|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 July, 2011

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மீண்டும் தோல்வி!

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக லோக்சபா சபாநாயகர் மீரா குமார் தலைமையில், நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. அதனால், மசோதாவை லோக்சபாவில் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா, 2010 மார்ச்சில் ராஜ்யசபாவில் நிறைவேறியது. இருப்பினும், லோக்சபாவில் இந்த மசோதாவை நிறைவேற்ற, பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில், பெண்கள் மசோதா தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்தை, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் கூட்டினார். இதில், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இருப்பினும், இந்தக் கூட்டத்தில், அரசியல் கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், லோக்சபாவில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்வது மற்றும் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற சமாஜ்வாடி முலாயம் சிங் யாதவ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது: பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், மசோதாவின் தற்போதைய வடிவத்தை தான் எதிர்க்கிறோம். ஏழைகள், பின்தங்கிய மக்கள் மற்றும்கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பலன் அடைய முடியாத வகையில் தற்போதைய பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா உள்ளது. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடும் வேண்டும் என்று தான் கேட்கிறோம். முஸ்லிம் மற்றும் தலித் சமுதாயத்திலிருந்து சட்டசபை மற்றும் லோக்சபாவுக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த வகையில், பெண்கள் மசோதாவில் 60 சதவீத அளவுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதை மற்ற அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொள்கின்றனவா என்பது தான் கேள்வி. ஆனால், நாங்கள் இருவரும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிரானவர்களைப் போன்று சித்தரிக்கப்படுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...