|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 April, 2011

யுத்த களத்தில் நிற்கிறேன்: சீமான் !


காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இயக்குனர் சீமான் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட செல்வபுரத்தில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு சீமான் பேசினார்.

அப்போது அவர்,    ‘’தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகள் நிற்கிறது. ஆனால் நாம் தமிழர் கட்சி யுத்த களத்தில் நிற்கிறது. காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற உறுதியுடன் தமிழக மக்கள் முன் நம்பிக்கையுடன் நிற்கிறோம்

இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை போன காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்காமல் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். காங்கிரசுக்கு துணைபோன ஆட்சி மாற வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு செய்த வஞ்சகத்திற்கு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வஞ்சிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும். காங்கிரசுக்கு துணைபோன ஆட்சி தமிழகத்தில் மாற்றப்பட வேண்டும்.காங்கிரஸ் அதனுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளை தோற்கடிக்க வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி.வேலுமணிக்கு வாக்களியுங்கள்’’என்று பேசினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...