|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 March, 2011

காந்திய வழியில் நேர்மையான வேட்பாளரை தேர்வு செய்யுங்கள் பிரசார குழுவை தொடங்கி நரேஷ்குப்தா பேச்சு

தமிழ்நாடு சர்வோதய மண்டல் அனைத்து காந்திய இயக்கங்கள் சார்பில் காந்தியடிகள் அகிம்சா தேர்தல் பிரசார யாத்திரை குழு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறது. வாக்காளர்கள் தவறாமல் ஓட்டு போட வேண்டும். பணம், பரிசு பொருட்களை வாங்கக் கூடாது. மது, பிரியாணி வாங்கிக் கொண்டு வாக்களிக்க கூடாது. தேச நலன், மக்கள் நலனுக்காக உண்மையாக உழைக்கின்ற வேட்பாளர்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்ற நோக்கத்தை மையமாக வைத்து விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது.
 
இந்த பிரசார பயண யாத்திரை கடந்த 25-ந்தேதி செங்கோட்டையில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து இன்று சென்னை வந்தது. சென்னை முழுவதும் காந்திய பிரசார குழுவினர் துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். தியாகராயநகர் தக்கர் பாலா வித்யாலயா பள்ளியில் இருந்து பிரசார குழு புறப்பட்டது. காந்திய பிரசார யாத்திரையை முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...