|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 August, 2011

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ - மாணவியர், அனைவருக்கும் இலவச லேப்டாப்!

மாணவ, மாணவியருக்கான இலவச லேப்-டாப் வழங்கும் திட்டத்தில், ஆண்டு வாரியாக பயன்பெறும் மாணவ - மாணவியர் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சிறப்புத்திட்ட அமலாக்கத்துறை வெளியிட்ட அரசாணை: தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச லேப்-டாப் திட்டம், வரும் 15ம் தேதி முதல்வரால் துவக்கப்படும். இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ - மாணவியர், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்கள் என, நடப்பு நிதியாண்டில் 9.12 லட்சம் பேருக்கு, இலவச லேப்-டாப்கள் வழங்கப்படும். இதற்காக, நடப்பாண்டில், 912 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை, தமிழக எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன்(எல்காட்) மேற்கொள்ளும்.

இதில், கல்வியாண்டு வாரியாக பயன்பெறும் மாணவ, மாணவியர் விவரம்
கல்வி நிறுவனம் 2011-12 2012-13 2013-14: பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பிளஸ் 2 பிளஸ் 2 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் முதல் மற்றும் 3ம் ஆண்டு மூன்றாம் ஆண்டு -பாலிடெக்னிக் கல்லூரிகள் முதல் மற்றும் 3ம் ஆண்டு முதல் மற்றும் 3ம் ஆண்டு முதலாம் ஆண்டுபொறியியல் கல்லூரிகள் இரண்டு மற்றும் 4ம் ஆண்டு இரண்டு மற்றும் 4ம் ஆண்டு.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

2013-14ல், அனைத்து பிளஸ் 2 மாணவர்களும் லேப்-டாப் பெற்று விடுவர் என்பதால், அதன்பின் கல்லூரியில் லேப்-டாப் வழங்க வேண்டிய தேவை இல்லை. அதேநேரம், 10ம் வகுப்பு முடித்து விட்டு, பாலிடெக்னிக் சேரும் மாணவர்களுக்கு மட்டும் முதலாமாண்டில், லேப்-டாப் வழங்கப்படும் என தெரிகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...