|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 September, 2011

கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் பார்த்து விட்டேன்- டோணி!

இங்கிலாந்துத் தொடரில் ஒரு போட்டியில் கூட ஜெயிக்க முடியாமல் போய் விட்ட கேப்டன் டோணி, நேற்று முடிந்து போன 4வது ஒரு நாள் போட்டி குறித்து விரக்தியுடன் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன் என்று அவர்தெரிவித்துள்ளார். நேற்று நடந்த 4வது போட்டி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி டை ஆனதாக அறிவிக்கப்பட்டது. போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டோணி கூறுகையில்,

இந்தப் போட்டியில் கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியை நாங்கள் பார்த்தோம். வெற்றி பெறக் கூடிய நிலையில் இருந்த அணியும் விளையாட விரும்பவில்லை. அதேசமயம், வெற்றி பெறும் நிலையில் இல்லாத அணியும் தொடர்ந்து விளையாட விரும்பவில்லை. இதற்குப் பேசாமல் கால்பந்து விளையாடியிருக்கலாம். அப்படித்தான் இரு அணிகளும் நடந்து கொண்டன என்றார் டோணி.

நேற்றைய போட்டியின் போது மொத்தம் 3 முறை மழை குறுக்கிட்டு காரியத்தைக் கெடுத்தது. முதலில் இங்கிலாந்தின் கை ஓங்கியிருந்தபோது மழை பெய்தது. 2வது, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்தியாவின் கை ஓங்கிய நிலையில் மழை குறுக்கிட்டது.

இறுதிக் கட்டத்தில் மழை பெய்து நின்றபோது இரு அணிகளும் சம நிலையில் இருப்பதா கூறியது டக்வொர்த் லூயிஸ் முறை. இதனால் ஆட்டம் டை ஆனது.
இதுகுறித்து டோணி கூறுகையில், பகல் நேரப் போட்டிக்கு ஒரு விதிமுறை உள்ளது. அதேசமயம், இரவு நேரப் போட்டிக்கும் அதே விதிமுறையைக் கையாளும் நிலையில் உள்ளோம். ஆனால் இது நன்றாக இல்லை.

போட்டியின் முடிவு குறித்து எங்களுக்கே கூட குழப்பமாக இருந்தது. முதலில் நாங்கள் வென்றதாகத்தான் நினைத்தோம். மழை பெய்து நின்று விடும், மீண்டும் ஆட்டம்தொடரும் எனவும் சிலர் நினைத்தனர். டிரஸ்ஸிங் ரூமில் உட்கார்ந்து பார்த்தபோதுதான் இரு அணிகளும் சம நிலையில் இருந்தது தெரிய வந்தது என்றார் டோணி.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...