|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 June, 2011

சிமெண்ட் ஆலைகளையும் அரசுடைமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கம் வேண்டுகோள்

சங்கத்தின் பொதுச் செயலாளர் மு. பன்னீர்செல்வம் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: கட்டுமான தொழிலாளர்களுக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் நல வாரியம் அமைக்கப்பட்டது. அந்த நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேருவதற்கான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும். தங்களின் விருப்பத்துக்கேற்ப சிமெண்ட் விலையை ஆலை அதிபர்கள் உயர்த்துகின்றனர். இதனால் கட்டுமானத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். சிமெண்ட் ஆலைகளை அரசுடைமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கும், விவசாய நலவாரிய உறுப்பினர்களுக்கும் ரூ. 500 ஓய்வூதியத் தொகையாக வழங்கப்பட்டு வருகின்றன. இதனை ரூ. 1000-ஆக உயர்த்த வேண்டும்

அதே போல விபத்தில் இறக்க நேரிடும் கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தொகையான ரூ. 1 லட்சத்தை உயர்த்தி ரூ. 2 லட்சமாகவும், இயற்கை மரணத்துக்கு வழங்கப்படும் தொகையை ரூ. 50 ஆயிரமாகவும் உயர்த்த வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...