|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 October, 2011

கடித விவகாரம் நழுவிய சிதம்பரம்!





கேள்வி: நிதி அமைச்சகத்தின் குறிப்பு தொடர்பாக, நேற்று(நேற்று முன்தினம்) நடந்த பேச்சுவார்த்தையில், உங்களுக்கு வெற்றி கிடைத்ததா, நிதி அமைச்சர் பிரணாபுக்கு வெற்றி கிடைத்ததா?


பதில்: இதை என்னால், சரியாக நினைவுகூர முடியவில்லை.


கே: இந்த சர்ச்சை காரணமாக, உங்கள் பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்தீர்களா?
ப: எனக்கு சற்று ஞாபக மறதி உள்ளது.



கே: பதவியை ராஜினாமா செய்ய, எத்தனை முறை விருப்பம் தெரிவித்தீர்கள்?
ப: ஞாபக மறதியுடன், கணக்கிடுவதிலும், எனக்கு பிரச்னை உள்ளது.நிதி அமைச்சக குறிப்பு குறித்து, இதுபோல் பல வடிவங்களில் கேள்விகள் கேட்டபோதும், அதுபற்றிய கேள்விகளுக்கு பதில் அளிப்பதை, அமைச்சர் சிதம்பரம் தவிர்த்தார்.



உள்துறை அமைச்சரின் பேட்டியின் சுருக்கம்:
* பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக, அமெரிக்கா மிகவும் தாமதமாகக் கண்டுபிடித்துள்ளது. இது, எங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை. ஐ.எஸ்.ஐ.,க்கு, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது என, எங்களுக்கு எப்போதும் தெரியும்.



* மும்பை குண்டு வெடிப்புக்குக் காரணமான, தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் உள்ளது குறித்து, அந்த நாட்டு அரசிடம் பல முறை கேள்வி எழுப்பியுள்ளோம். ஆனால், அவர்கள் அதை மறுத்து விட்டனர்.



* அத்வானி மேற்கொள்ளும் ரத யாத்திரைக்கு, பாதுகாப்பு அளிக்கும்படி கோரிக்கை விடுத்தால், அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.



*மும்பை, டில்லியில், சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பு குறித்த விசாரணையில், முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், குற்றவாளிகள் யார் என்பது, இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.



* தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்காக, "பயோமெட்ரிக்' கணக்கெடுப்பு முறையை, யார் மேற்கொள்வது என்பது குறித்து, விரைவில் முடிவு செய்யப்படும்.


*தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, அப்சல் குருவின் கருணை மனு தொடர்பாக, ஜனாதிபதி பிரதிபா, இன்னும் முடிவு எடுக்கவில்லை.இவ்வாறு, அமைச்சர் சிதம்பரம் பேட்டியில் கூறினார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...