|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 April, 2012

திருகோணமலையில் 60 ஆண்டுகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தையும் அகற்றுவதற்கான உத்தரவு !

 இலங்கையில் தம்புள்ளப் பள்ளிவாசல் பெளத்த பிக்குகளால் சேதமாக்கப்பட்ட விவகாரத்தால் சிறுபான்மையினர் மத்தியில் எழுந்துள்ள கொதிப்பு தணியும் முன்னரே கிழக்கு பகுதியில் திருகோணமலையில் 60 ஆண்டுகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தையும் அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை மருத்துவமனை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்த விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் வரும் ஜூலை 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கையானது தமிழ் மக்களின் கலாசார, சமய விஷயங்களில் குறுக்கிடும் விவகாரமாக மாறியுள்ளதுடன் இந்து மதத்தையும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.திருகோணமலை மருத்துவமனை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்த ஆலயம் சுமார் 60 வருடங்களுக்கு முற்பட்ட பழைமைவாய்ந்தது. இந்த ஆலயம் கடந்த காலங்களில் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில் வீதியை விரிவுபடுத்த வேண்டும் என்று காரணம் கூறி விநாயகர் ஆலயத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...