|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 March, 2011

சென்னை தியாகராய நகரில் 'டிராபிக்' ராமசாமி போட்டி!

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சென்னை தியாகராய நகரில் போட்டியிட பொதுநல சேவகர் டிராபிக் ராமசாமி நேற்று மனு தாக்கல் செய்தார்.


தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கியது.

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சென்னை தியாகராய நகர் தொகுதியில் கே.ஆர். ராமசாமி என்கிற டிராபிக் ராமசாமி போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ராமசாமி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே தனது அலுவல்களை எல்லாம் விட்டுவிட்டு தானே போக்குவரத்தை சீர்படுத்தத் தொடங்கிவிடுவார். அதனால் தான் டிராபிக் ராமசாமி என்று பெயர். 73 வயதிலும் பல பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து அவற்றில் தானே ஆஜராகி வாதாடியும் வருபவர் இவர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...