|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 October, 2011

இந்திய ராணுவத்தின் முதல் பெண் ஜவான்

இந்திய ராணுவப் படைப் பிரிவில் முதல் முறையாக பெண் ஒருவர் ஜவானாக பணியில் சேர்ந்துள்ளார். இதுவரை போரில் ஈடுபடாதப் பிரிவுகளில், அதுவும் அதிகாரிகள் அந்தஸ்தில் மட்டுமே பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இந்த நிலையில், 2 குழந்தைகளுக்கு தாயாக உள்ள 35 வயதான சாப்பர் சாந்தி டிக்கா, தரைப் படையின் ரயில்வே என்ஜினீயர் பிரிவில் ஜவானாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார் என்று ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வானுக்கான உடற்தகுதித் தேர்வில் ஆண்களை விட சிறப்பாக செயல்பட்ட சாந்தி டிக்கா, ஓட்டப் போட்டியில் ஒன்றரை கி.மீ. தூரத்தை மற்றவர்களைவிட 5 விநாடிகள் குறைவான நேரத்தில் கடந்தார். 50 மீட்டர் ஓட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை 12 விநாடிகளில் கடந்தார். மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள சல்சா ரயில் நிலையத்தில் பாயின்ட்ஸ் மேனாக பணியில் சேர்ந்த சாந்தி டிக்கா, தற்போது ராணுவத்தில் சேர்ந்துள்ளதன் மூலம் தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...