக்கிழமை இரவு நடிகர் சஞ்சய் சத் அளித்த விருந்தின்போது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. போதையில் இருந்த குந்தர், ஷாருக்கானை சுற்றிச் சுற்றி வந்து தொல்லை கொடுத்ததாகவும், குளியறைக்கு சென்றபோதும் அவருடனே வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஷாருக்கான் அவரை சோபாவில் தள்ளி புரட்டி எடுத்துள்ளார்.

இதையடுத்து சஞ்சய் தத் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார். சமாதானப்படுத்தும் போது அவரும் குந்தரை கன்னத்தில் ஒரு அறை அறைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது மனைவி மன்யதாவுக்கு கீழ்த்தரமான எஸ்.எம்.எஸ்களை அனுப்பி வந்ததற்காகவும், அந்த விருந்தில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதற்காகவும் குந்தரை சஞ்சய் தத் கன்னத்தில் அறைந்தார் என்று தகவல்கள் தெரிவிக் கின்றன. இந்த சம்பவம் குறித்து ஃபராகானும், குந்தரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். எனினும் இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்க உள்ளதாகக் கூறப்படுவதை இருவரும் மறுத்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...