|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 February, 2012

ஈரான் படத்தை தழுவி மெரினா!


சிவகார்த்திகேயன் ஹீரோவாக தோன்றியிருக்கும் மெரினா திரைப்படம் ஈரான் படத்தின் பாதிப்பில் உருவானது என புதுக்கதை கிளம்பியிருக்கிறது கோடம்பாக்கத்தில்!  யதார்தமாக படம் பண்ணும் டைரக்டர் என்ற பெயரை பெற்றுள்ள இயக்குநர் பாண்டிராஜ் இந்தப் படத்தின் காஸ்டிங் முதல் ஆடியோ லாஞ்ச் வரை எல்லாமே யதார்த்தமாகவே அமைய வேண்டும் என நிறையனே மெனக்கட்டிருந்தார்.  இந்நிலையில் மெரினா கதையும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக யதார்த்த சினிமாவிற்கு பிரசித்தி பெற்ற ஈரான் திரைப்படத்தின் தழுவல் என கோலிவுட் இணை, துணை இயக்குநர்கள் கொக்கரிக்க துவங்கி இருக்கின்றனர்.  ஈரானிய சினிமாவின் பிரபல இயக்குநர் அமீர் நடேரி இயக்கத்தில் 1985-ல் வெளிவந்த தவந்தே என்ற குழந்தைகள் படத்தின் பாதிப்பில் இருந்தே மெரினாவை உருவாக்கியிருக்கிறார் என வாதத்தை எடுத்து வைக்கிறது இணை,துணை இயக்குநர் தரப்பு. தவந்தே படமும், (The Runner (Persian: Davandeh) is a 1985 film by Amir Naderi,)படமும், கல்வியையை இழந்து கடற்கரை மற்றும் ஹார்பர்களில் அலைந்து திரியும் ஆதரவற்ற ஈரானிய குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் அவர்களது கனவுகளை சித்தரிக்கும் படமே என்கிறார்கள்.   இருப்பினும் பசங்க பாண்டிராஜை பழி சொல்லாமல், இந்தப் படத்தின் பாதிப்பில் பல உதவி இயக்குநர்கள் திரைக்கதை அமைத்து வைத்திருந்தார்களாம். ஆனால் பாண்டிராஜ் முந்திக்கொண்டார் 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...