|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 April, 2011

India not against Endosulfan ban if interests protected


 India on Thursday told the sixth meeting of the Persistent Organic Pollutants Review Committee (POPRC) of the Stockholm Convention going on at Geneva it would not prevent an international consensus on banning of Endosulfan pesticide as long as the its interests were protected and concerns reflected in the final declaration.

“We have to appear constructive and sensitive even as we fight for our national interest,’’ Minister of State for Environment and Forests said here.While most of the governments represented at the Stockholm Convention are in favour of a global ban on Endosulfan, India is opposing it on the ground that it has no alternative available. And in case of a global ban, an alternative has to be provided.

All exemptions sought by the Indian delegation are being included in the final declaration. These are valid for 5 years, with provision for renewal for another 5 years. The listing takes one year to become effective. This effectively means a phase out over 11 years.

உலகம் முழுதும் 63 நாடுகளில் தடை செய்யப்பட்ஆளைக்கொல்லும் பூச்சிக்கொல்லி ரசாயனமான என்டோசல்பானை இந்தியா மட்டும் தடை செய்ய மறுக்கிறது. மரணங்கள், பாதிப்புகள் போதாதாம் நம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு, அழிவின் எண்ணிக்கை ஆயிரம், லட்சம் என்று ஆனால்தான் தடை செய்வாராம் திருவாளர் ஜெய்ராம் ரமேஷ்!

நம் பொருளாதார நிபுணர் (!) பிரதமருக்கோ என்டோசல்பானை தடை செய்தால் கார்ப்பரேட் நிறுவனம் நடுத்தெருவுக்கு வந்து விடுமோ என்ற அச்சம் (!)

ஐரோப்பிய யூனியன், ஆஸ்ட்ரேலியா, நியூசீலாந்து, மற்ற ஆசிய நாடுகள், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் என்டோசல்பான் தடை செய்யப்பட்டதற்கான காரண காரியங்கள் நம் ஜெய்ராம் ரமேஷுக்குப் போதவில்லை போலும்.

என்டோசல்பானின் விஷத்தன்மையை கணக்கில் கொண்டு அதன் பயன்பாட்டை உலகம் முழுதும் தடை செய்ய ஸ்டாக்ஹோம் உடன்படிக்கை மூலம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

அரசு நிறுவனமான இந்துஸ்தான் இன்செக்டிசைடு நிறுவனமே இதனை உற்பத்தி செய்து வருவது இந்த நாட்டில்தான் நடைபெறும்! இதன் மனித, விலங்கு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவு எதிரானது என்று 2009ஆம் ஆண்டே ஸ்டாக்ஹோம் உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குருதியில் நேரடியாகச் சுரந்து மனிதனின் பாலியல் செயல்பாடு முதல் பல்வேறு செயல்பாடுகளுக்குக் காரணமாகும் 'என்டோகிரைன்' சுரப்பியை என்டோசல்பான் பாழடையச் செய்கிறது என்பது பல்வேறு சோதனைகளில் உறுதி செய்யப்பட்ட அறிவியல் உண்மை.

ஆனால் இங்கு கேரளாவில் ஏதோ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானத்திலிருந்து உணவுப்பொட்டலம் வீசுவது போல் காசர்கோட் பகுதியில் வானத்திலிருந்து முந்திரித் தோட்டங்களின் மீது பாய்ச்சப்பட்டுள்ளது. விஷத்தை மேலேயிருந்து தூவியது கேரள அரசின் பிளாண்டேஷன் கார்ப்பரேஷன்! இது அரசின் கொலைவெறிச் செயல் இல்லாமல் வேறு என்னவாம்?

ஒரு மாநில முதல் அமைச்சரே இதனைத் தடை செய்யக்கோரி உண்ணாவிரதம் இருக்கையில், ஜெய்ராம் ரமேஷுக்கு என்னவோ மேலும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அளவில் பெரிதாகத் தேவைப்படுகிறது!

மனித, விலங்கு மறு உற்பத்திக் குறைபாடுகளையும், வளர்ச்சியைப் பாதிக்கும் விளைவுகளையும் ஏற்படுத்துவது எண்டோசல்பான் என்பது உலகமறிந்த மருத்துவ உண்மை. மேலும் வேளாண்மையிலும் எண்டோசல்பான் பாதிப்புகளையே அதிகம் ஏற்படுத்துகிறது. பயிர்களை நாசம் செய்யும் சிறு புழு பூச்சிகளை உண்ணும் பூச்சிகளையும் சேர்த்து என்டோசல்பான் அழித்து விடுகிறது. இதனால் உயிரிப்பரவல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விவசாயமே பெரிய அளவில் முடங்கிப் போகிறது.

தற்போது கேரளாவில் சலீம் அலி அறக்கட்டளையைச் சேர்ந்த மருத்துவர் வி.எஸ்.விஜயன அரசே நடத்திய குற்றம (State Sponsored Crime) என்று என்டோசல்பான் வான்வழித் தூவலைக் கண்டித்துள்ளார்.

காசர்கோட் பகுதியில் பல குழந்தைகள் வளர்ச்சிக் குன்றி காணப்படுவதற்கு என்டோசல்பானே காரணம் என்பது நீக்கமற நிரூபிக்கப்பட்ட ஒன்று. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...