|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 December, 2012

டெல்லி மட்டுமே முழு இந்தியா அல்ல?

டெல்லியில் நடைபெற்ற பலாத்கார சம்பவம் மிகவும் கொடூரமான குற்றம். வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவர்களுக்கு கடுமையான தண்டனையை நீதிமன்றம் வழங்கவேண்டும். அதே நேரத்தில் நாட்டின் பிற பகுதியில் குறிப்பாக கிராமப் புறங்களில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தால் இப்படியான குரல்கள் எழுந்திருக்குமா? ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் அது பேசப்பட்டிருக்குமா? என்பதையும் அறிய விரும்புகிறேன்..நிச்சயமாக அப்படி ஒரு குரல் எழாது. டெல்லி மட்டுமே அல்ல முழு இந்தியா அல்ல... விதர்பா மற்றும் ஆந்திராவில் கடந்த 10- 15 ஆண்டுகளில் 2,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 47 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். விவசாயிகள் தற்கொலையில் உலக சாதனை இது. ஆனால் இதற்கெல்லாம் இத்தகைய கூப்பாடுகளும் குரல்களும் எழவில்லையே... பலாத்காரத்தை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் டெல்லி விவகாரத்தில் குரல் எழுப்புகிற அனைவரையும் கேட்டுக் கொள்வது என்னவெனில் இது ஒன்றுதான் ஒட்டுமொத்த இந்தியாவின் முக்கிய பிரச்சனை என்று நினைக்காமல் அனைத்து பிரச்சனைகளிலும் ஒரே மாதிரியான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதுதான். ஐபிசி 376-ன் கீழ் பலாத்கார குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை விதிக்க வழி இருக்கிறது. அப்படி இருக்கும்போது டெல்லி பலாத்கார சம்பவத்தில் தொடர்புடையோருக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்க கோருகின்றனர் என்பதற்கான காரணம் தெரியவில்லை. நாடு முழுவது ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவிட்ட விலைவாசி, அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, குழந்தைகளுக்கான சத்து குறைபாடு, கல்வி பிரச்சனைகள் போன்றவற்றுக்கும் டெல்லி பலாத்கார சம்பவத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் கட்ஜூ.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...