|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 July, 2011

அனைத்து சேனல்களுக்கும் இதுவே இறுதி கெடு!

அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தலைவராக கேபிள் தொழிலில் அனுபவம் உள்ள கே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அரசு கேபிள் டி.வி. திட்டத்தை செயல்படுத்த அனைத்து மாவட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்களையும் அழைத்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கேபிள் டி.வி. செயல்பாடுகளை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அடுத்த முயற்சியாக கட்டண சேனல்களுக்கு தமிழக அரசு இறுதிக்கெடு விதித்துள்ளது.


மாவட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த இறுதி கெடு விடுவிக்கப் பட்டது.   இந்த ஆலோசனை கூட்டத்துக்கு கேபிள் ஆபரேட்டர்களுக்கும் தனியார் டி.வி. சேனல்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ராஜ் டி.வி., இ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜீ டி.வி. உள்ளிட்ட பெரும்பாலான தனியார் டி.வி. சேனல்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் கே.ராதாகிருஷ்ணன்,

’’தமிழகத்தில் ஒரே ஒரு டி.வி. சேனல் பிடியில் கேபிள் டி.வி. தொழில் இருந்து வருகிறது. சர்வாதிகார நிலையை தடுக்கவே, அரசு கேபிள் டி.வி. கொண்டு வரப்பட்டுள்ளது. 



சில சேனல்கள் சென்னையில் இலவச சேனலாகவும் பிற மாவட்டங்களில் கட்டண சேனல்களாகவும் உள்ளன.வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையை தவிர்த்து மாநிலம் முழுவதும் கட்டணமில்லா சேவை அளிக்கப்பட வேண்டும். அரசு கேபிள் டி.வி.க்கு அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவையை வழங்க வேண்டும். நுகர்வோரிடம் இருந்து சந்தா எதுவும் வசூலிக்க கூடாது. அனைத்து சேனல்களுக்கும் இதுவே இறுதி கெடுவாகும்’’ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...