|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 December, 2011

பரஞ்சோதி மீது எப்.ஐ.ஆர்...



தமிழக சட்டத்துறை அமைச்சர் மு.பரஞ்சோதி மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழ்க்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சையைச்சேர்ந்த டாக்டர் ராணி,   மு.பரஞ்சோதியை தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்றும்,   அவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்றும்,   தன்னிடம் பணம், நகைகளை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார்.    என்னுடனான தொடர்பை துண்டித்துவிட்டார் என்று புகார் கூறினார்.  இந்த புகாரை பரஞ்சோதி மறுத்தார்.  இதையடுத்து ராணி,   பரஞ்சோதி தனது கணவர் என்பதற்கும்,   தான் பரஞ்சோதியின் மனைவி என்பதற்கும் உரிய ஆதாரங்களை போலீஸ் ஸ்டேஷனில் சமர்ப்பித்தார். இதன்பிறகும் பரஞ்சோதி மீது நடவடிக்கை எடுக்காததால்,  ராணி கோர்ட்டுக்கு சென்றார்.  திருச்சி மே.எம்.  நீதிமன்றத்தில் ராணியின் மனு மீதான விசாரணை நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பராணி,   பரஞ்சோதி மீது இன்னும் வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.     அவர் மேலும்,   நாளை (9. 12.11)  பரஞ்சோதி குறித்து விசாரணையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். தீர்ப்புக்கு பின்னர் போலீசார்,  பரஞ்சோதி மீது 294B, 323, 406, 420, 493, 506/2 ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...