|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 February, 2012

உயிரின் விலை ரூ. 5

ரூ. 5க்காக ஓடும் பஸ்சில் இருந்து கண்டக்டர் தள்ளிவிட்டதில் 21 வயது இளைஞர் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டம் ராம்பூரைச் சேர்ந்தவர் சுபம்சிங். அம்மாநில போலீஸ்துறையில் சேர்வதற்காக பரீட்சை எழுதியிருந்தார். அதன் முடிவுகளை காண்பதற்காக நேற்று சத்னாவிற்கு சென்று விட்டு மீண்டும் பஸ்சில் ஊர் திரும்பியுள்ளார். சத்னாவிலிருந்து ராம்பூருக்கு ரூ. 20 வசூலிப்பதற்கு பதிலாக கண்டக்டர் ரூ. 25 கேட்டுள்ளார். கண்டக்டர் கூடுதலாக ரூ. 5 கேட்டதால் சுபம் சிங் ஆத்திரமடைந்தார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அது கைகலப்பாக, கண்டக்டர் சுபம்சிங்கை ஓடும் பஸ்சில் இருந்து தள்ளியுள்ளார். இதில் கீழே விழுந்த சுபம்சிங் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...