|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 September, 2011

13 கிங்பிஷர் விமானங்கள் இன்று முதல் ரத்து!


கிங்பிஷர் விமான நிறுவனம் எரிபொருள் நிறுவனத்துக்கு பலகோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இதையடுத்து கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு எரிபொருள் வழங்குவதை அந்த நிறுவனம் நிறுத்தி விட்டது.  இதன் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் கிங்பிஷர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, சேலம், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, பெங்களூர், அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும், 13 கிங்பிஷர் விமானங்கள் இன்று முதல் ரத்து செய்யப்பட்டன.
 
இதில் பெங்களூருக்கு மட்டும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானத்தில் செல்ல முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பித் தரப்படுகிறது. அல்லது அவர்களை வேறு விமானத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...