|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 October, 2012

சச்சின் கோரிக்கை அரசு சம்மதம்!

லண்டன் ஒலிம்பிக்கில் நம்மவர்கள் சாதிக்க, விளையாட்டில் முன்னேற்றம் காண செய்ய வேண்டியவை குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகனுக்கு சச்சின் இரண்டு பக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

இதில் இவர் குறிப்பிட்டுள்ள நான்கு முக்கிய திட்டம்:
* சாமான்ய மக்கள் மத்தியில் இருந்து இளம் திறமைகளை கண்டறிந்து, உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.
* பல்கலை., கல்லூரிகளில் விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும்.
* விளையாட்டு போட்டிக்கான உட்கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும்.
* பள்ளி, கல்லூரிகளில் உடற்பயிற்சி, விளையாட்டை கட்டாய பாடமாக்க வேண்டும்.

சச்சின் வழங்கிய ஆலோசனைகளை மத்திய அமைச்சர் கபில் சிபல் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் கூறியது விளையாட்டு வீரராகவும், பார்லிமென்ட் உறுப்பினராகவும் சச்சினின் முயற்சி சிறப்பானது. விளையாட்டை கட்டாய பாடமாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இவரின் கோரிக்கையை முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறோம். இத்திட்டத்தைப் பற்றிய விரிவான அறிக்கையை அளிக்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். பாடத் திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சகம் முடிவு செய்ய இயலாது. இவற்றை என்.சி.ஆர்.டி., அல்லது சி.பி.எஸ்.இ., போன்ற அமைப்புகள் தான் இறுதி செய்யும். சச்சின் கொடுக்கும் அறிக்கையை இந்த அமைப்புகளுக்கு அனுப்பி வைப்போம். பின் இவரது திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு கபில் சிபல்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...