|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 April, 2012

ருத்திரகுமாரனைக் கைது செய்ய வேண்டும்!


நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் என்று கூறிக்கொள்ளும் ருத்திரகுமாரனைக் கைது செய்ய வேண்டும் என்று இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.பேசுகையில், நாட்டில் உள்ள சமூகங்களுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை சீர்குலைத்து குழப்பங்களை ஏற்படுத்த வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

அப்படி குழப்பத்தை ஏற்படுத்தும் நபர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கைக்கு எதிராக வெளிநாட்டிலிருந்து செயற்படும் நாடு கடந்த அரசின் தலைவர் ருத்திரகுமாரனைக் கைது செய்யும் நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என இந்த நாதாரி தெரிவித்துள்ளது!.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...