|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 August, 2011

நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பி.இ., எம்.எஸ்.சி படித்த பெண்கள் கலெக்டர் வேதனை!

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம் சார்பில் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பொறியாளர்கள், மற்றும் பணியாளர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூசனம், இந்த பணி நடந்த இடங்களை நான் நேரில் சென்று ஆய்வு செய்தபோது பி.இ., படித்த ஒரு பெண்ணும், எம்.எஸ்.சி படித்த ஒரு பெண்ணும் 119 ரூபாய் கூலிக்கு வேலை செய்துகொண்டிருந்தார்கள்.

கிராமப்புரத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் வேலைவாய்ப்பை பெரும் வகையில் தொடங்கப்பட்ட நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில், கிராமப்புரங்களில் உள்ள ஏறி, குளங்கள் தூர்வாரப்படுகிறது. இதனால் மழை நீர் சேகரிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. 

படிப்பை பார்க்காமல் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் செய்த பணி மனதை உருக வைப்பதாக இருந்தது. அரசு ஊழியர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றவேண்டும், ஆனால் பெரும்பாலான இடங்களில் அவர்கள் அப்படி நடப்பதில்லை... தாங்களுக்கு உரிய பணிகளையே முறையாக அதிகாரிகள் செய்வதில்லை என்று வேதனை தெரிவித்தார்.

நம்ம இந்திய ஒளிர்கிறது !

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...