|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 September, 2011

50 ஆம் வருட கொண்டாட்டத்தில் ஒரு மாணவனே படிக்கும் அரசுப்பள்ளி !

போடியில் நகராட்சி ஆரம்பப் பள்ளியில், ஒரே ஒரு மாணவர் படிக்கிறார். தேனி மாவட்டம், போடி 7வது பகுதி நகராட்சி ஆரம்பப் பள்ளி துவங்கி 50 ஆண்டுகளாகிறது. ஆரம்பத்தில் 800க்கும் அதிகமான மாணவர்கள் படித்தனர். ஒரு தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் மற்றும் 7 ஆசிரியர்கள் பணியில் இருந்தனர். ஒருவர்: இக்கல்வியாண்டில் 5ம் வகுப்பில், ஒரே ஒரு மாணவர் மட்டுமே படிக்கிறார். பிற வகுப்பில் மாணவர்கள் இல்லை. இவருக்கு பாடம் நடத்த ஒரு தலைமை ஆசிரியர் பணிபுரிகிறார். காரணம் என்ன: பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளன. மாணவர் எண்ணிக்கை குறைவிற்கு தொடக்கக் கல்வித் துறை ஆர்வம் காட்டாததே முக்கிய காரணம். மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஊர்வலம் கூட இந்தாண்டில் நடக்க வில்லை. ஆசிரியர்கள் பதவி உயர்வை காரணம் காட்டி, வேறு பள்ளிக்கு பணி மாறுதலில் சென்றுவிட்டனர். இப்பணியிடத்திற்கு வேறு ஆசிரியரை நியமிக்கவில்லை.

தலைமை ஆசிரியர் மல்லிகா கூறுகையில், "தற்போது இரு மாணவர் படிக்கின்றனர். ஒருவர் மருத்துவ விடுப்பில் உள்ளார். மாணவர் சேர்க்கைக்கு என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன். அதிகாரிகளுக்கும் தகவல் தந்துள்ளேன்,' என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...