|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 August, 2011

கின்னஸ் சாதனை படைக்க 250 விதமான தோசை!

தூத்துக்குடியில் கின்னஸ் சாதனைக்காக பெண்கள் கலந்து கொண்ட 250 வகையான சோதனை சுடும் போட்டி நடந்தது.

தூத்துக்குடியில் அகில இந்திய சுய உதவி குழு ஓருங்கிணைபு சார்பில் மலர் வெளியிட்டு விழா மற்றும் கின்னஸ் சாதனைக்காக 250 வகையான தோசை சுடும் போட்டி நடந்தது.

ஒருங்கிணைப்பு குழு மேலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ராக் குரூப்ஸ் தலைவர் செல்வராணி, நிர்வாகி சாந்தி முன்னிலை வகித்தனர். பெண்கள், சுய உதவி குழுவினர், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் கின்னஸ் சாதனை முயற்சியாக காய்கறிகள், பழங்கள், தானியங்கள் கொண்டு 250க்கும் மேற்பட்ட வகையான தோசை சுடும் போட்டி நடந்தது.

இதில் 200 குழுக்களை சேர்ந்த பெண்களும், 20 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகளும் கலந்து கொண்டு விதவிதமான பல்வேறு சுவையான தோசைகளை சுட்டனர். வெற்றி பெற்றவர்களுககு டிஎஸ்பி ஜெயக்குமார் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து வண்ணக் கோலபோட்டி நடந்தது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...