|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 September, 2012

மத்திய அரசு தொடர்ந்து அலட்சியமாக?

நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும் மீனவகளிடம் இருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.ராமேசுவரத்தில் இருந்து செப். 8 தேதி சுமார் 600 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இம்மீனவர்கள் மீன்வளம் நிறைந்த இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.அப்போது அங்கு 3 போர் கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியை காட்டி விரட்டினர்.மேலும் சில படகுகளை மடக்கி பிடித்த இலங்கை கடற்படை வீரர்கள், படகில் மீனவர்களை கயிறு, கம்பால் சரமாரியாக தாக்கி, இனிமேல் இப்பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என எச்சரிக்கை செய்து மீனவர்களை விரட்டி உள்ளனர்.


இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த அடிமை என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இருந்த மீனவர்களை கயிற்றால் தாக்கிய இலங்கை கடற்படை வீரர்கள், படகின் டிரைவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றதாகவும்,  தொடர்ந்து அப்பகுதியில் மீன்பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், பெரும் தொழில் நஷ்டத்தில் கரைக்கு திரும்பியதாக ராமேசுவரம் மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.இலங்கை கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை தடுத்து நிறுத்தி, சுமூகமான தீர்வு காண கோரி செப். 4 தேதி தமிழக மீனவர் சங்க நிர்வாகிகள் பிரதமர் மன்மோகன்சிங்கை தில்லியில் நேரில் சந்தித்து மனுக் கொடுத்தனர்.இந்த சந்திப்புக்கு பிறகும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகி விட்டதாகவும், தமிழக மீனவர்கள் விசயத்தில் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியமாக இருந்து வருவதாகவும் ராமேசுவரம் மீனவர்கள் குற்றம் 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...